Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

நிறம் மாற காதல்

அழகான இரவு நேரம்!!
மழை தரும் கார்காலம்!!

காற்றில் எங்கும் மண்வாசம் வீசும்...
ஒரு காதல் பற்றி இக்கவிதை பேசும்...

கொட்டும் அந்த மழையில்
ஓர் ஓரமாய் நின்று கொண்டிருந்தேன்
தூரத்தில் ஒரு மின்னல்கீற்று
கையில் குடையுடன்
கண்களில் காதலுடன்
எனை நெருங்கி வந்தது...!

வானவில் போன்று ஓர் பெண்!!!

எனதருகில் வந்ததும் அசந்து போனேன்
அவள் அழகை கண்டு மயங்கி போனேன்

என் கைப்பிடித்து
வா என்றாள் ஆசையாய்
நானும் சென்றேன் அவளுடன்
கொண்டேன் காதலும்...!

பாலைவனம் போல் வறண்டு கிடந்த
என் மனதில் அன்று அடமழை...

என்விரல் பிடித்து அவள் செல்லும் சாலை
இரவில் மட்டும் பூக்கும் விண்மீன்களின் பூஞ்சோலை...!

அவள் காதில் மெல்ல...
என் காதலை சொல்ல...

அவள் இதழோரம் புன்னகை கொண்டு
என் மனதை வென்றாள்!!!
தலை குணிந்து நாணம் கொண்டு
அந்த நிலவை கொன்றாள்!!!

வான் சிந்தும் மழையில்
நனைந்தது இரு உடல்கள் மட்டுமில்லை
இரு மனங்களும் தான்!!!

மண்ணில் விழும் மழைத்துளி போல்
அவளிடம் விழுந்துவிட்டேன் கவித்துளியாய்!!!

அவளும்! நானும்!
வானும்,நிலவும்!
அவளும்! நானும்!
இடியும்,மின்னலும்!
அவளும்! நானும்!
மழையும்,மேகமும்!
அவளும்! நானும்!
உடலும்,உயிரும்!
அவளும்! நானும்!
காதலும்,வாழ்க்கையும்!

அவள் கைவிரல் பிடித்து...
அவள் தோள் சாய்ந்து...
என் வாழ்நாள் முழுவதும்
காதல் எனும் பாதையில் பயணிக்க
ஆசை கொள்பவனாக

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro