Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

என் விழியின் கனவு -14

எந்தன் கண்ணில் உந்தன் கண்ணீர் நான் ஏந்த முயழ்கிறேன்...
உன் சோகம் என்னெஞ்சில் ஏந்திப் போகிறேன் அது என்னடா?..
நான் ஏன் நீ ஆகிறேன்...

லிரிக்: மதன் கார்க்கி.

ான் அவனோட p.a ஆகி ஒரு வாரம் ஆகுது...இவ்வளவு நாளாக அவனை பற்றி தெரிந்து கொண்டதை விட இந்த 1 வாரத்தில் தெரிந்து கொண்டது தான் அதிகம் அதிலும் இவ்வளவு நாள் நான் அவனை திட்டியதை விடவும் இந்த ஒரு வாரத்தில் தான் அதிகம் திட்டி இருப்பேன்…

ஆனால் இந்த வெறுத்தளில் ஏதோ ஒரு இடத்தில் எங்கோ அவனின் கடின உழைப்பையும் நேர்மையையும் காண தொடங்கி விட்டேன்

அதன் பின் இந்த திட்டுவதும் குறைந்து போய் மீண்டும் என் மூலை தன்னிசையாக அவனின் இன்னொரு புரத்தையும் ரசிக்க ஆரம்பித்து விட்டது…

‘i mean why...why in the hell i have to admire him all the time...and fell for him deeper and deeper… அவனுக்கு என்னை பிடிக்க கூட செய்யாது...அப்ப எதுக்கு எனக்கு மட்டும் இப்படி ஆகுது...it’s annoying…

ஒரு சில நேரத்தில் இப்படி அவன் பாறை போல் உணர்ச்சிகள் இல்லாமல் இருப்பதை பார்த்து பொறாமை கூட வருகிறது எனக்கு…

சட்டப் படி அவன் இப்படி இருப்பதை பார்த்து ஒரு நல்ல மனிதராக இருந்தால் என்ன தோன்ற வேண்டும்…’அய்யோ இந்த பையன் எவ்வளவு கஷ்ட பட்டு இருக்கான்.. எப்பவும் இப்படி feeling இல்லாத கான்க்ரேட சுவரு மாதிரி நிக்கிறானேன்னு’ தோணனுள்ள அது தானே சாதாரண மனித இயல்பாக இருக்கும்…

ஆனால் எனக்கு என்ன தெரியுமா தோணுது..இவன் இப்படி  செமெண்ட் தரையாக இருக்குறனால தானே எந்த feelingகும் இல்லாமல் திரிகிறான் நானும் அந்த மாதிரி இருந்து விட்டால் நானும் எதை பற்றியும் கவலை பட தேவை இல்லல்ல…

அவனுக்கு என்னை பிடிக்குமா? இல்லை என்னைக்காவது என் ஞாபகம் வருமா? அப்படி இல்லை என்றால் அவன் திரும்பவும் அந்த கும்தாஜை தேடி போய்டுவானா?

இன்னும் கொஞ்சம் நாளில் அவன் என்னை வீட்டை விட்டு போக சொல்லி விட்டால் இப்போ அதை நினைக்கும்போது வலிப்பது போல தான் அப்போதும் வலிக்குமா இல்லை கம்மியா வலிக்குமா…

என்னைக்காவது ஒருநாள் நான் இவனை ஏதோ தெரியாதவனை போல வீதியில் கண்டு ஹாய் சொல்ல வேண்டியது வருமா?...

அப்போதும் எனக்கு heartல யாரோ கத்தி வச்சி குத்தர மாதிரி தான் feel ஆகுமா?

இதை எல்லாம் அனுபவிக்கிறதுக்கு அவனை போலவே கல்லாய் போய் விடுவது எவ்வளவோ மேல்…

Maybe நம்ம அவன் கூட பலகுவதை கம்மி பண்ணி கிட்ட கொஞ்சம் கம்மியா வலிக்க வாய்ப்பு இருக்கு…

ஆனால் அது இப்போ இருக்கும் சூழ்நிலைக்கு impossible…

இப்போ அவன் p.a job  எடுத்தப்பறம்...

.

.

.

You know what...என்ன தான் அவன் என்னை வேலை வாங்குறேன்னு அறை அறைன்னு அறைத்தாலும் thats worth it…

ஆமா எனக்கு லைட்டா மூளை கொளம்பீடுச் சோன்னு எனக்கும் அப்பப்ப தோணும்…

But என் mind இப்பல்லாம் இப்படி தான் வேலை செய்கிறது...பாதி நேரம் அவனுக்கு என்னை பிடிக்காததிலிருந்து வேலை வாங்கும் வரை எல்லாவற்றையும் காரணமாய் வைத்து அவனை திட்டி தீர்க்கும் என் மனது மீதி நேரம் கடின உழைப்பையும் கண்ணியத்தையும் கண்டு ஈர்க்கப்படுகிறேன் அவ்வப்போது அவனுடைய தோற்றத்தையும் நடவடிக்கையும் கண்டு மலைத்து போகிறது…

அவன் ஒவ்வொரு முறையும் தெரியாமல் தீண்டினால் கூட என் மூளை உருகி போய் விடுகிறது…

ஆமா புதுசாக இப்போ இந்த பிரச்சனை வேறு....

எல்லாவற்றிற்கு அந்த--  இல்ல வேணா விடு நான் அதை பற்றி யோசிக்கிறதா இல்ல…

இப்போது அவனுடன் இருக்கும்போது எல்லாம் தொட்டால் சிணுங்கி போல உணர்கிறேன்...

அவன் தெரியாமல் தொட்டால் கூட அங்கிருந்து மைல் கணக்கில் ஓடி விடுவதற்கும் அவன் கைகளுக்கிடையில் மொத்தமாய் அடங்கி விடுவதற்கும் இடையில் என் மனம் தள்ளாடிக்கொண்டு இருக்கிறது…

என்நேரம் என்னால இரண்டில் ஒன்றை கூட பண்ண முடியாது...

இந்த மாதிரி பக்கவிளைவுகளை எல்லாம் ஏன் யாருமே எண்ணிடம் தெரிவிக்கவே இல்லை?

நான் என்னவோ இதுவரை நாம் யாரையாவது காதலிப்பது என்றால் அவரை நமக்கு மிகவும் பிடித்திருப்பது அவர் மீது நிறைய பாசம் வைத்திருப்பது அப்புறம் நான் கண்ட தம்பதிகள் போல எப்போதும் பிரியாமல் ஒன்றாக இருப்பது என்று தானே நினைத்துக் கொண்டிருந்தேன்…

ஆனால் இவன் விஷயத்தில் எனக்கு எல்லாமே ஆச்சர்யம் தான் ஒரு நொடி அவனை முடியை பிய்க்கும் அளவிற்க்கு வெறுக்கிறேன் அடுத்த நொடி அவனை நெஞ்சில் தாங்கும் அளவிற்க்கு விரும்புகிறேன்…

இதெல்லாம் எனக்கு வேறு உலகத்திற்கும் நுழைந்தது போல் உள்ளது…

ஏதோ சக்கரம் போல காதலுக்கும் வெறுப்பிற்கும் நடுவில் நான் சுற்றிக்கொண்டு என் வாழ்க்கை ஓடுகிறது...


“ரிஸ்...இந்த பருப்பு எல்லாம் ஒரே மாதிரி இருக்கு இதுல எது துவரம் பருப்பு, எல்லோவ் ஒண்ணா வொயிட் ஒண்ணா இல்ல ரெட் ஒண்ணா?” என்று வெண்டைக் காயை பார்த்து எடுத்துக்கொண்டிருந்த அவன் முன்னால் அந்த பருப்புகளுடன் போய் நிர்க்க …

அவன் திரும்பி பார்த்துவிட்டு ‘உன்னை வைத்து கொண்டு என்ன பண்ண போறனோ தெரியவில்லை’ என்பது போல் தலையை ஆட்டிவிட்டு

“நீ வச்சிருக்க மூணும் இல்ல நீ அதைவிட்டு பக்கத்துல பட்டர் இருக்கானு பாத்து எடுத்து போடு நான் வர்றேன்” என்று சொல்லியவாறு அவன் தன் வேலையை மீண்டும் தொடங்கினான்…

இன்றைக்கு நாங்கள் இரண்டு பேரும் ஷாப்பிங் வந்திருக்கின்றோம்...

இல்லை இன்னும் நான் சமையல் கலைல இன்னும் அறுசுவை அரசியாக எல்லாம் ஆகவில்லை இன்னும் எனக்கு பிரேட் ஆம்லெட் நூடுல்ஸ்தவிர வேற எதையும் சமைக்க தெரியாது…

அவன் கிட்ட சொல்லி கேக்கலாமேனு நீங்க கேட்பது கேக்குது ஆனால் அந்த கன்க்ரேட் மலை எனக்கு சொல்லி தந்தால் அவனுக்கு என்ன லாபம்ன்னு கேக்குறான்…

உனக்கு தினமும் சமைத்து போடறேன்னு சொன்னதுக்கு ‘எனக்கு sucide பண்ணனுன்னு ஆசை வரும்போது உன் கிட்ட சொல்லறேன்’ன்னு சொல்லிட்டான்…

ஆமா எனக்கும் அப்பப்போ இவனை லவ் தான் பண்ணரனானு சந்தேகம் வரும் அப்பறம் திரும்ப அவன் முகத்தை பார்த்த உடனே அந்த சந்தேகம் மறந்துடும்...

இப்படியே எனக்குள்ளே பேசிக்கொண்டு ஒரு வழியாக வெண்ணெய் இருக்கும் செக்ஷனுக்கு வந்து விட்டேன்..

அங்கு வெண்ணையை எடுக்க போன எனக்கு திரும்பவும் சந்தேகம் கையில் இரண்டு பேக்குடன் வந்து “சால்டெடா? அன்சால்டேடா?” என்று கேட்டுவிட்டு அவன் பதில் சொல்வதற்கு முன்,

“எப்புடி இதை எல்லாம் கண்டு பிடிக்கிறீங்க சமைக்கிறது ரொம்ப கஷ்டமா இருக்கும் போலயே” என்று கேட்க்க அவன் முகத்தில் நகைச்சுவை எழுந்தது,

இப்ப பண்ண அந்த...அந்த...முழுசா வராத ஸ்மைலை பாத்து தான் எனக்கு இன்னும் முடிவில்லாத ஆழத்துக்குள் விழர மாதிரி பீல் ஆகுது..

உன்னை யாரு ரிஸ் சிரிக்க சொன்னா இனிமே எனக்கு முன்னால சிரிக்காதே….

இல்லை வேணாம் இனி நீ சிரிக்கும்போது எல்லாம் என் முன்னால நின்னு சிறிச்சிக்கோ இல்லனா நான் மிஸ் பண்ணிட போறேன்.

அய்யோ சம்மந்தமே இல்லாம என்னென்னவோ தோணுதே கடவுளே..

“சமைக்க தெரியாம இவ்ளோவ் நாள் எப்படி உயிரோட இருந்தாயோ தெரியல எனக்கு” என அவன் ஆச்சர்யத்தை முகத்தில் வைத்துக் கொண்டு கேட்க,

Okay just come to reality yaseen அவன் ஏதோ கேள்வி கேட்டான் அதுக்கு பதில் சொல்லு..

அஹ்...அவன் என்ன கேட்டான்...அஹ்...சமையல்...ஆமா சமைக்கிறது..food..

“ஹ்ஹ...எங்க வீட்ல ஒண்ணுக்கு மூணு கூக் இருந்தாங்க, என் அம்மா என்ன ஒரு பெரிய்ய பணக்கார ஆளுக்கு கல்யாண பண்ணி கொடுத்து அதை பெருமையா எல்லாரு கிட்டயும் சொல்லிக்கலாம்னு இருந்தாங்க, did you get the idea” அவன் ஏதோ ஒரு ஜாம் பாட்டிலில் expire date பார்த்து கொண்டு இருந்ததால் என் தாமதமான பதிலை அவன் கவனிக்க கூட இல்லை…

‘அவன் என்னை கவனிச்சிட்டா தான் உலகம் அழிஞ்சிடுமே’

“என்னவோ போ என்னால சோர கண்ணுல பாக்காம ரெண்டு நாளை கூட ஓட்ட முடியாது” என்றவாறு இப்போது அவன் *original* துவரம் பருப்பை எடுத்து ட்ரோல்லியில் வைக்க,

“நல்லது எனக்கும் ரைஸ் புடிக்கும் வீட்ல தான் குண்டா போய்டுவேன்னு தரவே மாட்டாங்க”

என்றதோடு எனக்கு என் அம்மா நான் இப்போது சாப்பிடும் உணவில் அளவை கண்டால் மயக்கம் போட்டு கூட விழுந்து விடுவார் என்ற ஒரு என்னத்துடன் மனது இறுக்கமாக ஆரமித்தது..

அவர்கள் என்னை எப்படியும் போ என்று தூக்கி போட்டாலும் என்னாள் அப்படி இருக்க முடியவில்லை... I miss them.. அதுவும் என் அப்பாவையும் என் little sisterரையும் terribly மிஸ் பண்ணறேன்…

உடனே என் தூரம் சென்ற எண்ணங்களை கண்ணால் பார்த்தது போல் அவன் ஒரு முகத்தை வைத்துக்கொண்டு…

“நீ எதுக்கு கொஞ்சம் நாள் அவங்கள ஊருக்கு போய் பார்த்துவிட்டு வர கூடாது…”என்று அவன் கேட்க்க எப்போதும் அந்த கண்ணீர் வருவதற்கு முன் செய்வது போல கண்களுக்கு பின்னால் குத்த ஆரம்பித்தது…

“நான் இங்கே வந்து கிட்ட தட்ட 4 மாதம் ஆகுது ரிஸ் இது வரைக்கும் 20 முறையாவது என் வீட்ல உள்ளவங்க ஒவ்வொருவருக்கும் கால் பண்ணி இருப்பேன்...ஒரு தடவை கூட யாரும் அட்டெண்ட் பண்ணவில்லை...not even my little sister” என்றதோடு என் குரல் நடுங்கியது கண்களில் நீர் தேங்க ஆரம்பித்தது…

அவனோ முகத்தில் முதலில் வந்து போன அந்த அனுதாபத்தை துடைத்து விட்டு “atleast அவங்க எங்கேயாவது ஒரு இடத்தில் சந்தோஷமாகவாவது இருக்கங்களேன்னு நிம்மதியா இரு” என்று கூறிய அவனை நான் எதுவும் புரியாமல் குலப்பமாய் பார்க்க,

எனக்கு தான் மூளை மழுங்கி போய்டுச்சா இல்லனா உங்களுக்கும் அவன் பேசியது எதுவும் புரியலையா?

“சரி சரி… இன்னைக்கு உனக்கு பிடிச்ச பட்டர் சிக்கன் பண்ணலாம்னு இருக்கேன் நான் கேட்ட பட்டர் எங்க போச்சு?” என்று அவன் என்னை திசை திருப்ப ஆசை பட்டது போல் என் கவனமும் சிக்கன் மீது திரும்ப ஆரம்பித்தது…

“really…?” என்று நான் உற்சாகமாக கேட்க்க அவனோ ஒரு பொய் சிரிப்புடன் “இல்லை சும்மா ஜோக்” என்றவாறு அவன் ட்ரோல்லியை தள்ளிக்கொண்டு நகர…

“ஹேய்...ரிஸ்வி...என் சிக்கன் விஷயத்தில் மட்டும் என்னை சோதிக்காத நான் பொல்லாதவள் ஆயிடுவேன்” என்றவாறு கத்திக்கொண்டு அவன் பின்னால் நான் போக அவன் இன்னும் வேகமாக போக ஆரம்பித்தான்…

“டேய் புருஷா நில்லுடா” என்றதுடன் என் பார்வையிலிருந்து மறைந்தான்…

அய்யய்யோ எங்க போனான்னு தெரியலையே எனக்கு வேற வழி தெரியாதே….

எங்கடா போய் தொலைஞ்சே ரிஸ்வி…

.

.

.

அவனை தேடியவாறு நான் அவனை தேடி அலைய அவன் எங்கும் தென்படுவதாக இல்லை…

“யாசீ…” அதற்கு பதில் மிகவும் பழக்கப்பட்ட வேறு ஒரு குரல் என் பின்னால் கேட்டது…

ஹேரியா?

என்றவாறு நான் பின்னால் திரும்பி என் தோழியின் முகத்தை பார்த்தேன்..

“hey ஹேரி பாட்டர் நீ எங்கே இந்த பக்கம்” என்று நான் என்னவோ வழி தெரியாமல் திரு திருவென முழிக்காத மாதிரி ஒரு பாணியில் கூறினேன்...

“சும்மா மால்லை விலைக்கு வங்களான்னு, யூ நோ ஷாப்பிங்” ஹேரி பாட்டர் அவளை போல் பேச ஆரம்பிக்க நானும் சரி கொஞ்சம் டைம் பாஸ் பண்ணலாம் என்று முடிவு செய்து...

“ஓ அப்ப நிறைய டப்பு கொண்டு வந்து இருக்கனுமே” என்று கேட்டுக்கொண்டே நான் என்னை விட்டு ஓடி போனவனை தேடிக்கொண்டிருக்க...

“ஆமா பத்துருபா கொண்டு வந்திருக்கேன், எட்டுருபாக்கு கோரச்சி கேட்டு வங்கலாம்னு இருக்கேன்” என்றவாறு அவளும் அருகில் இருந்த மென்டோஸ் பேக்கை எடுத்து நுகர்ந்து பார்த்து விட்டு மீண்டும் அதை இருந்த இடத்திலேயே வைத்துக்கொண்டு சொன்னால்…

ஆமா அவள் செய்தது எனக்கும் கொஞ்சம் வினோதமாகதான் இருக்கு but after all it's ஹேரி...strange stand for ஹேரி, ஹேரி stands for strange…

இதை பற்றி யோசித்து வேலை இல்லை… அதனால் சற்று முன்பு ஏதோ பேசி கொண்டிருந்தது மறந்து விட்டது என்று நான் யோசித்துக்கொண்டு இருக்க..

“-oh my god யசீ..இங்க பாரு” என்று அவள் என்னை இழுத்து எனக்கு பின்னால் காட்டினாள்..

அவள் காட்டிய காட்சியை கண்டது எனக்கு ரத்தம் கொதிக்க ஆரம்பமானது…

“யசீ..உன் ஆளும் இங்க வந்திருக்கான்டி...ஆனால் அந்த பொண்ணுங்க யாரு…” அதற்கு மேல் எனக்கு ஒன்றும் கேட்கவில்லை என் கண்ணுக்கு தெரிந்ததெல்லாம் கிறீன் டாப் அண்ட் ரொம்ப குட்டி ஷார்ட்ஸ் போட்ட பொண்ணு அவன் கையை தொட்டு தொட்டு பேசுறது மட்டும் தான் திடீரென்று ஏனோ என் தலை சூடாக ஆரம்பிக்கிறது கண்ணில் தெரிவது எல்லாம் சிகப்பாக ஆரம்பித்தது….

.

.

.

.

“ஒய்...ஒய்...நான் சொல்லறது புரியுதா இல்லையா...wait a minute நீ எதுக்கு பசியில் இருக்க ட்ராகுலா மாதிரி முகத்த வச்சிட்டு இருக்கே…?” என்று அவள் கேட்டதற்கு நான் எதுவும் சொல்லாமல் இன்னும் அவன் புறம் கண்களால் அவன் அருகில் நிற்கும் பெண்ணை எரித்துக் கொண்டிருக்க அவளோ எந்த விதமான சேதமும் ஆகாமல் இன்னும் அவனை பார்த்து சிரித்து கொண்டிருக்கிறாள்…

என் கால்கள் தன்னால் அவர்களை நோக்கி நடக்க ஆரம்பித்தது… “ஹேய் யாஸீன் எங்க போய்கிட்டு இருக்க இப்படியெல்லாம் திடீரென்று ஜெலஸி girlfriend ரோல் எல்லாம் எடுத்துகிட்டா அவன் உன்னை பார்த்து பயந்து ஓடிடுவா-” என்ற அவளின் மூணு முனுப்பு அவன் பேச ஆரம்பித்தவுடன் சட்டென்று நின்று விட்டது...

“ இல்லை எனக்கு இந்த cooking items பற்றி எல்லாம் ஒன்னும்- வீட்ல யென் wifeதான்--- யாஸீன் வந்துடியா உன்னை தான் தேடிக் கொண்டிருந்தேன் இவங்களுக்கு மசாலா pick பண்ணறதுல ஏதோ ஹெல்ப் வேணுமாம் உனக்கு தான் தெரியுள்ள எனக்கும் சமையலுக்கும் ஆகாதுன்னு” என்றவாறு அவன் வேகமாய் என்னருகில் வந்து நின்று என் காது பக்கத்தில் …

“இந்த பிசாசு கிட்ட இருந்து என்னை காப்பாற்றி விட்டுட்டு நான் பட்டர் சிக்கன் பண்ணி தர்றேன்…

என்று அவன் என் காதுக்குள் மெதுவாய் கூற எனக்கோ இவளை தாக்கும் எண்ணம் ரெண்டு மடங்காக ஆனது…

“so என் husband கிட்ட என்ன பேசிக்கொண்டு இருந்தீங்கன்னு தெரிஞ்சிக்கலாமா?” நான் வெளிக்கொண்டு வந்த குரலில் அருகில் குழந்தைகள் இருந்தால் நிச்சயம் அழுதிருக்கும்…

என் முன்னால் நிற்ப்பவளோ ஒரு அடி பின்னால் தள்ளி சென்றவாறு இல்லை பிரியாணி மசாலா எந்த பிராண்ட்…” என்றவாறு அவள் குரல் உள்ளே போக எனக்கோ ஒரு பக்க உதடு மட்டும் மேலே தூக்கியவாறு…

“but நீங்க கைல வச்சிருப்பது சாஸ் அதை பிரியானில கொட்டடினாள் கண்டிப்பா அது கேவளமாதான் இருக்கும்…i’m sure அது உங்க ட்ரெஸ்ஸிங் சென்ஸை வீட படு கேவலமாக தான் இருக்கும்...வேறெதாவது ஹெல்ப் வேணுமா…’ பிறகு அவள் முகத்திலிருந் கால்வரை ஏளனமாக பார்த்து என் புருவத்தை தூக்கியவாறு...

“ஏதாவது நல்ல makeup productக்கு suggestions வேணுமா என்று நான் பல்லை  கடித்துக்கொண்டு வாய் மூடி ஒரு புன்னகைக்க அவளோ அதிர்ச்சியில் என்ன சொல்வது என்று தெரியாமல்…

“wha...you...you…”என்று எண்ண சொல்வதென்று தெரியாமல் கோபத்தில் பிதற்ற நானோ நல்ல formமில் இருந்ததால்…

“ஒஹ் திக்குறதுக்கு மருந்தா? அது இங்க இல்லையே maybe நீங்க ஒரு நல்ல psycologistடை consult பண்ணனும்னு நினைக்கிறேன்...என்னதான் உங்க லுக் கேவலமா இருந்தாலும் இவ்வளவு inferiority complex இருக்கிறது நல்லதுக்கு இல்லை-”என்று நான் முடிப்பதற்குள் காலை தரையில் அடித்து விட்டு கிளம்பினாள் யாரோ பெயர்த் தெரியாத பச்சை ஷோக்கா போட்ட பொண்ணு….

அப்புறம் பின்னால் திரும்பி வாயை பிளந்து கொண்டிருக்கும் ஹேரியின் முகத்தை பார்த்தபோது தான் இன்னும் எனக்கொரு வேலை மிச்சம் இருந்தது ஞாபகம் வந்தது...

.

.

.

.

.

ஒருப்புறம் என் தோழியின் முகம் கொஞ்சம் கொஞ்சமாக ஆச்சர்யத்தில் இருந்து புரிதலுக்கு வந்து அதிலிருந்து கோபத்திற்கு மாறிக்கொண்டிருக்க அதை கவனிக்காத என் கணவனோ உற்சாகத்தில் என்னை புகழ்ந்து கொண்டு இருந்தான்…

“ஹேய்...யாஸீன் that was pretty quick... சான்ஸெ இல்ல...இனிமேல் எல்லா இடத்திற்கும் உன்னை கூட்டிட்டு தான் போக போறேன்...யாருக்கு தெரியும் wife வச்சிருப்பது இவ்வளவு usefulலா இருக்கும்னு” என்று அவன் என் தோளை தட்டிக்கொடுத்து கையை போட்டுக்கொள்ள ஹேரியின் பார்வையோ இன்னும் கூர்மை ஆனது…

அய்யோ இப்போ இந்த கரண்ட் பாஸ் ஆகுற பீலிங்ஸ்க்கு எல்லாம் time இல்ல யாஸீன் ஒழுங்கா எதையாவது சொல்லி தோலை...

இதுக்கு மேல முடியாது…

“ரிஸ்வி..என் friend கூட கொஞ்சம் பேச வேண்டி இருக்கு...ஒரு 2 minute கொடு” என்றவாறு நான் அவனிடமிருந்து கொஞ்சம் சிரமப்பட்டே விலக அவனோ மீண்டும் என் கை பிடித்து இழுத்துக்கொண்டு பேச ஆரம்பித்தான்…

அய்யோ வீட்ல எவ்வளவு நேரம் இருக்கு அப்போ எல்லாம் தொடாமல் என் friend அங்கே லேசர்ல எரிக்கும்போதா என் கைய்யை புடிக்கணும்…

அப்போவே ரொம்ப கஷ்டப்பட்டு நகர்ந்து வந்தேன்...என்ற எண்ணத்துடன் மீண்டும் மிக வருத்தத்துடன் நகர்ந்து வந்து..

“அதெல்லாம் நான் அப்பறம் சொல்லேறேன் 2 மினிட்ஸ் இப்போ வந்து விருக்கிறேன்”

என்றவாறு ஹேரியை இழுத்துக்கொண்டு வேறு புறம் சென்று….

“I will explain-” என்று நான் முடிப்பதற்குள்…

“என்ன explain பண்ண போற நீ சூப்பர் ஹேண்ட்ஸோம் ரிச் husband வச்சிருக்குறதை என் கிட்ட மறைத்ததையா? இல்லை வீட்ல இருக்குறவனை ஆஃபீஸ் வரைக்கும் போய் ஸ்பை பண்ணறியே அதையா? இல்ல இது எல்லாத்துக்கும் என் கிட்டயே ஹெல்ப் கேட்டியே அதையா?...அண்ட் அவன் உனக்கு பட்டர் சிக்கன் பண்ணி தர்றேன்னா சொன்னான்?” என்று அவள் ரொம்ப சீரியசான ஒரு முகத்தை வைத்துக்கொண்டு கேட்க்க

முதலில் என்ன...எதற்க்கு பதில் சொல்வது புரியவில்லை…

“yeah...he makes this butter chicken to kill for..” என்று உணவை மூலையில் ஏற்றி கொண்ட எனக்கு பேசுவதெல்லாம் உணவாகவே வர அவளும் அதற்கு ஏற்றாற்போல…

“really...அப்போ dinnerக்கு உன் வீட்டுக்கு வர்றேன்னு உன் hazel eyed husband கிட்ட சொல்லிடு” என்றிட எனக்கோ ஒரே குழப்பம்…

“what???”

“ஆமா நீ என் கிட்ட பொய் சொல்லி இருக்க அப்போ கண்டிப்பா எனக்கு நீ ஒரு தடவை யாவது சோறு போட்டே ஆகணும்” என்றவாறு அவள் நேராக ரிஸ்வின் அருகில் சென்று

அவன் தோலை தட்டி “ஹலோ i am ஹரிணி  உங்க wife ஓட only friend...actually நான் தான் அவளுக்கு உங்க கம்பெனியில வேலை வாங்கி கொடுத்தது...அப்பறம் ஒரு தடவ யாருக்கும் தெரியாமல் உங்கள் ஆஃபீஸ் குள்ள வேவு பார்க்க விட்டது கூட நான் தான்… உங்களை அவள் வில்லன் என்று சொன்னப்ப க்கூட நான் தான் அப்படி எல்லாம் இல்லை அவ்வளவு அழகா இருகவங்க வில்லனா இருக்க சான்ஸ் இல்லை  கண்டிப்பா ஹீரோ தான்னு சொன்னே...அப்பறம் ப்ரோ...இன்னைக்கு நான் உங்க வீட்டுக்கு சாப்பிட வர்றேன் எனக்கும் சேர்த்து சிக்கன் வாங்குங்க...actually நிறைய வாங்குங்க” என்று கூறியவாறு அவள் நீட்டிய கையை வெகுநேரம் அவன் வினோதமான பார்த்து விட்டு...

அங்கு இதையெல்லாம் திகில் படத்தை பார்ப்பது போல் விரல் ஓட்டையின் வழியாக பார்த்து கொண்டிருந்த எனக்கோ ‘எப்படி friendsஅ கூட உன்னை மாதிரியே பிடிக்கிற’ என்பது போல் ஒரு பார்வை விட்டுட்டு காடேசியில் அவள் கையை மதிக்காமல் ட்ரோல்லியை உருட்டிக் கொண்டு பில்லிங் கொண்டேருக்கு சென்று விட்டான்…

“நீ சொன்னது கரெக்ட் தான் யாஸீன் வில்லன் தான் ஹீரோ இல்லை அவனை விட்டுட்டு” முகத்தை சுருக்கியவாறு என்னருகில் வந்து பேச ஆரம்பித்தவள்

பிறகு யோசித்துவிட்டு…”but வெய்ட் பண்ணு அவன் சிக்கன் எப்படி இருக்குன்னு டேஸ்ட் பண்ணிட்டு அப்பறம் விட்டடலாம் என்ன சொல்லற என்ற அவளின் யோசனைக்கு என்னிடமிருந்து பதில் வராமல் இருக்க அவள் என்னை பார்த்தாள்…

“உண்மையை சொல்லு நான் இவ்வளவு நாளாக உன்கிட்ட சொல்லாததுக்கு தானே இப்ப நீ என்னை பழி வாங்குற” என்று நான் அவளிடம் கேட்க்க அவளோ சிரித்துக்கொண்டு…

“அப்படியும் இருக்கலாம்...ஹேய் அங்க பாரு உன் புருஷன் பில் போட்டான்...வா நம்ம வீட்டுக்கு கிளம்பலாம்” என்றதுடன் என்னை அங்கிருந்து இழுத்துச் செல்ல ஆரம்பித்தாள்…

.

.

.

.

.

அப்போது நான் சிக்கணுக்காக வெங்காயம் வெட்டிக் கொண்டு இருக்க ரிஸ் அடுப்பில் இருக்கும் அந்த pan இடுத்து அதில் இருப்பதது தூக்கி போட்டு பிடித்துக் கொண்டே அந்த கேள்வியை கேட்டான்…

“so அது தான் ஹேரியா?” அவன் கேட்டதற்கு நானோ சோஃஆவில் மடியில் லேஸ் பேக்கும் கையில் கோலா பட்டிலுமாக டீடேபிளில் மீது அமர்ந்தவாறு கிரிக்கெட்டிற்கு இங்கு ரன்னிங் கமேன்டெரி கொடுத்து கொண்டு இருக்கும் என் தோழியை கண்டு தலையாட்ட போன எனக்கு அப்போது தான் நினைவுக்கு வந்தது…

“நான் உன் கிட்ட அவளை ஹேரினு கூப்பிடுவேன்னு சொல்லவே இல்லையே...அதோடு நேத்து வரைக்கும் நீ boyfriend ஹேரின்னு தானே என்னை வெறுப்பேத்திட்டு இருந்தே இப்போ எப்படி கண்டு பிடிச்ச…” என்ற என்னை கண்டு அவனோ

“ஹலோ நீ boyfriendன்னு சொன்ன உடனே நம்பறதுக்கு எனக்கு என்ன தலைல எதுவும் இல்லன்னு நினைத்தாயா? உன் boyfriend பற்றியா என் அம்மா கிட்டயும் farah கிட்டயும் இவ்வளவு ஈஸியா பேசிட போற….லாஜிக் இடிக்கல உனக்கு...எனக்கு அது உடான்சுன்னு அன்னிக்கே தெரியும் சும்மா உன்னை கோப படுத்தி timepass பண்ணிட்டு இருந்தேன்…” என்றவாறு அவன் நான் வெட்டிய வெங்காயத்தை எடுத்து அந்த சிக்கெனில் கொட்டிகொண்டு இன்னும் பேசி முடிக்காதது போல...

“அப்பறம்…” என்றதற்கு நான் தலையை தூக்கி அவன் முகத்தை பார்க்க அவனோ சிறு புன்னகையுடன்…

Oh please brain...அப்படியே ஸ்டக் ஆயிடாதே concentrate…

என்று என் மூளையை வலியுறுத்தி அதை அவன் சொல்ல வந்ததை கேட்க்க வைக்கவோ…

“அப்பறம் நீ வேற என் லுக்க பார்த்து...விழுந்து என் மேல் ஹெட் ஓவர் ஹீல்ஸ்ல சுத்தர...நீ எங்கே..” என்று அவன் எண்ணிடம் ஒரு நொடி கண்ணை திருப்பிவிட்டு மீண்டும் அந்த சிக்கனில் கவனத்தை செலுத்த…

எனக்கோ வெட்கத்தோடு கோபமும் வந்தது…

How dare you...எனக்கு அப்படி ஒரு கிஸ்ஸயும் தந்துவிட்டு என்னை டீஸ் பண்ணவும் செய்யற...

“ஹலோ யாரு சொன்னது நீ அவ்ளோவ் அழகுன்னு நீ ஒண்ணு அவ்ளோ அழகால்லாம் இல்ல...அதோட உன்னை பார்த்து பிடிச்சதெல்லாம் பாஸ்ட்...அதுவும் ஆபீஸ்ல உன்னோட மான்ஸ்டர் ஹெட்ட பார்ப்பதற்கு முன்னால இப்பல்லாம் அப்படி எதுவுமே இல்லை” என்று நான் அவன் கண்ணை தவிர்த்து கொண்டு அருகில் இருந்த cutting boardடை பார்த்து கூற…

“oh..really...so..அப்படி என்றால் இப்போ உனக்கு என்னை புடிக்காது ரையிட்?...அப்போ எதுக்காக நீ என் கம்பெனிக்கு வேலைக்கு சேர்ந்தேன்னு சொன்ன…” என்று அவன் திடீரென்று என் கையை இழுத்து அவனை பார்க்கவைத்தவாறு கூற எனக்கு வார்த்தைகள் திக்க ஆரம்பித்தது…

“அ...அது...வந்து...எனக்குன்னு ஏதாவது...savings வேனுமல்ல அதுதான்” என்று நான் அவன் தோலுக்கு அருகில் இருக்கும் இடத்தை பார்த்துக்கொண்டு கூற அவனோ இன்னும் அருகில் வர ஆரம்பிக்க நான் பின்னால் கால் எடுத்து வைக்க ஆர்பித்தேன்...

“ஒஹ் அப்படியா… அப்போ இன்றைக்கு ஷாப்பிங் மால்லில் அந்த பெண்ணை கடிச்சி கோதரப்போனது?” இந்த முறை அவன்  என்னை பின்னால இருந்த கபோர்டின் மீது தள்ளி முகத்தை பிடித்து அவன் கண்ணை பார்க்கசெய்து “என்னை பார்த்து பேசு” என் கன்னங்கள் சூடாக ஆரம்பித்தன மீண்டும் என் மூலை ஓவர்லோட் ஆகி நின்று விட என் வாயை திறந்தால் வார்த்தைகளுக்கு பதில் காற்று தான் வந்தது…

“அப்போ இதற்கு என்ன அர்த்தம்” என்று அவன் ஏதோ ஆராய்ச்சி செய்வது போல என்னை பார்த்து கொண்டு என் கன்னத்தில் அவன் கட்டை விரல்களால் தழுவ என் கன்னம் முன்பை விட இன்னும் சூடாகனது…

“நான் பக்கத்துல வரும்போது மட்டும் எதுக்கு உன் கன்னம் இப்படி பிங்க் கலர்ல போகுது?..அதுக்கு என்ன அர்த்தம்…” அவன் ஒவ்வொரு வார்த்தைக்கும் அவன் குரல் தாழ்து போவது என் முதுகெலும்பில் ஏதோ மின்னல் வெட்டுவது போல் பாய ஆரம்பித்தது….

அப்பறம் எனக்கு ஏன் திடீர்னு மூச்சு தினருது…

இவன் எதுக்கு இன்னும் என்னை எதையோ ஆராய்வதுபோல் பார்த்துக் கொண்டிருக்கிறான் அவன் கண்களில் நான் அன்று கண்டது போல் இருள் சூழ்ந்து இருக்கிறது...அது என்ன மோகமா? ஆசையா?

இப்படியே போனால் ரத்தம் மூளைக்கு ஏறி தலை வெடிச்சிட்ட என்னாகுறது...எனக்கு என்ன ஆகிக்கிட்டு இருக்கு ...

மூச்சு…

Oh my god...மூச்சு விட முடியல…

ஏதாவது செய் யாஸீன் செத்துடாத…

“ha...ஹேரி..கூ...கூப்பிடரான்னு நினைக்கிறேன்” என்று அது பாதி சத்தமாகவும் பாது மூச்சாகவும் வந்திட அவன் முகத்திலோ முன்பிருந்த அந்த வினோதமான பார்வை போய் இப்போது ஒரு எரிச்சல் கலந்த பார்வை வந்திட…

அவன் பின்னால் தள்ளி போக ஆரம்பித்தான்..

ஹப்பா...யாஸீன் இன்றைக்கு உயிர் தப்பிச்சிட்டே’ என்றவாறு இப்போது தான் மூச்சு வந்தது…

“you do know i don't like her right?” என்று அவன் முகத்தை சுருட்டிக்கொண்டு கேட்க்க…

என்று அவன் கூறியதற்கு நான் கண்ணை உருட்டிவிட்டு பதில் கூறாமல் கிட்சேனில் இருந்து செல்ல ஆரம்பித்தேன்…

‘இப்போ எனக்கு கூடத்தான் அவளை பிடிக்கலை இவ்வளோவு நாள் எதிர்பார்த்து இப்போ எதுக்கு சோதப்பின யாஸீன்..’

நான் ஹல்லிற்குள் வருவதை கண்டதும் ஹேரியோ மீண்டும் அவள் விட்ட புராணத்தை தொடர ஆரம்பித்தாள்…

“seriously அவன எதுக்கு உனக்கு பிடிக்குது யாஸீன்...such a jerk...யாராவது wifeஓட friendவீட்டுக்கு வரும்போது இப்படி பண்ணுவங்களா சீரியோசலி யாசின் அவனுக்கு என்ன சுத்தமா பிடிக்கல அவன் மூஞ்ச பாத்தாலே தெரியுது...கண்டிப்பா சொல்லறேன் நான் வீட்டுக்குள்ள வர்றதுக்கு முன்னால என் facela அவன் கதவை சாத்துனது மிஸ்டேக்கா இருக்க சான்ஸே இல்ல அவனுக்குள்ள ஒரு evilness இருக்கு கவனிச்சியா….அவன் வேணாம் யாஸீன் அவனை டிவோர்ஸ் பண்ணிட்டு” என்று அவள் கூறிட...நான் மீண்டும் கண்ணை உருட்டினேன்…

“அப்போ பட்டர் சிக்கன்?” எந்தது நான் கேட்டக்க அவளோ வாய்க்குள் இன்னும் கொஞ்சம் சிப்ஸை திணித்துக்கொண்டு…

“நீ என்ன லூசா அதுதான் அல்ரெடி நயிட் ஆயிடுச்சில இப்ப எந்த கோர்ட் திறந்திருக்க போகுது...நம்ம நயிட் பட்டர் சிக்கன் சாப்பிட்டு விட்டு நாளைக்கு டிவோர்ஸ் பண்ணிக்கலாம்”

அத்தோடு இவர்கள் இருவரின் சேட்டையும் முடியவில்லை…

சாப்பிட ஆரம்பிக்கும் போது ஹேரியின் நாற்காலி அமானுஷயமாக காணாமல் போனதால் அவள் பின்புறம் பேந்ததிலிருந்து…

பாத்திரத்தில் இருந்த குழம்பும்... டம்ளரில் இருக்கும் ஜூஸும் சரியாக ரிஸ்வின் சட்டையின் மீது அமர்வது வரைக்கும் எல்லாம் மர்மமாக நடக்க இருவரும் மாற்றி மாற்றி அந்த பொய் sorryகளையும் கூறிக்கொள்ள... இன்னும் ‘நான் ரொம்ப நல்லவன்\ள்’ என்ற முகத்துடன் தான் டைனிங்டேபிளில் அமர்ந்திருக்கின்றனர்…

‘எவ்வளவு நேரத்திற்கேன்பதை பார்க்கலாம்’

.

.

.

.

“mi பத்தி தப்பா பேசாத எனக்கு கேட்ட கோபம் வரும் போன தடவை நாங்க தானே வின் பண்ணினோம்” என்று ஹேரிகையை டேபிளில் அடித்தவாறு கூறினால்

“அதெல்லாம் நாங்க காலத்தில் இல்லாம போனதால்...அப்பறம் உங்க mi பத்தி நல்ல சொல்லர மாதிரி ஏதாவது சொல்லேன்....போன மேட்ச்ல தான் உங்க miயை தான் எங்க தல பந்தாடிட்டாருல” என்று ரிஸ்வி ஏதோ அவனே வெற்றி பெற்றது போல் ஒரு முகத்துடன் அந்த பரோட்டாவை வாய்க்குள் வைக்க..

“ஹேய் என்னை பிடிக்கலன்னா என்கிட்ட நேராய் சொல்லு என் டீம் பத்தி பேசறது எல்லாம் வச்சிக்காதே….இந்ததடவ கப் -”

“இந்த தடவையும் கப் cskக்கு தான்...அமா எனக்கு உன்னை புடிக்கல அதுக்காக நீ என்ன போய்டவா போற? ” என்றவனை மூச்சு வாங்கிக்கொண்டு சுட்டெரிக்கும் கோபத்தில் அவனை பார்த்த ஹேரி திடீரென்று என்புறம் திரும்பி…

“இவன் வேணாம் யாசின் இவனை நீ டிவோர்ஸ் பண்ணிட்டு” என்றிட அவனோ பதிலுக்கு…

“இவள் வேணாம் யாஸீன் இவளை unfriend பண்ணிட்டு” என்று அவன் அமைதியாக கூற

..

“யாஸீன்”

“யாஸீன்”

இன்று இருவரும் அழைக்க அத்துடன் என் பொறுமை எல்லை கடந்து விட்டது…

“shut up guys...இப்போ உங்களுக்கு என்ன பிரச்சனை...உங்க ரெண்டுபேருக்கும் ரெண்டுபேரையும் பிடிச்ச ஆகனும்னு நான் சொன்னனா…” இத்துடன் ஹேரி இடம் திரும்பி “அவன் என் husbandஅவனை எனக்கு பிடிச்சா போதும்” பிறகு அவனிடம் திரும்பி “உனக்கும் தான் சொல்லேறேன்” என்றவாறு நான் மீண்டும் சாப்பிட தொடர அவர்கள் இருவரும் மாற்றி மாற்றி முறைத்துக் கொண்டிருந்தனர்..

‘இவங்க ரெண்டு பேரையும் இனி மீட் பண்ணவே விட கூடாது its a horrible combo’

ஆனால் கடவுள் என்னை அவ்வளவு சாதாரணமாக விட்டு விடவில்லை அன்று தான் miக்கும் cskக்கும் மேட்ச்…

‘seriously யாரு ஜெய்ச்சா எனக்கென்ன இவன் இதுவரைக்கும் என் lifela ஒரு மேட்ச் கூட பார்த்ததில்லை எனக்கு இதெல்லாம் தேவையா?’

அப்படி நான் நினைத்ததினாலோ என்னவோ இந்த வெறுப்புகள் தொடற அன்றிலிருந்து ஒவ்வொரு நாளும் அவர்கள் இருவருக்கும் இடையிள் நான் எலிபோல் சிக்கி கொண்டு முழு ipl season னையும் பார்க்க வேண்டியதாய் போனது…

ஆனால் முடிவில் என்னவோ அவர்களின் வெறுப்போடு சேர்ந்து ஒரு வினோதமான நட்பு இருவருக்கும்…

அதாவது என்னதான் இருவரும் எப்போதும் போல அவர்களின் வீண் விவாதத்தை சலிக்காமல் தொடர்ந்தாலும் தினமும் எங்களுக்கு முன்னாள் ஹேரி வீட்டிற்குள் chips பேக்கும் கையுமாக அமர்திருப்பது உள்ளேவந்ததும் அவன்  ஸ்கோர் கேடப்பதும் பிறகு மீண்டும் நேற்று ஆரம்பித்த விவாதத்தை தொடர்வதும் கடேசியாக மூவரும் மேட்ச் கடேசி தருணங்களை சத்தம் எழுப்பாமல் சீட்டின் நுனியை பார்த்துக் கொண்டிருப்பது தினமும் நடக்கும் வழக்கம் போல் ஆகி விட்டது…

ஒஹ்...இன்னும் ஒரு விஷயத்தை சொல்லாமல் ஓட்டுட்டேனே…

கடேசியாக ஹேரி அந்த கேள்வியை அன்று காலேஜ் கேன்டீனில் வைத்து கேட்டாள்…

“so எதுக்காக நீ உனக்கு கல்யாணம் ஆனதை பற்றி என் கிட்ட சொல்லாமல் மறைத்தாய்? இப்போ சொல்லு நான் free யா இருக்கேன்” நான் ஓராயிரம் தடவை அவளிடம் இந்த கேள்வியை கேட்க்க மாட்டாயா என்று கேட்ட பிறகு அன்று தான் கேட்டாள்…

“இல்லை நான் தான் சொன்னேன்ல்ல...எங்க ரெண்டு பெருக்குள்ளையும் கொஞ்சம் பிரச்சனைன்னு அது அவன் ஆரம்பத்தில் இருந்தே டிவோர்ஸ் பண்ணிக்கலாம்னு சொள்ளிக்கிட்டு இருக்க்கான்...அன்னைக்கு நீ வேறு அவன் அப்படி இப்படின்னு ரொம்ப புகழ்ந்து கொண்டு இருந்தே அது தான்...கொஞ்சம் வருத்தம்...கொஞ்சம் சந்தேகம்… கொஞ்சம் embarrassment…அது தான்…” என்று நான் ஏதோ உலரிட அது எனக்கே புரியவில்லை ஆனால் அவளுக்கு ஏதோ புரிந்து விட்டது போல் முகத்தை வைத்துக்கொண்டு…

“அவனை நீ லவ் பண்ணாதே பெரிய விஷயம் இதுல அவன் இதை எல்லாம் சொல்லரானா? சரி விடு...இருந்தாலும் அந்த jerkகை போய் உனக்கு பிடித்து இருப்பது என்னால் இன்னும் நம்ப முடியவில்லை’ என்றதோடு அந்த காப்பியை வாயில் வைக்க போனவள்…

“அப்பறம் இன்னைக்கு என்ன டின்னர்…”

A/N: indha chapteril ungukku pidiccha partai en kitta sollunga...
Harry and riz relationship patri enna ninaikkureenga?...
Vote and comment your opinions
....











Bạn đang đọc truyện trên: Truyen247.Pro