Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

உன் காதல் உலகினில்...

நித்தமும் நீடுதவம்...
நெடுநாட்கள் பூந்துயில்..
கைவிரல் அசைவினில்
காலம் பத்து கணக்கிட்டு
கருவறை அரசனாய்
கட்டளை கால்நடனமிட்டு
கதிரவன் முகம் பார்க்கும்
பேராசை பெருங்கூச்சலோடு...

புத்துயிர் புதுமேனி
புதிதாய்ப் பிறந்த
பூமழை மழழை போல்
பூமிக்கு வந்ததன்
காரணம் கண்டேனடி...

இன்றுன்னைக் காண்கையிலே
கண்ணம்மா....

இத்தித்திக்கும் நினைவுகளை
நிறுத்தி வைக்கும் நிகழ்காலம் கேட்டு
என் கடந்த வந்த பாதைகளின்
காயங்கள் மறந்தேனடி...

இது கனவுகளா நினைவுகளா...
காரணமின்றி பிரமித்தேனடி..
உன் கண்ணழகில் நான்
என் கனவோடு கரைந்தேனடி...

முத்தமிழ் பாடலும்
உதடுகள் முணுமுணுக்க
உன் கரம் பற்றும் எண்ணம் மட்டும்
கற்பாறைபோல் வளர்ந்திட...

சிறகுகள் முளைத்ததுபோல்
புதுதிறன் கிடைத்ததடி...
உன் காதல் உலகினில்
என் கால்கள் பதிக்கதோர்
இலட்சியம் கொண்டேனடி...
எனை இரட்சிக்க வா கண்மணி...

.....

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro