!! 6 !!
இது கல்யாண வீடா இல்லை கண்பியூஷன் வீடா தெரியலையே..என்கிற குழப்பத்துடன்.. ஷன்வி.. வேடிக்கை பார்க்க.. .
அப்போது தான் அனிதாவின் தாயார். சீதா விடம் அது சரி இல்லை.. இது சரி இல்லை என்று ஒவ்வரு விஷயத்துக்கும் குறை சொல்லி கொண்டு இருந்தாள் ..
இதையும் ஒன்று விடாமல் அங்க வந்த ஷ்னவி பார்த்து கொண்டு இது என்ன டா கொடுமையா இருக்கு.. இவங்க இஷ்டப்பட்டு நடக்கிற கல்யாணமா இது.. ஒரு பெரியவங்கனு மரியாதை கூட இல்லாம இப்பிடி நடந்துக்கிறாங்க.. என்னமோ தப்பா இருக்கே..
ஒரு வேலை நம்ம கற்பனையா இருக்குமோ.. [ ரொம்ப யோசிக்காத ஷன் வி …என தன்னை சமாதானம் செய்த படி.. வேலையே பார்த்தாள்.. ஆனால் அவளது முழு கவனம்..இங்க நடந்து கொண்டு இருக்கும் கண்ணை மூச்சி ஆட்டத்தில் தான் இருந்தது.. . ]
அனிதா.. சகுந்தலாவிடம் அம்மா எதாவுது பண்ணேன்.. நான் அப்போவே சொன்னேன்.. இது எல்லாம் நமக்கு சரியா வராது..எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கல இந்த ஏற்பாடு..
ஏண்டி சும்மா இரேன்.. உங்க அண்ணன் .கல்யாணம்.வரைக்காச்சும் பொறுத்துக்கோ டி..
முடியாது… ம்மா..
டி.. அப்போ உங்க அண்ணன் கல்யாணம்
அம்மா உனக்கு என்ன இப்போ உன் மகனுக்கு கல்யாணம் நடக்கணும். அது தானே.. பொண்ணு ரெடியா இருக்கு ம்மா.. இவளை விட பெரிய.. இடம்… அதான் .உனக்கு சரின்னா சொல்லு நானே பொன்னு வீட்டுல பேசுறேன் … நீ சரின்னு மட்டும் சொல்லும்மா ..பிலீஸ்
என்ன டி சொல்லுற ..பெரிய இடமா ..
ஆமா அம்மா அவனுக்கு பெரிய பெரிய பிசினெஸ் எல்லாம் சென்னைல இருக்கு.. ..அவனும்..சொந்தமா படிச்சுட்டே பிசினெஸ் பண்ணுறான். ம்மா.
என்னது.. அவ்வளோ பெரிய இடமா டி..
ஆமா அம்மா…
இதை இப்போ வந்து சொல்லுறியே டி.. முன்னவே சொல்லி இருக்க வேண்டியது தானே..
அதான் இப்போ சொல்லிட்டேனே ம்மா.. நீ ஏதாவுது பண்ணு..
ஹான் அம்மா நீ சங்கீத நிட்சயம் மட்டும் தள்ளி போடு.. மத்த நான் பார்த்துகிறேன் .. ம்மா…
சரி சரி என சுற்றி முற்றி பார்த்துவிட்டு.. ரொம்ப நேரம் இங்க நிக்கிறோம் டி.. வா யாராவுது பார்த்த.. சந்தேகம் வந்துற போகுது…
என சந்தகுந்தலா இந்த வார்த்தையே சொல்லி முடிக்க ஷன் வி வர சரியாக இருந்தது // .. ” என்னது சந்தேகமா.. என்ன சந்தேகம் இங்க இவங்க ரெண்டு பெரும் என்ன பண்ணுறாங்க.. என யோசித்த படி திரும்ப. அருண் மேல மொத்த சரியாக இருந்து.. ..
அம்மா… என அவன் அலற..
ஐயோ.. நீங்களா…
இடித்ததில் வலி எடுக்க தன் நெஞ்சை நீவி விட்டுக்கொண்டே
ஹ்ம்ம் ..பார்த்து வர மாட்டியா.. இங்க என்ன பண்ணுற..
அது வந்து.. என அவள் இவனுக்கு எப்படி என்ன பதில் சொல்லுறது... என யோசிக்க..
இந்த வந்து போய் எல்லாம் வேண்டாம்.. எதுக்கு இங்க வந்த அதை சொல்லு..
இந்த தட்ட.. எடுத்துட்டு போக வந்தேன்.ஆனா உங்க மேல . சாரி வெரி சாரி ஆமா நீங்க இங்க என்ன பண்ணுறீங்க.. என்று அவனை பார்த்து கேட்க..
ஆ.. ..போன் பேச வந்தேன்..என அவனும் சமாளித்தான்...
அப்பிடி சொன்னவனை முகத்தை உற்று பார்த்து விட்டு..
அப்பிடியா..எனக்கு என்னமோ இங்க யாரோ என்னமோ பேசுறத என்ன பேசுறாங்கன்னு கண்டுபிடிக்க வந்திங்களோ நினச்சேன்..என சொல்ல..
அருண் ” இவ இவளுக்கு எப்பிடி தெரியும்.ஒரு வேலை போட்டு வாங்குறாலோ..இவ கிட்ட கொஞ்சம் உஷாரா இருக்கணும் போல..என்று நினைத்த படி.. ‘ அப்பிடி எல்லாம் ஏதும் இல்லை.. நீ முதல கிளம்பு இங்க இருந்து..
ஹலோ சார் கோப படாதீங்க சும்மா தான் கேட்டேன்.. யு கேரி அன்.. .என சொல்லிவிட்டு அப்பிடியே நிற்க..
அவள் இன்னும் போகாள் இருபத்தை பார்த்து... அவன்... இன்னும் என்ன..
கொஞ்சம் வழி விட்டா நான் போவேன் இப்பிடி நந்தி மாதிரி நின்னா நான் எப்பிடி போறதாம் .. நான் என்ன ஆவியா. அப்பிடியே. போறதுக்கு .. அவளது கேள்வியில்..
உனக்கு அந்த ஆவியே எவ்வளவோ மேல் பொல.. என அவன் முனுமுனுக..
என்ன என்ன சொன்னிங்க.. அவள் மீண்டும் அவனுடன் சண்டைக்கு கிளம்பிவிட..
ஸ்ஸ்ஸ். ஓன்னுமில்லை மா நீ போ..
ஹ்ம்ம் அது. என்று சங்கீதாவை தேடி சென்றுவிட்டாள்….
எப்பா ஊப்ஸ் என்னமா வாய் பேசுறா.என அவள் சென்ற திசையே பார்த்த படி… தான் வந்த வேலையே நினைத்து பார்த்து தான்.. . தனக்கு போன் வந்தது என சத்தத்தில் அங்கே பேச முடியாது என்று இங்க வந்த பேச இருந்தவன்க்கு அப்போ தான்.. சகுந்தலாவிடம் அனிதா பேசியது காதில் விழுந்தது.. எதை பற்றி பேசுகிறார்கள் என மேலும் காதலி தீட்டி கொண்டு கேட்க.. அப்போது தான் அனிதா தான் இடம் பழகியதின் நோக்கம் புரிந்தது.. ஒரு பெண் இந்த அளவிற்கு போக கூடுமா என்று இப்போதான் அருணுக்கு புரிந்தது. இந்த அளவிற்கு. ஒரு ஏமாளியாக இருந்து இருக்கிறறோமே என்று அவனுக்கு தோன்றியது.கடந்த ஒரு வாரத்தில் தான் வாழ்க்கையில் எவ்வளோ . வலிகள் இவளால் வந்துவிட்டது. இனி வரப்போவது எத்தனையோ.. என்று.தோன்ற இது வேலைக்கு ஆகாது இது எல்லாத்துக்கும் ஒரு முடிவு செய்து ஆகணும்.. நம்மள பத்தி யோசிச்சு.. சங்கீ வாழ்க்கையே.வேற வீணா ஆகிட கூடாது. இதுக்கு இன்னைக்கே பேசி ஒரு முடிவுக்கு வந்துவிடனும்.. என வேகமாய் சென்று தந்தையே தேட..
அங்கே எல்லாரும். கிளம்பி சென்று.. இருக்க..
என்னது இது.. அதுக்குள்ள கிளம்பிட்டாங்க.. என யோசித்துக்கொண்டு இருக்கும் பொது தான்..
உள்ளே இருந்து ஏதோ கீழே விழும் சத்தம் கேட்டது..
என்ன டா இது சத்தம் வருது.. என்று சத்தம் வந்த அறையே நோக்கி போக. அங்கே
தாம்பூலம் தட்டை.. எடுத்து வந்த.. ஷன் வி. எதிரே சீதா வேகமாய் வந்து.
ம்மா. சீக்கிரம் கிளம்பு.. நேரம் ஆச்சு எல்லாரும் கோவிலுக்கு வந்துருவாங்க..
சரிங்க ஆண்ட்டி.. என சொல்லிவிட்டு சங்கீதாவை தேடி போய்
டி சாங்கி கிளம்பு . நேரம் ஆச்சாம்..
இதோ கிளம்பிட்டேன் டி..
என தோழிகள் இருவரும்.. வேனில் எற போக அப்போது தான்.. நந்தன் இடம்..
எங்க. அருண் எங்க..
அவன் என்ன சின்ன புள்ளையா வந்துருவான்.. நீங்க எல்லாரும் கிளம்புங்க.. என அவர் சொல்லிவிட
இதுக்கு மேல் என்ன பேச என்று சீதாவும் அமைதியாக கிளம்பினார்..
கொஞ்சம் தூரம் தான் வேன் சென்று இருக்க.
சீதா.. தன் கணவர் இடம்.. ” ஏங்க.. அந்த தட்டு.. கொடுக்க வேண்டியவர்களுக்கு எல்லாம் எடுத்துக்கிட்டிங்களா.. என கேட்க..”
நந்தன்…’ என்ன ம்மா இப்போ போய் சொல்லுற நான் நீ எடுத்து வச்சு இருப்பேன்னு நினச்சேன்..
” நான் நீங்க எடுத்து.. வச்சு இருப்பிங்கன்னு .. என இருவரும்.. சொல்ல. ஷன்விக்கா... போச்சு டா ஏன் சங்கீ ரெண்டும் பெரும் இப்பிடி சண்டை போட்டுகிறாங்க. சின்ன புள்ளத்தனமா இருக்கே.. “
” ஏய் ச்சு சும்மா இரு டி அப்பா காதுல விழுந்தது நாம தொலைஞ்சோம்.. “
” சரி சரி . ஆமா நீ ஏன் இப்பிடி வெறும் கைல சப்பாத்தி போட்டுட்டு இருக்க.. “
” ம்ம் மாரி அம்மன் கோவிலுக்கு வேண்டுதல் “
” ஓஓஓஓ வேண்டுதலா . அப்போ கரெக்ட்டா பண்ணு...
” எரும மாடே இப்போ அம்மா சொன்ன திங்ஸ் எல்லாம் எப்பிடி யார் போய் எடுத்தது வருவா அண்ணா போன் கூட நோட் ரீச்சபிள் வருது .. “
” இதுக்கு எதுக்கும்மா நீ டென்ஷன் ஆகுற நான் போய் எடுத்துட்டு வரேன் ” சொன்ன மட்டும் இல்லாம. சீதாவிடம் ” ஆண்ட்டி நான் வீட்டுக்கு போய் எல்லாம் எடுத்துட்டு வரேன் நீங்க எல்லாரும் முன்னாடி கோவிலுக்கு போங்க.”
” நீ எப்பிடி ம்மா. “
” அது எல்லாம் நான் பார்த்துகிறேன் ஆண்ட்டி பயம் வேண்டாம்.” என ஷன் வி பாதி வழியில் இறங்கி வீட்டுக்கு சென்று சீதா சொல்லிவிட்ட அணைத்த பொருட்களையும் எடுத்து வைக்கும் பொது தான்..
அனிதாவின் சகோதரன். அவளை பின்னால் இருந்து அணைத்தான்..
” ஹே யாரது.. என ஷவி அலற.. “
” ஸ்ஸ் நான் தான்.. விவேக்.. “
” அவன் இடம் இருந்து திமிறிய படி. ஏய்.. நான் ஒன்னும் சங்கீதா கிடையாது.. “
” தெரியுமே.. என அவன் வேளையில்.. முன்னேற..
ஷணவிக்கோ. உடம்பில் நெருப்பை அள்ளி கொட்டியது போல். இருந்தது.. அவனிடம் . சொன்ன கேளு.. ‘ நீ நினைக்கிற மாதிரி பொண்ணு நான் கிடையாது. விடு. என்ன. ‘
” இதோ பாருடா . நான் உன்ன தப்பா சொல்லவே இல்லையேம்மா..மேலும் சில வார்த்தைகள் பேச..
” ச்சீ. இப்பிடி பேச உனக்கு வெட்கமா இல்லை.. விடு என்ன. ” அவனோட போராட..மனதுக்குள் இவன் இடத்தில எப்பிடி தப்பிக்க. என. .ஷன் வி யோசித்தாள்
என்ன சத்தம். எங்க இருந்து வருது என போன் பேசிவிட்டு அருண் உள்ளேய வந்து பார்த்த அவனோ அப்பிடியே அதிர்ந்து நின்று விட்டான்..
அங்க கண்ட காட்சியில்.. அடுத்து என்ன செய்யே வேண்டும் என .தோன்றாமல். அப்பிடியே அவன் நிற்க.
ஷன் வி பொறுத்து போதும் என. சுற்றிலும் பார்த்தாள். அப்போது தான் அங்கே ஒரு கூர்மையான கத்தி தென் பட்டதும்.. விவேக்கு தெரியாமல் அதை எடுத்துவிட்டு ‘ .. கடைசியாக..கேட்குறேன். என்ன விட போறியா இல்லையா..’
” முடியாது டி.. என்ன யாராவுது உன்ன காப்பாத்த கூப்பிட போறியா என்ன . யாருமே இங்க இல்லை நீ உன் சக்தியே வேஸ்ட் பண்ணாதே. நான் சொல்லுறது கேளு.. இல்லை .”
அவ்வளோ தான். அவ்வளோ நேரம் பொறுமையாக அவனை எச்சரித்தவள்... அவனது பேச்சில்.. என்ன நான் நீ சொல்லுறத கேட்கணுமா. நடக்காது டா. என அவன் சுதாரிக்கும் முன். ஷன் வி கத்தியே சரியாக அவன் இடுப்பு பகுதியில் குத்தி விட்டாள்
ஆஆ .. ஏய் என்ன டி பண்ணின.. என அவன் வலியில் சுருண்டு விழுந்தான்.. . “
என்ன தைரியம் இருக்கணும் உனக்கு இப்பிடி நடந்துக்க என் கிட்ட. என மீண்டும் கத்தியே கொண்டு குத்த போக..
விவேக். மேலும் அலறியே விட்டான் வேண்டாம் என்ன விட்டுரு.. என் அவள் இடம் கெஞ்ச.
நானும் இப்பிடி தானே டா கேட்டேன் அப்போ உனக்கு உரைக்கலையே. இப்போ மட்டும் நீ சொல்லுறத நான் கேட்கணுமா. பொண்ணுங்கன்னா உனக்கு அவளோ இலக்கரமா போச்சா.. “
” வே.. வேண்டாம் ..என ஒன்னும் பண்ணிராதே.. உன் பிரென்ட் சங்கீதாவுக்காக என்ன விட்டுரு.. என்று அவன் கேட்க.
” ஓ இன்னும் ஒனக்கு என் சங்கீ வேணுமா. டூ லேட் மிஸ்டர் விவேக். உன் போன் எடு.. என அவனை மிரட்ட.
தான் உயிர் தப்பினால் போதும் என அவன் அவள் சொல்ல சொல்ல அப்பிடியே செய்தான்..
போன் எடுத்து உன் வீட்டுக்கு பெரியவங்களுக்கு போட்டு நான் சொல்லுற மாதிரி சொல்லு. என்று சொல்ல.
விவேக். அந்த வலி உடன். தான் அம்மாவிற்கு அழைத்தான்.
சொல்லுடா விவேக் எங்க இருக்க. என சகுந்தலா கேட்க.
அம்மா இந்த நிச்சையம் நடக்காது என சொல்ல
என்ன டா சொல்லுற.. ஏன் குரல் ஒரு மாதிரி இருக்கு எங்க இருக்க மோதலை சொல்லு
அம்மா இப்போ எனக்கு பேச நேரம் இல்லை. எனக்கு சங்கீதாவை பிடிக்கல எப்பிடியா இந்த நிச்சயம் நிறுத்தறது தெரியாம. தற்கொலை முயற்சி என சொல்லி முடிக்குமுன்பே சகுந்தலா ” அய்யயோ.. தம்பி அப்பிடி ஏதும் பண்ணிராத டா. என அலற.அதற்குள் போன் கட் ஆகிவிட்டது. ” ஹலோ ஹலோ. என்று சகுந்தலா கத்தி கொண்டு இருந்தாள் …
என்ன ம்மா ஆச்சு என அனிதாவும். சகுந்தலாவின் கணவரும் வந்து சேர்ந்தார்கள்.. நந்தன் மற்றும் சீதாவும் என்ன ஆச்சு என்று பதிய படி வந்து சேர..
சகுந்தலா.. ” அண்ணா என் பயன் தற்கொலை பண்ணிக்க போறானாமா “ என அவர் கதற ஆரம்பிக்க...
என்ன து என்னம்மா சொல்லுற , நந்தன் மற்றும் சீத மேலும் பதற ஆரம்பித்தனர்....
ஆமா அவனுக்கு உன்வீட்டு.. பெண்ணா பிடிக்கலையாமா நான் என்ன பண்ணுவேன். இப்போ எங்கே இருக்கானு கூட தெரியலையே.. எனக்கு இது தான் சமயம் என்று சகுந்தலா வேகமாக இந்த திருமண நிட்சையத்தை நிறுத்த செயல் பட்டாள் எனக்கு அப்போவே தெரியும் அண்ணா அவன் முகமே கல்யாண பேச்சு ஆரம்பிச்ச நாள் இருந்தே சரி இல்லை.. இன்னைக்கு இப்பிடி பண்ணிட்டானே. . என புலம்ப..
நந்தனோ.. அப்பிடியே அதிரிச்சியில் உறைந்து போய் நின்றுவிட்டார்.. இது என்னடா புது கதை என்று..
சீதாவின் நிலையோ அத விட மோசமாய் போய் விட்டது.. தான் பெண்ணின் வாழ்க்கை இனி என்ன அக போகிறது என்று தோன்ற
இங்கே..
விவேக் தரையில்.. ஹாஸ்பிடல். ஆம்புலன்ஸ் . என வலியில் சுருண்ட படி. முனங்க.. அவனை பார்த்து கொண்டு இருந்த ஷவிக்கோ இவன் பிழைக்க வேண்டுமா. என்கிற எண்ணத்துடன்.. அவன் வலியில் துடிப்பதை வெறித்து பார்த்த படி அவள் நிற்க..
அவனோ. ” ஏய்.. நான் செத்துருவேன் டி யாராவுது கூப்பிட்டு என முனங்க.. “
” இப்பிடி தானே எனக்கும் இருந்து இருக்கும் கோபத்தில் கேட்க.. அப்போது தான் உள்ளேய யாரோ வருவது போல். இருக்க ஷன்வி திடுக்கிட்டு போய் திரும்பி பார்த்தாள் அங்கே வந்ததோ அருண்..
அதுவரையில் கோபத்தின் உச்சியில் இருந்தால் இவனை கண்டதும் எங்கே தன்னை தவறாக நினைத்து விடுவானோ என்கிற எண்ணத்தில்.. அவளையும் அறையாமல் கண்ணீர் வடியே நின்றாள்..
அவளையும் கீழே கிடந்த விவேக்கையும் மாறி மாறி பார்த்த படி மெல்ல நடந்து வந்தான்.. அருண்.
விவேக் அருணை பார்த்து ஏதோ சொல்ல போக. அவன் அருகில் மண்டியிட்டு. ஒரு முறை பார்த்துவிட்டு ஓங்கி அரை விட்டான்..
பிறகு ஷன்விக்காவை பார்த்து.. ஆம்புலன்ஸ்க்கு போன் பன்னு ஷவி
அதற்க்கு அப்புறம் எல்லாம் நடந்தது.. வேகமாய் அம்புலன்ஸ் வர.. அருண் வந்தவர்களுக்கு பாதி போய் மீதி உண்மையே சொல்லி.. விவேக்கை.. ஹோச்பிடலுக்கு அனுப்பி வைத்துவிட்டு உள்ளே வர.. ஷன் வி அதே இடத்தில நின்று இருந்தாள் அவளை பார்த்து ஏதோ சொல்ல போக
அதற்குள் அவள் . இங்க என்ன நடந்தது நீங்க . என. வாய்க்கு வந்ததை உளற.
அருண். ” ஹ்ம் போதும் ஷவி என்ன நடந்தது எனக்கு தெரியும் நீ ஏதும் சொல்ல வேண்டாம். கிளம்பு கோவிலுக்கு போகலாம் அங்கே என்ன நிலவரமோ.. சீக்கிரம்.”
” உங்களுக்கு என் மேல கோபம் இல்லையா.. “
” உண்மையே சொல்லனும்னா நான் செய்யே வேண்டியது தான் நீ செய்து இருக்க. அதுனால நீ வறுத்த பட வேண்டாம் கிளம்பு."
” ஒரு நிமிஷம். நான் குளிச்சுட்டு வந்துறேன்.. டிரஸ் எல்லாம் ரத்தம். என சொல்ல..”
” ஓகே நான் கிழ வெயிட் பண்ணுறேன் வந்துரு என சென்றுவிட்டான்..”
ஷன் வி , அப்பிடியே அங்கே கிடந்த கட்டிலில் சோர்ந்து போய் அமர்ந்துவிட்டால்.. அவனால் நடந்ததை ஜீரணிக்க முடியவில்லை.. என்னவெல்லாம் பேசி விட்டான் ராஸ்கல். பிறகு அருண் சொன்னது யாபகம் வர. வேகமாய் சென்று குளித்துவிட்டு. கிளம்பி கீழே வந்தாள் .
” வா போகலாமா “
” ம்ம். “
” அப்புறம் இங்க நடந்தது யாருக்கும் தெரிய வேண்டாம் ஏதும் கேட்டா நான் பதில் சொல்லிக்கிறேன்.”
” அதுக்கும் சரி என்றே தலை அசைத்து வைத்தாள் “
” இருவரும் கோவிலுக்கு கிளம்பி சென்றார்கள்.. “
அங்கே சகுந்தலா. சங்கீதா மனதை. இது தான் சமயம்.. என்று. குத்தி.. கிழித்து கொண்டு இருந்தால்
இனி அருணின் முடிவு என்ன.. சங்கீதாவின் நிலை என்ன என்று காலம் தான் பதில் சொல்ல வேண்டும்..
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro