
#5 நட்பு
சிரிப்பில் கூட இருப்பதல்ல..
நான் அழும் போது துடைத்து விட
ஓடி வரும் என் விரல்,
உன் கண்ணீர் துடைக்க
ஓடி வர காத்திருப்பதே நட்பு..
எனக்கு உதவ நீ வேண்டும் என்பதல்ல,
எந்நேரமும் உனக்கு உதவ
உன்னோடு நான் இருப்பதே நட்பு..
ஆயிரம் செயல்களால்
அறிந்து கொள்ளலாம்..
ஆயிரம் பாஷைகளால்
புரிந்து கொள்ளலாம்..
உன்னை தெரிந்து கொள்ள
இவை எதுவுமே தேவையில்லாததே
நட்பு..
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro