Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

வன்மம்:37

மதிவாலயத்தில் நிசப்த்தம் கூடியிருந்தது..... அந்த உருவம் கூறிய அனைத்தையும் கண்களிள் கண்ணீருடன் கேட்டுக் கொண்டிருந்தனர் நம் கதாநாயகர்கள்.... ஒவீயின் மரணத்தை அறிந்தவுடன் கதறி அழுத ரொவீனா சட்டென அழுவதை நிறுத்தினாள்...

வீனா : ஏன் ஏன்???அவளுக்கு தெரியாதா என்ன பத்தி??? ஏன் சித்தி பேச்ச கேட்டா??? இன்னைக் இன்னைக்கு...அவ இல்லாம.... சொல்ல முடியாமல் அழுகை தொண்டையை அடைத்தது...

வீர் : என் பெரிமா என்ன பாவம் பன்னாங்க... அவங்கள ஏன் சித்தி கொண்ணாங்க???

ரக்ஷா : பணத்த வெச்சி என்ன பன்ன போறீங்க??? சின்ன பொண்ணுன்னு கூட பாக்காம சித்திரவதை பன்னி கொண்ணுர்க் காங்களே அவனுங்களா மனுஷங்க தானா???

தான்யா : மனுஷங்களே இல்ல... மனுஷ உருவத்துல இருக்க மிருகங்க... அந்த சித்தி பணத்தசேத்து என்ன பன்ன போறாங்க???? இவ்ளோ கொலை செஞ்சி... நேத்து தீ ல கருகி செத்து தான போய்ர்க்காங்க.... அவங்களுக் கெல்லாம் அந்த மாரி தான் சாவு வரனும்...

கடுங்கோபமாய் உருவம் அலரியது... அப்போதே அது இருக்கும் நினைவு வந்தது நம் நாயகர்களுக்கு... அதன் புறம் கண்களிள் பயத்துடன் திரும்ப... அதுவோ எறிந்து போன தன் முகத்தை காட்டி பாய எத்தனித்தது.... ஒரே நிமிடத்தில் சுதாரித்து நகர்ந்து வந்தனர்... சட்டென தன் கூர் கையை வைத்து ரனீஷின் கழுத்தை பிடித்து நெரித்து அவனை அந்தரித்தில் தூக்கியது...

பதறிப்போன மற்றவர்கள் அவனை நெருங்கும் முன் கன்னாடி துண்டுகளாள் அவர்களை தாக்க முனைந்தது... அதனை தடுக்க என்னி அதன் கைகளிள் சிக்கி இருந்த ரனீஷ் காலால் அதன் கையில் உதைக்க கன்னாடி துண்டு மேலே பறந்து அவன் காலிலே விழுந்து சிறிதாய் பதம் பார்த்தது...

அவன் இடித்ததில் தடுமாறி அவனை கீழே விட்டது உருவம் ... கழுத்தில் இரு பக்கமும் இரு நகங்கள் குத்தி லேசாய் இரத்தம் கசிந்து இருந்தது... கழுத்தை பிடித்தவாறு எழுந்துக் கொண்டான் ரனீஷ்...

சட்டென அதன் கூந்தல் இரண்டாய் பின்னி ஆறாய் பிரிந்து அவர்களை நெருங்க... வீர் கண்ணைக் காட்ட... முதலில் புரியாமல் முளித்தவர்கள் அவன் கையால் சைகை காட்டவும் புரிந்துக் கொண்டு அது நெருங்கப் போகும் போது சட்டென பிரிந்து ஆறு பேரும் ஆறு பக்கமாய் ஓடினர்... குழம்பிய உருவம் அதே இடத்தில் இருந்துக் கொண்டே உருமியது....

ஆறு பேரும் எங்கெங்கோ பூந்து ஒருவரை ஒருவர் கடந்து தோட்டத்திற்க் கெள்ளாம் ஓடி மீண்டும் வீட்டுக்குள்ளே ஓடினர்... என்ன செய்கிறார்கள் என தெரியாமல் மேலும் மேலும் அதன் கூந்தல் நீண்டுக் கொண்டே இருந்தது... இவர்கள் ஓடி பிடிச்சி விளையாடுவது போல் ஓடிக் கொண்டே இருக்க குழப்பம் கொஞ்சம் கொஞ்சம் ஆய் கோமாய் மாறியது...

ஆத்திரம் தாங்காமல் கத்தி கூச்சல் போட்டு மீதமிருந்த கதவு ஜன்னல்களை எல்லாம் உடைத்து அராஜகம் செய்தது....

ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்ற பழமொழி கதாநாயகர்கள் அனைவரின் நினைவிலும் வந்து போக... ஒரே நேரத்தில் ஆறுபேரும் விஷமப் புன்னகையுடன் ஓடுவதை நிறுத்தி விட்டு அந்த உருவத்தின் பக்கம் திரும்பினர்...

அப்போது தான் அவ்வுருவம் கவனித்தது... ஓடுகிறென் என தனித் தனியாக ஓடி பல இடங்களிள் கூடி ஆறாய் பிரிந்த கூந்தலை ஒரே இடத்தில் சிக்க வைத்திருந்தனர்... சட்டென அதன் கூந்தலை இழுத்துக் கொண்டது... தன் வலது கையை அவர்கள் புறம் வீச... வலது பக்கம் கிடந்த கட்டைகளும் மரத்தில் செய்த பொருட்களும் (அதாவது வீட்டில் உபயோகிக்கும் மரத்தால் ஆன Furnitures ) அவர்களை நோக்கி பறந்து வர... கீழே குனிந்து தங்களை பாதுகாத்துக் கொண்டனர்...

உருவம் : என்னையே ஏமாத்துரீங்களா??? உங்கள சும்மா விட மாட்டேன்... நீ அழுதாலும் நா சும்மா விடமாடேன்...என்று வீனாவை நோக்கி குரோதமாய் உருமியது.... நாளை மறுநாள் காலை 4 மணி வர எனக்கு நேரம் இருக்கு... அதுக்குள்ள நா உங்கள சாகடிக்காம விட மாட்டேன்... அதுக்கு அப்ரம் ஏன் காலம் இந்த உலகத்துல முடிஞ்சி போய்டும்... இதுக்கெல்லாம் காரணம் அவ தான்... அம்மாவாசைல செத்த எனக்கு கால அவகாசம் மட்டும் அதிகமா இருந்துர்ந்தா உங்கள அனு அனுவா கொடுமை பன்னி கொன்னுருப்பேன்... இப்போ மட்டும் ஒன்னு ஆயிடல... எனக்கு முழுசா 26 மணி நேரம் இருக்கு...

ரவி : ஹேய்... கத்துரத நிருத்து... ஆவூன்னா ஏன் லௌட் ஸ்பீக்கர போடுர... மொதல்ல நீ யாரு... நீ செத்த கதை எல்லாம் அப்ரம் கேக்குரோம்... நீ யாருன்னு மொதல்ல சொல்லு....

வீர் : உனக்கு எப்புடி ஒவீனா இறந்தது தெரியும்??? உனக்கும் எங்களுக்கும் என்ன சம்பந்தம்..???

ரனீஷ் : ஏன் எங்கள கொல்லனும் னு நெனக்கிற??? ஏன் வீனா மேல உனக்கு இவ்ளோ கோவம்???

பெண்கள் மூவரும் பேசும் நிலையில் இல்லை... ஒவீயின் மரணம் நடந்த வகையில் மணம் உடைந்து இருக்க... ஆண்களும் அதே நிலையில் இருந்தும் உண்மை அறியும் நோக்கில் தங்களின் வலியை மறைத்து வைத்திருந்தனர்...

உருவம் : இவ அன்னைக்கே செத்துருந்தா நா ஏன்டா உங்க பக்கம் வர போறேன்??? ஏன் இவ உயிர் பொலச்சா??? என் கையால சாகனும்னு தான .. அதான் அந்த விதியே இவள இங்க வர வச்சிர்க்கு... அவள கொண்ணதும் நீங்க உயிர் பொலச்சி என்ன சாதிக்க போறீங்க.??? அதான் உங்களையும் கொல்ல போறேன்...

ரக்ஷா : நாங்களோ இல்ல வீனாவோ உன்ன கொல்லலையே அப்ரம் ஏன் இப்டி இங்க வந்து அராஜகம் பன்னிக் கிட்டு இருக்க...

உருவம் : கொல பன்னது வேணா இவ இல்லாம இருக்களாம்... ஆனா அதுக்கு ஒரு வகைல நீங்க காரணம்... அவ ஒரு முக்கிய காரணம்...

தான்யா : ஏஏஏ என்ன நீ... வந்தது லேந்து நான் சின்க்கா வே பேசிக்கிட்டு இருக்க... வீனாக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்? ??? அவ என்ன பன்னா???

உருவம் : அவ என்ன பன்னல...?? அன்னைக்கே அவ ஏன் பக்கம் வந்துர்ந்தாலோ இல்ல அப்பவே செத்துர்ந்தா இவ்ளோவும் நடந்துர்க்காது... நான் எப்டி கருகி செத்தேனோ.... அதே மாரி உங்கள சித்திரவதை பன்னுவேன்... அவள தன்டிக்க முடியலனாலும்... உங்கள தன்டிப்பேன்....

அமைதியாக கேட்க மட்டுமே செய்துக் கொண்டிருந்த வீனா... அந்த உருவத்தின் வாக்கியத்தை கேட்டு...

வீனா : கருகி... செத்தியா??? அப்போ... அப்..போ.. வார்த்தை திக்கி தினரியது....நீ..நீநீ ஒ...வீ...யா...???? அவளின் கேள்வியில் அனைவரின் முகமும் அதிர்ச்சியில் வெளிரியது தெளிவாய் தெரிந்தது... ஒரு நிமிடம் அனைவருக்கும் அதே கேள்வி எழ...

சட்டென அவ்வுருவம் வீனாவை மேலே தூக்கி அவளின் கழுத்தில் அதன் கூர்மையான நகத்தை வைத்து கீறியது...

அவளின் கதறலை கண்ணீர் சிந்த பார்த்துக் கொண்டிருந்தது ஓரு ஜோடி கண்கள்...

அனைவரும் துடித்து விட்டனர்... ஆனால் அவர்கள் அசையும் முன்பே அதன் மறு கையை கொண்டு ஐவரையும் ஒரு ஓரத்தில் தள்ளியது.... விழுந்த ஐவருக்கும் ஏற்கனவே உடைந்து கிடந்த கன்னாடி துண்டுகள் கிழித்து காயமாக்கியது... அதையும் பொருட்படுத்தாது எழுந்தவர்களின் முன் வீனாவை பிடித்தவாறு வந்து முன் நின்றது அவ்வுருவம்... அதன் அகோர முகத்தில் குத்தியிருந்த ஒரு சிறிய கன்னாடியை பிடிங்கி வீனாவின் கழுத்திற்க்கு அருகில் கொண்டு செல்ல... மற்ற நாயகர்கள் அலரி தடுக்க முயன்றனர்... ஆனால் சட்டென அதன் கையை அப்படியே நிறுத்திக் கொண்டது.... அதன் கோர பற்களாள் சிரித்துக் கொண்டு... தன் மரணத்திற்க்காய் கண் மூடி காத்திருந்த வீனாவை பார்த்து

உருவம் : அக்காக் கைல செத்தா சாவையும் வரமா ஏத்துக்குரவ தான டி நீ... அதுக்கு தான நா குடுக்குற காயத்தையும் தாங்கி நிக்கிற... ஆனா உன்ன நிம்மதியோட சாக விடுவன்னு நெனக்கிறியா????

அதன் வார்த்தையில் தேங்கிய கண்ணீரை அனை காத்து நின்ற தன் இமைகளை மெதுவாய் திறந்தாள் வீனா... ஆறாய் வலிந்தது கண்ணீர்... கண்ணீரையும் தாண்டி அக்கண்களிள் ரவியின் மேல் உள்ள காதலும் ...... ரனீஷ் வீர் ரக்ஷா தான்யா மேல் அவள் வைத்திருக்கும் கடலை விட அதிக நட்பும் அன்பும்.... ஒவீயின் மேல் இருக்கும் அன்பும்.... நிறைந்து இருந்தது... ஓரமாய் கேள்விக் குறியும் இருந்தது... அந்த உருவத்தின் கூற்றால்...

உருவம் : நான் 8 வர்ஷத்துக்கு முன்னாடி இதே ஊர்ல சித்திரவதை செய்ய பட்டு தீ ல கருகி மண்ணுல பாதி உயிரோட புதைக்கப்பட்டு செத்துப்போன ஒவீனா இல்ல.....

அனைவரின் கண்களும் அதிர்ச்சியில் விரிந்தது.... அதன் கூற்றை முழுதாய் கேட்க ஆறு பேரின் மனதிலும் தங்களையும் அறியாமல் ஆவல் அதிகரித்தது....

உருவம் : வனோஜா....என்று அலரிய அலரலில் மறுவாழ்ப்பேட்டையே ஒரு நிமிடம் நடுங்கி அடங்கியது...

தொடரும்.....

DhiraDhi

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro