Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

மாயம் செய்தாயோ - 13

வாரிச்சென்றாய் பெண்ணை பார்த்து நின்றேன் கண்ணை...
ஏது செய்தாய் என்னை கேட்டு நின்றேன் உன்னை...

லிரிக்: விவேகா.

அன்றைக்கு அவனின் அந்த விளக்கம் இல்லா முத்ததிற்கு பிறகு 1 வாரம் கடந்திருக்கும்…

அவன் நடவடிக்கைகளில் எந்த மாற்றமும் இல்லை என்னிடம் எப்போதும் பேசுவது போல் தான் பேசுகிறான்…

அவன் திரும்பவும் வீட்டுக்கு வராமல் என்னை அவோயிட் பண்ணுவதற்கு இது எவ்வளோவோ மேல் தான்

ஆனால் துறுதிஷ்ட வசமாக அன்று நடந்த சம்பவம் மாதிரி எந்த சம்பவமோ இல்லை அதற்கான அறிகுறியோ திரும்ப நடக்கவே இல்லை...

அவனிடம் அதை பற்றி பேசினால் திரும்ப அவன் அவோயிட் பண்ண ஆரம்பித்து விடுவான் என்று நான் அவனிடம் அதை பற்றி கேட்கவும் இல்லை...

ஆனால் இப்போ தெல்லாம் முத்தத்தின் ஞாபகம் வழக்கத்திற்கு அதிகமாக வந்து கொண்டே இருக்க...எனக்கு ஒரு பக்கம் எதிர்பார்ப்பும் மறுபக்கம் குழப்பமும் அதிகமாகி கொண்டே போனது…

“harry ஒருத்தன் எதுக்கு ஒரு பெண்ணை கிஸ் பண்ணிட்டு திரும்ப அவள் கிட்ட அதை பற்றி பேசாமலும்...அந்த மாதிரி எதுவும் நடக்காத மாதிரியும் நடிக்கணும்” கேன்டீனில் அமர்ந்து ப்ரொஜெக்ட்டிற்கு படம் வரைந்து கொண்டிருந்த தோழியிடம் நான் கேட்டக்க

அவளோ பேப்பரிலிருந்து கண் எடுக்காமல்…

“என்ன அடுத்த சீரியலா?” என்றுகேட்க நானோ அவசரத்தில்

“சொல்லு harry” என்றிட அவளோ வாயில் பென்சிலை வைத்து சற்று நேரம் யோசித்து விட்டு…

“ஒண்ணு அவனுக்கு கிஸ் புடிக்காமல் இருக்கணும் இல்லை அவளை பிடிக்காமல் இருக்கணும்...அதுவும் இல்லை என்றால் அவன் பன்னது தப்புன்னு நினைத்து அவன் guiltல இருக்கணும்” என்று அவள் கூறிட நானோ குழப்பத்துடன் அவளை பார்க்க அவளோ அந்த பேனாவை கீழே வைத்து விட்டு என் புறம் திரும்பி...

“you see…எனக்கு உன்னை புடிக்கல ஏதோ movemet of weakness ல பண்ணிட்டேன் guilt ...எனக்கு உன்னை பிடிச்சிருக்கு ஆனால் எனக்கு அல்ரெடி girlfriend இருக்கா guilt இல்லனா நான் secret gay நான் சும்மா  உன்னை வச்சி டெஸ்ட் பண்ணி பார்த்தேன் guilt…” அவளின் கடேசி வார்த்தைகளுக்கு அவள் கையில் ஒரு அடியை போட அவளோ…

“ஹலோ...நீ கேட்டே நான் சொன்னேன் shit happens ma” என்ற தோடு அவள் மீண்டும் வரைய ஆரம்பித்துவிட்டாள்...

என்ன gayaa? சிச்சி சான்ஸே இல்ல அதுவும் அவன் அன்றைக்கு கிஸ் பண்ண forceஅ பாத்தாள்….கண்டிப்பா இருக்காது…

காலையில் harry சொல்ல விளக்கத்தில் இருந்து அந்த முத்தத்தை பற்றி  கடேசியாக ஒரு கடினமான முடிவுக்கு வந்தேன்...கண்டிப்பாக அந்த gay கான்செப்ட் பத்தி நான் பேசல…

அவன் அன்றைக்கு கிஸ் பண்ணும்போது நிறுத்த சொன்னதையும் திரும்ப அதை பற்றி பேசாமல் இருப்பதையும் பார்த்தால் ரெண்டு விஷயம் மேட்ச் ஆகுது ஒண்ணு அவனுக்கு கிஸ் பிடிக்காததால் திரும்ப அதை பற்றி பேசாமல் இருக்கலாம் என்பது…

எனக்கு அது மேல எவ்வளோவு நம்பிக்கை இல்லை...அந்த கிஸ் எப்படி புடிக்காம இருக்கும்???....சான்ஸே இல்ல…

ஆனால் அது போனால் அடுத்த கான்செப்ட்...maybe என்னை பிடிக்காமல் இருக்கலாம்..

இல்லை என்றால்….இது தான் முக்கியமான கான்செப்ட்...most valuvable concept...அவன் இன்னும் அந்த கும்தாஜ் நினைப்பில்  இருப்பதனால் என்ன கிஸ் பண்ணிட்டு அவளுக்கு guilta feel பண்ணி இருக்கலாம்…

அப்படினா இன்னும் அவன் அவளை லவ் பண்ணறான்னு அர்த்தமா???

.

.

.

.

.

ஒரு வழியாக அந்த மேனேஜரிடம் என் லீவுக்கான காரணத்தை சொல்லி சமாளிப்பதற்குள் போதும் போதும் என்று ஆகி விட்டது…

அன்று அவரின் v.p வராததால் உன் வேலை தப்பித்ததென்று சொல்லி அந்த மேனஜர் என்னை அனுப்பி வைத்து விட்டார்…

என் மேஜையில் அமர்ந்த அந்த நேரத்தில் தான் மீண்டும் மாயாவின் குரல் கேட்டது,

“ஒரு வேலையையும் ஒழுங்கா பார்க்கிறது இல்லை...இவங்க நால நான் சார் கிட்ட பேச்சு வாங்க வேண்டி இருக்கு...ஏய் அஸ்மா எதுக்கு நீ druv technologies ல இருந்து வர்ற மைல்ஸ் எல்லாம் என் கிட்ட அனுப்புற உன்னால இப்போ நான் திட்டு வாங்க வேண்டியாதா போச்சி வேல தெரியாதவங்களை எல்லாம் என் கூட போட்டு கழுத்த அருக்குறாங்க” என்ற வாறு அவள் எப்போதும் போல ஒரு பிரச்சனையை கத்திக்கொண்டு வர எனக்கு மீண்டும் தலை வலி ஆரம்பமானது…

‘என்னுடைய வேளைல இவளை தவிர வேற எல்லாம் ஓகே...எப்போ பார்த்தாலும் எல்லாத்துக்கும் குறை சொல்லிக்கொண்டே இருப்பா’

“but மாயா அதை நான் உங்க கிட்ட தானே அனுப்புனேன்...நான் எப்போதும் v.p சார்க்கு direct மைல்ஸ் அனுப்புறதே இல்லையே” என்று நான் பொறுமையாய் கூற அவளோ முகத்தை இன்னும் சுருக்கி கொண்டு…

“போன தடவை சார் அதை ரிஜெக்ட் பண்ணிட்டாருன்னா உங்களுக்கு எதை அனுப்பனும் அனுப்ப கூடாதுன்னு தெரிஞ்சிருக்கணும் எல்லாத்தையும் உன் கிட்ட சொல்லிக்கிட்டிருக்க முடியாது”

“excuse me but சார் கூட வேலை பார்ப்பது நான் இல்லை நீங்க தான்… how would I have known without your information”

“ ஹலோ நான் உன் சீனியர்...ஞாபகம் வச்சிக்க...நான் நினைச்சா உன்னை வேலையை விட்டே தூக்க முடியும்…”

“so கடைசி வரைக்கும் அது உன்னோட தப்புன்னு ஒத்துக்க போறதில்லை” என்ற என்னை அந்த அருவருப்புடன் பார்த்து விட்டு

“நான் தப்பு பண்ணாதப்ப எதுக்கு ஒத்துக்கனும் நான் நேத்து உன் பக்கத்தில் வைத்து தான் நடாஷா கிட்ட அதை பற்றி கம்பலைன் பண்ணிட்டு இருந்தேன்… உன்னை பற்றி எனக்கு எதுவும் தெரியாதுன்னு நினைக்கிரியா நீ தினமும் டீ போடறேன்னு நின்னு என்ன பண்ணுறேன்னு எனக்கு தெரியாதா?... நான் இருக்கிறதால உன்னால அவரை நேர்ல சந்திக்க முடியலங்குற பொறாமைல எனக்கு எதிராய் பிளேன் பண்ணுரியா?” என்று அவள் மூச்சு விடாமல் பேச எனக்கோ இன்னும் தலைவலி அதிகமானது…

“wow thats awesome…எப்படி இந்த மாதிரி எல்லாம் கற்பனை பண்றீங்க சான்ஸே இல்ல என்னால எல்லாம் முடியவே முடியாது” என்று நான் முகத்தில் வெற்று சிரிப்புடன் உடனே பதில் சொல்ல,

அவள் கோபத்தில் என்னிடம் ஒரு சுடு பார்வை விட்டதுடன் அங்கிருந்து மறைந்தாள்...

‘நான் எதுக்கு அவனை நேர்ல பாக்க முடியாம இருக்கணும்...நான் எதுக்கு இவளை பார்த்து பொறாமை படனும்...குழந்த உனக்கு இன்னும் ஒரு விஷயம் தெரியல...எனக்கு தெரிஞ்சி அந்த கல்லை (அவனை) கரைக்கிறதுக்கு  உன்னால மட்டும் இல்லை எனக்கு தெரிஞ்ச ஒருத்தியை (may be farah வோட சேர்த்து ரெண்டு பேர்ன்னு வச்சிக்கலாம்) தவிர இந்த உலகத்துல யாராலயும் முடியாது, அவ்வளவு முக்கியமான வர்களை எல்லாம் விட்டுட்டு உன் மேல எதுக்கு எனக்கு பொறாமை வரணும் சொல்லு’

“இப்போ தெரியுது farahவோட நிலைமை என்னன்னு...நானும் இப்படியா இருந்தேன்?”

என்ற ஆச்சர்யத்துடன் நான் என் நாற்காலியில் அமர்ந்து கணினியை பார்க்க தொடங்கினேன்...

.

.

அடுத்து வந்த நாட்களில் மாயா எதார்த்தமாக என் மீது காபி கொட்டுவதும்... நான் அனுப்பும் mails அவளுக்கு போய் சேர தாமதம் ஆவதும்...எதார்த்தமாக நான் எழுதிய appoimants அழிந்து போவதுமாக வழக்கமாகி போக

அதற்கு பதிலாக அவளுக்கும் அவ்வப்போது நாற்காலி கை  பிடியில் சிவிங்கமும் சீட்டில் இன்க்கும்... காபியில் சர்க்கரைக்கு பதில் உப்பும்…(ஒன்னும் பெரிய வேலை இல்லை அவள் காபி குடிக்கும் நேரத்திற்கு முன்னாள் அங்கிருந்த சர்க்கரை டப்பவிற்கு பதிலாக நான் கொண்டு சென்ற உப்பு டப்பாவை வைத்தேன் ) அவ்வப்போது முகம் கழுவும் இடத்தில் அவளின் favorite spider (அவள் அதை கொஞ்சம் கையில் எடுத்து பார்த்திருந்தால் அது பொம்மை என்று தெரிந்திருக்கும்)...இப்படி நாட்கள் கடந்து செல்ல வேலைக்கு சேர்த்த 2 மாதங்கள் எப்படி ஓடியதென்றே தெரியவில்லை…

இப்படியாக நான் அவள் பரம விரோதி போலும் அவள் வரும் போதும் போகும் போதும் என்னை முறைப்பதும் இருவரும் எதிரெதிரே நடக்கும் போது அவள் என்னை இடித்து விட்டு போவது அவளின் கடமை என கருதுகிறான் அவள்…

எப்படியோ என்னுடைய பலகீனம் என்ன வென்று அவள் கண்களுக்கு தெரியாததால் அதுவரை அவளிடமிருந்து பெரிதாக எந்த தொந்தரவும் வரவில்லை…

ஆனால் அன்று அவள்.. அவன் மீட்டிங்கிற்கு வெளியே போகும் போது நான் எப்போதும் செய்வது போல் மேஜைக்கு அடியில் எதையோ எடுக்க செல்வது போல் கீழே குனிந்து அவன் போவதற்காக காத்திருந்து எழும்பும் போது அவளின் குழப்பம் அடைந்த முகத்தை காணும்பிதே அதோ உள்ளே இழுத்தது ஆனால் நானோ அவளை கவனிக்காமல் விட்டு விட்டேன்,

அந்த தவறினால் தான் இன்று நான் எழுதிய அப்போய்ன்மெண்ட்களில் தவறு ஏற்பட்டதாக அந்த மேனஜர் என்னை v.p அழைக்கிறார் என்று சொல்லியதும் எனக்கு என்ன செய்வதென்று தெரியாமல் என் நகத்தோடு விரலையும் கடித்து தின்று விடுவேனோ என்ற நிலைமையில் அவன் அறைக்கு முன் சென்று நிற்கிறேன்…

அவன் எப்போதும் வீட்டில் செய்வது போல இங்கும் கணினியை வெறித்து பார்த்து கொண்டிருந்தான்…

ஆனால் இப்போது பார்பதற்கு என்னவோ அருகில் பழகியது போல் இருந்தும் வித்தியாசமானவனாய் அமர்ந்திருந்தான்...

அப்போது தான் இன்னொரு முறை கடவுள் எனக்கு கை கொடுத்தார்…

அவன் கைபேசிக்கு அழைப்பு வந்தது, அதில்

எங்கள் கம்பெனி சைர்மன் ஜீ ஆஃபீசிற்கு விசிட் செய்ய போவதாக சொல்ல

அவனோ அவசர அவசரமாக மாயாவிடம் அந்த பைலை எடு இந்த பைலை எடு என்று என்னை மறந்து விட்டான்.

எனக்கோ என்ன செய்வதென்றே முதலில் தெரியவில்லை, அப்போது மாயா தான் உதவி செய்தாள்,

“சார் அப்போ அஸ்மா?” என்று அவள் கேட்க்க

இந்த இடத்தில் தான் அவள் மறந்து கூட என் முழு பெயரை உச்சரித்து விட கூடாது என்று வேண்டிக் கொண்டு இருந்தேன்,

ஆனால் அவனோ அப்போது இருந்த வேகத்தில் “யாரு அஸ்மா?” என்று கேட்க்க எனக்கு நிம்மதி பெருமூச்ச்சு வந்தது...

“அந்த புது ரிசெப்ஷனிஸ்ட்?” என்று அவள் கொஞ்சம் பயத்துடன் எடுத்துக் கொடுக்க…

“அதுக்கெல்லாம் எனக்கு time இல்ல அவள் கிட்ட இனிமேல் கவனமா அவள் வேலையை பார்க்க சொல்லு next time she would not be lucky” என்றிட மாயாவின் முகத்திலோ புன்னகை எழுந்தது..

ஆனால் அவள் என்  முகத்தில் வேறொரு காரணத்திற்காக எழுந்த புன்னகையை கண்டு குழப்பமான போனது...

பின் நடக்க இருக்கும் விளைவுகள் தெரிந்து இருந்தாலோ நான் அவ்வளோவு சந்தோஷமாக அங்கிருந்து வெளியேறி இருக்க மாட்டேன்...

கம்பெனி சேர்மனுக்கு தனி பார்க்கிங்லாட்டும் லிஃப்டும் இருப்பதால் அங்கு வேலை பார்ப்பவர்களுக்கு அவரை கண்டிட வாய்ப்பு கிடைக்காமல் போய் விடுகிறது…

இந்த கம்பெனியில் அவர் அதிகமாய் பேசும் அல்லது தொடர்பு கொள்ளும் நபர் ரிஸ் அதற்கு பிறகு அந்த மேனஜர் தான்…

அந்த மேனஜரின் அசிஸ்டண்ட் விக்ரம் (இந்த முறை பெயர் மறக்கவில்லை) முகத்தில் குழப்பத்துடன் என் மேஜைக்கு வந்து என்னை chairmanசார் அழைப்பதாக கூறியவுடன் எனக்கு ஒன்றும் புரியவில்லை,

நான் சேர்மன் அறையை சென்று அடையும் வரை அவர் 10 நொடிக்கு ஒரு முறை மீண்டும் அந்த குழப்ப கண்களுடன் என்னை பார்த்திட எனக்கு பதற்றம் இன்னும் அதிகமாய் தான் ஆனது…

ஒரு நொடி அவனிடம் திரும்பி ‘எனக்கும் தெரியாது ஓகே...எனக்கும் குழப்பமா தான் இருக்கு என்னை அப்படி பாக்காதே’ என்று கத்திவிடலாம் என்பது போல இருந்தது நல்ல வேலையாக அதை நான் செய்யவில்லை,

ஒரு வழியாக சைர்மன் அறையை அடைந்திட அந்த அசிஸ்டண்ட் வெளியேயே நின்றுக் கொள்ள நான் உள்ளே சென்றேன் அங்கே உள்ளே போனால் அங்கிருந்த மேனஜர் முகத்திலும் அதே கேள்வி கலந்த குலப்பம் அடைந்த முகம் அவரை தாண்டி பார்த்த எனக்கு அதிர்ச்சி…

சேர்மன் என்றவுடன் நானும் யாரும் முப்பதுகளின் கடேசியிலோ இல்லை நாற்பதுகளில் ஆரம்பத்திலோ யாரும் நிற்பார்கள் என்று நினைத்து போன எனக்கு இருவதுகளின் நடுவில் இருக்கும் ஒரு இளைஞனை பார்த்தது பேரதிர்ச்சி தான்…

அதுவும் என் முன்னிருப்பவனோ பார்வைக்கு சாதாரணமானவன் என்று சொல்லி விடவே முடியாது ஒருமுறை பார்த்தவர்கள் தங்கள் பார்த்தது சரிதானா என்று திரும்பி பார்க்க வைக்கும் முகம் அது...அப்படி அழகில் எந்த வகையிலும் குறைவில்லாத நம்ப மருக்கும் முகம்…

‘ஓகே இவன் அழகா தான் இருக்கான் இருந்தாலும்...எனக்கு ரிஸ்ஸை பார்த்தால் வரும் மூளையை குடைவது போல் இருக்கும் அந்த உணர்வும் வயிற்றில் பறக்கும் பட்டாம் பூச்சிகளும் எனக்கு மிஸ் ஆகுதே… ஒஹ் ரைட் அப்படினா நான் முழுசா விழுந்துட்டேன்...இனிமே என்னை யாரு நினைத்தாலும் காப்பாத்த முடியாதுன்னு நினைக்கிறேன்’

முன்னோருவன் நிர்க்க மீண்டும் என் மூளையை குடையும் அவனை பற்றி நான் யோசித்து கொண்டிருக்க அவன் வாயிலிருந்து வந்த என் பெயர் தான் என்னை எழுப்பியது

‘யாஸீன்னா எனக்கு கேட்டது? இல்ல தப்பா கேட்டுட்டேனா?’

“so yaseenனு கூப்பிட்டா ஓகேயா இல்லை யாஸீன் அஸீஸ்னு கூப்பிட்டால் கரெக்ட்டா இருக்குமா” என்று சொல்லிவிட்டு அவன் ஆழ்ந்த சிந்தனையில் இருப்பது போல் நடிக்க…

அருகில் உள்ள மனகெருக்கோ குலப்பத்தில் முகம் இன்னும் சுருடது...

என் மனதில் ஓடியது எல்லாம்…

‘oh sh*t  I'm screwed’

என் கண் முன் உலகம் உடைந்து விழுவது போல் நான் முகத்தை வைத்துக் கொண்டிருப்பதை பார்த்துவிட்டு

என் முன்னோருப்பவன் சிரிக்க ஆரம்பித்து விட என் மூளையோ  வெற்று காகிதம் போல் ஆகிவிட்டது…

“ரொம்ப பயப்படாதீங்க சிஸ்டர் let me tell you ரிஸ் எனக்கு ப்ரோதேர் மாதிரி என் lifeல நான் யாரையாவது நம்பு றேன்னா அது அவனா தான் இருக்கும்… but அவன் என்னிடம் உங்களை பத்தி ஒரு வார்த்தை கூட சொல்லல… முதலில் உங்களை பற்றி தெரிஞ்ச உடனே நான் ஷாக் ஆகிட்டேன்னு தான் சொல்லணும்… சாதாரணமாய் என் கம்பெனி employees அ background செக்கப் பண்ணறது வழக்கம் அப்படி தான் உங்களோட cv வச்சு செக் பண்ணப்போ உங்க backgroundஅ தெரிஞ்சிக்கிட்டேன்” என்று சொல்லிட அப்போது தான் என் மூளை அவன் சொல்லும் ஒவ்வொரு தகவலையும் மூலையில் போட்டு சுத்த ஆரம்பித்தது…

“அப்படினா…” என்று நான் இழுக்க

“yeah  அப்படினா நீங்க இங்க சேர்ந்த 2 நாளிலேயே உங்களை பற்றி எனக்கு தெரியும்…by the way it's gabriel thomas.. pleasure to meet you sister” என்றதுடன் அவன் கை கொடுக்க...

“.mm..n..nice to meet I'm asmath yaseen azeez but you already know that” என்றவாறு நான் கூறிவிட்டு

அடுத்ததாய் என்ன சொல்வது என்று தெரியாமல் இருக்க அப்போது தான் கதவு திறந்து…

அதிலிருந்து வந்ததோ ரிஸ்சும் அவன் பின்னால் மாயாவும் எனக்கு என்ன செய்வதென்று ஒன்றும் புரியவில்லை அங்கும் இங்குமாக பார்த்துவிட்டு அங்கிருந்த ஏதாவது ஒரு அறைக்கு நுழைந்து விடலாம் என்று ஓட சென்ற

என் கையை பிடித்து நிறுத்தி “கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க சிஸ் இந்த சீனை நேரில் பார்ப்பதற்கு தானே இவ்ளோ தூரம் வந்திருக்கேன்” என்று கேபிரியல் கூறுவதற்கு ரிஸ் நிமிர்ந்து பார்ப்பதற்கும் நான் கபிரியளின் பின்னால் போய் நின்று முகத்தை மறைப்பதற்கு சரியாக இருந்தது,

‘அய்யய்யோ இப்பதானே தப்பிசிச்சேன்னு சந்தோஷப்பட்டேன் எல்லாம் வேஸ்டா’ என்று என் மனமும் புலம்ப….

என் வலது புறம் இருக்கும் மனேஜரோ என்னை முன்பை விட இன்னும் வித்தியாசமாக பார்க்க நானோ மறு பக்கம் திரும்பி பார்த்தேன் அங்கு இன்னும் மோசம் என்னை மாயா பார்க்கும் பார்வை கத்தியாய் உருவெடுத்து இருந்தால் இந்நேரம் நான் ரெத்த வெள்ளத்தில் இருந்திருப்பேன்...

“யாஸீன் உன்னை பாத்துட்டேன் வெளிய வா” என்று ஒரு குரல் கேட்க்க

எனக்கு முன்னால் நிற்பவனோ சிரிப்பில் குலுங்க “என்ன ப்ரோதேர் சிஸ்டர் சிஸ்டர்ன்னு இப்படி சிங்கத்து கிட்ட மாட்டி விட்டீர்களே” என்று முணுமுணுத்துக் கொண்டே நான் முன்னாள் வந்து நின்றேன்…

“நீ இங்க என்ன செய்து கொண்டு இருக்க...எதுக்கு என் கம்பெனி uniform போட்டு இருக்கே” என்று என் பழுப்புநிற முழங்கால் நீல கோர்ட்டுக்கு பேண்டும் உள் அந்த கருப்பு சட்டையும் அதற்கு மேல் அந்த கருப்பு ஹிஜாபையும் வித்தியாசமாக பார்த்துக்கொண்டு கேட்க்க

அந்த கேள்விக்கு நான் பதில் சொல்லும் முன்பே கேபிரியல் பதில் சொல்ல ஆரம்பித்தான்…

“அதை நான் சொல்லேறேன்...இவங்க தான் இனி உன்னோட p.a நம்பர் 2” என்றிட எனக்கு குழப்பம் வர…

அதை கேட்ட மாயாவின் கண்களிலோ குழப்பமும் கோபமும் சேர்ந்து எழுந்திட அவள் பதில் பேச ஆர்பிப்பதற்கு முன் ரிஸ் பேச ஆரம்பித்தான்..

“அப்போ இது யாரு?” என்று அவளை கையை நீட்டி கேட்க்க…

“அவள் dhruv enterprises நம்ம வீடியோ கேம் ப்ரொஜெக்ட் details தெரிஞ்சிக்க நம்ம கம்பெனி குள்ள வச்சிருக்குற ஸ்பை apparantly நம்ம அவங்க கூட colabrate ஆகாத காரணத்தால் நம்மளோட ideava copy பண்ணி நமக்கு முன்னால கேமை ரிலீஸ் பண்ணறது தான் அவங்க பிளான்...so உன்னோட ப்ரோக்ராம்மேர்ஸ் கிட்ட பேசி அவங்களை விலைக்கு வாங்குறதும் அப்பறம் உன்னோட கிளைன்ட்ஸ் டீடெயில்ஸ் கலெக்ட் பன்னி அங்க அனுப்புறதும் தான் இவள் வேலை ஆனால் ஒரு சின்ன ஜெலஸி மேட்டர்ல ஆஃபீஸ்ல cctv இருக்கிறதை மறந்து விட்டு...இவள் நேத்து உன் கம்ப்யூட்டர்  password நம்பரை நீ இல்லாதப்பொ யூஸ் பண்ணறதை நான் கவனிச்சேன்…அப்பதான் இவள் மேல் சந்தேகம் வந்தது...

இப்போ அவளோட கால்ஸ் ல இருந்து gps ட்ராக்ஸ் வரைக்கும்….இப்போ all details i know… thanks to my new sister” என்றவாறு அவன் என்னை பார்க்க இங்கு என்னால் அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீள முடிய வில்லை ஆனால் அதிர்ச்சியானது நான் மட்டும் அல்ல அங்கிருந்த அனைவரும் தான்…

ஆனால் மாயாவின் கண்களில் மட்டும் அதிர்ச்சியுடன் சேர்ந்த பயமும் இருந்தது…

ஆனால் என்னை குறிப்பிட்டதில் ரிஸ்வின் கண்ணிலோ ஒன்றாய் சேர்ந்து குழப்பமும் தோன்றியது...

“so இப்போ நம்ம அவளை கண்டு பிடித்ததனால அவளோட gameover” என்றவாறு அவள் புறம் திரும்பி…

“ஓகே நீ கிளம்புமா ...அப்புறம் மும்தாஜ் கிட்ட நான் சொன்னேன்னு ஹாய் சொல்லு” என்றான் சாதாரணமாக…

இப்போ தெரியுது இந்த வயசுலயே இவன் எப்படி இவ்வளவு பெரிய கம்பெனி நடத்துறான்னு...

‘wait a minute இவனுக்கு மாயாவுகும் எனக்கும்  இருக்குற பிரச்சனை எல்லாம் தெரிஞ்சிருக்குனா???......’என்று என் எண்ணப் போக்கு வேறு புறம் போகும் போது அந்த கேள்வி என் தலையில் சட்டென்று உதித்தது..

“she betrayed you for money… நீங்க ரெண்டு பேரும் அவளை சும்மா விடறீங்க” என்று முன்னிருந்த இருவரிடமும்  வெளியே சென்று கொண்டிருக்கும் மாயாவின் முதுகை பார்த்து நான் கேட்க்க…

கேபிரியல் முகத்தில் ஒரு வித்தியாசமான சிரிப்பை கொண்டு வந்து ஒரு பக்க உதட்டை மட்டும் தூக்க ரிஸ் விளக்க ஆரம்பித்தான்..

“நாங்கள் அவளை விட்டோம் கிறதுக்காக சும்மா விடறோம்ன்னு அர்த்தம் இல்லை...இந்த கம்பெனில இருந்து அவள் வெளியே போவ தோடு அவள் கரீர் காலி….அவள் betrayer தெரிஞ்சப்பரம் எப்படியும் எங்களை பற்றி தெரிந்த யாரும் அவளுக்கு வேலை கொடுக்க மாட்டாங்க..அவளுக்கு கொடுத்த வேலையை சரியா செய்யாததால் அந்த சஞ்சையும் மும்தாஜும் இவளை சும்மா விட போறதில்லை இதுக்கும் மேல எனக்கு தெரிந்து இனி அவள் இன்னொரு கப்பனில உக்கார்றது ரொம்ப கஷ்டம்தான்” என்று ரிஸ் நெற்றியில் சுருக்கட்தொடு கூற...

அவன் என்ன யோசித்திருப்பன் என்று எனக்குள் ஒரு எண்ணம்…

“என்ன யோசிக்கிற?”

“இல்லை...இவ்ளோவ் நாளா என் கண்ணு முன்னாலேயே இருந்தும்--”

திடீரென்று நிறுத்தி விட்டு அப்போது தான் ஞாபகம் வந்தது போல் என்னை கைகாட்டி…”

wait a minute why do i feel so dumb suddenly... என் கண் முன்னால இருந்த ஒரு பொண்ணு என்னை ஏமாத்தி இருக்கா...and...you…worse then that… ஒரே வீட்ல இருந்தும் என் கண்ணுல படாமல்...அவங்க உண்ண backgroud ரிப்போர்டை எதுக்கு என் கிட்ட சப்மிட் பண்ணல…” என்ற வாறு அவன் கோபத்துடன் மனேஜரை பார்க்க

அவரோ பயந்தபடி… “இல்லை சார் எப்போதும் சைமன் சார் ரேபோர்டை செக் பண்ணப்பரம் பைலை ஆஃபீஸ்க்கு அனுப்பி வைப்பார் ஆனால் இந்த பொண்ணு பைலை மட்டும் நான் பாதுக்குறேன் என்று சொல்லிட்டாரு சார்..” என்றிட அவன் அதே கோபப் பார்வையை கேபிரியளிடம் திருப்ப

அவனோ எதுவும் நடக்காதது போல் தோலை தூக்கி இறக்கி விட்டு… “நீயும் சிஸ்டர் பற்றி என் கிட்ட ஒன்னும் சொல்ல வில்லை அதனால் நானும் சொல்லவில்லை” என்றிட அவனோ கோபமாய் வெளியே போக சென்றவன்...

“you...உன் கிட்ட நிறைய பேச வேண்டி இருக்கு நீ...என் கேபினுக்கு வா” என்றதோடு அவனும் கதவுக்கு பின் மாயானான்…

நானோ அவன் கதவுக்கு முன்னாள் நின்றவாறு...ஒரு நீண்ட பெரு மூச்ச்சுடன்…”ஓகே நான் கோலை போல பயப்பட போறதில்லை  I'm a strong independent woman” என்றதோடு நான் தோலை நிமிர்த்திக் கொண்டு முன்னே செல்ல கைப்பிடியில் கைவைத்தவள்...

‘அய்யோ நான் செத்தேன்...அவன் என்ன சொல்ல போறானோ இந்த தடவை அவன் டிவோர்ஸ் பண்ண போறேன்னு சொன்னால் என்ன பண்ணறது?’

‘ஒரு வேளை அவன் வீட்டை விட்டு….போயிட..சொல்லிடுவானோ..ஒரு வேளை என்னை வெளிய அனுப்பிட்டா என்ன பண்ண...வேணாம் யாஸீன் யோசிக்காத..வேணாம்..”

.

.

.

.

.

.

நான் நினைத்த மாதிரி எதுவுமே நடக்கல…

நான் முதலில் அறைக்குள்ளே போய் நின்ற போது அவன் அறைக்குள் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டு இருந்தான்…

என்னை பார்த்த தோடு அங்கேயே உறைந்து நின்றவன் “கம்பெனில நியூ ரிசெப்ஷனிஸ்ட் அப்போய்ண்ட் பண்ணி 2 மாசதுக்கு மேல ஆகுது… நீ இங்க என்ன பண்ணிட்டு இருக்க” என்ற ஒவ்வொரு வார்த்தைக்கும் என் பக்கம் கால் எடுத்து வைத்தவன் வார்த்தைகளை முடிக்கும் போது என் முன் நின்றான்…

“இவ்வளோவு நாள் வீட்ல பேசுறதுக்கு எவ்வளவோ நேரம் இருந்தது...அன்றைக்கு...அப்போ அன்றைக்கு மழையில் நின்றபோது கூட...darn...i feel like a stupid”

என்ற கடேசி வார்த்தைகளுக்கு அவன் வேறு புறம் திரும்பி அவன் வெறும் கையை எரிந்தாவாறு காத்திட எனக்கு அதிர்ச்சியில் சற்று நடுங்கியது.என்னை மீண்டும் பார்த்தான்…

“சொல்லு whats your problem எதுக்கு நீ இங்க வந்து நான் வேலை பார்க்கிறவங்க முன்னால என்னை அவமானம் படுத்தனும்” என்று அவன் கூறிட இப்போது எனக்கு பயத்துடன் சேர்த்து வலிக்கவும் ஆரம்பித்தது…

“நான் தான் உன் பொண்டாட்டின்னு உன் பாஸ்க்கு தெறிந்ததை தான் நீ கேவலம்னு நினைக்கிறாயோ” என்று கேட்ட என் குரல் ஆடிட…

அவன் முகமோ உடனே குழப்பத்தில் போக எனக்கு பதில் தெரிந்து விட்டது இருந்தாலும் அதை அவன் உறுதிப்படுத்த காத்துகொண்டு இருந்தேன்

“what...நீ..என்ன...hey உடனே என்னை trap பண்ணாதே...உனக்கு தெரியும் நான் எதை பற்றி பேசுரேன்னு”

அப்போது நான் எதை வேண்டும் என்றாலும் பதிலாய் சொல்லி இருக்கலாம் எனக்கு பணம் பற்றாக்குறை…

உன்னுடைய காசில் நான் செலவு செய்ய விரும்பவில்லை என்று என்னென்னவோ காரணங்களெல்லாம் என் மனதிற்குள் ஓடியது எதை வேண்டுமானாலும் சொல்லி இருக்கலாம்…

‘ஆனால் யாஸீன் உன் வாய் தான் உனக்கு வினை’

‘you’re hopeless’

“அப்போ நீ ஒரு வாரமாய் வீடிற்க்கு  வராமல் என்னை அவோயிட் பண்ண…” அது என் குரல் தான் but நான் எதுக்கு இப்படி...

“ப்ச்...உன்னை பார்க்கவே முடியல…. அப்பதான் accidental லா நீ இங்க வேலை பார்க்கிறது தெரிந்தது…” என் குரலில் ஏன் இவ்வளோவு இருக்கம்..

“அதுதான்...உன்னை பார்க்க தான்…”உணர்ச்சியின் வசத்தில் கடேசியாக என் வார்த்தைகளும் உடைய ஆரம்பித்தன...

அவனோ என் பேச்சின் ஆரம்பத்தில் உறைந்திருந்தவன் இன்னும் அவ்வாறே தான் நிற்கிறான்,

‘தப்பில்லை எனக்கே நான் பேசியது ஷாக்க இருக்கு அவன் ஷாக் ஆகுறதுல தப்பே இல்லை’

ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் எனக்கோ என்ன செய்வதென்று தெரிய வில்லை சுவர் எதையாவது தேடி முட்டிக் கொள்ளலாமா இல்லை அங்கிருந்து ஓடி விடலாமா...ரெண்டில் எது நல்ல தேர்வாக இருக்கும் என்று யோசித்து கொண்டு இருக்கும்போது தான்...

“போ” அவன் முகத்தை பார்க்க முடியாமல்

அறையில் அங்கும் இங்கு மாய் நோட்டமிட்டு கொண்டிருந்த என்னை அவன் வார்த்தை உறைய வைத்தது…

‘ஒருவேளை இவன் நம்ம மைண்ட் எதுவும் ரீட் பண்ணிட்டானா?”

“என்ன?” என்று நான் அதிர்ச்சியுடன் அவனை பார்க்க

அவனோ சாதாரணமாக முகத்தை வைத்துக்கொண்டு,

“பைலை நம்பர் kt65434” நான் மீண்டும் அவனை முட்டாள் போல் குழப்பமாய் பார்க்க,

“அந்த பைலை என் டேபிளுக்கு எடுத்து கொண்டு வா”என்று அவனும் மெதுவாய் கூறிட

நான் எங்கே என்று தெரியாமல் நிர்க்க அவன் ஒரு திசையில் கைகாட்ட அந்த அறைக்குள் சென்று அவன் சொன்ன நம்பரை தேட ஆரம்பிக்க அங்கு இருந்ததோ கிட்ட தட்ட நூற்றுக்கணக்கான பைல்கள் அதில் எல்லா வற்றிலும் வித்தியாசமான சீரியல் நம்பர்கள்….

‘நான் அவ்ளோவ் தான்’

.

.

.

.

.

பதினைந்து நிமிடங்களுக்கு பிறகு…

“ஒரு பைலை கொண்டுவர இவ்வளவு நேரமா அடுத்தமுறை இவ்வளவு நேரம் எடுத்துக்காதே பைல் numberசை மெமோரைஸ் பண்ணிக்கோ” என்றதோடு அவன் அந்த பைலை பார்க்க ஆரம்பித்தான்

நானோ என்ன செய்வதென்று தெரியாமல் திருத்திருவென முழித்துக் கொண்டு நிற்க்க சற்று நேரம் கழித்து என்னை பார்த்தவன்…

“என் இப்படி நடுவில் மரம் மாறி  நிற்கிறாய் போய் உன் டெஸ்க்ல ஒக்காரு” என்று எனக்கு பின்னால் இருந்த ஒரு டெஸ்க் மற்றும் அத்துடன் ஒரு லேப்டாப் மற்றும் ஒரு சில பைல்கள் இருந்த இடத்தை காட்ட நானும் அங்கு சென்று அமர சென்றேன்…

.

.

.

.

நடாஷா இவனை திட்டதுல ஒரு வார்த்தை கூட தப்பில்லை எல்லாம் உண்மை தான் ராட்சஷன்

டிராகன்

காண்டமிருகம்

vampire

எனக்கு இப்போ அவன் மேல எவ்வளோவு கோபம் வருதுன்னா அப்டியே அவனோட தலைல இருந்து ஒவ்வொரு முடியா பிச்சி எடுக்கலா மான்னு தோணுது…

இத்துடன் அவன் சொன்ன பைலை 6 முறையாக type பண்ணி கொடுக்க போறன்…

ஒவ்வொரு தடவையும் ஒரு  ‘முட்டாள்…’ ஒவ்வொரு தடவையும்

‘உனக்கு அறிவில்லை’

‘இது கூடவா ஒழுங்கா செய்ய முடியாது’

‘உன்னை எல்லாம் என் தலைல கட்டி…’  ஒவ்வொரு mistakeகும் இது ஏதாவது ஒன்றையாவது சொல்லாமல் இருக்க மாட்டான்…

but what do i do… receptionist ஜாப்ல இந்த மாதிரி அந்த டைமில் சொல்லறதை எழுதுறது அண்ட் பத்து பேஜ்க்கு டேட்டா என்ட்ரி பண்ணறது எல்லாம் இல்லை its new to me… அந்த...அந்த vampireகும் இதெல்லாம் தெரியும்...தெரிஞ்சும் நான் அவன் கிட்ட பொய் சொன்னதுக்காக என்னை பழி வாங்குறான்...that energy sucking vampire…

இப்படி ஒரு வழியாக அவனை திட்டி முடித்து ஒரு வழியாக என் வேலை முடியும் நேரமும் வந்தது….

நானும் எப்போதும் போல என் தோல்பையை எடுத்து கொண்டு “சார்(ஆமா ஆஃபீஸ்ல நான் அவனை அப்படி தான் கூப்பிடனுமாம்) அப்போ என் time முடிஞ்சிருச்சு அப்போ நான் கிளம்புறேன்” என்று நான் பையை தோளில் போட்டவாறு கூற…

“உன் time முடிஞ்சிருச்சுன்னு நான் உன் கிட்ட சொன்னனா?”என்று அவன் கணினியை பார்த்தபடியே கேட்டான்,

“but சார் time 9 ஆயிடுச்சே சார்” என்று நான் பாதிக் குழப்பமும் இப்போ என்ன சொல்ல போகிறானோ என்ற பாதி பதற்றத்தில் கூற,

“அது ரிசெப்ஷனிஸ்ட் வேலையோட டைமிங்...இப்போ நீ என்னோட அஸ்ஸிசிடெண்ட்...நான் எவ்வோளவு நேரம் இங்க இருக்கனோ அவ்வளோவு நேரம் நீயும் இங்க இருக்கணும்...நான் கொடுத்த டேட்டாவை என்ட்ரி பண்ணி முடிச்சிட்டியா?” என்றிட எனக்கோ மீண்டும் வயிற்றை கலக்குவது போல் அந்த உணர்வு வந்தது…

“இல்லை சார்” என்றவுடன் அவன் அப்போது தான் கணினியில் இருந்து கண் எடுத்து என்னை என்ன செய்யலாம் என்று போல் பார்த்தான்…

“ஒன்னும் பிரச்சனை இல்லை சார் 10 நிமிஷத்தில் முடிச்சிடறென்” என்று விறுவிறு வென சொல்லியவாறே பின்னால் நகர ஆரம்பித்தேன் ஆனால் என் பின்னால் இருந்த நாற்காலியை கவனிக்காமல் காலை இடித்துக் கொண்டு பிறகு பின்னால் திரும்பி நொண்டி நொண்டி ஒரு வழியாக என் நாற்காலியை சென்றடைந்தேன்…

‘vampire..’

harryக்கு என்னை அழைக்க வர வேண்டாம் என்ற ஒரு sms உடன் மீண்டும் அந்த பாலாய் போன கீபோர்டை தட்ட ஆரம்பித்தேன்...

-----------------

A/N: hi readers.... pona chapterla  comment panna ellathukum ennoda nandri...

Indha chapter patri enna ninaikireengannu sollunga...unga doubtsai kelunga...but ramadaan time enbadhanaal naan wattpadikku varuvadhu kadinam adhanaal ungalukku reply panna time aagalaam.... And that's it..

Keep supporting me... Please vote and comment your opinions :-)

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro