Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

தேடல் - 56

மெடர்மான்

அந்த பச்சை பசேலென்ற வானத்தை வாயை பிளந்து பார்த்து கொண்டிருந்தான் யதீஷ்.. பின்ன கதை கதையாய் வேறு கிரகத்தை பற்றியெல்லாம் படித்திருப்பான்... கற்பனை செய்திருப்பான்... இவ்வாறு ஒரு வேற்று கிரகத்திலே வந்து தால் பதிப்பானென அவன் எதிர்பார்த்ததே இல்லையே...

ஷ்ரவன் அவனின் தன்னலமற்ற குணத்தை கண்டு இரசித்தபடியே அவர்களின் வீட்டிற்கு அழைத்து சென்றான்... முபல்லன் தான் ஏதோ கண்டுபிடிக்க போவதாய் அவன் ஒரு புறம் சென்றிருக்க முதல் முறையாய் மெடர்மான் வந்தடைந்த யதீஷ் கையில் பிடிக்காத குறையாக அங்குமிங்கும் உளாத்தி கொண்டிருந்தான்...

முதலில் வீட்டிற்கு சென்றதும் அனைத்தையும் ஷ்ரவன் யதீஷிற்கு சுட்டி காட்ட எதற்சையாய் இவர்கள் ஒரு வருடத்திற்கு முன்பு பூமிக்கு வரும் முன்பாக கட்டிய ஒரு கயிற்றை நிரன் இரண்டு மாதமாய் களட்டாமல் வைத்திருப்பதை கண்டு அதை களட்டத் தொடங்கிய ஷ்ரவனுக்கு எந்த காவல் திட்டம் தோன்றியதோ யதீஷிடம் கூறாமலே அதை தனியே பத்திரப்படுத்தி கொண்டான்...

அங்கிருந்தே டெலிகேம் மூலமாக மெடர்மானின் ஆடிட்டோரியமாக மாறிய முந்தைய மார்ன் மற்றும் மெடரின் வீட்டிற்கு அழைத்து சென்றான் ஷ்ரவன்.. அந்த வீடு பூமியில் இருக்கும் அந்த மண்டபத்தோடு அனைத்திலும் ஒத்துபோவதை சொல்லி சொல்லி யதீஷ் வாய் வளிக்காது ஒவ்வொரு மூலையையும் சுட்டி காட்ட ஷ்ரவன் தலையிலடித்தபடி அவன் பின் சுற்றி கொண்டிருந்தான்...

ஒருவழியாக நண்பர்கள் இருவரும் முபல்லன் நினைவு வந்து அவனை தேடி சென்றனர்.. அவன் நட்டநடு மைதானம் ஒன்றில் ஏதோ ஒரு கருவியை வைத்தவாறு நோண்டி கொண்டிருந்தான்.. இவர்கள் திடுதிபுவென எங்கிருந்தோ குதித்ததும் அவன் திடுக்கிட்டு இவர்களை நோக்கினான்...

" என்னா பாஸ் பன்றீங்க...?? " என யதீஷ் சாதாரணமாகவே கேட்டாலும் முபல்லனிற்கு அவன் கொலைவெறியோடு கேட்பது போல் தோன்றியது... சத்யா அடித்த அடியோ ஷரூராவை இறக்கிய கருவியோ ஏதோ ஒன்று வெகுவாகவே அவனின் மூளையை பாதித்து வைத்திருந்தது...

" இல்ல.. அது ரேடார தேடீட்டு இருக்கேன்... அந்த ரேடார்லேந்து வியோனார்ல உள்ள ரேடார ஆஃப் பண்ணலாமான்னு பாக்களாம் இல்லையா?? " என்க அவனை சற்றே ஏற இறங்க நோக்கிய ஷ்ரவன் அந்த இடத்தை பார்த்தபடியே " அதான் வெடிச்சிடுச்சே அதெப்புடி இன்னும் இருகக்கும்... " என அலட்சியமாய் வினவினான்...

" உங்க வட்ரன் இருக்கும் போது என்னோட ரேடார் இருக்காதா?!?! " என அவன் சற்று தூக்கலாகவே கோவத்தோடு கேட்க அந்த கோவத்தில் எதையோ கண்ட யதீஷ் ஷ்ரவனின் கரத்தை பிடித்து கொண்டு அதை முபல்லனுக்கு தெரியாதவாறு " ஓக்கேங்க பாஸ் கண்டிப்பா இருக்கும்... அதெப்புடி அதுக்கு எதாவது ஆயிருக்கும்.. நீங்க தேடுங்க. நாஙேக உங்களுக்கு ஹெப் பன்றோம் " என கூறி கொண்டே அவனின் செயலினால் ஏதோ புரிந்து அமைதியடைந்திருந்த ஷ்ரவனை இழுத்து சென்றான்...

பூமி

அனைவரும் ஒரு வழியாக அனைத்தும் முடிந்து விட்டது என்று அமரலாம் என்று பார்க்கையில் நிரன் வியோனாரின் டைமரும் நெருங்கி கொண்டே வருகிறதென கூறி அனைவரையும் பரபரப்பாக்கியிருக்க ராவனா மற்றும் சத்யா அமர்ந்து பொருமையின் சிகரமென வியோனாரில் உள்ள அனைவரையும் கவனித்து கொண்டிருந்தனர்...

நிரன் நேரத்தையும் அவர்களுக்கும் ரேடாருக்கும் உள்ள வித்யாசத்தை அரானாவிற்கு நொடிக்கு நொடி தெரிவித்து கொண்டிருக்க அங்கே சம்மந்தமே இல்லாததை போல் விட்டத்தை பார்த்தபடி அமர்ந்திருந்தாள் அனாமிக்கா..

அவளின் மடியிலிருக்கும் கணினிக்கும் அவளின் கண்களுக்குமே எட்டாத தூரம் இருக்க அதை பார்த்து கொண்டிருந்த மீனா இவள் வேலையை செய்தமாதிரி தான் என புலம்பி கொண்டே அவளின் மடிக்கணினியை எடுத்து கொண்டு நராவிற்கு உதவத் தொடங்கியிருந்தாள்...

சனாயாவின் திடீர் சத்தத்தினால் தன் கடலை போன்ற எண்ணங்களை விட்டு வெளியேறிய அனாமிக்கா அவளை தேடி அந்த அறையை விட்டு வெளியேற ரியா மற்றும் அஜிம்சனா குழந்தைகளை பார்த்து கொள்வதை கண்டதும் வந்த வழி பார்த்தே செல்லத் திரும்பியவள் ஏதோ எண்ணம் கொண்டளாய் வீட்டை விட்டு அருகிலிருக்கும் மண்டபத்திற்கு சென்றாள்..

அந்த நட்ட நடு இராத்திரியில் இது தேவையா என அவளின் மனம் கேட்டாலும் ஏதோ ஒரு ஊந்துதலில் தைரியமாய் உள்ளே நுழைந்தவள் இருளை கண்டு பம்மினாலும் நம் உள்ளங்கையில் அடங்கும் உலகத்தின் உதவியில் ஃப்லஷ்லைட்டோடு உள்ளே நுழைந்தாள்...

நேராக தட்டுத் தடுமாறி இரண்டாம் மாடிக்கு சென்று பேஸ்மென்ட்டிற்கு செல்லலாமா ஃத்வருண் பத்திரங்களை கண்டெடுத்த அறைக்கு செல்லலாமா என தனக்குள்ளே பட்டிமன்றம் நடத்தியபடி ஒரு முடிவாக அந்த அறைக்கே சென்றாள்...

அந்த அறை ஃத்வருண் உடைக்க முணைந்த கதவு பாதி திறந்தவாறு அப்படியே தான் இருந்தது... இந்த மண்டபத்திலும் மெடர்மானில் உள்ள ஆடிட்டோரியத்திலும் தான் அவர்கள் ஒன்றாய் வாழ்ந்திருக்க வேண்டும் மெடர்மானை பற்றி தெரிந்ததும் கார்மன் அந்த வீட்டை ஆடிட்டோரியமாக மாற்றியிருக்க வேண்டுமென தானே ஒரு கணக்கிட்டு அதையும் சரியாய் கனித்து கொண்டே அந்த அறையை சுற்றி வந்தவள் அங்கு ஒரு பென்சில் வரைபடமிருப்பதையும் அதில் தத்ருபமாய் யாரோ ஒருவரின் முகம் தீட்டப்பட்டிருக்க அதன் மேலோ முழுதாய் ஏதோ ஒரு கரியினால் தீட்டப்பட்டிருப்பதையும் கவனித்தபடி அதை வரைந்தது மெடர் என்பதையும் கையெழுத்தை வைத்து அறிந்து கொண்டாள்..

ஆனால் அந்த ஒருவரின் முகம் எதற்காய் அழிக்கப் பற்றிருக்கிறதென புரியாது அந்த அறையின் பாதிக்கும் மேலான சுவற்றில் சூழ்ந்திருந்த காகிதங்களை கவனிக்கத் தொடங்கி பல ஓவியங்களை கண்டறிந்தாள்...

பெரும்பாலும் ஒரு பெண் மற்றும் ஒரு ஆணின் புகைபடமாகவே தான் இருந்தது.. அனைத்துமே மெடர் மற்றும் மார்ன் வரைந்தது... ஒருவர் மற்றவரை மாற்றி மாற்றி வரைந்திருக்க வேண்டுமென எண்ணி கொண்டே ஒரு ஒதுக்குபுமான பக்கத்திலிருந்த பெரிய சுவற்றை ஏறிட அதில் பெரும்பாலும் குழந்தைகளின் வரைபடமே இருந்தது... அதுவும் இரட்டை குழந்தைகள்... அவர்களின் கண்கள் மட்டும் அனைத்து படத்திலிருந்தும் அடியோடு அழிக்கப்பட்டிருக்க இவை இரண்டும் லியான் மற்றும் சத்யாவாக இருக்குமா என அவள் அதில் ஒன்றை ஒரு பதட்டத்தோடு எடுக்க செல்லுகையில் அவளின் முட்டிகை தட்டி அருகிலிருந்த ஒரு பெட்டி கீழே விழுந்தது...

அது விழுந்த வேகத்திற்கு சில காகிதகள் கீழே சிதற அதை வேகமாய் சேகரித்த அனாமிக்கா அதே இரட்டை குழந்தைகளின் ஓவியங்களை கவனித்தாள்... ஆனால் இடையிடையே வேறொரு ஆண் குழந்தையின் படமும் அதில் இணைந்திருந்தது... அந்த வேறொரு குழந்தை இருக்கும் புகைபடமனைத்திலும் குறிப்பாய் ஏதோ ஒரு சிவப்பு குறியீடு இருந்தது...

ஒரு படத்தில் அதே ஆண் குழந்தை ஒரு பச்சிளம் பெண் குழந்தையை தூக்க முடியாத தூக்கி கொண்டு நின்றிருக்க அவனருகில் அந்த இரட்டை ஆண் குழந்தைகளில் ஒருவன் இன்னோறு பச்சிளம் பெண் குழந்தையை தூக்கியபடி நின்றிருந்தான்... இவர்கள் அனைவரின் முகத்திலுமே கண்கள் மட்டும் அழியப்பட்டு அது யாரெனவே தெரியாததை போல மறைக்கப்பட்டிருந்தது...

அந்த இரட்டை குழந்தைகள் லியான் சத்யாவே தான் என உறுதிமொழியே பூண்டதை போல ஒரு முடிவுக்கே வந்திருந்த அனாமிக்கா மற்ற மூவரும் யாரென்ற கேள்வியில் இன்னும் அந்த பெட்டியை கிளற அதில் கிடைத்த ஒரு டைரியை கண்டவள் அதை உடனே எடுத்து கொண்டு அனைத்தையும் கொத்தாத் அளிக்கொண்டு அஜிம்சனாவிடம் ஓடினாள்...

நிலா

ஒரு வழியாய் அந்த இடம் முழுவதும் தேடி தேடி அலைந்து ஒரு அறையில் ஷரூராவை கண்டுபிடித்தான் லியான்... ஆயிரமாயிரம் போரை வென்றதை போன்ற ஒரு நிம்மதி பெற்றவன் மெதுவாய் ஷரூராவிடம் சென்று அவளை எழுப்ப அவள் குரோபடரான் ராஜா கூறியதை போலவெல்லாம் ஆக்ஸிஜனிற்காய் கஷ்டப்பட்டதை போலவெல்லாம் தெரியவில்லை... அவளின் நீல கூந்தல் மெதுமெதுவாய் அடர்ந்த ஒரு சாயத்தை பெற்று கொண்டிருக்க உதடு காய்ந்து சற்றே அவளின் முகத்தை உயிர்வற்று காட்டியது... இவன் எழுப்பிய சில நிமிடங்களிலே ஒரு முனகலுடன் மெதுவாய் கண்களை திறந்து பார்த்தாள் ஷரூரா...

முதலில் கண்கள் மறைக்க அவனை விழித்து விழித்து பார்த்தவள் அது லியான் தானென பத்துக்கு பதினோறு முறை உறுதி செய்ததும் தலையின் வலியையும் மீறி அவனின் கழுத்தை தாவி பிடித்து கொண்டாள்...

லியான் " ஷு ஷு ஷு நான் தான்.. நான் தான்.. உனக்கொன்னும் இல்ல.. " என அவன் மெதுவாய் அவளை சமாதானப்படுத்த அத்தருணத்திலும் அமைதியை கொண்டிருந்த குரலை கேட்டு அழுதே விட்டிருந்தாள் அவள்...

" அண்ணா.... எவ்ளோ பயந்துட்டேன் தெரியுமா... நீ வர முடியாதோன்னு நெனச்சேன் டா... உன்ன பாக்க முடியாதுன்னு நெனச்சேன் டா... எதுக்கு என்ன காப்பாத்த வந்த... தாரா அண்ணிய பாக்க உன்ன பூமிக்கு தானே போக சொன்னேன்.. ஏன் இங்க வந்த?? " என அவள் கதறி அழ அவனின் கண்களும் கண்ணீரால் நிறைந்திருந்தது... " நா நீ இல்லாம பூமிக்கு நோயிருந்தாலும் உன் தாரா அண்ணி என்ன உன்ன தேடி தான் தொரத்தி விறௌறுப்பா டா பப்புமா.. நீ இல்லாம வீட்டு பக்கமே தலை வச்சப் படுக்கக் கூடாதுன்னு சொல்லீருப்பா... அதோட உன்ன விட்டுட்டு எப்டி நா போவேன்... உனக்கு ஒரு குடும்பம் இருக்கு... அவங்கள நா உன் கிட்ட காட்டுவேன்னு சொன்னேன்ல.. " என அவனும் புன்னகையோடு அவளை அமைதிபடுத்தினான்... " போடா லூசு அண்ணா "

" நீ எப்டி வந்த... இப்போ எங்க இருக்கோம் நாம " என அழுகையெல்லாம் அடங்கி ஒருவழியாய் அவன் கேட்டதும் " நிலால தான்- " என லியான் முடிப்பதற்குள்ளாகவே அங்கு ஏதோ சலசலப்பு சத்தம் கேட்டது... உடனே சுதாரித்த லியான் அவன் கொண்டு வந்த ஒரு டெக்கரான் வாட்சை ஷரூராவின் கரத்தில் கட்டி விட்டு விட்டு " ஷரூமா... நா இப்போ இங்க இருந்து போயாகனும்... நீ டக்குன்னு பூமிக்கு போ... நிரன் டிவின் இரெண்டு பேரும் அங்க தான் இருப்பானுங்க... பூமிலையும் மெடர்மான்லையும் இருந்த ரேடார அழிச்சிட்டாங்க போல... சோ நீ உடனே கெளம்பு... நா வருவேன்.. கண்டிப்பா வருவேன்.. எப்போ வருவேன்னு உனக்கே தெரியும் " என அவன் கூறவும் அந்த உறுதியிலே நேரம் நெருங்கியதை உணர்ந்து சரியென தலையசைத்தாள் ஷரூரா...

சலசலப்பு அதிகரிக்கவும் லியான் அவளின் கரத்தில் அரு அழுத்தத்தை கொடுத்து விட்டு அங்கிருந்து வேறொரு கதவு வழியாக செல்ல அதே நேரம் முன் கதவின் வாயிலாக குரோபடரான் ராஜா பதைபதைப்பான முகத்தோடு உள்ளே நுழைந்தார்...

பூமி

தங்களை நோக்கி பரபரப்பாய் ஓடி வரும் அனாமிக்காவை அவசர அவசரமாய் பிடித்து நிறுத்திய ரியா அவளுக்கு மூச்சு பயிற்சி கொடுத்து அவளை அசுவாசப்படுத்த அந்த தோழிகளை பெரிய சனாவும் குட்டி சனாவும் ஆச்சர்யமாய் பார்த்து கொண்டிருந்தனர்...

மூச்சு விடுவது ஒரு நிதானத்தை அடைந்த உடனே தன் மகளை அஜிசனாவின் மடியிலிருந்து தூக்கி ரியாவிடம் கொடுத்தவள் தான் கொண்டு வந்த அந்த பெட்டியை அஜிம்சனாவின் மடியில் போட்டாள் அனாமிக்கா...

" அஜி அஜி.. இத டக்குன்னு என்னன்னு படி டி.. " என இவள் வேறெதையும் கூறாமல் அந்த டைரியை அவளின் கரத்தில் தினிக்க மறுப்பேச்சின்றி அதை வாசிக்கத் தொடங்கிய அஜிம்சனா அதை மூடி வைக்கையில் விரிந்த கண்களோடு தன் முன் நோக்கினாள்...

தேடல் தொடரும்...

ஹலோ இதயங்களே... எல்லாரும் ட்விஸ்ட்டு புரிய மாட்டுதுன்னு புலம்பீடு இருந்தீங்க... கவலப்படாதீங்க... எல்லாத்துக்கும் பக்காவா சார்ட் ரெடி பண்ணீட்டேன்... சீக்கிரமே எல்லாம் புரிஞ்சிடும்... இன்னைக்கு இது போதும்னு தான் இதோட நிறுத்தீட்டேன்... அடுத்தடுத்து சீக்கிரமே யூடிகளோட நா உங்கள தேடி வரேன்... நாளைக்கு பெரிய யூடிக்கு ட்ரை பன்றேன்... இன்னைக்கு கடைசி நேரத்துல எழுதுனது.. அப்டி தான் இருக்கும்... புடிச்சிருக்கும்னு நம்புறேன்... சரிங்கோ குட் நைட்..டாட்டா...

DhiraDhi ❤

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro