Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

அவள் 15

யெஸ் சார் என்றாள் பாரதி.

என்னோட அபோயின்ட்மன்ட்  எல்லாம் இனி நீங்க பார்க்கனும்.

எனக்கு இந்த கம்பனி பற்றிய புல் டீடய்ல்ஸ் வேணும். அது சம்பந்தப்பட்ட பைல் எல்லாம் தந்துட்டு போங்க.என மறு நிமிடம்
முதலாளியானான் ஆதி கிருஷ்ணா.

*!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!*

மாலை நேரம்  மீடிங்கிற்கு  போகனும் என்று பவி பாரதியை இழுத்துச் சென்றாள்.

அவளது இருக்கையில் அமர்ந்த பாரதி. காலையில் நடந்தது மனக்கண் முன் வர யோசித்த படி இருந்தாள்.

(காலையில் பாரதி ஆபீஸ் வரும் போது ஆக்ஸிடன்ட் நடந்த  பெரியவரை பார்க்க வைத்தியசாலை சென்ற போது
அம்மா... ஏன் புருஷன  நீங்க சொன்ன எம்.டி பையன் ஆக்ஸிடன்ட் பண்ணலமா... அவங்க டிரைவர் தான் ஆக்ஸிடன்ட் பண்ணிட்டு மறைக்க பார்த்திருக்கான்.

விஷயம் தெரிஞ்சதும்  உடனே அவங்க அம்மாவும்  அந்த பையனும் வந்தாங்க.ரொம்ப கவல பட்டு அந்த பையன் மன்னிப்பு கேட்டான் மா... ஏன் புருஷன் சுகமாகுற வரைக்கும் முழு செலவையும் அந்த பையன்  பொறுப்பு எடுத்துகிட்டான் மா...  தேவைபட்டா  கோல் பண்ண நம்பர் தந்துட்டு போனாங்கமா...அந்த அம்மா ரொம்ப நல்லவங்க. அவங்க மனச போலவே  அந்த பையனும்  தங்கமான பையன். நீ தான் தப்பா புரிஞ்சிகிட்டு இருக்க. இப்ப காலைல கூட வந்து பார்த்துட்டு போனார்மா... என்று கூற பாரதியின் உள்ளம் குமுறியது. தவறு செய்யாத ஒருத்தனுக்கு தண்டணை கொடுத்து விட்டோமே என்று)  மறுமனம்  ஆய்யோ அம்மா இது தான் தவறு செய்த முதல் தடவை. ரொம்ப கவல பட வந்துட்டா? அவளை கேலி செய்தது.

பாரதியின்  யோசனை எங்கோ இருக்க.

ஆதி வரவும் அனைவரும் எழுந்து நின்றனர்.பாரதியை பார்த்த படி  அனைவரையும் சைகையால் அமரச் செய்தான் ஆதி.

பாரதியை பார்க்க பாரதி கற்பனை உலகிலேயே இருக்க.

ஆதி பாரதி முன் வந்து கையால் சொடக்கு போட இவ்வுலகம் திரும்பியவள். விழுந்தடித்துக் கொண்டு அவசரமாக எழுந்து நிற்க.

அனைவரும் சிரிக்க. ஆதிக்கும் மென்னகை வந்தது.

அதற்கு ஒரு படி  மேல் சென்று ரித்விக்கும் பவியும் விழாக் குறையாக வயிற்றை பிடித்துக் கொண்டு சிரித்தனர்.


பாரதி இப்படியே நிற்பதா..... அமர்வதா... என யோசிக்க. ஆதி பாரதியை பார்த்து ஸிட்  என்றான்.

இது தான்  சந்தர்ப்பம் என அமர்ந்தவள் பவியை கிள்ளி எடுக்க. சத்தம் வராமல்  வலியை அடக்க பெறும்பாடு பட்டனர்.

இதனை ஆதி உள்ளுர இரசித்தாலும் வெளியே  முகத்தை கடுமையாக வைத்துக் கொண்டான்.

சரி இந்த கம்பனியோட வளர்ச்சிக்கு எது  தடையாக இருக்கு ஒவ்வொருத்தராக சொல்லுங்க என்ற படி ஆதி அமர்ந்தான்.

ஒவ்வொருவராக எழுந்து சரியான காரணத்தை கூறாமல் ஒரே விடயத்தை  மாற்றி மாற்றி கூற ஆதிக்கு பொறுமை பறந்தது.

வேறு ஏதாவது உறுப்படியான காரணம் இருந்தா சொல்லுங்க என கர்ஜித்தான்.

பாரதி எழுந்து  போதிய  மூதனம் எடுக்காம குறைந்த அளவ குறிப்பிட்டு  கூடிய விலையை போட்டு செய்தது தான் சார்.

அடுத்த கம்பனிய விட நிறைய ஓடர்ஸ் வரனும் னு  லொஸ்ட்ல  கம்பனிய ரன் பன்னினது தான் சார் என்று முடிக்க.

வெறி குட் . திஸ் ஈஸ் த ரீஸன் என அவனரியாமலே  வார்த்தை வர. இந்த பதிலத்தான் நான் எதிர்பார்த்தன் என சமாளித்தான் ஆதி.

இனி நான்.சரியாக மேனேஜ் பண்ணினா? உங்க ஒத்துழைப்ப தருவீங்கலா என கேட்க.

அனைவரும் ஸுவர் சார் என்றனர்.


தொடரும்......

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro

Tags: #lovestory