Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

31

அவள் என்ன சொல்கிறாளெனப் புரியாமல் நின்றவனுக்கு, இருகணங்கள் கழித்தே விளங்கியது.

மானசீகமாகத் தலையிலடித்துக்கொண்டு, அவளருகே சென்றான் அவன்.

"எ.. என்கிட்ட.. உன் நம்பர் இல்லை.."

இயல்புக்கு மாறாகத் தயங்கித்தயங்கி அவன் சொல்ல, திகைத்தவள் திரும்பி சண்டையிட முயல்வதற்குள் குடும்பத்தினரைக் கண்காட்டினான் அவன்.

"என் ஃபோன் நம்பர் கூட இல்லையா?? வந்த முதல் நாளே ஏதேதோ கார்டை தந்தீங்களே, அப்பவே என் நம்பரை வாங்கிட்டிருக்க வேண்டிதுதான?"
கிசுகிசுக் குரலிலும் கோபம் தொனிக்கக் கேட்டாள் அவள்.

"வந்த முதல் நாள் என் நம்பரைத் தந்தேனே, எப்போவாச்சும் அதை நீ யூஸ் பண்ணியா?" என எதிர்க்கேள்வி கேட்டான் அவன்.

புரிந்துகொண்டவளாக அமைதியானாள் அவள்.
'இத்தனை நாளில் அவனை ஒருமுறை கூட அவனை கைபேசியில் அழைக்கும் தேவை வந்ததே இல்லையே! அழைத்திருந்தால் என் கைபேசி எண் அவனிடம் இருந்திருக்குமல்லவா? நிஜமாகவே இத்துணை அந்நியமாகவா நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்!?'

அவசரமாகத் தன் கைபேசியை எடுத்து அவனது நம்பரை அழைக்க, ரிங் போவதற்குள் துண்டித்துவிட்டு, "அடுத்தமுறை பாட்டி திடுதிப்புனு வந்து இறங்கினா, மொதல்ல உனக்குக் கூப்பிடறேன்" என்றான் அவன், மறைக்காத அலுப்புடன்.

அவள் பதில்மொழி உரைப்பதற்குள், "ஆதித்!! இன்னும் டைனிங் ஹால்ல என்ன பண்றீங்க?" எனப் பாட்டியின் குரல் வர, தோற்றுப்போன பார்வையுடன் இருவரும் தொய்வாக நடந்துசென்று கூடத்தில் நின்றனர்.

அவரருகில் அமருமாறு தாராவைப் பாட்டி அழைத்துக்கொள்ள, ஆதித் சென்று தந்தையின் அருகே அமர்ந்தான்.

"டாட், ஸியாட்டில்ல இருந்து எப்ப வந்தீங்க? எனி நியூஸ்?"

"நத்திங் மச். உங்க மம்மிக்குத் தெரிஞ்சவங்க ஒருத்தங்க தவறிட்டாங்க, அதுக்காக திருப்பூர் வரை போகவேண்டி இருந்தது. எனக்கும் வெகேஷன் டேஸ் கொஞ்சம் மீதியிருந்தது. அதான், ஒரு வாரம் லீவு போட்டுட்டு வந்துட்டேன்!"

"டாடி பர்வதம் க்ரூப்ஸ் கம்பெனியோட ஓவர்சீஸ் ப்ரான்ச் எல்லாத்தையும் ஸியாட்டில்ல இருந்து கன்ட்ரோல் பண்ணுவார். மம்மி அங்கே சப்ளை செயின் மேனேஜ்மெண்ட்ல ஆடிட்டரா இருக்காங்க" எனத் தாராவுக்கு விளக்கம் தந்தான் ஆதித். அவள் அமைதியாகத் தலையசைக்க, அவனோ, "என்னன்னு புரிஞ்சதா?" என்றான் சந்தேகமாக.

சாந்தமான குரலில், "நானும் அக்கவுண்ட்டன்சி தான் படிக்கறேன். எக்கனாமிக்ஸ் பேப்பர் இருக்கு. சப்ளை செயின் மேனேஜ்மெண்ட்னா என்னன்னு தெரியும் எனக்கு" என்றாள் அவள்.

பர்வதமும் மாதவனும் பெருமிதமாகப் பார்க்க, ஆதித் வாயடைத்துப் போய்விட, உஷாவும் அவனைக் குறிப்பாகப் பார்த்தபடி, "ஏன் ஆதித், தாராவுக்கு நிஜமாவே தெரியுமான்னு செக் பண்ண வேணாமா, இன்னும் துருவி கேள்வி கேட்க வேணாமா?" என்றிட, ஆதித் தரையை நோக்கித் தலையைத் தாழ்த்தினான்.

பர்வதம் இடையிட்டு நிலைமையை சமாளிக்கப் பார்த்தார்.

"அப்பறம் தாராக்குட்டி, உங்க அப்பாகிட்ட பேசினியா? நேத்து மில்லுல பார்த்தேன்.. உன்னைப் பத்தி விசாரிச்சார். ஃபோன் பண்றதே இல்லைனு சொன்னார்..?"

"அ.. அது.. டைம் இல்லாம..."

தாராவிற்கே அது பொய்யெனத் தெரியும்படி வார்த்தைகள் தடைப்பட்டன. நேரமின்மை ஒரு காரணமே கிடையாதே! தேவியிடமும் தனுஷிடமும் இவள் அளவளாவிடாத நாளே இல்லாதபோது, தந்தையிடம் பேச நேரமில்லை என்றால் பொருத்தமாக இருக்குமா? இஷ்டமில்லை என்பதுதானே உண்மை?

"சரி, இப்ப ஃபோன் பண்ணிப் பேசிடும்மா. நாங்க வந்திருக்கோம்னு சொல்லு.."

சரியெனத் தயக்கமாக அவள் கைபேசியை எடுக்க, உஷாவோ சாதாரணமாக வீட்டை சுற்றிப் பார்க்கலாமென எழுந்தார். வலதுபுறமிருந்த காரிடாருக்கு அவர் செல்ல, தாரா சட்டென சுதாரித்துத் திடுக்கிட்டாள்.

'இருவேறு அறைகளில் இருவரும் இருப்பதைப் பார்த்தால் அவர் என்ன சொல்வாரோ!? இப்போது என்ன செய்வது??'

எதிர்பார்த்ததுபோல அவர் சட்டென சத்தமாக, "என்னங்க, இங்க வாங்க!!" என மாதவனை அழைக்க, மாதவனும் எழுந்து செல்ல, தாரா மிரண்ட பார்வையுடன் ஆதித்தை ஏறிட்டாள். அவன் கண்டுகொள்ளாமல் எழுந்து தந்தையைப் பின்தொடர்ந்தான். பர்வதமும் கூட எழ, தாராவும் வேறு வழியின்றி நடந்தாள்.

"இந்த ரூம் அழகா இருக்கில்ல? நாம இங்க இருந்துக்கலாம்ங்க" என்றார் உஷா. தாரா ஒன்றும் புரியாமல் எட்டிப் பார்த்தபோது, அறை காலியாக இருந்தது, அவளது உடைமைகள் ஏதும் இன்றி.

தாராவுக்கு தலைசுற்றாத குறை.

அருகில் நின்ற ஆதித் மெல்ல தலைசரித்து, "அவங்க வர்றதுக்குள்ள உன் திங்க்ஸை மாத்திட்டேன் என் ரூமுக்கு" என்க, ஆச்சரியமாக வாய்பிளந்தாள் அவள்.

மாதவனும் உஷாவும் பெட்டிகளை எடுக்கச் செல்ல, பாட்டிக்கு மற்றொரு அறையைக் காட்ட ஆதித் அழைத்துச்செல்ல, தாரா கைபேசியுடன் வெளியே வந்தாள். உதட்டிலொரு குறுநகை எப்போதோ பிறந்திருந்தது.

***

ராஜீவ் ஆதித்தின் கேபின் முன்னால் பரபரப்பாக நடந்துகொண்டிருந்தான் முன்னும் பின்னுமாய்.

அசட்டையாக மதிய உணவு இடைவேளைக்குக் காத்திருந்த நேரத்தில் அந்த அணுகுண்டு வந்து அவன் டேபிளில் அழைப்பாக விழுந்திருந்தது.

"பாஸ், பாஸ்!! உங்க ஃபேமிலி மொத்தமும் கிளம்பி கல்கத்தாவுக்கு வர்றாங்களாம்!!" எனக் கத்திக்கொண்டே ஓடிவந்தவனை, ஆதித் வினோதமாகப் பார்த்தான்.

"என்ன சொல்ற? எதாவது ஜோக் ட்ரை பண்றியா ராஜீவ்? இட்ஸ் நாட் ஃபன்னி."

"ஐயோ.. ஜோக் இல்ல பாஸ்.. பர்வதம்மா இப்போ தான் ஃபோன் பண்ணாங்க. கொல்கத்தா ஏர்ப்போர்ட் செக்கிங்ல நிக்கிறாங்களாம் மூணு பேரும். உங்கப்பா, உங்கம்மா, அப்றம் பாட்டி."

"ஓ ஷிட்!"

"எக்ஸாக்ட்லீ!"

ஆதித் கையிலிருந்த ஃபைல்களை அவனிடம் திணித்துவிட்டுத் தலைதெறிக்க ஓடியபோது மணி பன்னிரெண்டு முப்பது.

இப்போதோ மணி இரண்டு.

கையைப் பிசைந்தபடி ராஜீவ் கலவரத்துடன் நடந்துகொண்டிருக்க, எதுவும் நடக்காததுபோல ஆதித் திரும்பி வரவும், அவன் ஆச்சரியமாகப் பார்த்தான்.

"என்ன சார், அதுக்குள்ள வந்துட்டீங்க? வீட்ல என்ன நடந்துச்சு? தாரா காலேஜ் போயிருந்தாங்களே, வந்தாச்சா? ஃபேமிலி வர்றதுக்கு முன்னால வந்துட்டாங்களா? சமாளிக்க முடிஞ்சதா?"

ஆதித் நிதானமாகச் சென்று தனது நாற்காலியில் அமர்ந்து, ராஜீவை அமரச் சொன்னான் எதிரில்.

"ராஜீவ், இனி நம்ம ஃலைப்ல இந்தமாதிரி நிறைய சம்பவம் நடக்கும். அதுக்கு தயாராகிக்க. ஒவ்வொரு தடவையும் டென்ஷனாகிட்டு இருந்தா, உன் இதயத்துக்கு ஆபத்து."

ராஜீவ் தலையை ஆட்டினான் தன்னிச்சையாக.

"எல்லாரும் வந்தாச்சு, மீட் பண்ணியாச்சு. நல்லா சாப்டுட்டு ரெஸ்ட் எடுக்கறாங்க அங்கே. ஸோ, நாம விட்ட வேலையை பார்ப்போமா?"

"இருந்தாலும்.. தாரா அங்கே தனியா...?"

"அவளைக் காப்பாத்திக்க அவளுக்குத் தெரியும்."

உணர்வின்றி அவன் சொல்ல, பெருமூச்சுடன் எழுந்து வெளியேறினான் ராஜீவ். கடிகாரம் எப்போது ஐந்தடிக்கும் என மாய்ந்து மாய்ந்து காத்திருந்தவன், ஐந்து மணி ஆனதும் ஓடி வந்தான் ஆதித்திடம்.

"பாஸ், வாங்க வீட்டுக்கு போலாம்"

"உனக்கு வீட்டுக்குப் போகணும்னா போயிட்டு வா, என்னை ஏன் கூப்பிடற?"

"ப்ச், பாஸ்.. உங்க வீட்டுக்குப் போலாம், வாங்க."

"வேலை இருக்கு."

"அப்பறம் பாத்துக்கலாம்."

"முக்கியமான வேலை."

"அட, எதுவா இருந்தாலும் அப்பறம் பாத்துக்கலாமே பாஸ்.. தாரா தனியா இருப்பாங்க.."

ஆதித் சிரித்தான்.

"தாரா எல்லாரையும் கூட்டிட்டு ஹௌரா ப்ரிட்ஜை பார்க்கப் போயிருக்கா"

ராஜீவ் வாயைப் பிளந்தான். "என்ன சார் சொல்றீங்க, நிஜமாவா?"

தனது கைபேசியைத் திரையை அவனிடம் காட்டினான் ஆதித். 'தாரா' எனத் தலைப்பிட்ட குறுஞ்செய்திப் பக்கத்தில், நான்கு மணியில் தொடங்கி தொடர்ச்சியாக குறுசெய்திகள் வந்திருந்தன.

Hi, this is Thara. Hope you have my number saved...

Paatimma kolkata sight seeing polamnu koopitanga, unga amma n appa also coming. Neenga varingala?

Kelambitom.

Das anna is driving.

Near Howra Bridge. Sunset is beautiful. Neenga eppo varuvinga?

Howra Bridge alaga irukku night la. Photos anupatuma?

கேட்காமலேயே நான்கைந்து புகைப்படங்களும் அனுப்பியிருந்தைக் கண்டு ராஜீவ் நெகிழ்ந்து புன்னகைத்தான்.

"ஏன் பாஸ் ரிப்ளை பண்ணாம அப்டியே விட்டுருக்கீங்க?" என ஆதங்கமாகக் கேட்டான் ராஜீவ். ஆதித்தோ தோளைக் குலுக்கினான் அசட்டையாக. "பிஸியா இருந்தேன்."

"என்னவோ போங்க பாஸ்"

சலித்துக்கொண்டே அவன் வெளியேற ஆதித் சிரித்துவிட்டு, தாராவின் குறுஞ்செய்திகளுக்கு ஒரு ஸ்மைலி மட்டும் அனுப்பினான் பதிலாக.

மாலை ஏழு மணியளவில் வீட்டுக்கு வந்தபோது, வீட்டை நிறைத்த சிரிப்பொலி ஆதித்தின் காதுகளையும் வந்தடைந்தது.

ஏதோ சம்பாஷணையில் நால்வரும் லயித்திருக்க, தாரா தான் முதலில் அவனைப் பார்த்தாள்.

ஆதுரமாகச் சிரித்தபடி எழுந்து வந்தாள் அருகில்.

"இன்னிக்கு நான் ஹௌரா ப்ரிட்ஜ் மேல நடந்தேன், தெரியுமா? அங்கே பொரிகடலை வாங்கி சாப்பிட்டோம் நாங்க எல்லாரும்! ஃபோட்டோவும் நிறைய எடுத்தோம்.. நேரம் போனதே தெரியல அங்கே.. சன்செட் ரொம்ப அழகா இருந்துச்சு. நீங்கதான் வரலை.. வேலை நிறைய இருந்ததா?"

"ஹ்ம்"

"மசால்பொரி பிடிக்குமா, வாங்கிட்டு வந்திருக்கோம் சாப்பிடறீங்களா?"

"பத்து நிமிஷம்"

நாசூக்காக சிரித்துவிட்டு அவன் படிக்கட்டில் ஏற, பெரியோர் மூவரும் மாறிமாறி தாராவையும் ஆதித்தையும் பார்த்தனர். சந்தேகக்கோடுகள் மூவர் முகத்திலும் பரவிக்கிடந்தன.

"தாரா.. என்னாச்சும்மா? ஏன் ஆதித் ஒருமாதிரிப் பேசறான்?"

"இல்லையே.. நார்மலா இப்படித்தானே பேசுவார்?"

மாதவனும் உஷாவும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். மாலை முழுவதும் தாராவுடன் கழித்தபோது, அவளைப்பற்றி ஓரளவு நன்றாகவே அறிந்துக்கொண்டிருந்தனர் அவர்கள்.

வாழ்க்கையை ரசித்து வாழத் துடிக்கும் ஆர்வமுள்ள சின்னப் பெண் அவள். பார்க்கும் எதிலும் அதிசயம் காணும் அப்பாவித்தனம் நிறைந்தவள். எனவே, அவளது உற்சாகமான பேச்சினால் அனிச்சையாகவே அனைவரையும் தன்பால் ஈர்த்துவிடும் திறமை இருந்தது அவளுக்கு. அவளிடம் ஒற்றை வார்த்தையில் பதில்கள் கூறுகிறானென்றால், ஆதித் இன்னும் தாராவிடம் பழகவே இல்லையென்று அர்த்தம்.

ஒன்றும் பேசாமல் அவர்களிருக்க, பத்துப் பதினைந்து நிமிடங்கள் கழித்து ஆதித் வந்தான், தளர்வான டீஷர்ட்டில்.

"பாட்டி, கல்கத்தா எப்டி இருந்தது? மாம், டாட், உங்களுக்குப் பிடிச்சிருந்ததா?"

பேசிக்கொண்டே வந்து பாட்டிக்கு அருகில் அமர்ந்துகொண்டான், தாராவிடமிருந்து தூரமாக.

உஷா யோசனையுடன் தாராவிடமிருந்து தள்ளி அமர்ந்து இடம்பண்ணி, "இப்டி வா ஆதித், வந்து தாரா பக்கத்துல உட்கார்" என்றார்.

லேசாக மிடறு விழுங்கியவன், எழுந்து வந்து அன்னையின் அருகே அமர்ந்தான். தாரா அனிச்சையாகவே சற்றுத் தள்ளி அமர்ந்தாள். இருவரிடையே உருவான இடைவெளி  கவனிக்கப்பட்டதை அவர்கள் பார்க்கவில்லை.

**********

வணக்கம், வணக்கம்.

வாசக நண்பர்களுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!

போன தீபாவளியப்ப ஆரம்பிச்ச கதை. அடுத்த தீபாவளியே வந்துடுச்சு, இன்னும் பாதி கூட எழுதி முடிக்கல, ஹூம்.

எனக்கே 'ஷேம் ஷேம்' என தான் இருக்கிறது, என்ன செய்ய? ஃபைனல் இயர் ஆச்சே! எக்ஸாம், ப்ராக்டிகல், இன்டர்னல், வைவா, போஸ்ட்டிங் என்றெல்லாம் உயிரை வாங்குகிறார்கள் இங்கே! இடையிலே தூங்கவே நேரமில்லையாம்.. எங்கே கதை எழுதுவது!?

இருப்பினும், ஓய்வுநேரம் இருக்கும் போதெல்லாம் எழுதி, எப்படியாச்சும் அடுத்த தீபாவளிக்குள் முடிக்கப் பார்க்கிறேன். அதுவரை ஆதரவை நல்கவும்!

அனைவருக்கும் எனது அன்பு.

மது.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro