Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

அவள் 03

மேலே ஏற தயாராகும் போது பாரதி அவனை அவள் இன்சொல்லால் அவள் வழக்கமாக அவனை புகழ்வது போல புகழத் தொடங்கினாள். அவள் இருக்கும் இடத்திற்கு வந்து கயிற்றை கட்டியதால். ஆனாலும் மனதில் ஏதோ ஒரு இனம் தெரியாக சந்தோஷம்.

   விடுவானா ஆதி!! நான் உன் கழுத்துலயாடி கட்டினன்.சும்மா இப்படி ஆடு மாதிரி கத்துற என்று ஒரு சத்தம் வைத்தான்.அவ்வளவு தான் அவள் திருவாயை கம் என்று மூடிக் கொண்டாள்.ஆதி தன் பாட்டில் மேலே ஏறி வேளையை தொடர்ந்தான்.பாரதியும் தன் வேளையை தொடர்ந்தாள்.

  ஆதி மேலே ஏறி வேளையில் மூழ்கினான். மும்முரமான வேளையின் காரணமாக தான் கூரையின் விளிம்பில் இருக்கிறோம். என்பதை கூட உணராமல் இன்னும் பின் நோக்கி வரவே.

ஆதி அம்மா என்று கதறிய  படி கீழே சரிந்தான். இதனை கண்ட பாரதிக்கு கண்கள் இருண்டு மயக்கமானாள்.இவள் விழுவதை கோயிலிற்கு வந்த கோதை பாட்டி கண்டு அவசரமாக வந்து தாங்கி பிடித்தார்.
     ஆதி ஏற்கனவே மலைக்கு ஏறுவது போல கயிற்றை வயிற்றில்  கட்டி இருந்ததால் தலை கீழாக நிலத்திற்கு ஒரு அடி மேலே தொங்கினான்.தலை கீழாக இருந்த ஆதியை நண்பர்கள் கயிற்றை அவிழ்த்து சரி செய்தனர்.பின் அவன் பாரதியிடம் ஒரே எட்டில் சென்றான்.அவன் எவ்வளவு தட்டியும் ,நீர் தெளித்தும் எழாதவள் ஆதி.. ஆதி.. முனங்கிக் கொண்டே இருந்தாள்.
   
ஆதி மனதில் ஏக குழப்பம் "நான் கயிர் கட்டி இருப்பது அவளுக்கு தெரியும். நான் கயிற்றை கட்டியதை பார்த்து கோபப்பட்டாள்.ஆனால் நான் விழும் போது கயிறு கட்டியதை மறந்து கத்தினேன்." ஆனால் இவள் எதற்கு... என குழம்பினான்.
   
   ஆனால் பாரதி விழும் போது தாங்கி பிடித்த கோதை பாட்டியிற்கு அதை விட ஏக குழப்பம்
  
     பாரதி எவ்வளவு முயற்சி செய்தும் எழாததால். ஆதி தன் கையில் ஏந்தி சென்று தாத்தாவின் காரில் ஏற்றி அவனும் தாத்தாவும் பாட்டியும்  நண்பர்களிடம் கூறி அவசரமாக வைத்தியசாலைக்கு விரைந்தனர்.

      அவன் தூக்கியது தெரிந்தாள் பேய் ஆட்டம் ஆடுவாள் என அறிந்து அதை மறைத்து விட்டனர்.

       அவளை அட்மிட் செய்து விட்டு கோதை பாட்டி அவள் அருகிலேயே அமர்ந்திருந்தாள். ஏனோ கோதை பாட்டியிற்கு இவளை மிகவும் பிடித்து போனது.

        அந்த நேரத்தில் பாரதி திடிக்கிட்டு ஆதி! என கதறிய படி எழுந்தமர்ந்தாள்.

கோதை பாட்டி அவசரமாக அவள் தலையை தடாவி அவனுக்கு ஒன்னும் ஆகலமா..... என்றார்.

  " இல்ல பாட்டி... ரொம்ப உயரத்துல...." என கூற வந்தவளை பார்த்து சிரித்து அவன் கயிறு கட்டி இருந்தான் மா... ஒன்றும்  ஆகல என மெதுவாக தலையை வருடினார். பாட்டி கூறிய பிறகே  அவன் கயிறு கட்டியது ஞாபகத்திற்கு வந்தது.

"ச்சோ... மறந்தே போய்ட்டேன்..." என அவள் சிரித்தாள்."


      அவளிடம் பேச்சு கொடுத்த கோதை பாட்டி. அவளை பற்றி தெரிந்து கொண்டார்.ஆதிய ஒனக்கு பிடிக்குமா? என கேட்க. பாரதி இல்ல அவன் ஜஸ்ட் பிரன்ட் தான் என்றாள் அவசரமாக."ஏம்மா எதுக்கு கத்தின, மயக்கம் போட்ட ஆதிய புடிக்காமலா..." என்று கோதை பாட்டியும் விடாமல் கேட்டக"புடிக்கிறதுக்கும் , கத்துறதுக்கும் என்ன பாட்டி சம்பந்தம்.அந்த இடதுலயாரு இருந்தாலும் அப்படி தான் நான் நடந்து இருப்பேன்.

      ஓ அப்படியா.. நீ மலை ஏறுறதலாம் நேர்ல பார்த்திருக்க...மன தைரியம் அதிகமான பெண்ணுடு சொன்னாங்க... ஆனா நீ இப்புடி பயந்து போனவளா இருக்க..

   பாட்டி... ப்ளீஸ் இந்த விழுந்த கதைய விடுரீங்களா.. என கெஞ்சவும். பாட்டி மனதில் (நீ காதல்ல விழுந்து இருப்பாய்னு எனக்கு தெரியும்மா...) என நினைத்துக் கொண்டார்.""சரி ஆதி உன் பேச்ச கேட்டு நடந்தா புடிக்குமா..."" என அவர் கேட்க சிரித்தவள்.

  பாட்டி நான் சும்மா தான் அவன் கிட்ட. ஆணாதிக்கம், பெண் அடிமைத்தனம்னு அடிக்கடி சொல்லுவன்.நீங்க சொல்லுர மாதிரி நடந்துச்சினா..
பெண்ணாதிக்கம்,ஆண் அடிமைத்தனம்டு சொல்லிட்டு திரிவான்.அத என்னால கேட்டுட்டு இருக்க முடியாது.. என்று சிரித்தாள்.
அறை வாசலில் ஆதி சாய்ந்தபடி கை கட்டி நின்று கேட்டுக் கொண்டு இருந்தான்.

ஒரு வழியாக எல்லாம் முடிந்து ஊருக்கு கிளம்ப புகையிரத நிலையம் சென்றனர். இவர்களது புகையிரதம் இரவே book செய்யப்பட்டிருந்தது.

   இரவு 11 மணி அளவில் இவர்கள் ஏற வேண்டிய ரயில் வந்தது. பாரதியும் ஏறி தனது இருக்கையில்  அமர. ஒரு சிறுமி கையில் வளையல்களுடன் வந்தாள். அதை வாங்கிக் கொள்ளும் படி கெஞ்சினாள். எனவே அதை வாங்கிக் கொண்டவள் பேச்சு வழக்கில் 'எதுகுமா நைட்ல விக்கிற. நாளைக்கு காலைல விக்கலாம் இல்ல. ஏன் நாளைக்கு ஸ்கூல் போகனும்னு இப்பவே விக்கிறியா?' என்றாள்.

   "இல்ல அக்கா. நான் இன்னைக்கு உறியதை வித்து காசு கொடுத்தா தான் நாளைக்கு என்ன ஸ்கூல் அனுப்பு வாங்க.ஏற்கனவே ஒரு வாரமா ஸ்கூல் போகல"

என்ன சொல்ற நீ... யார்கிட்ட பணம் கொடுக்கனும்...

" அதோ அவங்க கிட்ட தான்.."என்று அவள் கை காட்டிய இடத்தில் பெரிய பொட்டுடனும், வாயில் வெற்றிலையுடனும் ஒரு பென்ஜில் தடித்த ஒரு பெண் அமர்ந்திருந்தாள்

இப்படி ஒரு சிறுமியை வைத்து சம்பாதிப்பதா என நினைத்தவள்.

நேராக சென்று வாதிட ஆரம்பித்தாள். அந்தப் பெண்ணும் சும்மா இருக்கவில்லை.

அச் சிறுமியை தான் படிக்க வைப்பதாகவும் உணவு ,உடை, இருப்பிடம் என அனைத்தும் தருவதாகவும் வாதிட்டாள். பாரதியும் பெண்களின் முக்கியத்துவம்,இரவில் சிறுமியை அனுப்புவதால் ஏற்படும் பிரச்சினைகளை எடுத்துக் கூறி அவருக்கு புரிய வைத்தாள்.

இவளின் வார்த்தைகளில் கரைந்த அவள் இனி இப்படி செய்ய மாட்டேன்.என வாக்களித்தாள். அவளின் கண்கள் அவள் கூறுவது உண்மை என சாட்சியளித்தது. சில அட்வைஸ்களை வழங்கிக் கொண்டு அவர்களை அனுப்பி வைத்தாள்.

அவர்கள் செல்வதையே பார்த்துக் கொண்டு இருந்தவள்.அவள் பெயரை யாரோ ஏலம் போடுவது கேட்க திரும்பினாள். அப்போது தான் ரயில் கிளம்பிக் கொண்டிருப்பதை கவனித்தாள்.

ஆதியும் அவன் நண்பன் பாஸ்கரும் ரயிலில் இருந்த படி  பாரதி.. பாரதி.. என கத்திக் கொண்டு இருந்தனர். உடனே பாரதி ரயிலை நோக்கி ஓடியவளின் வேகம் பத்தாததால் ரயில் அவளை முந்திக் கொண்டு சென்றது.

ஒரு கட்டத்தில் முடியாமல் அங்கேயே நிலத்தில் அமர்ந்து விட்டால்
ஆட்கள் இல்லாத இடம்,கையில் பணம் ,போன் என எதுவும் இல்லை. தனித்து விடப்பட்டிருந்தாள். கண்ணீர் கவனிப்பார் இன்றி வடிந்து கொண்டு இருந்தது.

அப்போது அவள் அருகில்....
            
        தொடரும்......

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro

Tags: #lovestory