Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

45

டேய்...உன்மைய சொல்லு இங்க என்ன தான் நடக்குது என வினை கேட்க..

என்ன டா ப்ராப்ளம் உனக்கு...இப்படி மொட்டையா கேட்டா...நான் எதனு சொல்லுவேன் என அர்ஜூன் கூற...

அதான் டா...உனக்கும் ப்ரஸிலாக்கும் நடுவுல என்ன என வினை கேட்கவும் ஈஈஈஈஈ என இழித்தான்...

இழிக்காம என்னன்னு சொல்லி தொலையேன்டா என கேட்டவனை...
தெரியல டா...எனக்கு பிடிச்சிருக்கு என அர்ஜூன் கூற

அப்ப லவ்வு என கேட்ட வினையிடம்...
அப்படியா என அர்ஜூன் கேட்க..

அட நாயே...என் கிட்ட கேக்குறே..அதை நீ தான் சொல்லனும் என வினை முறைக்க..

ஹூ...தெரியல டா... லவ்வா என்னனு...
ஆனா, அவள பார்க்கனும்னு ஆசை..
அவ ஒவ்வொறு நாளைக்கும் என்ன ட்ரஸ் போடுறா..என்ன கம்மல் போடுறா...என்ன ரிங் போடுறா...அப்புறம் அவ ஹேர் ஸ்டைல் எப்படி பன்றா...அதுலையும் அவ முடி அழகா இருக்கும் டா...அப்படி இந்த படத்துலைலாம் ஹீரோயின் முடி காத்துல பறக்குமே...அதே மாதிரி ப்ரஸி முடியும் பறக்கும் டா..அப்புறம் அவ போடுற ஸ்லிப்பர கூட பார்ப்பேன் டா என கூறிய அர்ஜுனை...

மேலும் கீழுமாக வினை பார்க்க...

ஏன் டா..இப்படி பார்க்குறே என கேட்டவனை..

இல்லை மச்சான்...எனக்கு ஒன்னு தோனுது என வினை கூற என்ன என்பது போல அர்ஜூன் பார்க்க...

இல்லை டா...நான் சொல்லுறேன்...நீ மனச தளற விட்றாதே என கூறியவன்...
நான் ஒரு படம் பார்த்தேன் டா...அதுல ஒரு பையன் பொண்ணுங்க யூஸ் பன்றத இப்படி தான் ஆசையா பார்ப்பான்...
நாள் ஆக ஆக...அதை நாம்ம போட்டுக்குட்டா எப்படினு தோனுமாம்..
அவனால் கன்ட்ரோல் பன்ன முடியதாம்..
அப்படியே திருநங்கையா மாறிடுவானாம் என கூறி முடித்தவன் ஓட்டத்தை எடுக்க..

அடேய்...நாயே..நீ மட்டும் என் கைல கிடைச்சா மவனே மர்டர் தான் என கூறி வினையை துரத்தி கொண்டிருந்தான் அர்ஜுன்😂😂..
.
.
அடேய்...ஐஸ் கிரீம் எங்க டா என ஷாலினி கேட்க...

ஈஈஈஈஈ மறந்துட்டோம் என்ற கூறியவர்களை முறைத்தவர்கள் கண்ட படி திட்டி விட்டு ஐஸ் கிரீம் வாங்க சென்றனர்..

அன்றைய நாள் மரியம்க்கு ரொம்ப ஸ்பெசலாக இருந்தது... அது அவளின் முகத்திலயே நன்றாக தெரிந்தது..

இப்படியே அவர்கள் கலாட்டா போய் கொண்டிருக்க...

சரி வாங்க... மணி ஒன் ஆச்சி...மிச்ச அரட்டைய காலேஜ்ல கண்டினியூ பன்னலாம் என கூறி காலேஜ்க்கு செல்ல..
காலேஜோ மயான அமைதியாக இருந்தது...
.
.
.
என்ன வாட்ச் மேன்...யாரையும் காணோம் என அர்ஜூன் கேட்க...

அட அர்ஜுன் தம்பி...இன்னைக்கு மீட்டிங்லே...அதான் காலேஜ் சீக்கிரம் விட்டாங்க என வாட்ச் மேன் கூற...

போச்சி...அப்ப எங்க பஸ் என சந்தியா கேட்க...பஸ் எல்லாம் 12 மணிக்கே போயிடுச்சே... காலைலயே எல்லோருக்கும் தெரியுமே...உங்களுக்கு தெரியாதா தம்பி என வாட்ச் மேன் கேட்க...இல்லைனா நாங்க பார்த்துக்குறோம் என அர்ஜூன் கூறினான்...

இப்ப என்ன பன்றது என ப்ரஸி கேட்க பஸ் ஸ்டாண்ட்க்கு தான் போனும் என ஆஜித் கூற...

ஆனால், வீட்டில திட்டுவாங்களே என சுதாவும் சந்தியாவும் புலம்ப... நாங்க வரோம்..உங்க வீட்டுக்கு என ப்ரவீன் கூற...

கேர்ள்ஸும் வந்தா ப்ராப்ளம் வராது என சந்தியா கூறவும்...ஹும்...அப்ப எல்லோரும் போவோம் என அர்ஜூன் கூற...

ஹேய்...நான் வரல என மரியம் பின்வாங்க..
ப்ளீஸ் டி...வா என எல்லோரும் மாற்றி மாற்றி கூப்பிட என்னை புரிஞ்சிக்க டி... உங்களுக்காக தான் நான் வெளியே வந்தேன்... இப்ப உங்க வீட்டுக்கு வர்ரதுலாம் சரி வராது...என் நிலமைல இருந்து யோசிச்சு பாருங்க என மரியம் கூற..

சரி...சரி...மரியம் நீ ஹாஸ்டல்க்கு போ...நாங்க இவங்களை விட்டுட்டு வர்ரோம் என கூறி மற்ற அனைவர்களும் சென்றனர்..
.
.
.
ப்ச்ச்...என்ன மீட்டிங் ஹாஸ்டல் பக்கத்தில நடக்குது...இப்ப என்ன பன்றது, எப்படி ஹாஸ்டல்க்குள்ள போறது என புலம்பியபடி இருந்தவள் மற்றொரு பக்கம்
சென்று பேசாம இந்த கம்பி மேல ஏறி உள்ள குதிச்சிருவோமா என நினைத்தவள் கம்பியில் ஏறி உள்ளே குதிக்க போக...எத்தனை நாளா நடக்குது இது என்றபடி ஒருவர் வந்தார்.
.
.

அவர்களின் கல்லூயில் இருந்து பேருந்து நிலையத்திர்க்கு சந்தோஷமாக பேசிய படி நடந்து சென்றவர்கள்... சிறிது நேரம் காத்திருப்புக்கு பின் மன்னடி செல்லும் பேருந்து வர அதில் அனைவரும் ஏறி 45 நிமிடங்களில் வீட்டிர்க்கு வந்து கொண்டிருந்தனர்..

வரும் வழியில் பேசிக் கொண்டு வந்த படி அங்கே கிடந்த மாட்டு சானத்தை கவனிக்காமல் காலை வைத்த ப்ரவீன் வழுக்கி விழ போக பின்னால் வந்த சந்தியா தாங்கி பிடித்தாள்...

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro