Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

என் முன்னால் காதலி - 4

முன்னால் காதலி...உன் பொய்கள் தந்த தித்திப்பில் மயங்கி கிடந்தேன், உண்மை கசக்கும் வேளையில் மயக்கம் தெளிந்தேன்.

லிரிக்: மதன் கார்கி

"என்ன road அ cross பண்ணனுமா" என்று நான் கேட்க அவனோ தன் முடியை தானே பிய்த்து கொள்ள போவது போல் என்னை ஒரு பார்வை பார்த்தான், பிறகு...

"இல்ல வெள்ளை கலரில் தலையில் கொம்பு வச்ச பிறக்கின்ற குதுரை ஒண்ணு வரும் அதுல ஏறி நம்ம பறந்து அந்த சைடு ரோடுக்கு போக போறோம்" என்று சொல்ல நானும் ஒரு நிமிடம் அது உண்மையாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைத்து எனக்கு ஒரு புன்னகை வர ஆரம்பித்தது ஆனால் அதற்குள் அவன்,

"சிரிக்காத யாசீன் நான் அதை சிரிக்கிறதுக்காக சொல்லல, உன் கேள்விக்கான original பதில் ஆமா நம்ம ரோட்டை cross பண்ணிதான் போய் ஆகணும் இப்ப நீ என்னோட வரலென்ன உண்ண விட்டுட்டு நான் கெலம்புறேன்" என்று அவன் அங்கிருந்து கிளம்ப நானோ பதறிப்போய,

"ரிஸ்வான், ரிஸ்வான் போகாதே please எனக்கு road cross பண்றதுன்னா பயம் காலைல பரவா இல்ல எதுவும் இல்லை இப்ப??" என்று நான் அவனை பயத்துடன் பார்க்க அவன் வழக்கம் தவறாமல் முறைக்க,

"இரு" என்று சொல்லிவிட்டு அவன் சட்டை கையை என் இரு கை விரல்களாலும் இறுக்கமாய் பிடித்து கொண்டு,

"ok இப்போ கிளம்பு" என்று நான் கூற முதலில் என்னை ஏலியன் போல் பார்த்தவன் பிறகு திரும்பி பார்க்காமல் நடக்க ஆரம்பித்தான், நானும் கண்ணை இருக்க மூடிக்கொண்டு அவனுடன் நடந்தேன்,

ஒரு வழியாக அடுத்த முனையை சென்றடைந்த உடன் " ரோடை cross பண்ணியாச்சு இப்போ என் கைல drill போடுறத நிறுத்துரியா? எனக்கு ரத்தம் வந்துட போகுது" என்று அவன் கூற நான் உடனே கைகளை எடுத்த்துக்கொண்டேன்,

எங்கள் நல்ல நேரம் அப்பொதென்று மழை பொழிய ஆரம்பித்தது,

இருவரும் முதலில் ஒரு கஃபே வாசலில் தொற்றிக் கொண்டு நின்றவர்கள் சற்று நேரம் நேரம் கழித்து அவனே "மழை இப்போ நிக்கற மாதிரி தெரியல வா பக்கத்துல ஒரு ரெஸ்டுறேன்ட் இருக்கு நம்ம போய் அங்கேயே சாப்பிட்டுட்டு மழை நிக்கிற வரைக்கும் அங்கேயே வெய்ட் பண்ணலாம்" என்றான்,

அவன் சொன்ன பிறகுதான் என் பசி திரும்பவும் தலை தூக்கியது...

நானோ அவனை கண்ணை விரித்து பார்த்து கொண்டிருக்க அவனோ வாரக்கணக்கில் உணவை பார்க்காத காட்டுவாசி போல் உணவை விழுங்கி கொண்டு இருந்தான்,

சற்று நேரம் கழித்து "என்ன?" என்று அவன் வாயில் உள்ள உணவுடன் கேட்க்க, நான் சுற்றி முற்றும் பார்த்து விட்டு,

"ஏன் இப்படி சாப்பிடற? பார்க்கிறவர்கள் எல்லாரும்-" என்று நான் முடிப்பதற்கு முன்,

"பாக்கிறவங்க எல்லாரும் என்ன மாதிரி night ல இருந்து சாப்பிடாம இருந்திருப்பங்களா? இல்லை நான் சாப்பிடலன்னு அவங்களும் சாப்பிடாம இருந்தார்களா? உனக்கு இதுதான் பிரோப்ளேம் யாசீன் எல்லாரும் என்ன நெனப்பாகன்னு ரொம்ப யோசிக்கிற, ஆனால் practical அ பார்த்தா அவங்க life ல நீ just ஒரு flash தான், உண்ண பத்தி எல்லாம் ரெண்டு தடவைக்கு மேல அவங்க யோசிக்க சான்ஸ் கூட இல்லை, அப்படி பட்டவங்களுக்காக உன் life ஸ்டைலை மாத்திக்கிறது உன் முட்டாள் தனம்"

என்று அவன் சாப்பிருவதை நிறுத்தாமல் பேசிகொண்டிருந்தான்,

அவன் முடித்த நேரத்தில் நான் யோசிப்பதை நிறுத்தி விட்டு என் வயிறு கூறுவதை கேட்க்க ஆரம்பித்து விட்டேன்,

"என்ன ரிஸ்வான் நான் போன அப்பறம் பழைய manners வந்துடுச்சு போல" என்று என் வலது புறம் குரல் கேட்ட பிறகு தான் நான் உணவிலிருந்து தலையை தூக்கினேன்,

அவனோ இன்னும் உணவில் இருந்து கண்ணை அகற்றாமல்,

"சில்லறை இல்ல போமா, வேணும்னா ஏதாவது சாப்பிட்டு மிச்சம் இருந்தால் நாங்க போன ஒடனே எடுத்துக்கோ" என்று கூறி கொண்டே உண்டான்,

"பழைய attitude கூடவே வந்திருக்கு போல" என்று அவள் தொடர அப்போது தான் அவள் முகத்தை பார்த்தேன்,

பார்க்க என்னவோ உயரமும் அழகும் குறைவில்லாமல் தான் இருந்தால், ஆனால் அவள் முகத்தில் இருந்த ஏதோ ஒன்று என்னை நச்சரித்தது,

நான் அவளை பார்ப்பதை கண்டு அவள் கண்கள் ஒரு நொடி என் பக்கம் வந்தது பிறகு திரும்பவும் அவன் புறம் சென்று,

"இது யாரு உன் புது girlfriendஅ, இன்னும் எவ்வளவு நாளைக்கு தான் என்ன மறக்க முடியாம எப்படி ஒவ்வொரு பொண்ணா மாதிக்கிட்டு இருக்க போற, நீயும் settle ஆகணும்ல" என்று அவள் கூறவும் என் மனத்திற்குள்ளோ ஆயிரம் கேள்விகள்,

யார் இவள்?

இவனுக்கு யார் இவள்?

காதலியா?

ஒரு தலை காதலா?

என்று என் மனம் இந்திய எல்லையை தாண்டி ஓடி கொண்டிருந்த சமயத்தில் அப்போது தான் அவன் தலையை தூக்கி அவளை பார்த்து மிக இயல்பான குரலில்,

"ஓ இன்றோடுஸ் பண்ண மறந்துட்டேன்ல, mumu meet my wife yaseen azeez, இவள் என்ன control பண்ண மாட்டா, குறை சொல்ல மாட்டா, முக்கியமா என் currunt பாஸ் கூட affair வச்சிருக்க மாட்டா பாவம் ரொம்ப நல்லவ நீ தான் ஏதாவது கற்று கொடுக்கணும், அப்பறம் யாசீன், இது தான் நான் உன் கிட்ட சொன்ன ex wife இவள பத்தி சொல்ல பெருசா ஒன்னும் இல்ல correct ட சொல்லனும்னா ஒரு சில முக்கியமான details ச தவற வேற எல்லாம் மறந்து போயிடுச்சு...டிவோர்ஸ் ஆகியும் 2 years ஆகுதுள்ள, அப்புறம் நீ என்ன சொல்லிக்கிட்டு இருந்த முமு" என்று அவன் அவளை பார்க்க அவளுக்கோ முகம் சிவந்து கதிலிருந்து புகை வர,

நானோ ஒன்றும் புரியாமல் திருதிருவென முழித்து கொண்டு இருக்க,

அவள் மீண்டும் என்னை பார்த்து,

"ஒரு advice மட்டும் பண்ணிக்கிர்றேன் மறந்துடாத, உன் life ல எந்த இடத்துளையும் இவனை நம்பிடாத or you will be destroyed"

என்று அவள் மிக கவனமாக என்னை பார்த்து கூற,

பக்கத்தில் அவனோ ஒரு நமட்டு சிரிப்புடன்,

"சொல்றது யாருன்னு பார்ரா?" என்க அவள் கடேசியாக அவனுக்கு ஒரு சுடு பார்வை வீசிவிட்டு மறைந்தாள்,

பிறகு என் நிலமையோ, "what the hell was that?" என்று நான் கூற அவனோ,

"don't even get started with that" என்று கூறியவாறு கைகழுவச் சென்றான்,

நேற்று இரவுக்கு முன் இதுவரை அவனும் அந்த சந்திப்பை பற்றி எதுவும் சொன்னதுமில்லை, நானும் அதை பற்றி அவனிடம் கேட்டதுமில்லை...

காரணம் அன்று அவள் கோபமாய் முகத்தை திருப்பி விட்டு நடந்த போது அவள் முதுகின்மீது அவன் வீசிய பார்வை,

அது இன்னும் என் கண்களில் இருந்து அகலவில்லை,

அந்த பார்வையில் நான் பார்த்த அந்த மனிதன் துரோகத்தில் அடி பட்டு தனிமையில் உடைந்து சிதைந்து கொண்டிருந்த மனிதனின் பார்வை அது,

ஆனால் அடுத்த நொடி அது அவனின் வழக்கமான வெற்று முகமாக மாறி போனது,

அவனுக்கு ஆறுதல் சொல்ல வேண்டும் என்று எனக்கு தோன்றவில்லை அது அவனுக்கு பிடிக்காது என்று எனக்கு நன்கு தெரியும்,

நேற்று அவன் யாரையும் விரும்பவில்லை என்று என்னிடம் சொல்லி இருக்கலாம், ஆனால் இன்னும் அவன் இதயத்தில் அவள் போட்ட துளை இன்னும் துளையாக தான் இருக்கிறது என்று மட்டும் எனக்கு தெரியும்,

இன்று காலை எழும்போது இந்த என்னோட்டங்களோடு தான் எழுந்தேன்,

இன்று கல்லூரியில் சேரும் நாள் என்பதால்

இன்று நான் வழக்கத்தை விட முன்னதாகவே எழுந்தேன்,

இன்னும் அவன் படுக்கையில் தான் இருக்கிறான் என்பதை உறுதி செய்து விட்டு இருவருக்கும் டீ போட்டவாறு, இன்று செய்ய வேண்டிய வேலைகளை கணக்கிட்டு கொண்டியிருந்தேன்,

சரியாக நான் செய்தித்தாளை பிரித்து படித்துக்கொண்டே ஒரு கையில் குவலையை தூக்கி இதழ்களில் வைக்கும்போது அவன் அறையில் இருந்து அரை தூக்கத்தில் வெளியே வருவதை கவனித்தேன்,

அவன் கிச்சனில் பொய் முதலில் அவனுக்கு வைத்திருந்த டீ யை கவனித்து விட்டு பிறகு என்னை பார்த்தான், காலையிலேயே சத்தம் போட சக்தி இல்லாததால்,

அந்த டீ யை அவனும் ஒரு குவலையில் ஊற்றிக்கொண்டு என் எதிரில் அமர்ந்து என் அருகில் இருந்த இன்னொரு தாளை எடுத்து பார்க்க ஆரம்பித்தான்,

'அடச்ச்சே என்னடா இது மொழி தெரியாத இடத்துல வந்து இருந்துகொண்டு எல்லாம் கச்சா முச்சான்னு english ல இருக்கு' எனக்கு நானே புலம்பிக்கொண்டு செய்தி தாளை பார்த்தபடியே "இன்னைக்கு காலேஜ்ல register பண்ண போறோம்" என்று நான் ஆரம்பித்தேன்,

"ம்ம்ம்" என்றான் அவனும் அதிலிருந்து கண்ணை எடுக்காமல்,

நான் அவன் புறம் திரும்பி "farah தான் என்னை pick up பண்ண வர்றா" என்க,

அவன் அதுக்கும் ஒரு "உம்மம்" கொட்ட,

"அவதான் எங்க ரெண்டு பேரையும் drive பண்ண போராலாம்" இது அவன் கவனத்தை ஈர்த்தது,

அவன் முகம் வெற்று முகமாக இல்லாமல் அதில் கொஞ்சம் கரிசனம் தோன்றியது,

"ஹாஹ்?" என்று அவன் என்னை கேள்வியாய் பார்க்க நான் அவன் புறம் திரும்பி,

"ம்ம்ம் நேத்து தான் அவள் லைசென்ஸ் கிடைச்சதுன்னு சொன்னால்" அவன் முகமோ அந்த பதிலுக்கு கரிசனத்திலிருந்து கோபமாக மாறியது,

"ஏன் அவன் புருஷன் அவளுக்கு டிரைவர் வைக்கிறதுக்கு வக்கில்லாமய அவ்வளவு சம்பாரிக்கிறான்" என்று அவர்கள் திருமணத்தில் அவனுக்கு இருக்கும் கசப்பை அவன் வெளிப்படையாக காட்ட,

Fazil விஷயத்தில் இவன் எப்பொதும் இப்படித்தான் என்று தான் தோழியின் கருத்தை நினைவில் கொண்டு அதை பொருள்படுத்தாமல்,

"இல்ல அவரு வேணானுதான் சொன்னாராம், அவள் தான் இல்லனா காலேஜ் போக மாட்டேன்னு சொல்லிட்டாளாம்"

விளக்கம் கொடுத்தும் விரியவில்லை அவன் முகம்,

"ok அவள பாத்து drive பண்ண சொல்லு, காலேஜிக்கு late அ போனா ஒன்னும் தப்பில்லனு மெதுவாகவே போக சொல்லு" என்று சொல்லிவிட்டு அவன் மீண்டும் செய்தி தாளை பார்க்க ஆரம்பித்தான்.

அவன் சொன்னது எனக்கு ஒருபுறம் நகைச்சுவையாக இருந்தாலும் இன்னொரு புறம் பொறாமையும் இருக்கத்தான் செய்தது,

'அவளுக்கு காட்டுற அக்கரைல atleast ஒரு five persent எனக்காகவும் காட்டலாம்ல? சிடு மூஞ்சி'

என்று நான் எனக்குள்ளே புலப்பிக்கொண்டு குளிக்கசெறேன்,

வந்து பார்க்கும்போது அவன் முழுதாக தயாராகி சாப்பிட்டு கொண்டு இருந்தான் பக்கத்தில் எனக்கும் டேபிளில் உணவு அமர்ந்து கொண்டு இருந்ததால் நான் சந்தோஷமாக அதை சாப்பிட ஆரம்பித்தேன்,

சிறிது நேரத்தில் என்பக்கம் ஒரு அட்டைய நீட்டினான்,

அதை வாங்கி பார்த்ததில் அது ஒரு டெபிட் கார்ட் என்று தெரிந்தது, நான் அவனிடம் அதற்கு கண்களால் பதில் கேட்க்க அவன் தோலை குளுக்கிவிட்டு,

"காலேஜ் மார்க்கெட் புக்குன்னு எல்லாத்துக்கும் என்னை தொந்தரவு பண்ணாதே, இதுல காசு போட்டுவிடறேன் எடுத்துக்கோ, நெறய செலவு பண்ணாதே என் கிட்ட அவ்ளோ காசு இல்ல...." அப்போது தான் என் இதழ்களில் சிறிய புன்னகை வந்தது,

'பரவா இல்ல என் மேல அக்கறை எல்லாம் இருக்கு'

"அப்புறம் வீட்டை காலி பண்ணும்போது மறக்காம கார்ட தந்துட்டு" அந்த சிரிப்பும் காணாமல் போனது, அதை சொல்லி விட்டு அவனும் அறைக்குள் காணாமல் போனான்,

' சிடு மூஞ்சு கொஞ்சம் நேரம் சந்தோஷப் பட விடமாட்டானே' என்று அவனை இன்னும் சில நல்ல வார்த்தைகள் கூறி திட்டிய படி நானும் சாப்பிட்டு முடித்தேன்,

தட்டை கழுவி வைத்து விட்டு ஹாலுக்கு வரும்போது அவன் எனக்காக காத்திருப்பதை கண்டு வியப்புடன் அவன் அருகில் செல்ல,

அவன் கையில் ஒரு பிங்க் கலர் ஹார்ட் கீ சைனுடன் என்னை பார்த்து, "இது உன்னோட சாவி தொலைச்சுடாதே" என்று சொல்லி என் கையில் தர திடீரென்று அதில் எனக்கு வந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை,

நான் அவன் கன்னத்தில் ஒரு முத்ததோடு அவனிடம் "thanks" என்று கூற முதலில் அதிர்ச்சியிலிருந்து குழப்பத்தில் நின்ற அவன் பிறகு கன்னத்தை துடைத்துக் கொன்று,

"திரும்ப இந்த மாதிரி லூசுத்தனமா ஏதாவது பண்ணே கொன்னுடுவேன்" என்று அவன் கோபக் கண்களுடன் சொல்ல சற்று பயமாக தான் இருந்தது எனக்கு...

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro