Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

அறிமுகம்

ஹாய் வட்டீஸ்,

இரண்டாவது கதையான "சில்லென தீண்டும் மாயவிழி" யும் கிண்டலில் பதிவாக தயாராகிவிட்டது. என் கதைகள் விற்பனைக்கு அல்ல என்று கூறியவன் எதற்காக கிண்டலில் பதிவிட்டுள்ளேன் என உங்களில் சிலருக்கு கேள்வி எழுந்திருக்கும்.

பல எழுத்தாளர்கள் கிண்டலில் பதிவிட்டு தங்களின் உழைப்புக்கான சரியான ஊதியம் கிடைக்காமல் இருப்பது மிகவும் வேதனையாக இருக்கின்றது. அப்படி இருப்பவர்களுக்கு எனக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட அறிவை வைத்து எதுவும் செய்ய முடியுமா என்று யோசித்த பொழுதுதான் கிண்டலில் நானும் பதிவிட வேண்டும் என்று எண்ணினான்.

காரணம்,

ஒரு மைதானத்தின் தன்மையை அறிய அங்கு நாம் இறங்கி விளையாடினால் மாத்திரமே அந்த  மைதானத்தின் தன்மைகளை அறிய முடியும்.

கடந்த ஐந்து நாட்களில் கிண்டலில் இருக்கும் ஒரு சில சூட்சுமங்களை அறிய முடிந்தது. எனது இந்த முயசி வெற்றி அளிக்குமா இல்லை பரிசோதனை முயற்சியிலேயே முடிந்துவிடுமா என்று தெரியவில்லை. ஆனால் இந்த ஐந்து நாட்களிலேயே 15 கதை இருந்தால் நஷ்டம் ஏற்படாமல் அந்த பதினைந்து கதைகலையும் இலவசமாக மார்க்கட்டிங்க் செய்ய முடியும் என்பதை கற்றுக்கொண்டேன்.

KENP page conversion , KU and KOLL conversion rate எல்லாம் ஓரளவு தெரிந்து கொள்ள முடிந்தது. பதிவிடும் போது ஏற்படும் தவறுகளை கண்டறியவே பல தடவை எனது கதைகளை பிழையான முறையில் பதிவிட்டு திருத்தங்களை மேற்கொள்கின்றேன்.

இந்த முயற்சி வெற்றி அளிக்க வேண்டும் என்று இறைவனை வேண்டியவனாக, வாட்பெட்டில் "அமேசன் கிண்டலில் பதிவிடுவது எப்படி" என்ற ஒரு திரியை ஆரம்பிக்கலாம் என்று உள்ளேன். கிண்டல் பற்றிய ஏதும் சந்தேகங்கள் இருந்தால் அந்த திரியில் கேட்கவும். முடிந்தவரை அதற்கான தீர்வுக்ளை கூகுள் மற்றும் கிண்டல் பற்றிய முன் அனுபவம் உள்ளவர்களின் உதவியுடன் தீர்த்து கொள்ள வழிவகை செய்ய முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.

எழுத்தாளர்களுக்கு மட்டும்தான் கிண்டலில் உழைக்க முடியுமா என்றால் கண்டிப்பாக இல்லை. வாசிப்பவர்களுக்கும் சிறிய அளவு பணப்பெறுமதி அல்லது இலவச கிண்டல் கணக்குகள் கிடைக்க (Kindle Unlimite Subscription உடன்) ஏற்பாடு செய்ய முடியும்.

சில நாட்களுக்கு என்னால் புதிய கதைகள் படிக்க முடியாது. காரணம் உங்கள் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். இந்த முயற்சியை இறைவன் அங்கீகரிக்க வேண்டும்..

இதில் எனக்கு எந்தவித வருமாணமும் கிடைக்காது என்பதையும் கூறிக்கொண்டவனாக :)

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro