Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

தேடல் - 39

டிவின் : என்ன டா சொல்ற டேய் என்ன டா சொல்றான் இவன்.. என அவன் கூறியதை ஜீரணிக்க இயலாமல் திறந்த வாய் மூடாது நின்ற நிரனையும் ஜன்னலின் வழியே தலையை நீட்டி ஏதோ செய்து கொண்டிருந்த லியானையும் உலுக்கினான்...

லியான் : ஆமா டா... இந்த கிரகம் பேரு வியோனார்... பூமி மெடர்மான்னு எல்லாத்துக்கும் முன்னமே தோன்றிய மனிதர்கள் வாழ்ந்த முதல் கிரகம்...

நிரன் : வாட் த ஹெல்!!!!!!!!!

லியான் : ஏதோ பிரச்சனையாய்டுச்சு டா... இங்க வானம் எப்பவுமே ப்லூவா தான் இருக்கும்... இது பச்சையா இருக்க வாய்ப்பே இல்ல...

டிவின் : அது பச்சையா இருந்தா என்ன ப்லூவா இருந்த என்ன... இந்த கிரகத்த எப்டி டா கண்டுப்புடிச்ச நீ...

லியான் : அது வந்து... நா கண்டுப்புடிக்கல டா...

நிரன் : பின்ன அதுவே வந்து உன்ன இழுத்துக்குச்சா...

லியான் : இல்லடா... வட்ரன் தான் வியோனார முழுசா கண்டுப்புடிச்சது...

டிவின் : இரு இரு... இந்த வியோனார் ங்குர பேரு ஃபெமிலியரா இருக்கே... நமக்கு முன்னாடியே தெரியுமா அத...

தமிழகம்

தில்வியா : உனக்கெப்டி டி இந்த பேரு தெரியும் என வாலும் புரியாமல் தலையும் புரியாமல் வியோனார் என்ற பெயரை உச்சரித்த அஜிம்சனாவை நோக்கி கேள்வி எழுப்ப குழப்பத்தில் விழி பிதுங்கி நின்றோர் மத்தியில் தில்வியா மாத்திரம் தெளிவாய் நின்றிருந்தாள்...

அஜிம்சனா : எனக்குத் தெரியுமா... அப்போ உனக்கு முன்னாடியே தெரியுமா...

தில்வியா : ஹ்ம் தெரியுமே... லெனா அம்மா ( மெடர்மான் நாயகர்களின் வளர்ப்பு அன்னை)  எங்களுக்கு சின்ன வயசுல ஒரு கதை சொல்லுவாங்க... அந்த கதைல நாங்க நல்லா படிச்சு பெரிய விஞ்ஞானிகளாகி வேற வேற கிரகத்தல்லாம் கண்டுப்புடிப்போம்னு சொல்லுவாங்க... கிரகத்துக்கு பேரு வக்கினுமேன்னு அப்போதிக்கு ஏதோ ஃத்வருண் தான் வியோனான்னு என்னமோ சொன்னான்... லெனாமா அத வியோனார்னு திருத்தி எங்கள விளையாட விட்டாங்க

வியோனார்

லியான் : நமக்கு ரொம்பவே ஃபெமிலியரான பேரு டா... லெனாமா சின்ன புள்ளைள சொல்லி சொல்லி நம்மள வளத்த கதைல நாம கண்டுப்புடிச்ச கிரகத்தோடு பேரு தான் வியோனார்...

நிரன் : ஆனா.. ஆனா அது எப்டி டா அவங்களுக்கு தெரியும்...

லியான் : எனக்கும் தெரியல டா ... எல்லாமே குழப்பமா தான் இருக்கு... இந்த பேரையும் மனிதர்கள் மெடர்மானையும் தாண்டி எங்கையோ வாழ்ரதா அப்பா இந்த டைரில எழுதீருந்தாரு.. அங்க மனுஷங்க நீல நிற தலை முடியோட இருப்பாங்கன்னும் அந்த கிரகமே நீலத்தால் நிறம்பி இருக்கும்னு சொல்லீருந்தாரு...  அதான் நான் எதாவது கண்டுப்புடிக்கனும்னு நெனச்சேன்... பூமி இருக்கும்னு நா சந்தேகப்பட்டப்ப கூட இந்த வியோனார் இருக்கும்னு நா நெனைக்கல... வேறும் வியூகமா தான் இருந்துச்சு... ஆனா..

நிரன் : என்ன ஆனா...

லியான் : என்ன ஷரூ காப்பாத்தி நா எந்திரிச்ச பிறகு அவள முதல் முறை பார்த்தப்பவே நா இருக்குரது வியோனார்லன்னு தெரிஞ்சிக்கிட்டேன்...

டிவின் : அதெப்புடி அப்பவே தெரிஞ்சிக்கிட்ட...

லியான் :சொன்னா நம்ப மாட்டீங்க இருந்தாலும்...

நிரன் : டேய் டேய் எத்தனையோ விஷயத்த நம்பீட்டோம் இத நம்பித் தொலைய மாட்டோமா... சொல்லு டா...

லியான் : ஓக்கே... முதல்லேந்து சொல்றேன்... வார்ம் ஹோல் தியரி நியாபகமிருக்கா... என பட்டென கேட்கவும் நிரனும் டிவினும் ஒருவரை ஒருவர் பார்த்து விட்டு லியானை மீண்டும் நோக்கினர்...

டிவின் : அது எதுக்கு இப்போ...

லியான் : லிசென் மச்சான்... வார்ம் ஹோல்க்குள்ள நுழையிரதால அதோட மறுபுறத்துலேந்து வரப்போ நாம வேற ஒரு டைமென்ஷன் ஆர் யுனிவெர்சிட்டி இல்ல கலெக்சிக்கு போகவும் வாய்ப்பு இருக்கு இல்லையா...

டிவின் நிரன் : ஆமா... அதனால என அவர்களும் அவனோடு சேர்ந்து இழுக்க...

லியான் : சிம்ப்பில்... நம்ம பூமி நிலா மெடர்மான் மூணுமே இருக்க யூனிவெர்சிட்டிய விட்டே நா வேற யூனிவெர்சிட்டிக்கு ஒரு பர் ஆஃப் வார்ம் ஹோல் வழியா வந்துட்டேன்... வந்துட்டேன்னு சொல்ல முடியாது வட்ரன் என்ன இழுத்துட்டு வந்துடுச்சு.... என வெகுசாதாரணமாய் கூறியவனை அதற்கு மேலும் அவர்களால் மனிதன் என நம்ப முடியவில்லை....

வார்ம் ஹோல் என்பதும் கருந்துளை வெள்ளை துளை போலவே விண்வெளியின் அரிய மர்மங்களில் ஒன்று தான்... அந்த வார்ம் ஹோலின் வாயிலாக விரைவாகவே பல கோடி ஒளியாண்டுகளையும் தாண்டி விடலாம் என்ற ஒரு கனிப்பு உள்ளது... இன்னமும் வெள்ளை துளையை போல வார்ம் ஹோலும் எங்கு உள்ளது அல்ல உள்ளதா என்ற கேள்விகளும் இருந்து வருகிறது...

நிலவு

ஷரூரா நடக்கும் விஷயத்தை கண்டு பதறி லியானுக்கு இதை தெரிவிக்க வேண்டு படபடக்க அவளின் நேரமோ அல்ல முபல்லன் செய்த முட்டாள் தனமோ லியானை அவளால் என்ன செய்தும் தொடர்பு கொள்ள முடியவில்லை...வேறு வழியே இல்லாமல் நிரனை தொடர்பு கொள்ள முயன்ற போது அதுவுமே தோல்வியிலே முடிந்தது...

தொழில்நுட்பங்களில் ஏற்பட்டிருக்கும் கோளாறு நிச்சயம் எவரோ செய்த சதி தான் என தெரிந்தாலும் மேற்கொண்டு என்ன அடி வைப்பது என தெரியாமல் கண்ணீர் தேங்கிய கண்களுடன் அவள் அங்கு மண்டியிட்டு அமர அவள் எண்ணுவதை போல் நிகழ்ந்தால் என்னாகும் என சிந்திக்கையில் மனித இனமே அடியோடு அழிந்து விடும் என்ற கற்பனை அவளின் மனதை மேலும் வறுத்தியது...

தமிழகம்

இந்த பல மில்லியன் ஆண்டுகளும் எந்த ஒரு துன்பமும் இன்றி அதீத உச்சத்தை தொட்டிருந்த அறிவியலுடன் ஏகபோக மரியாதையும் அன்பும் கொண்ட வளமான இயற்கையுடன் இத்துனை ஆண்டுகளும் நிலைத்து நிற்பதே வியோனார் கிரகம்..

வியோனார் கிரகத்திலுள்ளோருக்கு இன்னும் மூன்று கிரகங்கள் உள்ளதென்றும் அதில் மனிதர்கள் வசிக்கின்றனர் என்பதும் ஒரு சாதாரண விஷயம் தான்.. எனெனில் அதில் மூன்றில் ஒரு கிரகமான நிலவில் ஆதி தொடக்கத்திலே வியோனார் கிரகத்திலிருந்து குடிபெயர்ந்த சிலரே ம்யோரா நாகரித்து மக்களாய் நிலவில் வாழ்ந்தனர்...

ம்யோரா நாகரிகம் நிலவில் வேறூண்டியதற்கான முதல் காரணம் வியோனார் வாசிகளே... நிலவில் வரலாற்று பயின்ற மொழி ம்யோரா என்ற பெயர் இருந்தாலும் தன் உயிர்ப்பையே வியோனாரில் கொண்ட ம்யோரா என்ற மொழி வியோனாரில் இப்போது ஒரு துண்டு காகிதம் அளவு மனிதர்கள் கூட அறிந்திடாத ஒரு பண்டைய இரகசியம்...

ம்யோரா மொழியின் தன்மையை நிலவு வாசிகளும் அறிவதில்லை... அவ்வொரு மொழி தான் நிலவிலும் சரி வியோனாரிலும் சரி தலையாய விஷயங்களுக்கு உபயோகப்பட்டது... ஆனால் வருடங்கள் கடக்க மனிதர்கள் மாற ம்யோரா நாகரிகமும் ம்யோரா மொழியும் காற்றில் கரைந்திருந்தது...

ஒரு சிலர் மாத்திரம் அந்த மொழியையும் தங்களது தாய் மொழியாக எண்ணி இன்னும் பிடித்து வைத்திருக்கின்றனர்... அதில் ஒருவளே நான்... அமூரா... மெடர்மான் கிரகத்தில் மெடர் பூமியில் சுகன்யா... அன்பரசி மற்றும் லெனாவின் தோழி.. என் கணவரும் ம்யோரா மொழியை நன்கு கற்றறிந்தவர்.. அவர் மெடர்மானிற்கு மார்ன் பூமிக்கு ராஜ்...

எங்களுக்கு மூன்று செல்வங்கள் இருக்கின்றனர்... சாகித்யன்.. சத்யன் மற்று-

பட்டென தலை நிமிர்த்திய அஜிம்சனா அத்தோடு நிற்க இதுவரை அவள் வாசித்த விஷயங்களையே பாதி நம்பியும் பாதி நம்பாமலும் இருந்தவர்கள் அவள் சாகித்யன் சத்யன் என்றதோடு நிறுத்தவும் மெடர் மற்றும் மார்னின் மகன்கள் தான் நம் லியான் சத்யாவா என அதிர்ச்சியாய் ஒருவரை ஒருவர் பார்க்க அதில் கவனம் செழுத்தாமல் அரானாவிடமிருந்த தமிழ் காகிதங்களில் கண்களை பதித்திருந்த ஷ்ரவன் அஜிம்சனா எதற்காய் நிறுத்தினால் என்பதை யூகித்தவனாய் அவளின் வாக்கியத்தை முடித்து வைத்தான்...

ஷ்ரவன் : மற்றும் நிலவில் பிறந்த எங்கள் மகள் அஜிம்சனா

திடீரென அறைக்குள் நுழைந்த தன் தாயை கண்டு அதிர்ந்த சைத்தான்யா செய்வதறியாது நிற்க எதற்சையாய் உள்ளே நுழைந்த வேதவள்ளி அங்கு சைத்தான்யாவை பிடித்து கொண்டு அமர்ந்திருந்த முபல்லனை கண்டதும் பட்டென கோவம் தலைக்கேற தன் மகனை ஏறிட்டார்...

வேதவள்ளி அம்மா : அப்போ இத்தன நாளா உன் ஆஃபீஸ்ல பொத்தி பொத்தி இவனத் தான் மறச்சு வச்சிருந்த இல்லையா...

சைத்தான்யா : அம்மா ப்லீஸ்.. நா சொல்ல வரத கேளுங்க-

வேதவள்ளி : நான் ஏன் டா கேக்கனும்... கொஞ்ச நாளா இவன காணாம இவன் போய் தொலஞ்சிட்டான்னு தான் நெனச்சேன்.... ஆனா நீ இவன விடலல்ல... உன் அப்பாவ மாரி பழிவாங்க துடிக்கிரல்ல...உன்ன எதுக்கு பெத்து வளத்தோம்னு தோனுது டா எனக்கு என கோவத்தில் வார்த்தைகளை விட்டார்...

சைத்தான்யா மனம் நொருங்கி தன் அன்னையை நோக்க முபல்லனுக்கு தன் சகோதரனின் வலி அப்பட்டமாய் தெரிந்தது...

முபல்லன் : பெரிம்மா ப்லீஸ்... என இவன் கத்த

வேதவள்ளி அம்மா :நீ எங்களுக்குள்ள வராத டா...

முபல்லன் : அவன காயப்படுத்துரீங்க நீங்க... சைத்தான்யா எந்த தப்பும் செய்யல... அங்ம் நான்.. நான் தான் அவன் கிட்ட உதவி கேட்டு வந்தேன்...

வேதவள்ளி அம்மா : வாய் கூசாம பொய் சொல்லாத டா... உங்க அப்பாவோட புத்தி தான் உங்க இரெண்டு பேருக்கும்னு எனக்கு தெரியாதா... நீங்க இரெண்டும் நீங்க உண்டு உங்க வேலை உண்டுன்னு இருந்தப்போ கூட நா இவ்ளோ கஷ்டப்படல... உங்க அப்பா இறந்ததும் இரெண்டு பேரும் அவங்க இறப்புக்கு காரணமானவங்கள கண்டுப்புடிக்க கெளம்பீட்டீங்க.. இதுல நீ அநியாயமா அந்த பையன கொன்னுட்டல்ல... என வேதவள்ளி முபல்லனிடம் நிறுத்தவும் அவன் எச்சிலை கூட்டி விழுங்க

சைத்தான்யா : அம்மா அவனுக்- முபல்லன் உடல் நலமில்லாது இருக்கிறான் என கூறி முடிப்பதற்குள்ளாக

வேதவள்ளி அம்மா : நீ பேசாத... உனக்கு தெரியுமா... இல்ல உனக்கு தான் தெரியும் உங்க அப்பாவும் பெரியப்பாவும் என்ன என்னலாம் பன்னாங்கன்னு... அவங்க இறந்தத நெனச்சு நா வருத்தப்பட்டேன் தான் இல்லன்னு சொல்லல.. ஆனா உலகம் அவங்க இழந்தத ஒரு இழப்பாவே நெனக்கலடா... அவங்க அவ்ளோ பாவம் செஞ்சிருக்காங்க... பச்சை குழந்தைங்கன்னு பாக்காம இரெண்டு குழந்தைய கொன்னாங்க.. அவங்க அப்பா அம்மாவையும் கொன்னு பல கெட்ட வேலை பன்னி தான் அந்த பெரிய நிலமைக்கே வந்தாங்க... ஆனா உங்களுக்கு உங்க அப்பா தான் எல்லாம்... அவங்க தான் ரோல்மாடல் இப்டி எல்லாம்... நீங்க கொலகாரங்களா போறத பாக்கத் தான் நான் உங்கள வளத்தேனா டா என கண்ணீர் விட்டு கதறியவரை இரு புறத்திலிருந்தும் இருவரும் அணைத்து கொள்ள அவர்களை உதறி விட்டு மீண்டும் அழுதார் அவர்...

சைத்தான்யா மட்டுமல்ல முபல்லனும் வேதவள்ளிக்கு மகன் தான்... முபல்லனின் அன்னை அவன் சிறுவயதாக இருந்த போதே அவனை விட்டு சென்றிருந்தார்... அதனால் அவனுக்கு நினைவு தெரியும் முன்பிருந்தே தன் இரு கண்களாய் எண்ணி இருவரையும் அன்போடும் பண்போடும் வளர்த்தார் வேதவள்ளி... முபல்லனுக்கு வேதவள்ளி என்றால் கொள்ளை பிரியம்.. ஆனால் என்று இவன் மெடர்மானில் நிகழ்ந்த ஓர் பேரிழப்பிற்கு காரணமானானோ அன்றே வேதவள்ளி அவனை ஒதுக்கி வைத்திருந்தார்...

தேடல் தொடரும்...

ஹே இதயங்களே...நான் இந்த யூடி இப்போ போற்றுக்கவே மாட்டேன்... ஆனா உங்க கிட்ட சொல்ல வேண்டிய சில முக்கியமான அனோன்ஸ்மென்ட் இருக்கு அதான் வந்தேன்... இப்போ எத்தன நாள் ஓடப் போறன்னு தான கேக்குறீங்க.. ஒரு இரெண்டு வாரம்னு நெனக்கிறேன் இதயங்களே.. ஹிஹிஹி எனக்கு எக்ஸம்ஸ் வச்சிர்காங்க ஹார்ட்ஸ்... லாஸ்ட் ஸட்டர்டேலேந்து எழுதீட்டு இருக்கேன்.. நாளைக்கும் இருக்கு... இனிமே தான் படிக்க போனும்.. அஅதான் பறக்க பறக்க இந்த யூடி எழூதீர்க்கேன் அட்ஜஸ்ட் பன்னிக்கோங்க.. அடுத்த யூடி முடிஞ்சா நெக்ஸ்ட் சண்டே இல்லனா டூ வீக்ஸ் அப்ரம் தான் போடுவேன்... பாப்பு படிக்க போறேன்.. ஒரு எக்ஸம் பத்தாதுன்னு இரெண்டு வேற வக்கிறாங்கப்பா சோ ரிட்டர்ன் வர டைமாகும்.. ரிட்டர்ன் வந்தப்ரம் கதைய பொருமையா முடிப்போம்.. அப்போ எந்த எக்ஸம் வைக்கப் போறாங்களோ... சரி விடுங்க டாட்டா... நா அப்ரம் வரேன்... குட் நைட்...

DhiraDhi ❤

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro