Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

37

ஒரு மாதத்தின் பின்,

ஆபீஸ் விட்டு வெளியில் வந்த தீபக் அர்விந்திடம் "டேய் அண்ணா நீ ஓரு வாரம் லீவ் போட்டு அண்ணி கூட உள்ள பிரச்சினைய சால்வ் பன்னு.நான் ஆபீஸ் வேலை எல்லாத்தையும் பார்த்துக்கிறேன் " என்றவனை

"டேய்.அப்படிலாம் ஒன்னுமில்லடா.நீ சும்மா இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி ஏதும் புதுசா கிளப்பிவிடாத "என்றான் அர்விந்த்

"டேய் நான் ஒன்னும் சின்ன பாப்பா இல்ல.நீ சொல்லுர பொய்ய நம்ப.ஏதோ ஒன்னு இருக்கு உங்க இரண்டு பேருக்கு நடுவுல .ஒழுங்கா போய் அத சரி செய்ர வழிய பாரு" என்றவனிடம் அர்விந்த்

"சின்னதொரு மனஸ்த்தாபம் இருக்கு.நீ யார்கிட்டயும் இதப்பத்தி பேசாத.கொஞ்ச நாளா ஆபீஸ் வேலையிலேயே பிசியா இருதுட்டேனா.அவ கூட ஒழுங்கா பேச முடியல.சரி ஒரு 3 நாள் நான் ஆபீஸ் பக்கமே வரல்ல.நீயே பார்த்துக்க.அப்புறம் சங்கீதாவுக்கும் ரம்யாக்கும் அதிகமா ஏதும் வேலை கொடுக்காத.எதுவா இருந்தாலும் ரேனுகிட்ட சொல்லு சரியா" என்றவனை

"சரி" என்றான் தீபக், ஆனால் மனதுக்குள் 'அவ என் மனச கொள்ளையடிச்சிட்டாலே.ஒல்லிப்பிச்சான நான் எப்படித்தான் கரக்ட் பன்னுவேனோ' என்று தனக்குள்ளேயே புலம்பியவனை அர்விந்த்

"என்னடா ஏதோ ஒரு பெரிய ப்ளான் ஒன்னு போட்ற போல இருக்கு" என்றான்

"அட போண்ணா நீ வேற "என்று அவன் சலித்துக்கொள்ள இருவரும் வீடு சென்றனர்

வீட்டிற்கு வந்த அர்விந்த் முதல் வேலையாக ப்ரியா எங்கே என தேடினான்.அவளை கானாது போகவே எப்படியும் ஜிம்மிற்குதான் போய் இருப்பாள் என்று அவள் செல்லும் ஜிம்மிற்கு செல்லலாம் என நினைத்தவன் அவள் எந்த ஜிம்மிற்கு செல்கின்றால் என்ற தகவல் தெரியாததால் அவள் அறையில் ஏதும் துப்பு கிடைக்குமா என ஜேம்ஸ்ம்ஸ்பாண்ட் வேலையை ஆரம்பித்தவனுக்கு அவளது டயரியில் அவள் செல்லும் ஜிம்மின் லீப்லெட் இருந்தது.அவள் டயரியில் இன்னும் சில காகிதங்களும் இருக்க அதில் எல்லாம் அவன் நாட்டம் காட்டாமல் ஜிம்மின் அட்றசை மாத்திரம் குறித்துகொண்டு அங்கு சென்றான்.

இந்த ஒரு மாதத்தில் அவன் பல்சர் ஒன்று வாங்கியிருந்தான்.முழுமையாக முகத்தை மறைக்கும் ஹெல்மட்டை போட்டுக்கொண்டுக்கொண்டு எதை தேடி செல்கிறோம் என தெரியாமல் அந்த ஜிம்மை நோக்கி சென்றான்.தான் என்ன நோக்கத்திற்க்காக அங்கு செல்கின்றோம் என்று புரியாமலயே அவன் சென்றான். ஏனென்றால் இவன் இப்போது அங்கு சென்றாலும் அவளுடன் பேச முடியாது.அவன் அவளை பின் தொடர்வது அவளுக்கு தெரியவும் கூடாது.அவன் அவர்கள் ஜிம்மை நெருங்கும் போதுதான் கவனித்தான் ப்ரியாவும் அவளது புது நண்பர்களும் வெளியில் வருவதை.ப்ரியா இந்த ஒரு மாதத்தில் நன்றாக மெலிந்திருந்தால்.அவள் உடலில் உடற்பயிற்சியின் கை வண்ணம் நன்றாகவே தெரிந்தது.முதல் எல்லாம் பார்க்க மகா லட்சுமி போல் இருந்தவள் இப்போது ஏதோ சோப்பு விளம்பர மாடல் போல மெலிந்து காணப்பட்டால்.ஆனால் உண்மையில் அர்விந்துக்கு பழைய ப்ரியாவையே பிடித்திருந்தது.

தன் நட்புகளுடன் வெளி வந்தவள் நேராக ரெஸ்ட்டாரன்ட் ஒன்றுக்கு சென்று சாப்பிட்டிவிட்டு அப்படியே தியேட்டருக்கு சென்றனர்,அவர்களின் கேங்கில் இரண்டு பெண்கள் மூன்று ஆண்கள்.அவர்களின் தலை முடி மற்றும் உடை அமைப்பு எல்லாமே ஏதோ வெளிக்கிரகத்தில் இருந்து வந்தவர்கள் போல இருந்தார்கள்.அவர்களை பார்த்ததுமே அர்விந்த் புரிந்துகொண்டான் அவர்கள் நல்ல நடத்தை உள்ளவர்கள் இல்லை என.

தியேட்டரில் படம் பார்த்து முடிந்ததும் மாலை நேரமாக அப்படியே பப்பிற்கு சென்றனர்.அர்விந்திற்கு தலையே சுற்றியது .என்ன பெண்ணிவள்.ஆரம்பத்தில் என்ன காரணமென்று தெரியாமலேயே என்னை வெறுத்தால்.பிறகு என்னை அளவுக்கதிமாக நேசித்தால்.பிறகு மறுபடியும் நான் அவளை வெறுக்க வேண்டும் என்பது போல நடக்கின்றாலே.இந்த பப்பிற்கு வருபவர்களை பார்த்தால் நல்லவர்களாகவும் தெரியவில்லை.ப்ரியா......... ,ஏன் ப்ரியா இப்படி பன்ற என்று மனதுக்குள் குமுறியவன் அடுத்த கண்ட காட்சி கொஞ்சம் அவனை தடுமாற செய்தது.ப்ரியாவுடன் கூட வந்த ஒரு ஆண் கௌசிக்கை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றான்.

அர்விந்தால் உள்ளே செல்ல முடியாது.ஏனென்றால் அவன் உள்ளே சென்றால் ப்ரியா அவனை இலகுவாக அடையாளம் கண்டு கொள்வாள்.என்ன செய்வது என்று முழித்துக்கொண்டிருக்க நான்கு மனி நேரம் கழித்து கௌசிக் ப்ரியாவை கைத்தாங்களாக அவள் இடையில் ஒரு கை போட்டு அணைத்து வந்தான்.அவள் வந்த விதத்திலேயே புரிந்தது,ப்ரியா நிதானமாக இல்லை என்று.கௌசிக் அவளை அவனது காரின் முன் இருக்கையில் கிடத்தி காரை எடுத்துக்கொண்டு செல்ல தயாராகிய வேலை ப்ரியாவுடன் கூட வந்த அந்த ஆண் நண்பனிடம்

"மச்சி சூப்பர் வேல செஞ்சடா,அவ அன்னைக்கு என்ன பேச்சு பேசினா.இன்னைக்கு நான் அவள சின்னா பின்னமாக்க போறேன்.பரவாயில்ல குட்டி ஜிம்முக்கெல்லாம் போய் பாடிய நல்ல சேப்பாதான் வெச்சிருக்கா" என்று கூறிவிட்டு அந்த நண்பனுக்கு கையில் காசை தினித்துவிட்டி காரில் பறந்தான்.அர்விந்தும் கூட அவர்கள் பின்னாலேயே சென்று வழி இடையில் அவனது காரை மடக்கி நிறுத்தினான்.

"கௌசிக் ப்ரியாவ விட்டுட்டு நீ போ,நான் அவள வீட்ட கூட்டி போறேன்" என்றவனை கௌசிக் நக்கலாக

"அவ உங்கூட வரேன்னு சொன்னா தாராளமா கூட்டி போ.இல்லயா இடத்த காலி பன்னு" என்றான்

"கௌசிக் சொல்ரத கேளு.என்ன கோவப்படுத்தாத.அவ என் பொண்டாட்டி"என்றவனை

"ஒஹ் அதுதான் அவ உன்ன விட்டுட்டு கண்டவன் கூட பப்புக்கு வாராலா.சரிதான் போடா.இப்போ எதுக்கு நீ இப்போ சும்மா சீன போட்றே.அவ கிட்ட நான் கேட்கிறேன் .அவ வரேன்னு சொன்னா நீ கூட்டிட்டு போ.இல்லையா மூடிக்கிட்டு இடத்த காலி பன்னு"என்று கூறியவன் அவள் சுய நினைவில் இல்லை என்பது அர்விந்திற்கு தெரியாது என நினைத்து

காரின் ஜன்னலை திறந்து

"ப்ரியா,அர்விந்த் உன்ன கூப்பிடுறாரு .நீ போரியா அவரு கூட" என்றான்.அவள் எதுவும் பேசாமல் இருப்பதை கண்ட கௌசிக்

"பார்த்தியா அவளுக்கு உன்கிட்ட பேச கூட விருப்பமில்ல போல.அதான் எதுவுமே பதில் சொல்லாம இருக்கா"என்றவனை ,தன்னிலை மறந்து இருப்பவளை கௌசிக் எப்படி ஏமாற்றுகிறான் என உணர்ந்த
அர்விந்துக்கு கோவம் வர கௌசிகின் முகத்தில் ஓங்கி ஒரு குத்துவிட்டான்.கௌசிக்கின் வாயில் முன் இருந்த இரண்டு பற்கள் கழண்டு இரத்தம் வடியத்தொடங்கியது.கௌசிக்கின் இடக்கையை வளைத்து அவன் முன் மண்டியிட வைத்தவன் சரமாரியாக அவன் முகத்திலேயே குத்தினான்.கௌசிக்கின் மூக்கு உடைந்து உதடு கிழிந்து இரத்தம் வடிந்து கொண்டிருந்தது.

"டேய் காலேஜ்ல பாக்சிங்க் பின்னால அலைஞ்ச ஆட்கள்ள நானும் ஒருத்தன்.என்ன அதுல மெடலெல்லாம் எதுவும் கிடைக்கல ஆனா ஒரளவுக்கு நல்லா மூஞ்சில குத்த தெரியும் "என்று கூறி மேலும் இரண்டு குத்து விட்டான். கௌசிக்கோ வலி தாங்காமல்

"சரி சரி நீ அவள கூட்டிட்டு போ, நான் இனி அவ பக்கமே வர மாட்டேன்"என்று கெஞ்சினான்.அவனை அப்படியே விட்டுவிட்டு அவளை தன் பைக்கில் பின் அமர்த்தியவன் ,ப்ரியா நிதானமில்லாமல் கீழே விழ பார்க்க தன் ஜாக்கெட்டை கழற்றி அவளை தன்னுடன் சேர்த்து இழுத்துக்கட்டி வீடு வந்து சேர்ந்தான்,வீடு வரும் போது வீட்டில் சமையால்கார பாட்டி நிஷாவை தூக்கமாக்கி கொண்டிருந்தார்.

"பாட்டி.என்ன ஏதுன்னு ஒரு கேள்வியும் கேட்கவேனாம்.நிஷாவ ஏன்கிட்ட கொடுத்துட்டு இவள குளிக்க வெச்சு தூங்கவைங்க" என்றவனை பாட்டி வினோதமாக பார்த்தாலும் பாட்டிக்கும் தெரியும் இவர்களுக்குள் ஏதோ ஊடல் உண்டு என்று.

நிஷா தூங்கியதும் அவளை கட்டிலில் தூங்க வைத்த அதே நேரம் பாட்டி ப்ரியாவை கைத்தாங்களாக தலைக்கு குளிக்கவைத்து அழைத்து வந்தார்,அவளுக்கு உடை மாற்ற வேண்டுமே என்று நினைத்தவனுக்கு பாட்டியே

"தம்பி,நீங்க கொஞ்சம் வெளில இருங்க,நான் இவளுக்கு உடை மாற்றிவிடுகிறேன் "என்றார்.

இவனும் சரி என்று கூறி வெளியில் வந்து ப்ரியாவின் அறைக்குள் செல்ல அங்கே காலையில் அவன் கண்களில் பட்ட டைரி கிடைத்தது.அதை எடுத்து பார்த்தவன் ப்ரியாவின் கையால் பல கவிதைக் கிறுக்கல்களை கண்டான்,அதில் ஒன்று அவன் மனதை மிகவும் பாதித்தது.

"நான்கு அறை கொண்ட வீட்டில் எவர் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் வசிக்க முடியும். ஆனால்

அந்த வீட்டிற்கு கிரகப் பிரவேசம் போவது போல் வருமா!

அது போலவே உன் நான்கு இதய அறைகளிலும் யார் வேண்டுமானாலும் எனக்குப் பின் வசிக்கட்டும்.

கிரகப்பிரவேசம் புரிந்தது நான் மட்டுமே"

இதைப்படித்தவன் கண்கள் கலங்க தன் மீது இவ்வளவு காதல் வைத்தவள் ஏன் இப்படி நடந்துகொள்கின்றால் என்று குழம்பியவன், அந்த டைரிக்கு அடியில் ஏதோ ஒரு கவர் இருப்பதை கண்டு அதை எடுத்து பார்த்தவனுக்கு கண்களில் கண்ணீர் அருவி போல ஓடத்தொடங்கியது.அதே நேரம் ப்ரியாவின் மீது வெறுப்பும் கோபமும் ஒரு சேர வந்தது.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro