Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

நீயும் நானும் - 5

நீ வேண்டுமே.... எந்த நிலையிலும் எனக்கு நீ போதுமே..
லிரிக்: தாமரை.

மழை நின்று ஒரு வழியாக நாங்கள் வெளியே வரும்போது மணி நான்கு, பிறகு ரயில் நிலையத்தை சென்றடைவதற்குள் 6 மணி ஆகி விட்டது, அங்கு போய் சேர்த்தால்... எங்கள் அதிஷ்டம் அன்று இரவு காற்று அதிகம் இருந்ததால் ரயில்கள் நிறுத்தப்பட்டு இருந்தன வருவது சந்தேகம் என்றார்கள்,

விஷயத்தை கேட்டதும் அவன் முகத்திலோ எள்ளும் கொள்ளும் வெடித்தது,

பேருந்தில் கிளம்பலாம் என்று நான் சொன்னதற்கு அவன் காத்திருக்கலாம் என்று சொன்னான், 8மணி ரயில் பத்து மணி ஆகியும் வரவில்லை,

அவன் பொறுமை இழந்து பல்லை கடிக்கும் சத்தம் எனக்கு இங்கு விளங்குகிறது,

எனக்கு என்னதான் இப்போது வாயை திறக்க பயமாக இருந்தாலும் அவனை பார்க்க பரிதாபமாக இருந்ததால்

'seriously யாசீன் உன் நிலைமையே படும் கேவலமா இருக்கு நீ அவன பாத்து பரிதாப படுரியா?'

நான் அவனிடம் ஏதாவது பேசலாம் என்று முன்னாள் போய் நிர்க்க அவனே பேச ஆரம்பித்தான்,

“ரொம்ப லேட் ஆயிடுச்சி இதுக்கு மேல பஸ் கெடக்குமான்னு தெரியல” என்றான்,

“எனக்கு பசிக்கிது ரிஸ்வான்” என்றேன், அவன் முதலில் என்னை ஆச்சர்யத்தில் பார்த்துவிட்டு பிறகு ஒரு மெல்லிய சிரிப்புடன்,

“சரி வா” என்று என்னை அழைத்து கொண்டு அருகில் இருந்த வண்டி கடையில் மிக அருமையான பாராட்டவும் சால்னாவும் வாங்கி முதலில் என் கையில் தந்து விட்டு பிறகு அவனுக்கு ஒன்று வாங்கி கொண்டு என் அருகில் வந்து அமர்ந்தவாறு,

“இப்ப என்ன பண்றது?”என்றான்,

“என்ன கேட்டா? நீ தானே எப்பவும் plan பண்ணுவே நீயே யோசி, இந்தியையும் எங்கிலீஷயும் மாத்தி மாத்தி பேசி எதுனா பண்ணு” என்று நான் உலகில் எந்த பிரச்சனையும் இல்லாதவாறு கூளாக சொல்ல

அவன் முதலில் என்னை வித்தியாசமாக பார்த்து விட்டு பிறகு

“உனக்கு கொஞ்சம் கூட கவலையா இல்ல?, பேரு தெரியாத மொழித் தேரியாத இடத்துல தெரிஞ்சவங்க யாரும் இல்லை phone இல்ல, போகுறதுக்கு வழி இல்லை உனக்கு கொஞ்சம் கூட கவலையா இல்லையா?” என்று அவன் கூற

நானும் கொஞ்சம் நேரம் யோசித்து பார்த்தேன் எந்த பயமோ இல்லை பதிலோ தென்படவில்லை, அதனால் என் மனதில் முதலில் எழுந்த வார்த்தைகளை அவனிடம் சொன்னேன்,

“அதான் கவலை பட நீ இருக்கியே guardian angel” என்று சொன்ன பிறகுதான் அது எவ்வளவு உண்மை என்றதை அதிர்ச்சியுடன் உணர்தேன்…….

------
என் கடந்த காலத்தில் மூழ்கி இருந்த என்னை என் தோழி வரும்போது தான்

B.Sc mathematics எடுக்க போவதென்று சொல்லியாவுடன் அதிர்ச்சியில் எழுந்து அமர்த்தேன்,

“இன்னும் எவ்வளவு நேரம் தான் என்னை அப்படியே பாத்துட்டு இருக்க போற” என்று farah சலித்துக்கொள்ள,

“எப்ப இருந்து நீயும் math உம் enemy ல இருந்து friendly friendly ஆனிகன்னு யோசிச்சிக்கிட்டு இருந்தேன்” என்று நான் வியந்த குரலில் கூற,

“may be math teacher ர correct பண்ற gapல ஆயிருக்கலாம்”என்று fazi கூற,

“ஹலோ நான் இன்னும் இங்க தான் இருக்கிறேன்” என்று fazil சத்தம் எழுப்பினான்,

“உண்ண யாரு வர சொன்னது முதல்ல? Farah காலேஜ் போக ஒத்துக் கொண்டால் அவள தன்னால ஓட்டவிடரேன்னு சொன்னேள்ள இப்ப ஏன்டா நீ drive பண்ற”

என்று fazi அவள் அண்ணனை கடித்துக் கொண்டு இருக்க அவனோ பல்லை கடித்துக்கொண்டு,

“ நான் இதுக்கு முன்னால சொன்ன மாதிரி காலேஜ் chairman எனக்கு பழக்கம்-”

“எங்களுக்கு ஒன்னும் உன் background நால seat கிடைக்கணுன்னு அவசியம் இல்லை, என் mark நால கிடைச்சா போதும்” என்றாள் fazi அவனை பேச விடாமல் பேசிக்கொண்டு போக அவன் மனைவி இடமிருந்தோ எந்த பதிலையும் காணவில்லை,

“என்ன farah ரொம்ப நேரமா அமைதியா இருக்க உடம்பு எதுவும் சரியில்லையா?” என்று நான் கேட்க்க,

அவளோ முகத்தை சுருட்டிக்கொண்டு “நான் பேசுனா மட்டும் இப்ப என்ன நடந்துட போகுது அதுதான் இப்பல்லாம் பேசுரதே இல்ல” சொல்ல,

அவள் சொன்னவுடன் அவனோ இன்னும் சத்தமாக பற்களை கடிக்க ஆரம்பிக்க இது பேசுவதற்கு சரியான நேரம் இல்லை என்று அமைதியாகி விட்டேன்,

------

Registration முடிந்தவுடன் கணவனோ அறைக்குள் ப்ரின்சிபாலுடன் பேசி கொண்டு இருக்க இது தான் நேரம் என்று நான் அவளிடம் என்ன பிரச்சனை என்று கேட்க்க,

“ என்ன பிரச்சனைன்னு கண்டிப்பா சொல்லனுமா? இன்னக்கி நீ சொன்ன மாதிரி அவனுக்கு என்ன பிரச்னைன்னு அவன் கிட்ட கேட்டேன், ஆனால் அவன் பழைய குறுடி கதவை தெரடிங்கிரமாதிரி, childbirth நால ரொம்ப வீக்கா இருப்ப இதுக்குமேல மூணுவர்ஷம் வேற நீ படிப்பில் கான்செண்ட்ரேட் பண்ணனும் so romance கு no no சொல்லிட்டான் ” என்று அவளுக்கு அதிலிருக்கும் ஆதங்கத்தை காட்டும் அளவிற்க்கு கண்ணாடி கதவு பின்னால் இருக்கும் அவனை முறைத்துக் கொண்டு கூற,

“ப்ளீஸ்...அது என் brother நீங்க இப்ப பேசிக்கிட்டு இருக்கிறது கொஞ்சம் volume யாவது கம்மி பண்ணிகிரியா நான் பாவம் தானே” என்று என் இடப்புறம் இருந்த fazi கூற,

“ஹஹஹ, நீ பேசுற? எப்போ பாத்தாலும் மாத்தி மாத்தி சண்டைனு சொல்லிட்டு  நீ தானே அன்னிக்கி என்கிட்ட வந்து-” என்று அவள் முடிப்பதற்கு முன் fazi “சரி சரி மானத்த வாங்காத நான் வாய முடிக்கிறேன்” என்று விலகினாள்,

“எனக்கென்னவோ அவன் சொன்னது எல்லாம் நடக்கும்னு கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லை” என்று நான் கூற அவளோ ஒரு பக்க புன்னகையுடன்

“absolutely not happening”என்று கூற,

“வேற எதுக்குடீ முகத்தை வேற உர்ருன்னு வச்சிட்டு இருக்க” என்று நான் கேட்க்க, farah பதில் சொல்வதற்கு முன்,

“ அவள் சும்மா அவன வெறுப்பேத்த எல்லாம் பண்ணிட்டு இருக்க” என fazi யோ வாய்க்குள் முணங்கிக்கொண்டு அங்கிருக்கும் நியூஸ் பேப்பரை படிக்க ஆரம்பித்தாள்,

நாட்கள் கடந்து சென்றன, கல்லூரி வாழ்க்கை எங்களை வரவேற்றது, நான் fashion design எடுத்திருந்ததால் தோழிகளுடன் வரும்போது போகும்போதுமே பேச வாய்ப்பு கிடைத்தது,

கல்லூரியில் நான் எனக்கு பேச மொழி பிரச்னைகளாலும் புது இடம் என்பதாலும் முதலில் நான் யாரிடமும் பேசவில்லை,

பிறகு என் வலது புறத்தில் பெரிய கண்ணாடியுடன் பாவம்போல் ஒருவன் அமர்ந்து இருந்தான்,

முதலில் அவன் தமிழ் என்பது எனக்கு தெரியாது பிறகு ஒருநாள் நான் தெரியாமல் அவன் காலில் என் bagஐ போட்டுவிட அவன் அம்மா என்று கத்தினான் பிறகு திரும்ப ஒரு முறை கவனித்த உடன் தான் தெரிந்தது அது ஒரு பெண் என்பது,

Loose jeans உம் பாப் கட்டிங்குமாக இருந்தவுடன் நான் பையன் என்று தவறாக முடிவு செய்து விட்டேன்,

“இன்னக்கின்னு இந்த இந்தி காரனுங்க எல்லாரும் என் காலை தான் குறிவைக்கணுமா?” என்று கூற,

எனக்கு தமிழை கேட்டவுடன் அவளவு சந்தோஷம்,

“நீங்க தமிழா” என்று கேட்க,

“வாம்மா வாங்க இங்கேயும் வந்து பேசி உயிரை வாங்க வந்துடீங்களா? இல்லமா எனக்கு தமிழ் தெரியாது, என் mother tounge chinese”

என்று கூறி விட்டு அவள் வெளியே போக,

நானோ அவள் பின்னால் நின்றவாறு,

“ ஏய் chinese பொண்ணு உன் பெயர் என்ன?” என்று கேட்க,

“harry potter உன் பெயர் என்ன” என்று அவள் பின்னால் திரும்பி நக்கலாக கேட்க,

“ronold weasley” என்று நானும் நக்கலாக பதில் சொல்ல,

அவள் பல்லை காட்டியவாறு, “ok  வா canteenla சமோசா சாப்பிட்டு வரலாம், நல்லா இருக்கும்னு கேள்வி பட்டேன்” என்ரவாறு இழுத்து சென்றாள் என்னை...

இப்படித்தான் நாங்கள் தோழிகளானோம்,

வீட்டு நிலைமையை பொறுத்த வரையில் இன்னும் எதுவும் மாறியதாக தோன்றவில்லை,

இருவரும் ஆஃபீஸ் வேலைகளிலும் காலேஜ் படிப்பிலும் பிஸியாய் சுற்றிக்கொண்டிருக்க, என்னதான் வீட்டில் சமையலில் எனக்கு a,b,c,d கூட கற்று தரவில்லை என்றாலும் அவன் சமைப்பதை பார்த்தவுடன் எனக்கும் அவனுக்கு ஏதாவது சாப்பிட செய்து கொடுக்கவேண்டும் என்ற ஆசை அதிகமாகி கொண்டே இருந்தது,

அன்றுதான் அவனிடம் கெஞ்சி கூத்தாடி எனக்கு பிரேட் ஆம்லெட் எப்படி செய்வது என கத்துதர ஒப்புக்கொள்ள வைத்தேன்,

“ஏதோ நான் வெளிய எங்கேயாவது போய்ட்டா நீ பசியில செத்து போய்ட கூடாதுன்னு சொல்லி தர்றேன் ஒடனே நீ பாசத்துல பண்றேன்னு எடுத்துக்காத...ம்ம்ம் அப்புறம் அன்னிக்கி பண்ணமாதரி ஏதாவது லூசு தனமா try பண்ணே அப்புறம் அவ்ளோ தான் நீயி” என கட்டளைக்குமேல் கட்டளையிட்டு கொண்டே ஆரம்பித்தான்,

இதில் நூடுல்ஸ் செய்வது தான் ஈஸியாக இருந்தது பிரேட் ஆம்லெட்டுக்கோ வெங்காயம் வெட்டுவது வெந்து விட்டதா என்று பதம் பார்ப்பதென்று நிறைய வேலை இருந்தது,

என்ன தான் அவன் பக்கத்தில் நின்று என்ன எப்படி செய்வது என்று சொன்னாலும் நான் செய்த பிரேட் ஆம்லெட் அவன் செய்தது போல இல்லை,

“ஆனால் இது ஏன் நீ செஞ்சா மாதிரி டேஸ்டா இல்ல” என்று நான் அவனை கேட்க்க

அவனோ சிறு புன்னகையுடன் “பண்ண பண்ண சரியா வந்துடும், actually first try க்கு இது பரவாயில்ல நான் என்னோட first omlet அ சொரண்டி தான் எடுக்க வேண்டி இருந்தது” என்றவாறு என் பின்னால் இருந்து அவன் என் கையில் இருந்த ஸ்பூனை வாங்கி அவன் அதில் கொஞ்சம் எடுத்து சாப்பிட்டு விட்டு...

“not bad” என்று கூற,

எனக்கு கேட்டதெல்லம் என் இதய துடிப்புதான், நான் உணர்த்ததெல்லாம் அருகில் இருக்கும் அவனின் இதமான வெப்பந்தான்,

‘எனக்கு எதுக்கு எப்பவும் அவன hug பண்ணனுன்னே தோணுது, இப்போ தோட்டா வேரா இவன் கொலை குற்றம் பண்ண மாதிரி முறைப்பான் but வர வர எனக்கு முத்தி போகுதுன்னு மட்டும் நல்லா தெரியுது’

என்று நான் மனதிற்குள் புலம்பியவாறு என் முதல் பிரேட் ஆம்லெட்டை இருவருமாக முடிட்டத்தோம்,

அன்று நான் farah வீட்டிற்கு சென்று அவள் குழந்தையை பார்த்து விளையாடி கொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை,

ஏதோ ஒரு நினைப்பில் அவள் அங்கு சாப்பிட கூப்பிடவும் நான் சாப்பிட்டு விட்டேன்,

பிறகு இரவு ஒரு 10.30 மணிக்கு அவளின் டிரைவர் அப்பார்ட்மெண்டில் வந்து ட்ராப் செய்தார்,

வீட்டை திறக்கும் போதே எதையோ மறந்தது போல இருந்தது,

திறந்தவுடன் என் கணவன் கண்ணில் கோபத்துடன் நின்றவுடன் என் சந்தேகம் உறுதியானது,

‘அச்சிசோ நான் இவன் கிட்ட சொல்லவே மறந்துடனே’

“next time வெளிய சாப்பிட்டு வர்ராதா இருந்த முதல்லயே இன்போர்ம் பண்ணிட்டு உனக்காக food ட எல்லாம் waste பண்ணிட்டு இருக்க முடியாது” என்ற வார்தைகளுடன் அவன் அறைக்குள் புகுந்தவன் தான்...




Bạn đang đọc truyện trên: Truyen247.Pro