Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

அவனோடு நான்

"அடியே நான் இம்புட்டு கத்து கத்திட்டு இருக்கேன் நீ இங்க என்ன பண்ணிட்டு இருக்கவ.. " என கேட்டு கொண்டே வந்தான் கதிர்...

"மாமா இந்தா இந்த பூவை பாருங்களேன் கொஞ்சம் கொஞ்சமா  ஒவ்வொரு இதழும் விரிச்சுட்டே இருக்கு... என ஆசையாய் கூறியவளிடம்..

"அது அந்தி மல்லி டி இப்போ தான் வெடிக்கும்.. நீ வேணா நம்ம வூட்டு தோட்டத்தில போயி பாரு எல்லாம் பூவு வெடிச்சு இருக்கும்"

"போ மாமா அதெல்லாம் நீ வெச்சது... இது நம்ம வீட்டு மாடில நான் வெச்சது.. அதனால இப்போ நைட்ல வெடிக்குது.. நீ சொன்ன பூவெல்லாம் அந்தில தான் வெடிக்கும்.." என மரிக்கொழுந்து சொல்ல...

"கடவுளே.." என தலையில் அடித்து கொண்டவன்

"சரி வா தூங்கலாம்.."

"நீங்க போங்க நான் வரல நான் அதோ அங்க இருக்கற என் தோட்டத்துக்கு போயிட்டு வரேன்.."என கூறி சிலிப்பு கொண்டு போனவளின் கையை பிடித்து தன்னிடம் இழுத்தவன்

"அடியே மரிக்கொழுந்து என்னை ரொம்ப சோதிக்கிற.. இப்போ தான் பொண்ணும், பையனையும் தூங்கானங்க கொஞ்சம் நேரம் உன்கூட இருக்கலாம்னு வந்தா நீ இங்க இருக்க.. வா டி கொஞ்சம் நேரம் பேசலாம்.." அவளின் இடையை சுற்றி வளைத்தப்படி கூற...

" இது மொட்டை மாடி ஞாபகம் இருக்குல்ல..பக்கத்து வீட்டு மாடில யாராவது பார்த்தா என்னை நினைப்பாங்க தள்ளி போ"

"நீ தானே டி சொன்ன இந்த தோட்டம் வெக்கறது நீயும் நானும் கொஞ்சறது யாருக்கும் தெரிய கூடாதுனு வெச்சேன்.." அப்பறம் என்ன எல்லாம் யாருக்கும் தெரியாது.."

"அவன் கை தீண்டலில் செவ்வந்தி பூவாய் மலர்ந்தவள்..நீ.ங்.. க.. அன்னைக்கு  எதுக்கு வேண்டாத வேலைன்னு நக்கலா கேட்டிக நானும் நம்ம ரெண்டும் பேரும் கொஞ்சறதுக்குன்னு சொல்லிட்டேன்... கொஞ்சம் தள்ளி போ மாமா..."

"அவன் அவளது காது மடலில் முத்தமிட்டப்படியே நீ யே பிரிஞ்சு போ.. நான் உன்னை விட மாட்டேன்..." என கூறிக்கொண்டே அவளிடம் நெருங்கி நின்ற நொடி "அப்பா..." என பிஞ்சு குரலில் சட்டென்று அவளை விட்டு தள்ளி நின்றவன் 
தன் மகளை தேட அதுவோ படியிலிருந்து ஏறிக்கொண்டே தன் அப்பா வை அழைத்தது..

ஓடி சென்று கையில் குழந்தையை தூக்கியவன் குழந்தையுடன் தன்னவளிடம் வந்து " சொல்லல உடனே ஓடி வந்துட்டா.. என் புள்ள.. இவங்கள வெச்சுட்டு ஒன்னும்  செய்ய முடிலை "  என கூறியவனை பார்த்து இவள் சிரிக்க அவளின் சிரிப்பில் இவனும் சிரிக்க.. குழந்தையும் அவர்களின் சிரிப்பில் கலந்து கொண்டாள்...

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro