Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

ஒவீனா : 24

Thankyou so much fr ur comments guys...kandippa nxt story irukku...unga aatharavum anbum irukkura vara en euthukkalum thodarum....😍😍😍😍
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

மயங்கி சரிந்ததைவளை கீழே விழும்முன் அவளை தன் கைகளிள் தூக்கிக்கொண்டான் ரவி...

ரவி: ஒடனே வீனாவ செக் பன்னனும்...சீக்கிரம்..இங்க வேண்டாம்...நா நெக்ஸ்ட் ரூம்க்குக் கூட்டீட்டு போறேன்..தேவையான மெடிசென் கிட்ஸ் இன்ஸ்ட்ருமென்ஸ்ஸோட அந்த ரூமுக்கு வாங்க...தான்யா நீ இங்கையே ரெஸ்ட் எடு...

தான்யா: நோ ரவி...நா வீனாக்கூட தா இருப்பேன்...நௌ ஐம் ஆல்ரைட்...

ரக்ஷா: அவளும் இருக்கட்டும் டா...

ரவியும் சரியென கூறிவிட்டு வீனாவை தூக்கிக்கொண்டு அடுத்த அறைக்கு விரைந்தான்...சில மணி நேரம் முன்பு வரை இருந்த சந்தோஷம் சில நொடியிலே மறைந்துவிட்தே..தன்னவளின் நடவெடிக்கைக்கு காரணம் என்னவாக இருக்குமென்ற கேள்வி எழுந்தாழும் தற்போது தன்னவள் எழுவதே முக்கியமென கேள்விகளை எல்லாம் ஓரம் கட்டி வைத்தான் ரவி...அவனைப்பின் தொடர்ந்து சென்ற அனைவரும் அவன் கவலை படிந்த முகத்தைக்கண்டு கவலைபட்டனர்...

அவளின் மூளையில் பதிந்து மறந்த நிகழ்வுகளே இப்பொழுது நினைவு வந்திருப்பதாய் கண்டரிந்தனர்...ஆனால் அவள் எழுந்ததும் அந்நினைவுகள் அவளின் நினைவிலிருக்குமா என்பது சந்தேகமே... சிறிது நேரம் களித்து எழுந்த வீனா தான் எப்பொழுது ரனீஷின் அறைக்கு வந்தோம் என யோசிக்க...அவளை கூர்ந்து கவனித்தனர் மற்ற நாயகர்கள்..

வீனா: ஏன்டா என்ன இப்டி குறு குறுன்னு பாக்குரீங்க??
அவளின் கேள்வியிலே நடந்ததை மறந்து விட்டாளேன தெரிய எதுக்கும் பூர்த்தி செய்துவிடலாம் என...

ரவி: வீனா மா நீ தூங்குரதுக்கு முன்னாடி என்ன நடந்துதுன்னு சொல்லு பாக்களாம்...

வீனா: என்ன டா தெரியாத மாதிரிகேக்குர???நம்ம தலைல மாத்தி மாத்தி கொட்டி சண்டை போட்டுக்குட்டோம் அப்ரம் தலவானி சன்டை...
இதல்லாம் வேர நடந்ததா என வீர் தான்யா ரக்ஷா ரனீஷ் அவனைப்பார்து லுக்கு விட...அவர்களைப்பார்த்து சிரித்துவைத்தவன் அவளிடம் திரும்பி

ரவி : அது மட்டும்தான் நடந்துச்சா...

வீனா: அப்போ வேர எதாவது வேர நடந்துச்சா???

அனைவரும் : இல்லையே...

வீனா: தான்யா நீ எப்போ டி எழுந்த? ???

தான்யா: இப்போ தா ன்டி...சரி நீ தூங்க...நாங்க கீழ போய் தூங்குரோம்...அவளுக்கும் தலை லேசாக வலிக்க சரி என்றால்..

அவளை அவ்வறையிலே படுக்கவைத்துவிட்டு அனைவரும் அமைதியாக வெளியேரினர்...கீழே ஹாலிர்க்கு வந்த ஐவர் மனதிலும் பல விதமான சிந்தனைகள் சுற்றிக்கொண்டிருந்தது...ரவியின் மனமோ ஏன் என் வீனாவிற்க்கு மட்டும் இவ்வளவு கஷ்டங்கள் என கொதித்துக்கொண்டிருந்தது...வீருக்கோ நடந்தது அனைத்தும் உண்மையா? ??என்றே நம்பமுடியாமல் இருந்தான்...

ரனீஷ் : ஏன் இப்டி எல்லாரும் அமைதியா இருக்கீங்க??? இங்க என்ன தான் நடக்குது???

ரக்ஷா: எனக்கு ஒன்னும் புரியல..நா முழுசா கொழம்பீட்டேன்....வீனா என் வீர வீரா ன்னு கூப்டனும் இவனும் பேய் அரஞ்ச மாரி நிக்கிரான்???? யாரந்த ஒவீ???

யாரும் எதிர்ப்பாக்காத பதில் வீரின் வாயிலிருந்து வந்தது...

வீர்: என் தங்கச்சி...
அவன் தங்கையென்றதில் அதிர்ந்தவர்கள் அவன் அடுத்து கூறியதில் மயங்கி விழாத குறைதான்....

தான்யா: உன் தங்கச்சி யா????😱😱😱

வீர்: ஆமா ....என் தங்கச்சி அப்ரம் வீனாவோட அக்கா...

மற்ற நாழ்வரும்: என்னது அக்காவா???😱😱😱😱

வீரின் பார்வை அவன் கையிலிருந்த லாக்கெட்டிலே பதிந்திருந்தது...அது வீனாவின் லாக்கெட்..அவள் அனைத்து விட்டு விலகும் பொழுது இவனின் சட்டை பட்டெனில் மாட்டி அவிழ்ந்து விட்டது...

ரனீஷ்: தெளிவா சொல்லு டா...தலையும் புரியல வாலும் புரியல...

ரவி: அப்போ வீனாவும் உன் தங்கச்சி யா டா???

வீர் : ஆமா டா...ஒவி ரொவீ இரண்டு பேரும் என் தங்கச்சிங்க...

ரனீஷ்: டேய்...நீ அம்மாப்பாக்கு ஒரே பையனாச்சே டா...

வீர்: என் பெரியப்பா பொண்ணுங்க டா..

ரவி: பெரியப்பா வா??

வீர்: ஆமா டா ஆனா

தான்யா: ஆனா...

வீர்: என் அம்மாப்பா எறந்த அன்னைக்கு ஒவி யார்க்கூடயோ ஓடி போய்ட்டான்னும் வீனா Accsident ல தவரீட்டான்னு சொன்னாங்க டா...ஆனா இப்போ வீனா...

ரக்ஷா: டேய் தயவு செஞ்சு மொதல்லேந்து சொல்லு டா...

வீர்: சொல்ரேன் டி..சொல்ரேன்...

(ஹப்பா Flash back வந்துருச்சு...எல்லாரும் மேல பாருங்க பா...வேணும்னை நேராக்கூட பாத்துக்கோங்க அப்ரம் கழுத்து வலி வந்தா நா பொருப்பில்ல..)
Flashback

கோயம்பத்தூரில் 50 ஆண்டுகளாய் செலிப்பாக நடந்து வரும் VV Constructions சின் Founder இரத்தினவேலுக்கு இரண்டு மகன்கள்...இரண்டாவது மகனின் பிரப்பில் மனைவி இறந்துவிட தன் மகன்களையே தன் இரண்டு கண்களாய் நினைத்து வாழ்ந்து வந்தார் இரத்தினம் தாத்தா...முதலாமவனின் பெயர் வசன்த ராஜன் ...இரண்டாமவனின் பெயர் விக்ரம ராஜன்...வசன்த் மீது விக்ரமிற்க்கு கொள்ளை பாசம்...வசன்த்திற்க்கும் அவ்விதமே... இருவரையும் நல்வழியில் வளத்து வந்தார்..மகன்கள் இருவருக்கும் தந்தை சொல்லே வேதம்...வருடங்கள் சென்றது..தங்களது நிறுவனத்தின் சென்னை கிளையை தன் நிறுவனத்தில் ஒரு வருடமாய் பணியாற்றிவரும் தன் இளைய மகனான விக்ரமை நிர்வகிக்க அனுப்பினார்...கோவை கிளையை மூத்த மகன் வசன்த்திடம் ஒப்படைத்து ஓய்வில் ஆழ்ந்தார் இரத்தினம் தாத்தா....மேன்மேலும் உலகமெங்கும் பரவியது VV Constructions...தன் மகன்களின் திறமையில் பெருமை பட்டார் இரத்தினம் தாத்தா...மூத்தவன் திருமண வயதை அடைந்துவிட்டான் என அவனுக்கு பெண் தேடும் படலத்தை துவங்கினார்...அவர் தேடியது அந்தஸ்த்தான பெண்ணை அல்ல...நல்ல குணமும் பண்பும் மிக்க பெண்ணை தன் மகனுக்கு தேர்வு செய்ய முனைந்தார்...மனதை அமைதிப்படுத்த என்றாவது கோயம்பத்தூரின் ஒதுக்குப்புரத்திலிருந்த ஆஷ்ரமத்திர்க்கு வருவார் இரத்தினவேல் தாத்தா...இன்றும் அங்கு நிம்மதியை தேடி சென்றவர் கண்களிள் சிக்கினாள் அவரின் வருங்கால மருமகள்...ஷான்த்தி...பேரைப்போலவே சாந்தமானவள்...அனைவரையும் அன்புடன் அனுசரிக்கும் பெண்...அங்கிருந்த பெரியவர்களிடம் சிரித்துக்கொண்டே உணவுப் பரிமாரியவளை பார்த்ததும் இவளே தன் மருமகள் என முடிவெடுத்தார் தாத்தா...ஆனால் அப்பெண்ணின் சம்மதமும் அவசியமென்று யோசித்து அவள் அருகில் சென்றார்...அவளின் தோலில் தட்ட அவளை தன் பக்கம் திருப்பினார்...

இரத்தினம் தாத்தா: வணக்கம் மமா

ஷான்த்தி: வணக்கம் ஐயா...உக்காருங்க ஐயா..என அவரை முதலில் மரவைத்தவள்...இப்போ சொல்லுங்க ஐயா...

இரத்தினம் தாத்தா: உன் பேரு என்ன மா??? நீ இந்த ஆஷ்ரமத்துல தான் இருக்கியா??? நாஉன்ன பாத்ததே இல்லையே...உனக்கு கல்யாணம் ஆய்ருச்சா மா???

ஷான்த்தி: என் பேரு ஷான்த்தி... நா இங்க தா ஐயா வளந்தேன்...வேலை விஷயமா அங்கங்க போய்டுவேன்...அதனால நீங்க என்ன பாத்துருக்க மாட்டீங்க...இல்லையா...என்ன மாரி அனாதைகள யாரு கல்யாணம் பன்னிக்கிறாங்க...அப்டியே கல்யாணமானாலும் அது காதல் திருமணமாதா இருக்கும்..ஏன் ஐயா கேக்குரீங்க..

இரத்தினம் தாத்தா: உனக்கு கல்யாணமாகனும்னு ஆசை இல்லைலா ம்மா???

ஷான்த்தி: ஆசை இருந்தாளும் அது நெரவேராது ஐயா...என் தங்கைய படிக்க வக்கனும்...இன்னோருத்திய ஒரு நல்லவர் கைல ஒப்படைக்கனும்..இந்த ஆஷ்ரமத்த இன்னுக்கொஞ்சோ டெவலப் பன்னனும் ங்குரது தான் இப்போ எனக்கு லச்சியம்...

தன் தங்கைகளுக்காகவும் தன்னை வளர்த்த ஆஷ்ரமத்திர்க்காகவும் தன் ஆசைகளை தியாகம் செய்யும் இவ்விதமான பெண்ணை தன் மகன் இழந்து விடக்கூடாதென என்னினார்...

இரத்தினம் தாத்தா: என் பேரு இரத்தின வேல் மா...எனக்கு இரண்டு பசங்க...என் மனைவி என் இரண்டாவது பையன் பொறக்கும் போது உடல் நிலை சரியில்லாம எங்கள விட்டு போய்ட்டா...இப்போ நா ஏன் இதல்லாம் உன்ட்ட சொல்றேன்னு தான யோசிக்கிற??? எனக்கு உன்ன பாத்ததும் புடிச்சு போச்சுமா...என் மொத பையனுக்கு பொண்ணு தேடிக்கிட்டு இருக்கேன்...நீ மருமகளா வந்தா எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும் மா... உன் விருப்பத்த மீறி நா எதுவும் செய்ய மாட்டேன் மா...

தாத்தா கூறியதில் என்ன பதில் கூறுவதென்றே தெரியவில்லை... தன் தங்கைகளின் முகம் மனதில் வந்து செல்ல...ஆஷ்ரமம் வந்து சென்றது...பெரிய மனதிர் ஒருவர் தன் விருப்பத்திற்க்காக காத்துக்கொண்டிருக்கிறாரே...என்ன கூறுவது...இவரைப்பார்த்தாலும் நல்லவராகவே தெரிகிறார். எலிமையாக தெரிகிறார்.....எப்பாடியும் திருமணமென்ற ஒன்று நடந்தாள் யாரையாவது மணந்துதான் ஆக வேண்டும்...ஏன் இவரின் மகனையே மனந்துக்கொள்ளக்கூடாது????

ஷான்த்தி: ஐயா எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல...நீங்க என்ன வளத்த மதர்ட்ட இதப்பத்தி பேசுங்க...அப்டியே கல்யாணம் பன்னி வந்தாலும் என் தங்கச்சி ங்க என் கூடத்தான் இருப்பாங்க..உங்களுக்கு சம்மதமா???என்று மறைமுகமாக தன் சம்மதத்தை தெரிவித்தாள்...

அவளின் கூற்றை புரிந்துக்கொண்டவர் மகிழ்ச்சியுடன் சம்மதமம்மா சம்மதம் இப்பொழுதே உன் மதரிடம் பேசிவிட்டு வருகிறேன் என்றவர் உள்ளே சென்றார்...சில நிமிடங்களில் மரத்தடியில் அமேர்ந்திருந்த ஷான்த்தியை நோக்கி சிரித்துக்கொண்டே வந்துக்கொண்டிருந்தனர் இரத்தினம் தாத்தாவும் மதர் ரீனா வும்....அவர்களின் புன்னகையிலே சம்மதத்தை புரிந்து கொண்டவள் இருவர் காலிலும் விழுந்து ஆசிர்வாதம் பெற்று கொண்டாள்.... அவர்களிடம் விடைப்பெற்று வீடு வந்தவரின் முகத்தில் மட்டற்ற மகிழ்ச்சியை கண்ட வசன்த்

வசன்த்: என்னப்பா இவ்ளோ சந்தோஷமா இருக்கீங்க???என்ன விஷயம்???சொன்னா நானும் சந்தோசப்படுவேன்ல...???

இரத்தினம் தாத்தா: ரொம்ப சந்தோசமா இருக்கேன் டா...வசன்த் உனக்கு ஒரு பொண்ணு பாத்துர்க்கேன்...பொண்ணு பேரு...

வசன்த் : அப்பா அதல்லா நீங்க சொல்லனும் னு இல்லை...நீங்க பாத்த பொண்ணுல்ல...நல்ல பொண்ணா தான் இருப்பா...எனக்கு கல்யாணம் பன்னிக்க சம்மதம்...

தன் மகனின் வாக்கியத்தில் பெருமையுற்றவர்....இருந்தும்..

இரத்தினம் தாத்தா: பரவாஇல்லை நா சொல்லுவேன் நீ கேலு...பொண்ணு பேரு ஷான்த்தி...அவளுக்கு இரண்டு தங்கச்சிங்க..ஆஷ்ரமத்துக்கு போவேன் ல அங்க தான் பாத்தேன்...பாத்ததும் உனக்கேத்தவன்னு தோனுச்சு...அதா பேசி முடிச்சிட்டேன்...இந்தா பொண்ணு போட்டோ...

வாங்கி பார்த்த வசன்த்திற்க்கு ஷான்த்தியை மிகவும் பிடித்துவிட்டது...

வசன்த்: அப்பா அடுத்த வாரம் நல்ல முகூர்த்தமிருக்கான்னு ஜோசியர்ட்ட கேலுங்க ப்பா...

தன் மகனின் அவசரத்தைக்கண்டு சிரித்துக்கொண்டே அடுத்த வாரம் வேள்ளி கிழமை நல்ல முகூர்த்தமிருக்கு டா...அன்னைக்கே பிக்ஸ் பன்னீடவா...

வசன்த்: வெள்ளி கிழமையா???

அண்ணணும் தந்தையும் உறையாடியதை கேட்டுக்கொண்டே வந்த இளயவன் விக்ரம்...

விக்ரம்: பாத்தீங்களா ப்பா..அண்ணணுக்கு அவசரத்த???

வசன்த்: டேய் நீ எப்போ டா வந்த??

விக்ரம் : ஜஸ்ட் நௌ அண்ணா...

இரத்தினம் தாத்தா: வாடா ....பாத்தேன் பாத்தேன்...வசன்த் அன்னைக்கு தா கல்யாணம்....

விக்ரம்: வசன்த ராஜா அவர்களே தங்கள் ராணியை இனைய தாங்கள் இரு வாரம் காத்திருக்க வேண்டும்.... பாத்தீங்களாப்பா அண்ணா முகம் போர போக்க...

விக்ரம் அவனை கின்டல் செய்தவாரு தன் வருங்கால அண்ணியின் படத்தை பிடிங்கிக்கொண்டு ஓட...அவனை துரத்தியவாரே சென்ற வசன்த் அவன் நின்றதைப்பார்த்து அவன் அருகில் சென்றான்....

விக்ரமிற்க்கு ஷான்த்தியின் முகஜாடையை எங்கோ கண்டதைப்போல் இருந்தது...தன் அண்ணண் காதை பிடித்து திருகவும் நினைவிற்க்கு வந்தவன்

விக்ரம்: அச்சோ அண்ணா..இந்தா அண்ணி போட்டோ...நா அப்பாட்ட போறேன் விடு ண்ணா..எனஇரத்தினம் இருக்கும் இடத்தை நோக்கி சென்றான்...சிரித்துக்கொண்டே அவனை பின் தொடர்ந்தான் பெரியவன் .....

ஹாலில் இவர்களுக்கு பெரும் அதிர்ச்சியுடன் காத்திருந்தார் இரத்தின வேல் தாத்தா....

தொடரும்....

அது என்ன அதிர்ச்சி ???? யார் ஒவீனா??? ஒவீனாவிற்க்கும் வீனாவிற்க்கும் என்ன நேர்ந்தது..???? யார் அந்த உருவம்??? பலிவாங்க துடிப்பதன் காரணம் என்ன??? அடுத்த அத்யாயத்தில் காண்போம்...

Epdiyo flashback start panniyachu pa...Ungalukku intha ud la innum doubts add aairukumnu enakku thonuthu...neenga enna nenaikkireenga??? Nxt ud ooda seekirom varen idhayangale....share ur comments guys😉😉😉

DhiraDhi ❤

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro