Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

15..

" அக்கா நான் இப்போ என்னதான் பண்றது.. எனக்கு காதல் வசனமெலாம் பேசி பழக்கமே இல்ல..
அவ வேற நான் அவகூட டைம் ஸ்பென்ட் பண்ணிலைனு கோபமா இருக்கு.. இவளையே சமாளிக்க முடியல.. இதுல அவங்க அம்மாவ நான் எப்படிக்கா மாத்துவேன் " என அங்கும் இங்கும் குறுக்கும் நெடுக்கமாக நடந்துகொண்டே கேட்க,

கிருஷும் நிலாவும் தலையலடித்துக்கொண்டனர்

" ராம் இதுலாம் நீயே யோசிச்சு பண்ணனும்டா.. அவளுக்கு நீ எது பண்ணாலும் பிடிக்கும் .. கல்யாணத்துக்கு முன்னாடியே அவள எங்களோட பேச வெச்சிட்ட போதும் வேற எதும் நீ பண்ண வேண்டா.. " என மீரா கூற, தனுவினை சந்திக்க முடிவெடுத்தான் ராம்..

என்னதான் தன்காதலை சொல்லி திருமணத்திற்கே சம்மதம் வாங்கியிருந்தாலும் மற்ற பெண்களிடம் பேசுவது போல தைரியமாக தனுவிடம் பேச ராமிற்கு வெட்கம் பிடுங்கித்தின்றது.. மிகவும் சாதாரணமாக அனைவரிடமும் சொல்லி விட்டு தனுவை வெளியே அழைத்து வந்துவிட்டான்.. ஆனால் என்ன பேசுவது எங்கு கூட்டி செல்வது என எதுவும் தோன்றவில்லை அவனுக்கு..

அவளுக்கு பிடிக்கும் என்கிற காரணத்தால் நன்றாக அடிக்கும் ஆரஞ்சு நிறத்தில் சட்டையணிந்து அவன் வர அது அவனது நிறத்திற்கு சற்று பொருந்தவில்லை எனினும் அவனுக்காக சகித்துக் கொண்டாள்.. இந்நேரம் வேறயாராக இருந்தாலும் ' இதப் பார்த்து நாலு மாடு செத்து போச்சு.. ஆறு ஆடு செத்து போச்சு.. என்ன டிரெஸ்ஸுடா இது ' என உண்மையை உலறியிருப்பாள்..இருப்பினும் தனக்காக அவன் மாற விரும்புகிறான் என்ற எண்ணமே அவளுக்கு சந்தோசத்தைத் தந்தது..

தனு இவர்களது முதல் பைக் பயணம் என்பதால்
ஆகாயத்தில் பறந்துகொண்டிருந்தாள்.
அவனது மனநிலை தெரிந்திருந்தாளாவது இந்நேரம் தலையில் நறுக்கென்று கொட்டி சகஜநிலைக்கு கொண்டுவந்திருப்பாள்.. அவனும் அந்த மாலில் நிறுத்துவான்..இந்த திரையரங்கில் நிறுத்துவான்.. இல்லையா கோவிலிலாவது கண்டிப்பாக நிறுத்துவான் என எதிர்பார்த்தவளுக்கு பொறுமை காற்றில் பறக்கத் துவங்கியது..

மாறாக ராமோ எதுவும் பேசாமல் காதலி தனதருகே இருந்தால் போதுமென்று எண்ணி தங்களது நீண்டவழிப் பயணத்தை நகரத்தின் வெளிப்பறம் வந்தும் தொடர்ந்தான்..

" ராம்.. ராம் "

"...... "

" ராம் "..

"...."

" மிஸ்டர். ராமச்சந்திரன்.. வண்டிய நிறுத்துங்க.. இ்ந்த டீக்கடையிலயாவது  தண்ணீ குடிச்சிட்டு வரேன்..  " என்று அங்கிருந்த சிறிய சாலையோர தேநீர்க் கடையை காட்டினாள். வெடுக்கென வண்டியை நிறுத்தியவன் சுற்றும் முற்றும் பார்க்க அவனுக்கே இது எந்த இடம் என்று தெரியவில்லை.. கடிகாரத்தைப் பார்க்க அது ஒரு மணிநேரம் கடந்திருப்பதை காட்டியது..

"ஹிஹி.. சாரி தனு.. அப்படியே உங்கோட லாங் டிரேவல் போலாம்னு
" என சமாளிக்க.. அதை நம்பாதமாறி பார்க்கவும் அவனுக்கு இன்னும் பதற்றம் அதிகமாக பின்கழுத்தை தேய்க்க ஆரம்பித்தான்..

ராமினைப் பாரக்கும்போது
அவன் விடுதியிலிருந்து வரும்போது ஆசையாக வாசலிலே நின்று ' ஹாய் ' என சொல்லும்போது எவ்வளவு பதற்றம் தோன்றி திணருவாளோ அதேபோல் அவனும் செய்ய ' கடவுள் இருக்கான் ராமு ' என சிரித்துக் கொண்டாள்..

அவனது நிலையை சரியாக புரிந்து கொண்ட தனு மனதிற்குள் சிரித்துக் கொண்டாலும் அவனை இன்னும் சோதிக்க வேண்டாமென்று
அவனது கையைப் பற்றி வலுக்கட்டாயமாக கடைக்குள் இழுத்துச் சென்றாள். 

அவள் கையை அவன் எடுத்துவிட முயல அவள் முறைக்கவும் அமைதியாகி விட்டான். தனுவே அவனிடம் பல கேள்விகளைக் கேட்டு அவனை டார்ச்சர் செய்து பேசாமடந்தையென இருந்தவனை ஓரளவுக்கு சகஜ நிலைக்கு கொண்டுவந்தாள்..

இத்தனை நாள் பேசாததையெலாம் ஒரே நாளில் பேசும் முயற்சிபோல இருவரும் பேசிக் கொண்டிருக்க ரேவதி மற்றும் நிலாவின் விடாமுயற்சியால் அவர்களது கவனம் அலைபேசி கொண்டு தகர்க்கப்பட்டது..

மாலையில் வீடு சேர்ந்தவர்கள் இருவரும் ஒன்றாக கழித்த நேரத்தை நினைத்து கனவில் திளைத்திருக்க அதை கெடுக்கும் விதமாக சிவானியிடமிருந்து அழைப்பு வந்தது ராமிற்கு..

அன்று அவசரத்தில் கொடுத்த வாக்கிற்காக அவளைச் சந்திக்க சென்றான் ராம்..

" உங்களோட விருந்து சாப்பிட நான் வரல..தயவுசெஞ்சு சீக்கிரமா சொன்னா வசதியா இருக்கும்.. " என தன்முன்னே வகைவகையாக சமைத்து வைத்திருந்த அனைத்து உணவுகளையும் பார்க்கக் கூட விரும்பாத ராம் வேண்டா வெறுப்பாக சொல்ல.

அவன் கோபம்தான் படுவான் எனத் தெரிந்தும் ஆர்வமாக தட்டுகளில் உணவினைப் பரிமாறிக் கொண்டிருந்தாள் சிவானி..

" நான் கூப்ட உடனே வந்தததுக்கு ரொம்ப நன்றி ராம்..அதேமாறி இது உனக்காக நான் ஆசை ஆசையா சமைச்சது டேஸ்டாவது பாரு ராம் " எனக் கெஞ்ச,

" இங்க நான் வந்ததே தனுக்கு நான் பண்ற துரோகமா நினைக்கிறேன்.. நான் இங்க வந்தது தனுவத் தவிர வேற யாருக்கும் என் மனசுல இடமில்லைனு சொல்றதுக்கு தான்.. நெக்ஸ்ட் மன்த் எங்களுக்கு மேரேஜ்..நீங்க கண்டிப்பா வரணும் " என்ற ராமின் கூற்றினை கேட்ட சிவானியின் கண்களில் கண்ணீர் முட்டிக் கொண்டு நின்றது.. அந்த கண்களைக் கண்டதும் " பெண்களின் கண்ணீர் பொல்லாதது மகனே " என்ற சதுரகிரி பெரியவரின் கூற்றுதான் நினைவில் வந்தது ராமிற்கு..

" ஏன் ராம் உன்னை கொல்லனும்னு நினைச்சா காதலிச்சுதான் உன்னை கொல்ல முடியுமா என்ன? " என்று கேள்வியாய் அவள் கேட்டிட ராம் புரியாமல் விழித்தான்..

" சாப்பாட்டுல எதாச்சும் கலந்து உங்கள கொலை பண்ண நினைச்சிருந்தனா நீங்க எனக்காக அடிபட்டு ஹாஸ்பிடல இருந்தப்போ நான் தான உங்கள கவனிச்சிக்கிட்டேன். அப்போ என்னால எதும் கலந்துருக்க முடியாதா.. "

அவள் பேச்சில் கோபம் கொண்டவன் " இப்போ என்ன சொல்ல வர.. நீ தப்பே பண்ணிலயா.. ஒருவேளை ஆள்மாறாட்டம்ல உங்களுக்கு சரின்னுதான் சொல்றீங்களா " எனக் கோபமா எகிற,

அவளோ அவசரப்படாமல் " நான் என்ன சொல்ல வரேனு கேட்டுட்டு பேசுங்க ப்ளீஷ் " எனக் கெஞ்ச,
" ம் " என சளித்தவாறே தலையாட்டினான்..

" நீங்க இன்னும்  என்னை கொலைகாரின்னே நினைச்சு பேசிட்டு இருக்கீங்க.. நான் ஒரு டாக்டர் ஒரு உயிரோட வேல்யூ ..அதை இழந்தா அவங்க சொந்தம் எப்படி கஷ்டப்படுவாங்கனு கூட இருந்து பார்த்துட்டு இருக்கவ.. நான் ஒரு உயிர எடுக்க நினைக்கக் கூட மாட்டேன்.. ஏன் உங்கள கொல்லனும்னு நினைச்சா அடுத்த செகன்ட் என்னால கொல்ல முடியும்.. ஆனா நான் அப்படி பண்ண எனக்குத் தைரியம் இல்ல..

தனு உங்கள சின்ன வயசுல இருந்தே காதலிச்சிருக்கலாம்..
உங்களுக்கும் தனுவோட காதல் உயர்ந்ததா இருக்கலாம்..
உண்மைய சொல்லணும்னா எனக்கு அந்த வயசில காதல் கல்யாணத்த பத்தி நினைச்சிக்கூட பார்க்க நேரமில்ல..அப்போ என் மனசுல உயிரோட பாதுகாப்பா இருக்கனும்னு மட்டும் தான் தோணுச்சே தவிர காதலலெலாம் பண்ண சந்தர்ப்பமே அமையல.."

அண்ணா பண்ண தப்புக்காக ஜெயிலுக்கு போனப்பிறகு அவனையே நம்பியிருந்த நாங்க சாப்பாட்டுக்கு கூட ரொம்ப கஷ்டப்பட்டோம்.. இதுல அப்பவோட ஹாஸ்பிடல் செலவு வேற.. ..எங்க வேலைக்கேட்டு போனாலும் ஆரவண்ணாவ சொல்லி வெளிய அனுப்பிட்டாங்க..
அம்மா என்னை  வளர்க்க ரொம்ப கஷ்டப்பட்டாங்க.. அந்த வலியோட ஆரவ் அடிக்கடி ஜெயில சூசைட் பண்ணிக்க டிரை பண்றான்னு வர வேதனையும் கூட வாழ்க்கையே வெறுத்துப் போற அளவுக்கு ரொம்ப நொந்துட்டோம்..
ரொம்ப கஷ்டப்பட்டு வெறியோட படிச்சி மெரிட்ல சீட் வாங்கி டாக்டரானேன்..
அது வரைக்கும் ஒரு பொண்ணா இந்த சமுதாயத்துல எத்தனை வலி எத்தனை வேதனைய அனுபவிச்சிருப்பனு எனக்கு மட்டும்தான் தெரியும் ராம்..
இங்க
நம்ம கிட்ட நல்லபடியா பேசிட்டு முதுகுல குத்தறவங்கதான் நிறையா பேர்.. யார்கிட்டயும் பேச பயமா இருக்கும்.. தொழில ஒரு டாக்டரா சாதிச்ச என்னால வாழ்க்கைல ஒரு தைரியமான பொண்ணா சாதிக்க முடியல..
துணையில்லாத பொண்ணுங்களோட நிலைமைய உனக்கு நான் சொல்லி தெரியனும்னு இல்ல.. ஆண்கள பாத்தாலே பயப்பட ஆரம்பிச்சேன்..நல்லவங்கள கூட எல்லாரும் ஒரே மாறி கெட்டவங்கதான்னு நினைச்சு ஒதுக்கினேன்..

அந்த சமயத்துலதான் ராம் உன்னை நான் பார்த்தேன்.. உன் பிரண்ட் சக்தியோட காதலி அவளோட காதல சக்தி ஏத்துக்காததால பாய்சன் சாப்பிட்டு ஹாஷ்பிடல சேர்த்தப்ப

நீ அவங்ககிட்ட பேசும்போது பக்கத்துல நானும்தான் இருந்தேன்.. ஒரு பொண்ணோட வாழ்க்கைல எப்படி தைரியமா இருக்கனும்.. எப்படி வாழ்ந்து காட்டனும்னு அந்தப் பொண்ணுக்கு நீ சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் எனக்கே சொன்னமாறி இருந்துச்சு.. எனக்கு தன்னம்பிக்கைய வளர்க்கற மாறி இருந்துச்சு.. அதுல இருந்து நான் புது சிவானிய மாற ஆரம்பிச்சேன்.. சொல்லப்போனா உன்னோட ஜானகியா மாறுனேன்..
தினமும் காலைல நீ சொன்ன அட்வைஸ நினைச்சு தான் என் வேலையவே தொடங்குவேன்.. அதுக்குபிறகு என்னை சுத்தி நடக்கும் பெரிய பிரச்சினை கூட சின்னதா தெரிஞ்சுது.. என்னோட ஹீரோ ராம் நீ..
அந்தப் பொண்ணு டிஸ்சார்ஜ் ஆகும்போது அவ காதலனையும் மிரட்டி அவளோட சேர்த்து வெச்சப்போதான் ராம் எனக்காக என்னை பக்கத்தில இருந்து பார்த்துக்க உன்னைமாறி ஒரு உறவு இல்லைனு ரொம்ப ஏங்குனேன்..

என்னோட ஆசை நிறைவேறாதுனு தெரிஞ்சும் உன்னைக் காதலிக்க ஆரம்பிச்சேன். உங்களுக்கு தெரியுமானு தெரியல.. ஆனா அப்போதான் ஆரவண்ணா ஜெயில இறந்த நியூஸ் வந்துச்சு.. அப்பா பாடிய கூட வாங்க விரும்பல.. எங்கண்ணான எங்கப்பாவுக்கு உசிரு.. அதுனால கொஞ்சநாள்ல துக்கம் தாங்காம அவரும் எங்கள விட்டு போயிட்டாங்க..
அப்போதான் அம்மா மென்டலா டிஸ்பர்ப் ஆகி உன்னை கொலை பண்ணியே ஆகனும்னு என்னை வற்புறுத்துனாங்க..
நான் எவ்ளோ முயற்சிபண்ணியும் அவுங்க மாறவே இல்ல.. அடியாள்கிட்ட பணமும் உன் போட்டாவும் கொடுக்கறப்பதான் அது நீதான்னு எனக்கு தெரியும் ராம்..
நான் அப்படி பண்லைனா
என் இடத்துல வேற யாராச்சும் உன்னை கொலை பண்ண முயற்சி செஞ்சிருப்பாங்க.. அதனால நான் அதுக்கு பொய்யா சம்மதிச்சேன்..

ஆனால் அந்தப் பண்ணையார் எங்கிட்ட தப்பா நடந்துக்க டிரை பண்ணுவார்னு எங்க அம்மாவும் நினைக்கல..பட் அது கூட எங்கம்மா நிதர்சனத்த புாிஞ்சிக்க வாய்ப்பா இருந்துச்சு.. நான் உங்க வீட்டுக்கு வந்தது கூட நீங்க நல்லவங்கனு எங்கம்மாக்கு புரிய வைக்கத்தானே தவிர கொலை பண்ண இல்ல.
இதுல என்னோட பெரிய தப்பு தனுவோட காதல தெரிஞ்சிக்காம போனதுதான்.. நீ சொன்ன மாறி எத்தனை வருசம் காதலிக்கறது முக்கியமில்ல ராம்.
ஒரு நிமிசமானாலும் நான் உண்மையா காதலிக்கனும்.. அந்த வகைல நீ என்ன நினைச்சாலும் என் காதலும் புனிதமானதுதான்..
அது நிறைவேறாத காதலானாலும் காதல் காதல்தான்.. என்னை நீ ஏத்துக்கிடாம இருந்தாலும் பரவால தயவுசெஞ்சு தப்பா பேசாத..
இதெலாம் நான் அன்னைக்கு சொல்லியிருந்தா என்னை நம்பியிருக்க மாட்டீங்கனு தெரியும்.. அதான் அப்ப சொல்லல.. இப்பவும் நீ என்னை ஏத்துக்காம போயிடுவேன்னு பயத்துல சொல்லுல கடைசி வரை என் காதல நீ தப்பா நினைச்சிட்டு இருப்பீங்கனு தான் சொன்னேன்.. " என்றவள் கண்களைத் துடைத்துக்கொண்டு " நீங்க கொடுத்த 5 நிமிசம் முடிஞ்சிருச்சு ராம் .. " என்றாள்.

மனதுக்குள் எதுவோ உணர்த்தினாலும்  " எண்ணெய மாடில கொட்டும்போது உன்னோட காதல் எங்க போச்சு.. " என்றான் பிடிவாதமாக...

" உன் மனசாட்சிய தொட்டு சொல்லு ராம் நான் அதை செய்வேனு நினைக்கிறியா.. நான் நிறைமாச கர்ப்பிணியா இருக்கவுங்கள கொல்ல நினைப்பனா.. " என்று அவளும் கோபமாகவே வினாவினை எழுப்ப ராமிற்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.. பேசாமல் சிவானியின் வீட்டிலிருந்து வெளியேறினான்..

சிவானி சொல்வது உண்மையா ?
அப்படியென்றால் மீராவினை பழி வாங்க நினைத்தது யார்?
ராம் அதனை கண்டுகொள்வானா ? என்பதை அடுத்த அத்தியாயத்தில் காணலாம்.. தாமதத்திற்கு மன்னிக்கவும் நண்பர்களே.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro