Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

முதல் முறை பார்த்த ஞாபகம் - 1

" முதல் முறை பார்த்த ஞாபகம் உயிரினில் தந்து போகிறாய் இதயத்தில் ஏனோ ஒரு பாரம்"

Lyrics: நா.முத்துக்குமார்.

திருமண நாள் அன்று யாராரோ என்னென்னவோ என்னிடம் சொன்னார்கள், அது எதுவும் என்னை  இப்போது கைபிடித்த கணவன் சொன்ன வார்த்தைகள் போல இல்லை, எந்த கணவனும் அவன் மனைவியிடம் இந்த வார்த்தைகளை சொல்லி இருக்கவும் வாய்ப்பு இல்லை,

"listen யாசின் நான் உன்னை பிடிச்சதுனால இந்த கல்யாணம் பண்ணல, எனக்கும் உனக்கு இதை தவர வேறு வழி இல்லன்னு தெரிஞ்சி தான் நான் இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்குட்டேன், mostly என் குடும்பத்தை என்னால இதுக்குமேல upset பண்ண முடியாது அதனால தான் பண்ணேன், நம்ம ரெண்டு பேருக்கும் future இருக்குன்னு just எப்பவும் யோசிச்சிடாத, இப்போ உன்னால உன் வீட்டுக்கோ இல்ல வேர எங்கேயும் போய் இருக்கவோ முடியாதுன்னு எனக்கு தெரியும், just be clear நீ படிச்சி உனக்கு வேலை கிடக்கிற வரைக்கும் தாராளமா என்கூட என் அப்பார்ட்மெண்ட்ல இருக்கலாம், but that's all நமக்குள்ள வேரா எதுவும் இருக்க போறதில்லை"

அவன் சொன்னது என்னவோ உண்மைதான், அவன விட்டா நான் போய் வாசிப்பதற்கு எனக்கு வேற எந்த இடமும் கிடையாது,

என் அப்பா அம்மா என்னை தத்து எடுத்ததில் இருந்து இதுவரை நிறைய உதவி செய்துவிட்டார்கள்,

நான் எப்போ வீட்டை விட்டு போவேன் என்று கடந்த ஒரு வருடத்தில் அவர்கள் தவித்த தவிப்பை எல்லாம் நான் பார்த்துக்கொண்டு இருந்தேன், என் தங்கை என்னுடன் பேசினால் கேட்டு போய் விடுவாள் என்று அவளை என் கூட தனியா பேச கூட விடாமல் மிக கவனமாக பாத்த்துக்கொள்ளும் அளவுக்கு நான்  பெரிய பாவம் செய்துவிட்டேன் என்று நினைக்கிறேன்,

இல்லாமல் எதற்கு என்னை இவ்வளவு நாள் வைத்து வழத்த என் பெற்றோர் திடீரென்று என்னை வெறுக்க போகிறார்கள் ? நிச்சயம் என் தப்பகத்தான் இருக்கும்,

ஆனால் நான் எதுவுமே தெரிந்து செய்யவில்லையே,

tour ல் தொலைந்து போனது என் தப்பாக இருக்குமோ? ஆனால் எனக்கு முன்பே தொலைந்து போக போகிறேன் என்று தெரிந்து இருந்தால் நான் நிச்சயம் அந்த பக்கம் போய் இருக்க மாட்டேன்,

அப்புறம் மொழி தெரியாத ஊரில் எனக்கு உதவி செய்ய முன்வந்தது ஒரு ஆணா இருந்ததும் என்னுடைய தப்பு தான் என்கிறார்கள், நான் அவனுடன்  ஓடி போக முயற்சித்தேனாம்... சொல்கிறார்கள் என்னை வளர்த்தவர்கள்....

நான் கனவிலும் அவர்களுக்கு துரோகம் நினைக்க மாட்டேன் என்பதை அவர்களுக்கு நான் எப்படி சொன்னாலும் அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை,

நீண்டநேரம் கெஞ்சியதற்கு பின் நான் என்னை படைத்தவன் மெல் சத்தியம் செய்து அவனை எனக்கு அதற்குக்கு முன்னாள் தெரியாது என்று சொன்ன பிறகு ஒற்றுக்கொண்டார்கள்,

ஆனால் அப்புறம் கூட அவர்கள் சந்தேகம் முழுமையாக நீங்கவில்லை, என் phone calls எல்லாவற்றையும் கண்காணித்தார்கள், நான் பிறகு mobile ளையும் நான் அவர்கள் கையில் ஒப்படைத்து விட்டேன்,

அதற்கு மேல் அவர்களை எப்படி நம்ப வைப்பது என்று எனக்கு தெரியவில்லை....

அவங்களையும் குற்றம் சொல்ல முடியாது, என் மனதிலும் ஒரு குற்ற உணர்ச்சி இருந்தது....

3 நாள் மட்டுமே ஒருவனுடன்  பிரயானத்தில் கழித்திருந்தாலும் என்னால் அவனையும் அந்த மூன்று நாட்களையும் நான் விரும்பவில்லை என்று சொன்னால் அது பொய்யாகத்தான் இருக்கும்,

அது எனக்கு குற்ற உணர்ச்சியாக இருந்தது அப்போது...

அவன் என் வாழ்க்கையை மற்றவங்களை திருப்தி படுத்த வாழ தேவ இல்லை என்று சொல்லித்தந்தான்,

இதுவரை எனக்கு யாரும் சொல்லி தராத ஒன்று அது...

என்னை மாற்றினான் அவன் அகத்திலிருந்து புரம் வரை மாற்றினான்...

நான் மற்றவர்கள் என்னை பார்க்க என் முகத்தில் எனக்கு பிடிக்காத வண்ணங்களை புசிக்கொள்வது அழகில்லை,

அவர்கள் எல்லோரும் என் வாழ்க்கையை வாழப்போவது இல்லை என வாழ்க்கையை வாழ போவது நான்தான் நான் நானாக இருப்பது தான் அழகு என்றான்,

அந்த நொடி தான் அவன் என் பார்வையில் புதிதாய் தெரிந்தான்,

என் மனதிற்கு அவனை தான் பிடித்திருக்கிறது என்பதை உணர்தேன்....

அந்த நொடி தான் பிறகு வந்த நாட்களில் என் மனதில் குற்ற உணர்ச்சியாக கணத்தது,

அத்துடன் என் வாழ்க்கையில் அவனுடைய பகுதி முடிந்தது என்று நம்பியிருந்தேன்...

அப்போது தங்கை ஆசை படுகிறாள் என்பதால் வீட்டில் பெற்றோர்கள் எங்களை ஊட்டிக்கு அழைத்து போய் இருந்தார்கள்,

என் தோழி அங்கே வந்திருந்ததால் நான் அவளிடம் பேசிக்கொண்டு இருந்தேன், அவர்களுக்கு தெரிந்த முகம் என்பதால் பெற்றோரும் என்னை அவ்வளவு கண்டு கொள்ளவில்லை,

அப்போது தான் மீண்டும் நான் அவனை கண்டேன்....

அப்போது அவன் என்னை நோக்கி வந்தான்,

இதுவரை நான் அவன் முகத்தில் பார்க்காத சிரிப்போடு வந்தான்,

எனக்கு ஒரு பக்கம் பயம் ஒரு பக்கம் பதற்றம் ஒரு பக்கம் ஏகப்பட்ட சந்தோஷம்.....

என் இதயம் ஒரு நொடி நின்றுவிட்டது எனக்கு அவனை பார்த்தவுடன எனக்கு உறுதியாய் தெரியும்....

ஆனால் என் சந்தோஷம் ஒரு நொடி கூட நீடிக்கவில்லை அவன் என்னை பார்த்து சந்தோஷ படவில்லை... ஏன் என்னை கவனிக்க கூட இல்லை என்றுதெரிந்தவுடன்,

கொஞ்சம் நேரத்தில் என் தோழி அவனை நோக்கி சிரித்துக்கொண்டு குழந்தை போல் ஓடிப்போய் அவனை கட்டி கொண்ட ஒடனே என் மனதிற்குள் ஏதோ இனம் புரியாத கணம் யாரோ என்னை பலமான ஆயுதத்தினால என் நெஞ்சை ஓங்கி அடித்தது போல வலி,

நான் இதுபோல்  இதுவரை உணர்ததே இல்லை,

அந்த நிமிட பொழுதில் நான் கற்ற பாடத்தால் அடுத்த சிறிது நேரத்தில் அவள் அவனை அண்ணன் என்று அழைத்ததற்கு அப்புறம் கூட எனக்கு முழுதாய் நிம்மதி வரவில்லை,

ஏனென்றால் எனக்கு தெளிவாக தெரியும் எனக்கு அவன் கூட இருப்பதற்கு 1 சதவீத வாய்ப்பு கூட இல்லை என்று,

அதை கற்பனை செய்தவதுடன் நிறுத்திகொள்வது தான் என் மனதுக்கு நல்லது என்று என் ஆழ் மனதுக்கு தெரியும்...

கடந்த இரண்டு நாட்களாக நடப்பது போல அன்றும் நான் இரவு நெருங்கியவுடன் என் தோழியிடம் சொல்லிவிட்டு என் தாய் தந்தை இருக்கும் பக்கத்தில் உள்ள resturent க்கு கிளம்பினேன் அப்போதுதான் இந்த பாலாய்ப்போன எண்ணம் என் மனதுக்குள் தோன்றியது,

அதாவது இன்றைக்கு பிறகு அவனை எப்படியும் பார்க்க போவதில்லை அவனுக்கு நான் சொல்ல நினைத்த நன்றியை சொல்லிவிட்டு வந்தால் என் மனம் அமைதியாகிவிடும் என்று நினைத்து அவனை தேடி உள்ளே சென்றேன்,

அவன் படிக்கட்டில் ஏறிக்கொண்டு இருந்தான்,

எனக்கு முதலில் கொஞ்சம் தயக்கமாக இருந்தது அப்போதே என் மனம் சொல்லும் தகவலை மதித்து நான் திரும்பி வீட்டிற்கு சென்றிருக்கலாம்,

ஆனால் நான்தான் புத்திசாலியாச்சே அதனால் தான் அவன் பின்னே தொடர்ந்து சென்றேன்,

அவன் பெயரை சொல்லி கூப்பிட்டு இருந்தாலாவது அவன் திரும்பி பார்த்து இருப்பான்...

ஆனால் இல்லை நான் அதையும் செய்யாமல் மந்திரித்து விட்ட கோழி போல அவன் பின்னாலேயே சென்றேன்,

அவன் ஒரு அறைக்குள் சென்றான், நானும் உள்ளே போய் அவன் பெயரை கூறி அழைத்தேன்,

அவன் திரும்பினான்,

இவ்வளவு நேரம் நான் என் தலையில் சேகரித்து வைத்த வார்த்தைகள் எல்லாம் எங்கே தொலைந்து போனது என்று எனக்கு எந்த தடையமும் இல்லை என் குரல் திடீர்ரென்று போய்விட்டதோ என்றெல்லாம் எனக்கு யோசனை வருகிறது,

அந்த அளவிற்கு அவனை பார்த்து திருதிரு என முழித்துக் கொண்டிருந்தேன்.

ஆனால் அவன் ரொம்ப நல்லவன் என் கஷ்டத்தை புரிந்து கொண்டு அவன் முதலில் பேச ஆரம்பித்தான்,

"இப்போ இங்க எதுக்கு வந்தே யாசின்?"

அவன் கூறிய வார்த்தைகளுக்கு அர்த்தம் எனக்கு விளங்கவில்லை,

நான் வெகுநாள் கழித்து அவனை பார்த்ததால் அவன் பின்பத்தை என் கண்களில் பதியவைத்துக்

கொண்டிருந்தேன்,

"இல்ல என் parents...ச்சும்மா tour போலான்னு"

எனக்கு என் வாயில் இருந்து என்ன வருகிறது என்று எந்த யோசனையும் இல்லை,

என் பெற்றோரை பற்றி பேசியவுடன் அவன் முகத்தில் எழுந்த சுருக்கங்களை நான் கவனிக்க தவறி விட்டேன் அன்று...

18 வருடம் வளர்த்த மகள் என்னை நம்பாமல் காது கூசும் அளவிற்கு கேள்விகேட்ட அவர்கள் இவனை மட்டும் விட்டு வைத்திருப்பார்கள் என்று நான் நம்பி கொண்டு இருந்தது என் மடத்தனம் தானே...

ஆனால் அன்று என் மூளைக்கு எட்டியது எல்லாம் என்னால் இனி எப்போதும் பார்க்க முடியாது என்று நான் நம்பியவன் என் கண் முன்னால் என் கால்கள் தரையில் இல்லை...

அவனோ ஒரு பெருமூச்சுடன்...

"யாசின் நான் அதை பத்தி பேசல, நீ எதுக்கு இப்ப இங்க எதுக்கு வந்து இருக்க"

அப்போது தான் நான் வந்த நோக்கம் என் நினைவில் வந்தது, ஆனால் அதை எப்படி வார்த்தைகளில் கோர்ப்பது என்பது தெரியாததால் நான் மீண்டும் ஒரு பேச்சு குலரலை ஆரம்பித்து விட்டேன்,

"இல்ல ரிஸ் நான் அதுக்காக வரல actually உண்ண பாத்த உடனே தான் எனக்கு அந்த இடியவே வந்தது, actually உண்ண பாத்து ரொம்ப நாள் ஆச்சு திரும்ப பாபனானு தெரியல அத்தான் பேசிட்டு உன் கிட்ட...actually உன் கிட்ட... thanks சொல்ல தான் வந்தேன்...நீ மாட்டேன்னு சொல்ல சொல்ல நாதான் உண்ண ஊருக்கு கூட்டிட்டு பொண்ணு கெஞ்சினேன்..இல்லனா நீ ஒரு flight பிடிச்சி அன்னிக்கே bangalore போய் இருப்பெள்ள...ஹ்...என்னால தான் தேவ இல்லாம 3 days...actually வர்றதுக்கு மூணுநாள் ஆனதும் என்னால தானே நான் தான் எதையோ பாதுகுட்டு ட்ரைன விட்டு கீழ இறங்கி என் பின்னால நீ இறங்கி...திரும்ப ட்ரெயின் கெடக்கம night வேற வழி இல்லாம ஹோட்டல்ல தங்கி..ஹ.. ஹ...நான் உண்ண நீ என்ன touch பண்ணா உன்...ஹ... ஹ...உன்..கைய்யா ஓடச்சிடுவேன்னு சொன்னேன்... இப்ப நெனச்சு பக்கும்போது கனவு மாதிரி இருக்கு... அதுவும் அடுத்தநாள் காலைல நம்ம taxi கிடைக்காம நடந்து போனப்போ...oh my god அவ்ளோவ் அழகான view அ என் life ல பாத்ததே இல்ல அதுவும் அந்த bunnies...."

" யாசின் போதும்"

என்று அவன் என்னை நிறுத்தியபோது தான் நான் என்பாட்டிற்கு ஏதேதோ பிதற்றிக்கொண்டு இருப்பதை உணர்தேன்,

அப்போதுதான் என்னோவோ குறைவது போல உணர்தேன், அவன் எப்போது என்னை முரைப்போடு தான் பார்ப்பான் அது ஒன்றும் புதிதல்ல,

ஆனால் இன்று அவன் பார்வையில் ஒரு தூரம் இருந்தது,அவன் என்னை யாரோ போல பார்க்கிறான், அருகில் நின்றும் எங்களுக்குள் மைல் கணக்கில் இடைவெளிகள் இருப்பது போல உணர்தேன்,

எனக்கு பிடித்த எதையோ தொலைத்து விட்டதை போல இருந்தது,

அங்கிருந்து கிளம்பி முடிவு செய்தேன்,

நான் என் குரலை சரி செய்து விட்டு வந்த வேலையை முடித்து விட்டு கிளம்பலாம் என்று தயாரானேன்,

" அ..அதுதான் எல்லாத்துக்கும் thanks... ம்..pch.. bye..." என்று சொல்லி விட்டு நாள் பின்னால் கதவை திறக்க சென்றேன்,

தீடீர் என்று அவன் கூறல் மீண்டும் என் காதில் ஒலித்தது.....

மீண்டும் என் மனதில் பூபூப்பது போல் அந்த உணர்வு படர்வதை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை.

"ம்ம்ம்...???" நான் கேட்டேன்,

இதழ்களை விரித்து புன்னகை செய்யாமல் பேச முயற்சி செய்தேன், அது எப்போதும் அவனை நினைத்த உடன் என்னை மீறி வரும்  மறுமொழி,

"thank you to you too" என்று அவன் சற்று தயக்கத்துடன் சொல்ல நான் அவனை கேள்வியாய் பார்த்தேன்,

"இங்க வந்ததுனால தான் எனக்கு என் family திரும்பவும் கிடைச்சது அதுக்கு நான் உனக்கு தான் thank பண்ணனும்"

குரலை சரி செய்து விட்டுஎன்று அவன் வெறுபுரம் சுவற்றை பார்த்து கூற,

அதற்குமேல் என் இதழ்கள் விரிவதை தடுக்க முடியவில்லை,

அவனுக்கு ஏதோ ஒருவகையில் என்னால் சந்தோஷம் கிடைத்திருக்கிறது என்ற எண்ணத்தில் என் வாய் காது வரை போகும் அளவிற்க்கு என் முகத்தில் பெரிய புன்னகை எழுந்தது,

பிறகு நான் கதவை திறக்க முயன்ற போது அந்த புன்னகை என் முகத்திலிருந்து போய் விட்டது,

"ரிஸ் கதவ ஓபன் பண்ண முடியல".........

--------------

எங்களால் முயன்றவரை கதவை திறக்க முயன்றுவிட்டு எல்லா முயற்சியும் படுதோல்விதான்,

கதவு sound proof என்று அவன் சொன்னான்,

அதற்கு பின்னால் இருப்பவர்கள் எங்கள் குரலை கேட்க்க வாய்ப்பே இல்லை....

நண்பர்களை தொலைப் பேசிகளை தொடர்புகொள்ளவும் முடியவில்லை.....

அடுத்தநாள் காலை அந்த கதவை திறந்து என் தந்தை....

பிறகு என்ன நடந்து இருக்கும் என்பதை நான் விளக்கவே தேவை இல்லை...

அதன் பிறகு என் பெற்றோர்கள் நம்புவதற்கு துளி கூட வாய்ப்பில்லாமல் போனதால்,

என் தோழி அதாவது அவனுடைய சகோதரிக்கு திடீரென எங்கிருந்தோ இந்த அவறிவித யோசனை உதயமானதால் எங்கள் இருவருக்கும் திருமணம் செய்வது தான் இதற்கு சரியான முடிவு என்று எல்லோரும் கூடி முடிவெடுத்துக் கொண்டார்கள்,

அவன் அவ்வளவு சீக்கிரம் ஒத்துக்கொண்டது முதலில் எனக்கு பெரிய ஆச்சர்யத்தை தந்தது,

இருந்தாலும் ஒரு புறம் என் மகிழ்ச்சிக்கோ அளவே இல்லை,

அவன் ஒருவருடம் முடித்த உடன்தான் என்னை மணமுடிப்பேன் என்று சொன்னவுடன் என் தாயின் முகத்தை பார்திருக்க வேண்டும்,

என் தாய்க்கு அவன் மீது ஒரு துளியும் நம்பிக்கை இல்லை ஆனால் பிறகு பெரியவர்கள் பேசி ஒருவழியாக அவர்கள் ஒற்றுக்கொண்டார்கள்,

இன்ருடன் எனக்கு திருமணம் ஆகி 2 வாரங்கள் ஆகிறது, என் கணவனின் அப்பார்ட்மென்டில் வந்து நான் குடியேறி இரண்டு நாட்கள் ஆகிறது,

இடம் பெரிதாக இல்லை என்றாலும் பார்த்தவுடன் என் மனதிற்கு எனோ மிகவும் பிடித்து விட்டது,

வீட்டை சுற்றி wooden finishing கொடுத்து வசிக்க இதமான உணர்வு தருகிறது ஆனாள் அதே நேரத்தில் இந்த இடம் காலியாக இருப்பதுபோல் ஒரு உணவும் தருகிறது,

இங்கு ரெண்டு படுக்கையறைகள் லிவிங் ரூமில் சோவ்கரியமான கௌச் ஒன்று,

நேராய் தொலைக்காட்சி அதற்கு முன்னால் வீட்டிற்கு தகுந்த அளவில் கிச்சன் லிவிங் ரூமிற்கு இடது புறம் ஒரு ஒரு பிரம்மாண்டமான கண்ணாடி கதவு இருந்தது அதை ஓரமாய் தள்ளி பார்த்தவுடன் தான் அதன் பின்னால் ஒரு பால்கனி இருப்பது தெரிந்தது,

அங்கு இருவர் அமர்ந்து பேசுனா எதுவாக இரு மரநாற்காலிகளுடன் நடுவில் ஒரு டீ டேபிளுக்கு இருந்தது அதை சுற்றி புது செடிகலும் வளர்ந்து ஒரு அமதிதியான உணர்வை தந்தது,

எனக்கு அந்த இடத்தை பார்த்தவுடன் பிடித்து விட்டது,என் மனதிற்குள் ஒரு ஓரமாய் ஒட்டிக்கொண்டது....

இது எல்லாம் நான் கண்ட கனவுகளில் ஒன்று போல் தோன்றுகிறது, ஆனால் அதில் நடந்தது எதுவும் நிஜமாகும் என்று நான் நினைத்து விட்டால் என்னை யாராலும் காப்பாற்ற முடியாது...

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro