Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

16

ஒரு நாளைக்கு முன் மங்களகரமாக சென்ற ப்ரியா இப்படி கசங்கிய பூவாக வருவதை கண்ட அர்விந்தின் தாயாருக்கு மனதை ஏதோ செய்தது. இருந்தாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் "எல்லாம் குனமாகிடும்மா.எல்லாம் இவன் சொன்னான்.தலையோட வந்தது தலைப்பாகையோட போயிடுச்சு"என்றார்.

"சரிமா,நீங்க ப்ரியா கூட அவ வீட்டுக்கு கிழம்புங்க.அவளால இப்போ எந்த வேலையும் தனியா பன்ன முடியாது.அவ அப்பா வேற ஊர்ல இல்லயா, நீங்க அவகூட இரண்டு நாளைக்கு இருந்துகோங்க "என்றான்.

"டேய் ,அப்போ நிஷாவையும் உன்னையும் யாரு பார்த்துப்பா."என்று அர்விந்தின் தாய் கொஞ்சம் சலிப்பாகவே கேட்டார்.கேட்டுவிட்டு அவரே "சரிடா வேனும்னா ப்ரியா இங்கயே நம்ம கெஸ்ட் ரூம்ல தங்கட்டுமே.ஒரு பிரச்சினையும் இல்லதானே.அவ அப்பா வந்ததும் அவ வீட்ல விட்றலாம் " என்றார்கள்.

இதுக்காகவே காத்திருந்தது போல சங்கீதா "அம்மா சொல்ரதுதான் சரி .ப்ரியா நீ ஒரு இரண்டு நாளைக்கு இங்கயே இரு." என்று கூறிவிட்டு அவளுக்கும் மட்டும் கேட்கும் விதமாக "இல்ல இரண்டு நாள் கஷ்டம்னு நினைக்குறியா "என்று கேட்டவளிடம் ப்ரியா ஆமாம் என்று தலை அசைக்க உடனே இவளோ "அப்டின்னா சொல்லு காலம் பூரா இங்கவே இருக்க ஏற்பாடு பன்றன்"என்று அர்விந்துக்கும் ப்ரியாவுக்கும் மட்டும் கேட்கும் விதமாக கூறினாள்.

உடனே அர்விந்தும் ப்ரியாவும் ஒருவரை ஒருவர் ஞே என்று பார்த்து விளிக்க அர்விந்த் "ஆமா இப்போ நீ எப்டி போவ "என்று சங்கீதாவை பார்த்து கேட்டான்.

அவள் அதற்கும் "ஏண்டா என்ன அனுப்புறதுலயே குறியா இருக்க...ஓஹ்ஹ்ஹ்ஹ் விளங்குது விளங்குது.சிவ பூஜைல எதுக்கு கரடினு என்று பார்க்குரியா.இப்போ என் கரடி வந்துடும் அதுகூடா நான் போய்டுவேன்" என்று கூறினாள். இவள் யாரை கரடி என்று கூறுகிறாள் என்று இருவரும் யோசிக்க ,சொல்லிவைத்தது போல் அங்கு சுரேஷ் வந்தான்.

"ஹாய் ப்ரியா இப்போ எப்டி இருக்கு."என்றவன்."சங்கிம்மா எனக்கு டைம் இல்ல.உடனே கிளம்பனும் "என்று சங்கீதாவை கூட்டிக்கொண்டு சென்றான்.

அவள் போனதும் அம்மா நிஷாவை தூக்கி சென்று அவளை தூங்க வைக்க இங்கு அர்விந்தும் ப்ரியாவும் தனியாக என்ன பேசுவது என்று தெரியாமல் முழித்துக்கொண்டிருந்த்தனர்.

ப்ரியாதான் "அர்விந்த் ,சங்கீதா இப்டிதான் சும்மா எப்ப பாரு என்ன கலாய்ச்சிக்கிட்டே இருப்பா,நீங்க இத பெருசா ஒன்னும் எடுத்துக்காதீங்க "என்றவளை மனதுக்குள் "அவள் இப்படி கலாய்ப்பது கூட நன்றாகதான் உள்ளது" என்று என்னி ,அவளிடம் "சச்ச அவ எப்பவுமே இப்டித்தான்னு தெரியுமே.நீ வொரி பன்னிக்காத.அப்புறம் இது உன் வீடு மாதிரி .உனக்கு என்ன வேனும்னாலும் என்ன ,இல்லன்னா அம்மாவ கேளு.ஓக்கேயா."

"சரி"என்று ஒற்றை வார்த்தையில் முடித்தவளிடன் நிஷாவை கட்டிலில் போட்டுவிட்டு வந்த அர்விந்தின் அம்மா "அம்மா ப்ரியா உனக்கு மாத்து துணி இருக்காமா"என்று கேட்டார்.நேராக இங்கேயே வந்ததால் அதைப்பற்றி யாருமே யோசிக்கவில்லை.

"இல்லம்மா விட்லதான் இருக்கு.நான் வேனும்னா அர்விந்த் கூட போய் எடுத்துட்டு வரவா" என்று கேட்டவளை

"இல்லம்மா இங்க மைதிலியோட டிரஸ்லாம் இருக்கு.வேனும்னத நீ போட்டுக்க.நீ அங்க இங்க அலையவேண்டாம்.சரி உனக்கு அவ டிரஸ் போட்றது ஓன்னும் அசெளகரியமில்லயே.ஏன் கேட்குறேன்னா சில பேருக்கு மத்தவங்க டிரஸ் போட ஒரு மாதிரி இருக்கும் ,அதான்மா" என்றவரிடம்

உடனே அவள் "ச்சே அப்டிலாம் இல்ல.மைதிலியும் எனக்கு ரம்யா மாதிரி தங்கச்சிதான் மா.நீங்க எங்க இருக்குன்னு காட்டுங்க.நானே எனக்கு தேவையாதன எடுத்துக்குறன்"என்றாள்.

"சரிமா.டேய் நீ போய் உன் ரூம்ல இருக்குற மைதிலியோட டிரஸ் கப்போட்ட காட்டு"என்று கூறிவிட்டு

"ஆமா ப்ரியா நீ நான் வெஜ் சாப்டுவேல" என்றார்."நீங்க எது வேனும்னாலும் செய்ங்கமா.நான் சாப்டுவேன்" என்றவளிடம் அர்விந்த் "அப்போ இன்னைக்கு நீ மாட்டின .ஏண்டா இப்படி ஒரு வார்த்தைய சொன்னம்னு கவலைப்பட போற "என்று ப்ரியாவை கொஞ்சம் பயம் முறுத்தினான்.

"இவனுக்கு பொறாமைமா.நீ சும்மா கண்டதயும் போட்டு யோசிக்காத சரியா" என்றவரிடம் "எனக்கு போறாமையா ..சரி பார்க்கத்தானே போறேன் இன்னைக்கு என்ன நடக்க போகுதுன்னு" என்று ஆள் மாரி ஆளை வாரிக்கொண்ட தாயையும் மகனியும் பார்த்து ப்ரியா புன் முறுவல் புரிய

"வா ப்ரியா ,நான் உனக்கு டிரஸ் உள்ள கப்போட்ட காட்றன் " என்று அவளை தன் அறைக்குள் கூட்டி சென்றான்

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro