Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

தேடல் - 45

நிலவு

தரையில் விழுந்த ஷரூராவின் வாட்ச் அடுத்த நொடியே செயலை இழக்க அவளின் பின் ராடோடு நின்றிருந்தார் வெள்ளை உடையில் பச்சை கண்ணாடியுடன் இருந்த ஒரு விஞ்ஞானி...

அவரின் கண்கள் ஷரூராவை முழுதாய் அளவெடுக்க ஷரூராவின் நீல நிற கூந்தலும் சற்றே வெளுத்தே காணப்பட்ட அவள் தோலும் அவரின் மூளையில் ஏதேதோ எண்ணங்களை வலுவூட்ட " ராஜா பேச வராது காது கேக்காதுன்னு சொன்னாரு... யாருட்ட இந்த பொண்ணு இப்டி அழுது பேசீட்டு இருந்துச்சு " என அந்த அறையை நோட்டமிட்டவர் எதற்சையாய் ஷரூராவின் கடிகாரத்தையும் கவனிக்க தான் வந்த வேலையை நினைவு படுத்தி அவள் கரத்திலிருந்து அதை அவிழ்க்க முணைந்தார்...

ஆனால் அதன் வாரை அவர் அவிழ்க்க முயன்ற அடுத்த நொடியே எமர்ஜென்சி அலாரமையே அழுத்தியதை போல சிகப்பு நிறத்தில் அந்த கடிகாரம் ஒளிர அதை அவிழ்க்க வேண்டுமெனில் சரியான ஃபிங்கர் ப்ரின்ட் இருந்தாலே திறப்பேனென பிடிவாதம் பிடிக்காத குறையாய் விரல் அச்சை பதிக்கும் இடத்தை தவிர்த்து மற்றெங்கிலும் தொட்டால் எரியும் அளவிற்கு எரிந்து கொண்டிருந்தது...

அந்த ஃபிங்கர் ப்ரின்ட்டின் அளவை வைத்து அவளின் ஆல் காட்டி விரலாகத் தான் இருக்குமென எண்ணி அவர் ஷரூராவின் வலது கரத்து ஆள் காட்டி விரலை பதிக்க அது தவறு என்பதை சொல்லாமல் சொல்ல இன்னும் அடர்ந்த சிகப்பு நிறத்தில் ஒளிர்ந்தது...

இவர் குழப்பத்தோடே பெருவிரலை விடுத்து மற்ற மூன்றையும் வைத்து பார்க்க அவையும் தவறென்றே வர... கடைசியாய் ஒரே ஒரு வாய்ப்பு தான் உள்ளது அதற்கு மேல் அந்த கடிகாரமே மொத்தமாய் டிஃப்யூஸ் ஆகிவிடும் என்ற போது எப்படியும் இதுவாகத் தான் இருக்கும் என தைரியமாய் ஷரூராவின் பெருவிரலை அவர் வைக்க அதுவும் தவறென கூறி இருந்த இறுதி வாய்ப்பையும் இழந்தார்...

அவருக்கெங்கு தெரிய போகிறது.. அது விரல் அச்சு அல்ல... நகம் அச்சு என்று... குரோபடரான் ராஜா தான் செய்த செயலுக்கு துவைத்து தொங்க விடப் போகிறார் என புலம்பிக் கொண்டிருந்த அந்த விஞ்ஞானி சில பல புலம்பல்களை புலம்பித் தீர்த்தப் பின் காவலர்களை அழைத்து ஷரூராவை அங்கிருந்து அப்புறப்படுத்தக் கூறினார்...

வியோனார்

லியான் அளவு கடந்த கோவத்திலும் இயலாமையிலும் அந்த பெரிய டவரின் ஒரு காலை தன் முஷ்டியால் இறுக்கி அடிக்க அவனுக்கு வலித்ததோ இல்லையோ அவன் தந்த அதிர்வில் அந்த டவர் மீது கூடு கட்ட வாஸ்த்து பிரகாரம் பார்த்து கொண்டிருந்த வியோனாரின் பறவைகள் பதறியடித்து விண்ணை நோக்கி பறந்தது...

நிரன் : டேய் என்ன டா பன்ற... கோவத்த உன் மேல காமிச்சா மட்டும் எல்லாம் சரி ஆகிடுமா...

லியான் : ம்ச் எல்லாம் என் தப்பு தான் டா... நிலாக்கு நா வந்தப்போ நானே உன்ன காப்பாத்தையும் வந்துருக்கனும்... ஷரூராவ அனுப்பி தப்புப் பபண்ணிட்டேன்... அதனால தான் அவள புடிச்சிட்டாங்க... என இன்னுமொறு முறை அடிக்க அதன் பலனாய் அவன் கரம் சிவக்க தொடங்கியது...

டிவின் : அதுக்கு இப்போ என்னடா பன்றது... என அவன் கோவத்தில் இருப்பதால் அவன் வழியிலே சென்றால் தான் உண்டென இவன் குரலெழுப்பினான்...

லியான் : நா நிலாக்கு போறேன்... என அவன் கூறியது அவனின் நண்பர்கள் இருவருக்கும் முதல் முறை நிலாக்கு போறேன் என கூறிவிட்டு கருந்துளைக்குள் விழுந்து விஷப்பரிட்சையிலிருந்து தப்பித்தது நினைவில் வந்து அவன் கருந்துளைக்கே செல்கிறேன் என கூறுவது போல் கேட்க இருவரும் ஓங்கி இரு கன்னத்திலும் பளாரென்று அறைந்தனர்...

லியான் அந்த அறையின் தாக்கத்தில் தன்னையே வருத்தி கொள்வதை நிறுத்தி விட்டு அமைதியாக மற்ற இருவரும் கொதிக்கத் தொடங்கினர்...

டிவின் : எப்பொப்பாரு கோவத்துல மரகலண்டு முடிவெடுக்குறதே அண்ணனுக்கும் தம்பிக்கும் வேலை... ஒருத்தன் கோவத்துல ஒருத்தனோட மண்டைய உடக்கிறான்.. இன்னோறுத்தன் ஊரு உலகத்துல தியாகம் பன்ன வேற எதுவுமே கிடைக்காத மாறி போய் ப்லக் ஹோல்ல விழுந்துருக்கான் என கடுகடுத்தவனை பெருமூச்சுடன் பார்த்தான் லியான்...

லியான் : என்னால ஷரூவ அப்டியே விட முடியாது டா.. நா அவள காப்பாத்தனும் ப்லீஸ்...

டிவின் : அப்போ நானும் உன் கூட வரேன்...உன்ன தனியா விட்டு திரும்ப இழக்க எங்களால முடியாது...

நிரன் : நானும் வரேன்...

லியான் : டேய் விளையாடாதீங்க... நா நிலாக்கு போறேன்.. நீங்க பூமிக்கு போய் நம்ம ஃப்ரெண்ஸ்ட்ட முதல்ல நடக்குறத பத்தி சொல்லுங்க... நிலாலேந்து பூமிக்கு போக முடியாததால தான் ஷரூ இங்க மாட்டிக்கிட்டு இருக்கா... நம்ம எல்லாரும் அங்க வந்துட்டா நம்ம மூணு பேராலையும் பூமிக்கு போக முடியாம போய்டும்...

டிவின் : அதுக்குன்னு உன்ன தனியா விட முடியுமா டா...

லியான் :டேய் நீங்க இரெண்டு பேரும் நா இங்க இருக்கேன்னு தெரிஞ்ச அடுத்த செக்கெண்ட் இங்க வந்தீங்கல்ல... இது எதாவது ட்ரப்பா இருக்குமா... உண்மையாயே நா இருப்பனான்னு எதாவது யோசிச்சீங்களா... பாத்த உடனே இங்க என்னத்தேடி வந்தீங்கல்ல டா... அவ என் தங்கச்சி டா... நீங்க என்ன இங்க உயிரோட பாக்குறீங்கன்னா அதுக்கு முழு காரணம் அவ மட்டும் தான்... அவ நிலால தனியா இருக்கா.. அதுவும் ஒரு கைதியா இருக்கான்னு தெரிஞ்சப்ரம் என்ன எப்டி அவள அப்டியே விட சொல்றீங்க... நம்ம தங்கச்சிங்கல்ல யாராவது அங்க மாட்டிக்கிட்டாங்கன்னு தெரிஞ்சா நீங்க இப்டி தான் யோசிப்பீங்களா... அதோட ஸ்வத்தி அந்த பாளத்துலேந்து கீழ விழும் போது அவ கூடவே குதிச்சப்போ நீ எதாவது யோசிச்சியா டா... சொல்லு நிரா.. உன் கூடையே உன்ன புடிச்சிட்டு குதிச்சானுங்களே... யாராவது எதாவது தங்களோட உயிர பத்தி யோசிச்சானுங்களா... அதான் டா நாம... நம்ம தங்கச்சிங்க யாராவது அங்க மாட்டிக்கிட்டு இருக்காங்கன்னு தெரிஞ்சா நீங்க யோசிப்பீங்களாடா... நா இப்போ போலன்னா நா இப்போ செஞ்ச ஒரு மடத்தனத்துக்காக என் வாழ்க்க முழுக்க நா என்ன மன்னிக்க மாட்டேன்...

அவனின் ஒவ்வொரு வார்த்தையும் அவர்களுக்கு சுட்டெரிக்க அவன் இறுதியாய் கேட்ட கேள்விக்கு பதிலை தேடவே தேவை இருக்கவில்லை... நிச்சயம் அவ்விருவருமே தங்கை ஒருவள் ஆபத்திலிருக்கிறாளென. தெரிந்த மறுநொடி அங்கு தான் சென்றிருப்பர்... லியானுக்கு ஏதேனும் ஆகி விடுமோ என்ற பயத்தில் தன்னை பற்றி சிறிதும் சிந்திக்காமல் இவர்களை பூமிக்கு செல்லக் கூறி தன்னிடமிருந்த பவரையும் கொடுத்து விட்டு கிரகங்களை எவ்வாறேனும் பாதுகாக்க கோறிய ஷரூராவையும் அவர்களால் இழக்க முடியாது...

டிவின் : சரி டா... நம்மள்ள இரெண்டு பேர் நிலாக்கு போலாம்... இன்னும் ஒருத்தன் பூமிக்கு போகட்டும்...

நிரன் : நீயே பூமிக்கு போடா...

டிவின் : ஆமா உனக்கு தான் அங்க எல்லா இடமும் தெரியும் மச்சான்... நீயே போ... ஆனா இப்போ என் ஃபோன்ல இருக்க பவர வேற எதாவது ஒரு செயலிக்கு தான் நாம ட்ரன்ஸ்ஃபர் பண்ணனும்... நம்ம வாட்ச்ல பன்ன முடியாது...

நிரன் : என் டாலர்??? அது நிலால செஞ்சது தானே...

லியான் : ஆனா அத நீ உன்னோட வாட்ச் கூட கனெக்ட் பண்ணீர்க்கியே

நிரன் :ஆமால்ல... டேய் இதெல்லாம் உனக்கு எப்டி டா தெரியும்...

லியான் : நா உங்கள ப்லக் ஹோல்ல விழுரதுக்கு முன்னாடியும் பாத்துட்டு தான் இருந்தேன்... நீங்க இங்க. வர்ரதுக்கு முன்னாடி வரைக்குமும் பாத்துட்டு தான் இருந்தேன்...

டிவின் : சரி டேய் உன்னோட அந்த ஃபோனிருக்கா?? என நிரனிடம் வினவ நிரன் நினைவு பெற்றவனாக தட்டையான அவனின் செல்பேசியை எடுத்து கொடுத்தான்...

டிவின் : டேய் பத்திரமா போங்க டா... எல்லாம் நியாபகம் இருக்கட்டும்... பூமிக்கு நல்லபடியா வந்து சேருங்க...

லியான் : சரி டா நீ எல்லாத்தையும் நியாபகம் வச்சுக்கோ... முபல்லன் வேற வீட்டுக்கு வர போறான்னு ஷரூ சொன்னா... கவனம்

நிரன் : நீயும் கர்ஃபுலா இரு டா என்றதோடு மூவரும் ஒருவரை ஒருவர் இறுக்கி அணைத்து கொண்டனர்...

அத்தோடு நண்பர்கள் மூவரும் அவரவரிடம் எஞ்சிய சிறிய சக்தியுடன் பூமியை நோக்கியும் நிலவை நோக்கியும் பயணமாகினர்...

தேடல் தொடரும்...

ஹாய் இதயங்களே... இந்த யூடி குட்டி தான்... இப்பொதிக்கு இவ்ளோ தான் எழுத முடிஞ்சது... என் மூளைக்கு எதுவும் எட்டளங்க மக்களே.. சோ நாளைக்கு யூடியோட வரேன்... குட் நைட்... டாட்டா...

DhiraDhi

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro