Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

1


அவள் அழகைப் பாட ஒரு மொழி இல்லையே
அளந்து பார்க்க பல விழி இல்லையே
என்ன இருந்த போதும் அவள் எனதில்லையே
மறந்து போ என் மனமே

என்கிற பாடல் காரில்.. ப்ளேயரில் பாடிக்கொண்டு வர.. அந்த பாடலில் வர வரி போல் தான் தன் மன நிலைமையும். இருக்கிறது என்று தோன்றியது அவனுக்கு , காதல் தனக்கு இவ்வளோ வலி வேதனையும் தரும் என்று தெரிந்து இருந்தால்... அதை பற்றி நினைத்து கூட பார்த்து இருந்து இருக்க மாட்டேனோ..என்னவோ... இதற்கு தான் விதி தன்னை இந்த ஊருக்கு

அழைத்து வந்ததோ.. என ஆயிரம்.. கேள்வி உடன் தனது ஊரான

மதுரையே நோக்கி சென்று கொண்டு இருந்தான்... அவன்.. ..

பாதி தூரம் தான் சென்று இருப்பான்...அப்போது பார்த்து..டோம் .ஸ்ஸ்ஸ்ஸ்.. ஒரு பெரியே சத்தம் கேட்க அருண் வேகமாய் தனது காரை சாலை ஓரத்தில் நிறுத்தினான்.. . " ஹ்ம்ம் ச்சு என்ன ஆச்சு இப்போ.. என அவசரமாய்.. இறங்கி பார்க்க.. அங்கே அவனது சார் டயர் பஞ்சர் ஆகி அவனை பார்த்து இதற்க்கு நான் பொறுப்பு இல்லையாப்பா என்று பரிதபம்மாய் விழித்தது. சீட் .. இன்னைக்கு பொழுது எனக்கு விடிஞ்சதே சரி இல்லை எல்லாம் சேர்ந்து இப்பிடி சதி பண்ணுதே என தனக்கு தானே முனங்கியே படி. கார் . டிக்கியே திறந்து வேற டயர் எடுக்க போக அதுவும் இல்லாமல் அவனை மேலும் கடுப்பு ஏத்தியது..

சுத்தம்.. ஸ்பேர் டயர் எடுத்து வைக்கவும் மறந்துடேனா இனி ஊருக்கு போன மாதிரி தான் இனி நேரம் கடத்துவது சரி இல்லை என்று அவன் தனது நண்பன் ஒருவனை அழைத்து விரவரம் சொல்ல.. அவனோ.. " சரி சரி டென்ஷன் ஆகாத. நீ காரை லாக் பண்ணிட்டு பக்கத்துல பஸ் ஸ்டாப் இல்லேன்னா ஆட்டோ பிடிச்சு.. ஊருக்கு கிளம்பு உன் கார் கீ ஓட டுப்ளிகேட்.. என்கிட்ட ஒன்னு இருக்கு நான் சரி செய்து உன் என்கஜ்மேன்ட்கு வரும் பொது எடுத்துட்டு வரேன் சரியா இப்போ நீ கிளம்பு நேரம் ஆச்சு..

நிச்சயதார்த்தம் என்ற வார்த்தை கேட்ட உடன் அவன் முகம் இருண்டு போனது.. நண்பன் அடுத்து பேசியது ஏதும் அருண் காதில் விழாமலே போக.... .. . அவனின் அமைதி உணர்ந்து..

ஹலோ ,, ஹலோ அருண் லைன்ல இருக்கியா..என அருனின் நண்பன் கத்த ..

அதில் சுதாரித்த அருண்.. " ஹ்ம்ம்இருக்கேன் சரி நீ வா நான் கிளம்புறேன்.. என்று போனை கட் செய்துவிட்டு சுற்றிலும் பார்க்க.. சற்று தூரத்தில் பஸ் ஸ்டாப் இருப்பது தெரியே.. அவனோ..மனதுக்குள்.. கொஞ்சம் தூரம் தானே..நடந்தே போயிடலாம்..என அவன் நடந்து... .. .. அருகில் இருந்த பஸ் நிலையத்தை.நெருங்க. [ அப்போது... தான்.. அவனை.. ஒரு உருவம் மோதி .. அலறி நின்றது.. . கடவுளே என்ன காப்பாத்து..


காக்க காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியினில் நோக்க தாக்க தாக்க தடையறத் தாக்க .என்று இருக்க கண்களை மூடி கொண்டு அந்த பெண் பயத்தில் நடுங்கி கொண்டு கந்த சஷ்டி கவசத்தை. முனுமுனுக்க... அவள் பின்னால் வந்த அந்த இருவர் இவனை பார்த்து.. சற்று தூரதில் தயங்கி நின்றார்கள்..

அவனோ.. யாரு இவ.. இப்பிடி இந்த நேரத்தில் இங்க என்ன பண்ணுறா என அவள் பின்னால் பார்க்க .. அங்கே இவனை கண்டதும். காணாதது போல்.. அந்த இருவர் அவர்களுக்குளே பேசியே படி நின்றார்கள்.

இதுக்கு தானா.... இப்பிடி கண்ணா மூடிகிட்டு நின்னு கந்த சஷ்டி கவசம் சொன்ன மட்டும்.. இவங்க முருகர் மயில் எடுத்துட்டு.. வந்து இவிங்க கிட்ட இருந்து காப்பாத்துவாரமா நல்ல ஐடியா தான் ஏனோ அவளது இந்த செய்யல் . அவனின் இறுக்கத்தை கொஞ்சம் தளர செய்தது போல் இருக்க.. லேசாக சிரித்த படி.. ஹலோ.. கொஞ்சம் கண்ணை திறங்க , உங்க முருக கடவுள் இப்போ கொஞ்சம் பிஸி அவராள இப்போ வர முடியாதாம்.. என சொல்ல..அவனின் குரல் கேட்டு.. அவளுக்கோ தூக்கி வாரி போட்டது...

இது யாரு டா இன்னும் ஒரு முனாவது குரல்.. அப்போ முணு பேரா பெருமாளே... என மனதுக்குள் அலற.. ஆனா

அவனோ.. அவள் என்ன செய்ய போகிறாள்.. என்று தன் கைகளை கட்டி கொண்டு.. பார்க்க.ஆரம்பிக்க... அவளோ.. இன்னைக்கு என்ன ஆனாலும் சரி ஒரு கை பார்த்துர வேண்டியது தான்...என மனதில் தைரியத்தை திரட்டி... .. தன் மூச்சை நல்லா இழுத்து.. விட்ட படி... முதலில் ஒற்றை கண்ணை திறந்து பார்த்தாள்.. .


அவளில் இந்த செயல்.. அவ்வளோ நேரம்.

ஹாஹா .. அது சரி.. என தன் வையிற்றை பிடித்து கொண்டு அவன் சிரிக்க ஆரம்பிக்க அவளுக்கு தான் வெட்கமாய் போய் விட்டது.. அர்த்தராத்தியில் பெயர் தெரியாத ஒருவன் அருகில் நின்று தான் சிறுபிள்ளை தனமாக நடந்து கொள்ளுவதை நினைத்து. அவனுள் மெல்ல கோபம் எட்டி பார்க்க..

இப்போ ஏன் இப்பிடி சிரிகிரிங்க.

" ம் இப்போ நான் உனக்கு தெரிஞ்சவன் மாதிரி.. காட்டிக்கோ "

" ஏன் என்பது அவனை பார்க்க.. "

" அவளின் கேள்வி புரிந்து.., ஏன்னா உன் பின்னாடி வந்த நாதாரிங்க இன்னும் போகாம அங்கேயே தான் நிக்கிறானுங்க அதான் .. டக்குனு திரும்பி பார்க்காத என்று அவன் சொல்லிமுடிக்கும் முன்..அவள் திரும்பி பார்க்க ... அவன் தலையில் அடித்து கொண்டு அடிக்குரலில் சீறினான்

உன்னை தான் திரும்பாத சொன்னேன்ல

அவள் திடுக்கிட்டு திரும்பி பார்க்க.. எங்க போகணும் சொல்லு நான் ஹெல்ப் பண்ணுறேன்..

தன்னை திட்டி விட்டானே என்கிற கோபத்தில்.. உங்கள மட்டும் நான் எப்பிடி நம்புறது..

பரவா இல்லை தெளிவா தான் இருக்க.. என்று தனது பர்சில் இருந்து அவனது கார்டு எடுத்து நீட்ட

அதை வாங்கி .. இத வச்சு நான் என்ன பண்றது நீங்களே வச்சுகோங்க உங்கள நம்புறேன்.. என அதை அவன் இடமே திருப்பி கொடுத்துவிட்டு.. அதோ.. அங்கே தெரியுது.. பாருங்க ஒரு பெரியே ப்ளெக்ஸ் அங்கே இருந்து இன்னும் கொஞ்சம் தூரம் நடக்கணும்.. சொன்னவளின் குரலில் கவலை இருக்க."

" போய்டலாம் ஆனா இந்த நேரத்துல இங்க என்ன பண்ணுற வெள்ளன வெடுக்குன்னு வீடு போய் சேர மாட்டியா "

" ஹ்ம்ம் நீங்க வேற ஏன் சார் கடுப்ப கிளப்புரிங்க. நான் நாலு மணிக்கே கிளம்பிட்டேன் என் ப்ரெண்ட் தான் பர்த்டே பார்ட்டின்னு அழைச்சுட்டு போயிட்டா அங்க நேரம் ஆகிபோச்சு என நடந்துகொண்டே அவனுக்கு சம்பவத்தை விளைக்கி சொல்லி கொண்டு இருந்தாள் .... அப்போது தான் இந்த ரெண்டு ப்ரஹச்பத்திங்க என்ன துரத்திகிட்டு வர.. நான் ஓடி வந்து...உங்க மேல மோதி அதுக்கு அப்புறம் தான் தெரியுமே உங்களுக்கு.. என சொல்லி முடித்தாள் ..

அதற்குள்.. ஹையா வீடு வந்துருச்சு.. என துள்ளி குதித்துவிட்டு அவனை பார்த்து நீங்களும் வாங்க சார் வீட்டுக்கு காபி டிபன் சாப்பிட்டு போகலாம்..

அவளது பேச்சில் அருண் அதிர்ந்து.. என்னது...உன் வீட்டுக்கா. அதுவும் இந்த நேரத்துலையா....

ஆமா சார் ஏன்.. அவளும் புரியாமல் கேட்க..

இவளுக்கு என்ன பைத்தியாமா..என்பது போல் அவளை ஒரு பார்வை பார்த்து.... இந்த நேரத்துல நான் உன்கூட வந்தா ..உங்க வீட்டுல உள்ளவங்க என்ன நினைபாங்க..

ஹ்ம்ம் இப்போ வந்தா . என்ன தப்பா ... எனக்கு ஹெல்ப் பண்ணினவர் தானே நான் சொல்லுவேன்.. என யோசித்தபடி.. அவன் இடமே என்ன நினைபாங்க... என கேட்டு வைக்க.

சரி தான்.. அவன் மீண்டும். இந்த அர்த்த ராத்திரியில் முன்பின் தெரியாத ஒருத்தர் அதுவும் ஆண்பிள்ளையே ஓட போய் நின்னா உன்னையும் என்னையும் தப்பா பேச மாட்டாங்க..

ஆமால நீங்க சொல்லுறது சரி தான்.. சார்.. ஆனா வெறும் தேங்க்ஸ் மட்டும் சொல்லுறது எனக்கு கஷ்டமா இருக்கே..

பரவாயில்லை. எனக்கும் நேரம் ஆச்சு.. நான் இப்பிடியே கிளம்புறேன்.. இனி நீயா .. . போயிடுவள என கேட்க...

" ஹ்ம்ம் அகைன் தேங்க்ஸ் சார்.. " என தன் நன்றியே சொல்லிவிட்டு.. தன் வீட்டை நோக்கி சென்றாள் ..

போகும் பொது அவன் செல்லுவதை திரும்பி பார்த்த படி சென்றாள் அவள்..

தன் வீட்டு வாசலில்.. நின்னு மீண்டும் ஒரு முறை திரும்பி பார்த்தாள் அவன் உருவும் அந்த கும் இருட்டில்.. புள்ளியாய் மறைந்துவிட்டு இருந்தது..

அதை பார்த்து..விட்டு வீட்டுக்கு வந்து ஒரு கப் காபி சாப்டுட்டு போய் இருக்கலாம் என தன் மனதுக்குள் முனுமுனுத்து விட்டு உள்ளே போக..

அங்க அவளனின் தாயார்.. கையில் சூலம் இல்லாத குறையாய்.. காளி அவதாரத்தில்.. நின்று கொண்டு இருந்தார். அதை பார்த்த.. ஷன்வி..

ஆகா செத்த டி.. ஷன்வி. இன்னைக்கி நீ செத்த.... என அவள் தாய் இடம் இருந்து எப்பிடி தப்பிப்பது என்று யோசித்த படி கேட்டை அடைத்துவிட்டு.. " அம்மா.."



******************* 

1 st epi pottuten..............  padichu sollunga eppidi irukunnu

D�j:d�0�ΓJ 

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro