Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

57

காதல்னு ஒரு வார்த்தை சொன்னதோட சரி...
அதுக்கப்புறம் எதுவும் இல்லை...
கூப்பிட்டு எவ்வளவு நேரம் ஆச்சி...
இதோ வரேனு சொன்னதோட சரி...
இன்னும் தான் வராங்க என தவித்துக்கொண்டிருந்தான்..

"ஓய்" என கத்திக்கொண்டு பின்னாலிருந்து வந்து முன்னால் குதித்து அமர்ந்தவளை அடி குரங்கே...வாழு மட்டும் தான் உனக்கு இல்லை என கூறிய அர்ஜுனை பார்த்து திடீரென "குப்"பென சிரிக்க...ஏன் டி சிரிக்கிறே என கேட்டவனை...இல்லை..இதே மாதிரி குரங்கை நீ மடியில் வச்சிட்டு இருந்தா எப்படி இருக்கும்னு நினைச்சேன்..சிரிச்சேன் என ப்ரஸி கூற அப்பொழுது தான்...தான் ப்ரஸி வந்து குதித்ததும் பாப்பாவை தூக்கி மடியில் வைத்தது போலே தன் மடியில் ப்ரஸியை தூக்கி வைத்தோம் என நினைவிர்க்கு வந்து அது ஏதோ சொல்ல முடியாத உணர்வை தரவும்.. அவளை பார்க்க..அவள் சிரித்து கொண்டே என்ன என்பது போல புருவத்தை தூக்கவும்...

பருவ வயது...தன்னோட காதலி...தன் மடியில் குழந்தையாக கிடக்கும் காதலி..அந்த நெருக்கம்...அந்த தனிமை..அவளது பஞ்சு போல் இருந்த முடியில் இருந்து வந்த மீரா சியாகாவின் மணம்...அவனின் அடி வயிற்றில் ஏதோ செய்ய...அர்ஜூனின் பார்வையின் மாற்றத்தை கண்டவள்க்கு ஏனோ அது தனக்குள் நெருப்பை மூட்டி விட...கண் சிமிட்டாமல் பார்த்து கொண்டிருந்த ப்ரஸியின் முகத்தில் மிக அருகில் அர்ஜுன் குணிய...அவளோ தன்னிச்சையாக தலையை பின் பக்கமாக செலுத்த...அவனின் தொடையில் அவளின் பின்னந்தலை முட்டி அப்படியே படுத்ததை போல இருக்க..இதுக்கு மேலே இடமில்லை என இரு கண்களையும் ப்ரஸி இருக்கி மூட...

நேற்று வரைக்கும் இங்கிருந்தேன்
இன்று என்னை காணவில்லை
வெயில் இல்லை மழை இல்லை பார்தேனே வானவில்லை
என் நெஞ்சோடு ரசித்தேன் கொள்ளாமல் கொள்கின்ற அழகை
உயிரில் ஓர் வண்ணம் குழைத்து வரைந்தேன் அவளை
காதல் மட்டும் புரிவதல்லை காற்றா நெருப்பா தெரிவதில்லை
காதல் தந்த மூச்சை நிலை
நான் கண்கள் திறந்தும் தெளியவில்லை

அங்கும் இங்கும் அசைந்த படி இருந்த அவள் கண்ணையே பார்த்தவன்...குணிந்த படியே இருக்க...சிறிது நேரத்தில் கண்ணை திறந்து பேந்த பேந்த முழித்தவளை...அவளோ சீக்கிரம் லாம் என் கிட்ட இருந்து கிஸ் கிடைக்காது டா என அர்ஜூன் சீன்ட....அவனை முறைத்தவள்...போடா குரங்கு, பக்கி, லூஸு என அவனை அடித்துக் கொண்டிருந்தவளை சிறித்த படி இருக்கி அணைத்தான் அர்ஜுன்...
.
.
ரமலான் வர இருப்பதால் வீட்டை துடைத்து, ஒட்டரை அடித்து, சுத்தம் செய்து...பழைய ஆடையை ஒதுக்கியபடி இருந்தவளுக்கு அது கண்ணில் பட்டது...

"ஆம்"...தன் மகள் பிறந்த அன்று முதல் நாள் போட்டிருந்த இரு பக்கம் சிறு கயிறு வச்சிருந்த குட்டி சட்டை...அதை எடுத்து பார்த்தவளுக்கு கண்கள் கலங்கியது...அந்த சட்டையை தன் கையால் தொட்டு முகத்தின் அருகில் வைத்தவளுக்கு...அந்த சட்டையில் குழந்தையின் மணம் தெரிந்தது...அதை நுகர்ந்து பார்த்த படி இருந்தவள்...

திடீரென கத்தி அழுக ஆரம்பித்தாள்...
"யா அல்லாஹ்...என்னால முடியலையே...இன்னும் எத்தனை வருஷம் தான் என்னை சோதிப்பா...நான் சிராஜை காதலிச்சு என்னை பெத்தவங்களை விட்டு போனதை தவிர வேற எந்த தப்பும் செய்யலயே..அதுக்கு தண்டனையா தான் சிராஜையும் என்னையும் பிரிச்சி வைச்சியே...என் பிள்ளையையும் ஏன் என் கிட்ட இருந்து பிரிச்சா" என நெஞ்சில் கை வைத்து கத்தி அழுதவள்...இன்னும் இங்கே அந்த வலி அப்படியே இருக்கே...என் பிள்ளை குடிக்காத பால் இன்னும் என் நெஞ்சிலே கட்டி இருக்குறாப்லே இருக்கே...அல்லாஹ்...முடியலயே......நான் எவ்வளவோ பொறுமையா இருந்துட்டேன்.. இதுக்கு மேலே உன் சோதனைய என்னால தாங்க முடியல...என் பிள்ளையை என் கிட்ட சேர்த்துரு...அது மட்டும் எனக்கு போதும் என அழுது துடித்தாள் ஃபரிதா...
.
.
.
ஏய்...என்ன மரியம்...உன் ஆட்டம் தாங்க முடியலே...எப்ப பாத்தாலும் லூஸு மாதிரி சிரிச்சிட்டு இருக்கிறா என கேட்டதை.. அப்படி தான் சிரிப்பேன்...உனக்கு என்ன செய்யுது...நீ உன் வேலையை பார்த்துட்டு போ என கூற...ஹும்ம்..உனக்கு முத்திரிச்சி...உன் கூட இருந்தா என்னையும் பைத்தியம்னு சொல்லுவாங்க...பட், வேற என்ன செய்ய...உன் கூட தான் இருக்கனும்...உன்னை விட்டு போக முடியாதே...அது என் தலைவிதி என நொந்து கொள்ள...அதான் தெரியுதுலே...அப்புறம் என்ன...பொத்திட்டு தூங்கு என கூற...
ஹூம்...சரி..சரி தூங்குறேன் என தூங்கியது...
(அட...வேற யாரும் இல்லைங்க...மணசாட்சி தான்...அது தாங்க இந்த உலகத்துலயே மிகவும் பாவம் பட்ட ஜீவன்)...

சுதா மற்றும் சந்தியாவின் கையை பிடித்து உங்களுக்கு ஒன்னு தரேன் என மரியம் கூட்டிட்டு போக...அப்படி என்ன டி தர போறே என கேட்டவளை வெய்ட் வெய்ட் என கூப்பிட்டு சென்றவள் ஆஷிஃப்க்கு நேரே அவர்களை உட்கார வைத்துவிட்டு...வெய்ட் ..எடுத்துட்டு வரேன் என சென்றாள்...

அட லூஸே...இத நாம்ம அங்க இருக்கும் போதே போய் எடுத்துட்டு வந்திக்க வேண்டியது தானே...இவ்வளவு தூரம் கூட்டி வந்து இங்கே உட்கார வச்சிட்டு ஓடுது பாரு பக்கி என மரியம் சென்ற திசையை பார்த்து சுதா புலம்ப...ஆமா, ஆமா...கொஞ்ச நாளா இந்த லூஸு சரியில்லை...எனக்கு ஏனோ மரியம்க்கு பைத்தியம் பிடிச்சிருக்கு போல தோனுது என சந்தியா கூறிக் கொண்டிருந்தாள்...

இங்கே பாருங்க...நான் என்ன கொண்டு வந்திருக்கேன் என மரியம் கூறவும்...என்ன டி...ஸ்வீட்ஸா?? இதுக்கா இந்த ஆர்ப்பாட்டம் பன்னே என சுதா கேட்க...ஈஈஈஈஈ...ஸ்வீட் இல்லை...லட்டூ என மரியம் கூற...லட்டூவும் ஸ்வீட்ஸ் கேடேங்கரி தானே டி என சந்தியா முறைக்க...அட ஆமாலே...என் லட்டூ குட்டி...கரெக்ட்டா சொல்லிட்டியே என கூறி ஆஷிஃபை ஓர கண்ணால் பார்த்த படி.. சந்தியாவின் கண்ணத்தை பிடித்து கிள்ள..ஏய் வலிக்குது டி..விடு என கூறியதும் அவளின் கண்ணத்தில் இருந்து கையை எடுத்த படி ஆஷிஃபை பார்க்க...அவன் ஏதோ யோசனையுடன் மரியமை பார்த்தவன்...திரும்பி ரண்வாவிடம் பேச ஆரம்பித்தான்...

சரி டி...இதை சாப்பிடுங்க என மரியம் கூற...எங்களுக்கு ஸ்வீட்ஸ் பிடிக்காது டி என இருவரும் கோரஸ் பாடினார்...
இதெல்லாம் பார்த்து ஏனோ ஆஷிஃப்க்கு சிரிப்பு வர...அதை அடக்கிகொண்டு இருந்தான்...அவனை கவனித்த மரியம் சுதா, சந்தியாவிடம் திரும்பி..இப்ப நீங்க இதை சாப்பிடலனா நான் ஸுஸைட் பன்னிக்குவேன் என அடிக்குரலில் கூற...
இருவரும் பேயறைந்ததை போல முழித்தனர்...

ஹப்பாடி...நமக்கு விடுதலை என மணசாட்சி கூற அதை அடக்கியவள் ஹ்ம்ம்...சாப்பிடுங்க என கூறி எட்டு லட்டையும் கதற கதற திங்க வைத்தாள் மரியம்...

இனிப்பு விரும்பிகளுக்கே திகட்டும்....இவங்க உண்மைக்குமே ரொம்ப பாவம் என மரியமின் மணசாட்சி கூற அதை கண்டுகொள்ளாவல் அவர்கள் இருவரையும் பாடா படுத்தி விட்டாள்...

ஹேய் என்ன...இங்கே இருந்து என்ன சாப்டுட்டு இருக்கீங்க எனக்கு தராம என கேட்டபடி ப்ரவீன் வர...ப்ரவீன் செல்லோ...இத சாப்பிடு மா என சந்தியா கூறினாள்...

சந்தியா எருமைனு கூப்பிட்டாலே... ப்ரவீன் காதுல தேன் பாயும்...இதுல செல்லோனு கூப்பிட்டா சும்மா இருப்பானா மெய் மறந்து நின்றான்...

ஐயையோ கஷ்டத்துல மனசுல உள்ள இஷ்டம் வந்திருச்சே என நினைத்தவள்...அது வந்து...எனக்கு ஸ்வீட்ஸ் பிடிக்காது...என்னாலே இதுக்கு மேலே திங்க முடியலே...ப்ளீஸ் சாப்பிடு என சந்தியா கூற...அப்போ குளோப் ஜாமை அன்னைக்கு அப்படி சாப்பிட்டே என ப்ரவீன் கேட்க... அட ஆமாலே என முறைத்தாள் மரியம்...

சந்தியாவின் கெஞ்சலை பார்த்து சரி, சரி என அந்த லட்டூ பாக்ஸை ப்ரவீன் வாங்க போக...உங்களுக்கு வேற பாக்ஸ்ல வச்சிக்கிறேன் என மரியம் கூற...

என்ன....இன்னும் இருக்குதா என ஒரே போல் கத்தியவர்கள் மரியம் சுதாரிக்கும் முன் மூவரும் மூன்று திசையில் தலைதெறிக்க ஓடியே விட்டனர்...

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro