Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

61

மரியம் படிப்பு, ஓதுவது, தொழுவது என நோன்பில் நேரத்தை செலவழிக்க...இப்பொழுது ஆஷிஃபை பற்றிய எண்ணத்தை ஒதுக்கி வைத்தாள்...

ஆஷிஃபையே சுற்றி சுற்றி வந்தவள்...அவன் பக்கம் செல்லாமல்...நோன்பு முடிந்ததும் அவனை பற்றி யோசிக்களாம் என விட்டுவிட்டாள்...

மரியமிர்க்கு இது சாதரணமாக இருந்தாலும்...ஆஷிஃப்க்கு பெரிய விஷயமாக இருந்தது...

அடிக்கடி பார்த்து கொண்டிருப்பவள் ஒரேடியாக கண்டு கொள்ளவில்லையென்றால் விதியாசமாக தானே இருக்கும்...அதே மாதிரி தான்...

அவன் மரியமை பெரியதாக எண்ணா விட்டாலும்...அவன் மனது மரியமிர்க்காக ஏங்க ஆரம்பித்தது...அவனுக்கே தெரியாமல்...

ஆனாலும் 75 சதவீதம் ஆஷாவின் நினைப்பு தான் அவனை வாட்டியது...

இப்படியே மிகவும் இனிமையாக நோன்பு போய்கொண்டிருந்தது...

ஹேய்....ப்ரஸி...ஃபரிதா மேம் இஃப்தார்  (நோன்பு திறப்பு)க்கு இன்வைட் பன்னிருக்காங்க டி என மரியம் கூற...சரி டி...நீ போயிட்டு வா என ப்ரஸி பதில் கூறினாள்...

அடியேய்...நம்ம எல்லோரயும் தான் என்ற மரியமிடம்...நீ தானே நோன்பு பிடிக்கிறே...அப்புறம் நாங்க எதர்க்கு என ப்ரஸி கேட்க...இல்லை டி...என்னை மேம் கூப்ட்டாங்க...நான் மட்டும் எப்படி மேம் வர்றது...ஒரு மாதிரியா இருக்குனு சொன்னேன்...உன் ஃப்ரெண்ட்ஸ்ஸையும் கூட்டிட்டு வா மானு உன்னையும் ஷிவானியையும் சொன்னாங்க...

நான் அவங்களை இன்வைட் பன்றேனு மேம் சொன்னாங்க டி என மரியம் கூற...இருவரும் போகனுமோ என விழித்தனர்...

ஹ்ம்ம்...ஆமா டி...இஃப்தார்க்கு கூப்பிட்டா கண்டிப்பா போகனும்...நான் என் பேரண்ட்ஸ் கிட்ட பெர்மிஷன் வாங்கனும்னு சொன்னேன்...சரி மா கேட்டுட்டு சொல்லு...நானே காலேஜ் முடிஞ்சதும் எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போறேனு சொன்னாங்க...

ஹு...நான் ம்மா க்கு ஃபோன் போட்டு ஃபர்ஸ்ட் கேட்டுக்குறேன் என மரியம் கைபேசியை எடுத்து நஸிராவிர்க்கு அழைப்பு விடுத்தாள்...

மரியம்: அஸ்ஸலாமு அலைக்கும் ம்மா...எப்படி இருக்கீங்க??

நஸிரா: வ அலைக்கும் முஸ்ஸலாம்...
அல்ஹம்துலில்லாஹ்...நல்லா இருக்கோம்...
நீ எப்படி மா இருக்கிறா?? ப்ரஸி, உன் ஃப்ரெண்ட்ஸ் எல்லோரும் நல்லா இருக்காங்களா??

மரியம்: ஹ்ம்ம்...ஆமா மா...
அல்ஹம்துலில்லாஹ்...

ம்மா...இன்னைக்கு எங்க மேம் ஒருத்தவங்க இஃப்தார்க்கு இன்வைட் பன்னிக்கிறாங்க...
அதான் உங்க கிட்ட பெர்மிஷன் கேக்க கால் பன்னேன் மா...போகவா

நஸிரா: யாரு மா...வீடு எங்கே இருக்கு...தனியாவா போவா??

மரியம்: இல்லை மா...எனக்கு நல்லா தெரிஞ்ச மேம் தான்...நான்,ப்ரஸி,ஷிவானி மா...அவுங்களே எங்களை கூட்டிட்டு போய்ட்டு வந்து விட்டுறுவாங்க மா...ரொம்ப நல்ல மேம்...என் மேல பாசமா இருப்பாங்க மா...

நஸிரா: ஓஹ்ஹ்....

மரியம்: ஆமா மா...பயப்புடாதே...இன்னும் ஃபோர் டேஸ்ல நான் ரம்ஜான் லீவ்க்கு ஊர்க்கு வரேன்...அப்ப அந்த மேம பத்தி சொல்லுறேன்...எனக்கு அவுங்களை ரொம்ப பிடிக்கும் மா...

நஸிரா: ஹ்ம்ம்...சரி மா...அப்ப பத்தரமா போயிட்டு வா டா...அல்லாஹ் உன் காவல்..

மரியம்: சரி மா...வாப்பா எங்கே?? நல்லா இருக்காங்களா??

நஸிரா: கடைக்கு போயிக்கிறாங்க மா...
அல்ஹம்துலில்லாஹ்...நல்லா இருக்காங்க..

மரியம்: சரி மா...வாப்பா வந்ததும்...நான் கேட்டதா ஸலாம் சொன்னதா சொல்லுங்க...

நஸிரா: சரி மா...இன் ஷா அல்லாஹ்
(அல்லாஹ் நாடினால்)...

மரியம்: ஓகே மா
(என கூறி ஸலாம் சொல்லி வைத்து விட்டாள்)
.
.
அட டா...இவ்வளவு நேரம் எங்க மேம்...அப்புடி...எங்க மேம் இப்புடினு சொன்னாலே...பேர சொல்லலயே...நானும் கேட்க மறந்துட்டேனே...சரி பிள்ளை நாளு நாள்ல வருவாலே...அப்ப கேட்டுப்போம் என நினைத்து கொண்டு விட்டு வேலை செய்ய தொடங்கினாள் நஸிரா...
.
.
ஃபரிதா,... ப்ரஸி மற்றும் ஷிவானியையும் வீட்டிர்க்கு அழைப்பு விடுக்க...மூவரும் ஃபரிதாவின் வீட்டிர்க்கு சென்றனர்...

நோன்பாக இருப்பதால் வீட்டில் இருந்து விட்டு நோன்பு முடிந்ததும் மகளை தேடும் படலத்தில் இறங்களாம் என சிராஜும் வீட்டில் இருந்தார்...

கார் வந்ததும் மம்மி வந்தாச்சி வாப்பா...நம்ம வீட்டுக்கு கெஸ்ட்ட கூட்டிட்டு வரதா சொன்னாங்களே என ரசாக் சந்தோஷமாக கூற...ஆமா ராஜா...வா நாம்ம போய் வெல்கம் பன்னலாம் என கூறி அவர்களை அழைக்க சென்றான் சிராஜ்...

வாங்க மா...வாங்க என சிராஜ் அழைக்க மரியம் ஸலாம் சொன்னதும்...ஒரு சிரிப்புடன் மனதில் ஒரு பூரிப்புடனும் பதில் சொன்னார் சிராஜ்...
(அதர்க்கு என்ன காரணம் என்று சிராஜிர்க்கு தெரியவில்லை)...

மரியமிர்க்கும் ஏனோ அந்த வீட்டிர்க்குள் நுழையும் போது படப்படப்பாக இருந்தது...
ஆனாலும், புதிய இடம் என்பதால் அப்படி இருக்கிறது என மனதை தேற்றிக் கொண்டாள்...

ஹேய்...மரியம் என ஷிவானி அழைக்கும் நேரம் தான்...இருவரும் ஒருவர் முகத்தை மற்றொருவர் பார்த்து கொண்டிருப்பது தெரிய வந்தது...
(சிராஜூம் மரியமும்)...

நீங்க தான் மரியம் லாத்தா வா என்றபடி அருகில் வந்த ரசாகை கூப்பிட்டு தன் அருகில் அமர வைத்தவள்...ஆமா டா தங்கம்...நீங்க தானே ரசாக் தம்பி என கேட்க...மூவரும் மரியமை நோக்கினர்...
(வேற யாரும் இல்லை...சிராஜ், ஃபரிதா மற்றும் ரசாக்)...

என்ன தம்பி...அப்படி பார்க்குறா என கேட்ட மரியமிடம் இல்லை...என் லாத்தா நியாபகம் வந்திருச்சி என கண் கலங்கிய ரசாகை மரியம் புரியாமல் பார்க்க...சிராஜ் மற்றும் ஃபரிதா வேற நிலைக்கு போயிருந்தனர்...

ஏதோ ப்ராப்ளமா இருக்கும் என மனதில் நினைத்த மரியம் பேச்சை மாற்றுவதர்க்காக...
ஆமா தங்கம்...நீங்க நோன்பு பிடிச்சீங்களா?? என கேட்க...ஆமா லாத்தா...
நான் எல்லா நோன்பையும் பிடிச்சிட்டேனே...இதான் ஃபர்ஸ்ட் டைம் என பெருமையாக சொன்னவனை குட் பாய் என மரியம் கூறினாள்...

என்ன லாத்தா...இவங்க பேசவே மாட்டிக்கிறாங்க என மரியமிடம் ஷிவானி மற்றும் ப்ரஸியை சுட்டி காண்பிக்க...

என்ன தம்பி...உனக்கு இப்ப தான் எங்களை கண்ணுக்கு தெரிஞ்சிருக்கு...இவ்வளவு நேரம் மரியம் லாத்தாவ தானே கவனிச்சீங்க என பொய்யான வருத்ததுடன் ப்ரஸி கூற...என்ன சொல்ல என தெரியாமல் பாவமாக பார்த்தான் ரசாக்...

சோ க்யூட்...பாவம் டி...சின்ன பையன சீன்டாதே...அவ விளையாட்டுக்கு சொன்னா மா என ஷிவானி கூறவும்...ரசாக் ப்ரஸியை பார்க்க... ப்ரஸி ரசாகை பார்த்து சிரித்தாள்...

இப்படியே இவர்கள் பேசிக்கொண்டிருக்க எதார்த்தமாக உனக்கு எந்த ஊர் மா என சிராஜ் மரியமிடம் கேட்க...நாங்க கோயமுத்தூர் என்றால் ப்ரஸி...

ஓ...நீங்க மூணு பேருமே கோயமுத்தூரா?? நான் டூ மன்த்ஸ்ல அங்க தான் வேலை விஷயமா வருவேன் என சிராஜ் கூற...
இல்லை...அவங்க ரெண்டு பேர் தான் கோயம்பத்தூர்...நான் திருச்சி என ஷிவானி கூறி...

ஹேய்...நீ திருச்சியா??
எனக்கு கொஞ்சம் பேர அங்க தெரியுமே...என் ஃப்ரெண்ட் திலீப் அந்த ஊர் தான் என சிராஜ் கூற...

எங்க மாமா பேர் கூட திலீப் தான்...ஆனால், நீங்க எந்த திலீப்ப சொல்லுறீங்கனு தெரியலயே என ஷிவானி கூறவும்...ஹேய்...உங்க அம்மா பேரு கவிதாவா என ஃபரிதா கேட்க...
ஆமா...கவிதா தான் என ஷிவானி கூறவும்... அப்டினா உங்க பாட்டி செல்வியா என கேட்க...

ஆமா மேம்...அவங்க தான்...
கரேக்ட்டா சொல்றீங்க...
உங்களுக்கு தெரிஞ்சது எங்க ஃபேமிலி தான் என ஷிவானி கூறவும்...
உங்க குடும்பதுக்கு நாங்க நிறைய நன்றிகடன் பட்டிக்கிறோமா...
சரியான நேரத்தில உங்க குடும்பம் தான் எங்களுக்கு ரொம்ப உதவியா இருந்தாங்க என சிராஜ் கூறி முடிக்க...சிராஜிர்க்கு கண்கலங்கியது...ஃபரிதாவிர்க்கு பல வருடத்திர்க்கு முன்னாள் உள்ள நியாபகத்தை தர...இருவரும் ஷிவானியிடம் நலம் விசாரித்தனர்...

இஃப்தார்க்கு நேரமாக எல்லோரும் அல்லாஹ்விடம் துஆ செய்து நோன்பு திறந்தனர்...
பிறகு தொழுது விட்டு அல்லாஹ்விர்க்கு நன்றி கூறியவர் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தனர்...

மரியமிடம் ஏதோ கேட்க வாய் திறந்தவர்...கைப்பேசியில் அழைப்பு வரவும் சென்று விட்டார்..

மேம்...டைம் ஆச்சி...கிளம்பலாமா என மரியம் கேட்க...சரி என கூறி அழைத்துச் சென்று மூவரையும் விடுதியில் விட்டு திரும்பினாள் ஃபரிதா...

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro