Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

நினைக்கத் தெரிந்த மனமே...

நிழகாகத் தொடரும்

நினைவுகளை கூர்மையாக்கி

எண்ணத்தினுள் வண்ணம் தீட்டி

எழிலரசாய் வடிவமைத்து...

உன் கன்னத்தில் முத்தமிடும்

கனவுகளை கண்ணில் தாங்கி

காகிதத்தில் வரைகிறேன்..

நீ கவிதையா ஓவியமா?

விடை புரியாமல் தவிக்கிறேன்..

உலகத்தினை மறக்கிறேன்..

உன் உயிர்க்கண்களின்

வரைபடத்தினை....

ஒவ்வொரு முறை காண்கையிலும்...

சிறகு கொண்ட  இமைகளில்

சிரிக்கின்ற உன் கண்கள்

சிமிட்டாதோ என

நிமிடத்தில் பலமுறை..

பார்க்கிறேன், ரசிக்கிறேன்

பரவசம் உணர்கிறேன்...

மீளாத கனவுகளில்

மீட்டெடுத்த என் காதலை

ஒவ்வொரு விடியலிலும்

உனக்காக புதுப்பிக்கிறேன்...

நிஜ உலகும் நேர்த்தியாக

நம் காதலினை வேதமாக

கண்முன்னே உன் கண்ணை

காணும் சந்தர்ப்பம் தந்தென்னை

காதலின் கடவுளவன்

கைதூக்கி விட்டாலும்...

பச்சைக் கொடிதனை

கைகளில் தந்தாலும்...

உள்ளத்தின் காதலினை...

என் மனதின் காவலினை...

சொல்லாது மறைக்கிறேன்..

வீழாது மிதக்கிறேன்..

சந்தித்த சந்தோஷமே..

சாகாத வரமென்று

சிந்தித்துச் செல்கிறேன்..

முத்தாகவே மூழ்குகிறேன்...

மெளனத்தின் கனம்தனை

தாங்காத மனதினை

உன் உடன் சேரும் நாளுக்காக...

தினம் தினம் சுமக்கிறேன்..

உன் நிழலாகவே தொடர்கிறேன்....

ஜே...

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro