Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

💞 40 💞

ஹாஜிதா , வந்து சென்றதில் இருந்து ஜாராவிற்கு ஏதோ தெளிவுக் கிடைத்ததுப் போல் இருந்தது.

இன்று விடுமுறையில் வீட்டில் இருந்த ஜாரா, 'அன்னிக்கி அத்தே குடிக்கிற டீல வெசத்த கலந்தது யாரு? ஷாஜிதா செய்ய வாய்ப்பே இல்ல. அவள் அப்படி செய்றவளும் கிடையாது! செய்யவும் மாட்டாள். அப்ப இதை யாரு செய்திருப்பா? ' என மனம் கேள்வி எழுப்ப, அதற்கு விடைத் தெரியாமல் தவித்தாள். ஜாராவிற்கு பல நாட்களாகவே இந்தச் சந்தேகம் இருந்துக் கொண்டிருந்தது.

'இதை எப்படி ஷாரூக் நம்பினாரு? ஷாரூக் மட்டுமில்ல அங்க இருக்கிற எல்லாருமே எப்படி நம்புனாங்க? இதை ஷாஜிதா தான் செய்தாள் யாரு சொன்னாலும் நான் நம்ப மாட்டேன். ஏன் ஷாஜிதாவே சொன்னாலும் நான் நம்ப மாட்டேன். ச்சே அன்னிக்கி நான் தப்பு பண்ணிட்டேன்... அவள் பக்கம் நின்னு இருக்கலாம்.. நான் தான் முட்டாள் தனம் பண்ணிட்டேன்... ' எனத் தனக்குள்ளே புலம்பிய ஜாரா அடுத்து என்ன செய்ய தெரியாமல் இருந்தாள்.

ஷாரூக்யிடம் இதை பற்றி பேசலாமா? வேண்டாமா? என்று குழம்பிய ஜாரா வேணாம் என முடிவெடுத்து அமைதியாகினாள்.  ஜாரா, ஷாஜிதாவைப் பற்றித் தான் நினைத்துக் கொண்டிருந்தாள்.

ஷாஜிதா , எதையோ ஆழமாக யோசித்துக் கொண்டிருந்ததைக் கவனித்த ஃபிர்தவுஸ் ,  " ஷாஜிதா " என தோளை உலுக்கி அழைத்தவுடன் , ஷாஜிதா , புரியாமல் விழித்தாள்.

"ஏய் ஷாஜிதா என்னாச்சு? ஏன் இப்படி இருக்க? " என ஃபிர்தவுஸ் கேட்டவுடன் , "ஒ...ஒன்னுமில்ல ... " என சிறு இடை விட்டு  , " எனக்கு ஒரு பேப்பர் பென் கிடைக்குமா?  "  என ஷாஜிதா ஃபிர்தவுஸை பார்க்க , " எதுக்கு ஷாஜிதா? " என்றவுடன் , "ங்ஹே! காதல் கடிதம் எழுத தான்... ச்சி பேப்பர் பென் கொடு எரும " என்றாள் , ஷாஜிதா.

"யாரு சமீர் அண்ணாவுக்கு லவ் லெட்டர் எழுத போறீயா? மா ஷா அல்லாஹ் சூப்பர் " என ஃபிர்தவுஸ் சிரித்ததும் , "ம்ஹ்ம் போடி பேப்பர் பென் கொடு "  என சிணுங்கிய ஷாஜிதாவை கண்ட ஃபிர்தவுஸ் , "ஹே... ஷாஜிதாஆஆ... உனக்கு வெட்கமெல்லாம் படத் தெரியுமா??? அல்லாஹ் சமீர் அண்ணா மட்டும் இதை பார்த்தாருன்னு வை செமயா இருக்கும் " என்றவுடன் ,  ஷாஜிதா கன்னம் வெட்கத்தில் சிவந்துப் போனது.

ஷாஜிதாவின் அருகில் அமர்ந்த ஃபிர்தவுஸ் ,  " இங்க பாரு ஷாஜிதா! சமீர் அண்ணாவை எப்பவும் கை விட்றாத.. அவர் தான் உன்னோட வாழ்க்கைக்கு கிடைச்ச அர்த்தம். உனக்காக சமீர் அண்ணா எந்த எல்லைக்கும் போவாரு. அண்ணா உன்னே எந்தளவுக்கு நேசிக்கிறாருன்னு சொல்ல வார்த்தை இல்ல. நீ கண்ணு முழிக்கிற வரைக்கும் அண்ணா பித்து பிடிச்ச மாதிரியே தான் இருந்தாரு. அவருக்கு எல்லாமே நீதான்'னு வாழ்ந்துட்டு இருக்காரு ஷாஜிதா. அவரை எதுக்காகவும் எப்பவும்  காயப்படுத்திடாத ஷாஜிதா. சமீர் அண்ணா ரொம்ப நல்லவரு..."  என்றவுடன், " போதும் டி உன் அண்ணன் புராணம் அதெல்லாம் எனக்குத் தெரியும் " என ஷாஜிதா, தன் தலையை சிலுப்பிக் கொண்டாள்.

"ஆஹான்... மனசுல இருக்க நேசம் வெளியே வருதுஉஉ... ம்... அண்ணா மேல இவ்வளவு நேசத்தை வைச்சிட்டு ஏன் உனக்குள்ளே போட்டு உன்னேயே கஷ்டப்படுத்திட்டு இருக்க ஷாஜிதா... இனி நடந்ததை பத்தி யோசிக்காத சமீர் அண்ணாவோட சந்தோஷமா வாழுற வழியை பாரு " என்றவுடன் ஷாஜிதா மென்மையாய் புன்னகைத்தாள்.

"உன் முகத்தில இப்படி ஒரு சிரிப்பை இன்னிக்குத் தான் பார்க்கிறேன்... இப்படியே இரு ஷாஜிதா எப்பவும் " என தன் தோழியை அணைத்துக் கொண்டாள் , ஃபிர்தவுஸ்.

முஸ்கான் மற்றும் முஷினா இருவரும் ஷாஜிதாவிற்கு உடையை காண்பிக்க வந்தனர்.

"அக்கா நீயே ஷாஜிதா கிட்ட காட்டு க்கா நான் காட்டலை... " என முஸ்கான் பயந்தவாறு கூறியதும் ,

"ஏன்? "  - முஷினா

"பயமா இருக்கு  க்கா எனக்கு, ஷாஜிதாவை பார்க்கிற அப்ப... ப்ளீஸ் க்கா " என கெஞ்சியதும் , "ம் சரி வா " என இருவரும் உள்ளே நுழைந்தனர்.

"அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) " என கதவைத் திறந்து முசினா ஸலாம் வைத்ததும் தோழிகள் இருவரும் பிரிந்து பதில் ஸலாம் வைக்க , " ம்... எப்படி இருக்க ஷாஜிதா? " என முஷினா கேட்டதும் , " அல்ஹம்துலில்லாஹ் நல்லா இருக்கேன்... " என ஷாஜிதா பதில் அளித்தாள்.

முஷினா , "என் தம்பி மேல இவ்வளவு நேசம் வைச்சிட்டே தான் அமைதியா இருந்தீங்களோ... " என்றதும் , ஷாஜிதா அமைதியாக தலையைப் பனித்துக் கொண்டாள்.

"ம்ம்ம்! அதுசரி... இங்க பாரு உன் புருஷன் உனக்காக வாங்கியிருக்க நிக்காஹ் துணி பாரு " என முஷினா , லெஹங்காவும்  குர்த்தி வித் முஹல் லெஹங்கா(Kurti with Mughal lehenga) வையும் ஷாஜிதாவிற்கு எடுத்துக் காட்டியதும் ஷாஜிதாவின் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தது மட்டுமில்லாமல் அதை பார்த்தவுடனே விலையுர்ந்த ஆடை என்பதையும் உணர்ந்துக் கொண்டதும் கண்கள் கலங்கத் தொடங்கியதும் யாரும் அறியா வண்ணம் துடைத்துக் கொண்டு அதை மென்மையாய் தடவிப் பார்த்தாள்.

"டிரஸ் பிடிச்சிருக்கா ஷாஜிதா? " என முஷினா கேட்டதும்  , "பிடிச்சிருக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு " என ஷாஜிதா அந்த ஆடையை தடவிய படி காதலோடு கூறினாள்.

மூவரும் ஒருவரைப் பார்த்து ஒருவர் சிரித்துக் கொண்டு , "இவ்ளோ காதலை வைச்சிட்டு இவ்வளவு நாள் எங்க இருந்த ஷாஜிதா? " என முஷினா கேட்டதும் திருதிருவென விழிக்கத் தொடங்கினாள் , ஷாஜிதா.

ஷாஜிதா விழிக்கத் தொடங்கியதைப் பார்த்த மூவருக்கும் சிரிப்பு வர அதை அடக்கிக்கொண்டு , "அதுசரி... ம் இதில எது உன் புருஷனுக்கு வாங்கலாம் கேட்க சொல்லி அனுப்பி இருந்தா... பார்த்து சொல்லு " என தன் அலைபேசியில் எடுத்த உடைகளின் படத்தை காண்பிக்க ஷாஜிதா அதில் மூன்று ஆடைகளை தேர்ந்தெடுத்து , காட்டினாள்.

ஷெர்வானி , களபண்ட் கோட் வித் பிளரேட் சல்வார் (Galaband coat with flared Salwar) மற்றும் ப்லைன் ஜாக்கெட் வித் சுடிதார் (Plain Jacket with Chudidaar)  மூன்றும் காட்டியதும் , "ம் அல்ஹம்துலில்லாஹ் செம செலக்ஷன் ஷாஜிதா " என முஷினா , கூறிக் கொண்டே தன் தம்பிக்கு புலனத்தில் அதை அனுப்பி விட்டு சமீருக்கு அழைத்தாள்.

தன் அக்காவின் அழைப்பை ஏற்ற சமீர் , "சொல்லு க்கா "

"ம்... டேய் உன் பொண்டாட்டி உனக்காக மூனு டிரஸ் பார்த்துக்கிறாள் அதை உனக்கு எதுன்னு அனுப்பி இருக்கேன் பார்த்து வாங்கிக்கோ சரியா " என முஷினா கூறியதும் , "ம் சரி க்கா... அப்பறம் மணி ஏழு நீங்க ஷாஜிக்கு சாப்பாடு கொடுத்துட்டு அவள் தூங்குனதும் எனக்கு ஒரு கால் பண்ணுங்க நான் வந்த பிறகு நீங்க கிளம்புவீங்க " என சமீர் கூறியதும் , "அதுசரி... ம்... நாளைக்கு இந்நேரத்துக்கு நம்ம மொத்த வீடும் கலக்கட்ட போகுது... உங்க ரெண்டு பேரோட ஹல்தியும் (நலங்கு) இந்நேரம் ஆரம்பிச்சிடுவோம் இன் ஷா அல்லாஹ்... " என முஷினா கூறியதும் , " ம்ஹ்ம்! வை க்கா போனை " என சிணுங்கியபடி அலைபேசியை துண்டித்தான் , சமீர்.

இதை எல்லாம் கேட்டுக்கொண்டிருந்த ஷாஜிதாவும் வெட்கத்தில் அமைதியாக தன் தலையைப் பனித்துக் கொண்டாள்.

அதன் பிறகு எதுவும் சொல்லாமல் , முஷினா ஷாஜிதாவிற்கு இரவு சாப்பாட்டை ஊட்டி விட , முதலில் தயங்கிய ஷாஜிதா , அதன் பின் வாங்கிக் கொண்டாள்.

ஷாஜிதா , உணவை எடுத்துக் கொண்டவுடன் மாத்திரை எல்லாம் கொடுத்த சிறிது நேரத்திலே உறங்கி விட்டாள் ஷாஜிதா.

தன் அக்காவிடம் இருந்து அலைபேசியை துண்டித்து விட்டு , எந்த ஆடைகள் தன்னவள் தனக்காக தேர்வு செய்து இருக்கிறாள் என ஆவலாய் புலனத்திற்கு சென்று பார்த்த சமீருக்கு இன்பம் இதயத்தில் பற்றிக் கொள்ள , அழகாய் இதழ்களும் விரிந்தது. பிறகு இருக்காதா என்ன? தான் தேர்ந்தெடுத்த உடையையே தன்னவளும் தேர்ந்தெடுத்து இருக்கிறாள் என்றால் சும்மாவா?

சிறிதும் தாமதிக்காமல் அந்த ஆடைகளை வாங்கிக் கொண்டு பணம் செலுத்திக் கொண்டிருந்தான். அப்போது , அக்கா முஷினா அலைபேசியின் மூலமாக ஷாஜிதா உறங்கி விட்டதை கூறியதும் , வேலைகளை விரைவாக முடித்துக் கொண்டு மருத்துவமனையை நோக்கி பறந்தான், சமீர்.

மருத்துவமனைக்கு வந்த சமீரை உடன்பிறப்புகள் இருவரும் ஒருவழி செய்து விட, சமாளிக்க முடியாமல் திணறிப் போனான். யாசர் தான் இருவரையும் அமைதியாக்கினான். அதன்பின் அங்கேயே உணவை எடுத்துக் கொண்டு மூவரையும் யாசருடன் வழி அனுப்பி வைத்துவிட்டு, அறையின் கதவை சாத்தினான்.

அறையின் கதவை மூடி விட்டு திரும்பிய சமீர் , உறக்கத்தில் இருந்த தன்னவளை பார்த்ததும் தன்னை அறியாமல் வழிந்தோடிய கண்ணீரை துடைக்காமல் ஷாஜிதா அருகில் சென்று அங்கிருந்த நாற்காலியை சத்தமில்லாமல் இழுத்து அமர்ந்தான்.

மெல்ல ஷாஜிதாவின் கரத்தை எடுத்து தன் கரத்தினுள் அடக்கிய சமீர் , மற்றொரு கரத்தால் , ஷாஜிதாவின் தலையை மென்மையாய் கோதி விட்டான்.

'வார்த்தையே வெளியே வர மாட்டேன்து உன் காதலை சொல்ல... உன் உயிரையே துச்சமா எண்ணி என்னே காப்பாத்திட்டு நீ படுத்துட்டு இருக்கள... இப்படியே படுத்துட்டு இரு... இன்னும் ரெண்டு நாளுல உன்னே எப்படி பார்த்துக்கிறேன் மட்டும் பாரு பட்டு...  இனி உன் அழுகை எல்லாம் சிரிப்பா மாறும்! உன் துன்பம் எல்லாம் இன்பமா மாறும்! மாத்துவேன்...' என அல்லாஹ்வை நினைத்து உறுதி மொழி எடுத்துக் கொண்ட சமீர் , மெல்ல ஷாஜிதாவின் கரத்தை விட்டான்.

சமீர் , ' என்னே குத்த வந்தது யாரு? எதுக்காக என்னே குத்த வந்திருப்பான்? இதுவரைக்கும் நான் எடுத்து நடத்தின கேஸ்ல எந்த எதிரியும் இல்ல! ஏன்னா மொத்தமா கூண்டோடு கூண்டா ஒருத்தர் விடாம தூக்கிட்டோம். அப்பறம் யாரு? ஒருவேளை இது ஹசீனாவோட வேலையா இருக்குமோ? ஆனா அதை அவள் செய்திருந்தால் , நமக்கு தெரிஞ்சிருக்குமே யாரா இருக்கும்! ' என மனம் அதை அலசிக் கொண்டிருக்க , புத்தியோ , "டேய்! வெண்ணே... அமைதியா நிக்காஹ்க்கு கிளம்பு... இதெல்லாம் பார்த்துக்கலாம்... இப்ப தான் உன் ஆளு அமைதியா தூங்கிட்டு இருக்கா.. எழுப்பி விடவா? என்ன நடக்கும் தெரியும்ல "  என கிண்டலடிக்க , "டேய் குருநாதா... தப்பி தவறிக் கூட அந்த ஒரு தப்பை செய்திடாத... நான் அமைதியாவே இருந்திடுறேன்" என சமீர் அமைதியாகினான்.

சிறிது நேரத்தில் , அறையின் கதவை யாரோ தட்ட , சமீர் எழுந்து சென்று கதவைத் திறக்க வந்திருந்தது வெறு யாருமில்லை அப்பாஸ் தான்.

"அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) டா புது மாப்பிள்ளை " என ஸலாம் வைத்ததும் , "ம்ச் டேய்... வ அலைக்குமுஸ் ஸலாம் (வரஹ்) " என பதில் ஸலாம் வைத்த சமீர் , தன் பார்வையை வேறு பக்கம் திருப்பிக் கொண்டதும் , "டேய்... மச்சீ... வெட்கப்படுறீயா " என அப்பாஸ் கலாய்க்க , "இப்ப எதுக்கு வந்த? " என சமீர் அதட்ட , "என் தங்கச்சியை பார்க்க வந்தேன்... நகருடா " என அப்பாஸ் அடங்க , "ம் அதை பாரு... " என சமீர் தன் குரலில் கடுமையைக் காட்டியதும் அமைதியாக அப்பாஸ் தன் வாயை மூடிக்கொண்டு  தன் வேலையை செய்தான்.

ஷாஜிதாவின் உடல் நிலையை கவனித்த அப்பாஸ் , "ஒரு பிரச்சனையும் இல்ல டா... ஆனா புண் ஆற கொஞ்சம் நாள் எடுக்கும் அதுவரை பத்திரமா பார்த்துக்கோ முக்கியமா இப்போதிக்கு அது எதுவும் வேணாம் நான் சொன்னது உனக்கு புரிஞ்சி இருக்கும் நினைக்கிறேன் " என கூறியதும் , "ம் கண்டிப்பா டா... " என்றான் சமீர்.

"டேய் நீ இன்னும் வீட்டுக்கு போகாம இங்க என்ன செய்ற? " - சமீர்

"ஷாஜிதா இப்படி இருக்க நேரத்தில விட்டுட்டு போக மனசு இல்ல அதான் வீட்டுக்கு போன் பண்ணி சொல்லிட்டேன்.. எல்லாமே தெளிவா யூசுப் போய் வீட்டில சொல்லிட்டான்.. ரெண்டு தாத்தாவும்  செம கோபத்தில இருக்காங்க.. ஏற்கனவே அந்தக் குடும்பத்தில மேல கொலைவெறி ல இருக்காங்க. இப்ப சொல்லவே வேண்டாம்.. " என அப்பாஸ் வருந்த , "எல்லாமே மாறும் டா... " என நம்பிக்கை பட சமீர் கூறியதும் அப்பாஸ் புன்னகைத்தான்.

"ம் நாளைக்கு காலையில பத்து மணிக்கு ஷாஜிதாவை வீட்டுக்கு அழைச்சிட்டு போய்டலாம் " - அப்பாஸ்

"ம் சரி டா " - சமீர்

"டேய்! மச்சீ.... ரொம்ப சந்தோஷம் டா... இன்னும் ஒரு நாளுல உனக்கு கல்யாணம்... மனசு ரொம்ப சந்தோஷமா இருக்கு டா.. அல்ஹம்துலில்லாஹ்" என தன் நண்பனை அணைத்துக் கொண்டான் அப்பாஸ்.

சமீரின் வீட்டில் நிக்காஹ்விற்கான ஏற்பாடுகள் அழகாக நடக்கத் தொடங்கின. வீட்டின் இருபக்கமும் வாழை மரங்களை கட்டி மாடியின் மேல் பந்தல் போட்டு லைட் செட்டிங்ஸ் எல்லாம் செய்ய தொடங்கி விட்டார்கள்.

வீட்டிற்குள் வண்ண வண்ண காகிதங்களால் தோரணங்கள் தொங்க விடப்பட்டு இருந்தன. முஸ்கான் முஷினா இருவரும் வீட்டை அலங்கரித்துக் கொண்டிருந்தனர்.

அஸ்மா , மெஹ்ராஜ்  இருவரும் சமையல் வேலையை கவனித்துக் கொண்டிருக்க , ஷாஜிதாவின் அண்ணன் பைசூர் ரஹ்மான், யாசர் மற்றும் முபாரக் வெளி வேலைகளை கவனித்துக் கொண்டிருக்க , லத்தீப் பள்ளிவாசலுக்குச் சென்று நிக்காஹ் நடப்பதற்கான வேலைகளை செய்துக் கொண்டிருந்தார்.

யாசரின் தங்கை ஜன்னத், ஃபிர்தவுஸை எந்த வேலையும் செய்யாமல் பார்த்துக் கொண்டாள்.  யாசரின் தந்தை நவாஸ் , சவுதியில் வேலை செய்கிறார். யாசருக்கு ஒரே தங்கை மட்டும் தான் ஜன்னத். இப்போது பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறாள்.

இரவு உணவை முடித்துவிட்டு அனைவரும் உறங்கி விட , பௌஸியா தன் மகள் அம்ரீனை தனியே அழைத்து வந்தார்.

"அம்மு அம்மா சொல்றதை கேளுடா... இப்ப வந்திருக்க இடம் ரொம்ப நல்ல இடம் டா... பையன் ரொம்ப நல்லவன் டா மா கேளு அம்மு " என பௌஸியா தன் மகள் அம்ரீனுக்கு பொறுமையாக எடுத்துக் கூறியதும் ,

" ம்ம்மா ப்ளீஸ் புரிஞ்சிக்கோ... என்னே சுத்தி இருக்க ஆண்கள் நல்லவங்களா நம்பிக்கையா இருந்தா மட்டும் தான் என்னால இன்னொருத்தவனை நம்பி கல்யாணம் பண்ணிக்க முடியும்.. ஆனா என்னே சுத்தி இருக்க எந்த ஆண் சரியா இருக்காங்க சொல்லு ம்மா... என்னால முடியாது... இதை தவிர நீ வேற எதை வேண்டுமானாலும் செய்ய சொல்லு நான் செய்றேன்... ஆனா இது என்னால முடியாத காரியம் " என அம்மாவின் பதிலுக்குக் காத்திராமல் அம்ரீன் பேசிவிட்டு உறங்கச் சென்றாள்.

பௌஸியாவின் மனம் தான் தவியாய் தவித்தது. தன் இரண்டு பெண் பிள்ளைகளின் வாழ்க்கையும் எப்படி அமைய போகிறது? என நினைத்த பெத்த மனம் வலித்தது. இதற்கெல்லாம் தீர்ப்பு தருபவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யார் ஒருவனும் இல்லை என்பதை உணர்ந்திருந்த பௌஸியா இரண்டு ரக்ஆத் தொழுகையை தொழுது அல்லாஹ்விடம் தன் மகள்களின் வாழ்க்கைக்காக மன்றாடினார்.

அதிகாலையிலே, லத்தீப் மற்றும் யூசுப் இருவரும் சேர்ந்து வலிமா நடக்க ஒரு மண்டபத்தை தேடினார்கள். அவசரத்திற்கு மண்டபம் கிடைக்கவில்லை. கிடைத்த மண்டபங்களும் , இஸ்லாமியர்களுக்கு இல்லை என்று கூறிவிட , வந்த கோபத்தை எல்லாம் அடக்கிக் கொண்டு அமைதியாக வீடு திரும்பினார்கள்.

வலிமாவை வீட்டிலே வைத்துக் கொள்ளலாம் என்று அஸ்மா கூறிவிட , வேறு வழியில்லாமல் ஏற்றுக் கொண்டனர்.

சமீர் வீட்டிற்கு இரவே அழைத்து இன்று காலை பத்து மணிக்கு ஷாஜிதாவை வீட்டிற்கு அழைத்துச் செல்லலாம் என்பதை சொல்லி விட , கூடவே அதற்கான ஏற்பாடுகளும் நடந்தது.

யாசர் வெகு சீக்கிரமாகவே மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தான். ஷாஜிதா எழும் முன்பே , சமீர் அங்கிருந்து கிளம்பிவிட , யாசர் இருந்து கவனித்துக் கொண்டான்.

ஏழு மணிப்போல் , முஷினா ஷாஜிதாவிற்கு தேவையானவற்றை எடுத்துக் கொண்டு வந்தாள். ஏழரை மணி போல் , கண்விழித்த ஷாஜிதா முதலில் தேடியது சமீரைத் தான். சமீர் அங்கு இல்லை என்றாலும் சமீரின் வாசத்தை ஷாஜிதாவால் உணர முடிந்தது.

எழுந்தவுடன் யாரிடமும் பேசாமல் அமைதியாக யோசித்த ஷாஜிதா , முஷினா மற்றும் யாசரை உற்றுக் கவனிக்கத் தொடங்கியதும், இரவு முழுவதும் தன்னவன் தான் இருந்தான் என்பதை உணர்ந்த ஷாஜிதா , 'பப்புஉஉஉ உங்களுக்கு இருக்கு... ' என மனதில் செல்லமாக திட்டினாள்.

அதன்பின் , முஷினாவின் உதவியோடு ஷாஜிதா, தன் வேலைகளை முடித்து வந்து அமர்ந்தாள்.  முஷினாவே ஷாஜிதாவிற்கு ஊட்டி விட முதலில் மறுத்த ஷாஜிதா , பின் வாங்கிக் கொண்டாள்.

சாப்பிட்டு முடித்துவிட்டு, அப்பாஸ் வேறு ஒரு மருத்துவரை அழைத்து ஒருசில டெஸ்ட்களை எடுத்து சரிப்பார்த்து பத்து மணிக்கு ஷாஜிதாவை வீட்டிற்கு அழைத்து வந்தார்கள்.

ஷாஜிதாவை தன் தோளில் கைத்தாங்கலாக பிடித்து உள்ளே மகிழ்ந்திலிருந்து இறக்கினாள் , முஷினா.

ஷாஜிதா , இறங்கியதும் அலங்கரிக்கப்பட்ட வீட்டை பார்த்ததும் கண்கள் எல்லாம் கலங்க அதை யாரும் அறியா வண்ணம் துடைத்துக் கொண்டாள்.

மெல்ல ஷாஜிதாவை உள்ளே அழைத்துக் கொண்டு சென்றார்கள். ஷாஜிதா கை கால்களை எல்லாம் கழுவிக் கொண்டு வந்தமர்ந்தவுடன் , ஜாராவின் நினைவு வர , உடனே தன் கல்லூரி பையைத் தேடினாள்.

ஷாஜிதா , எதையோ தேடுகிறாள் என்பதை உணர்ந்த முஸ்கான் , " ஷாஜிதா என்ன தேடுற? " என கேட்டதும் , " என்னோட காலேஜ் பேக் " என ஷாஜிதா தான் தேடும் பொருளை கேட்டதும் ,

"அது அண்ணா ரூம்ல இருக்கு. நாளையில இருந்து அங்க தானே தங்க போற! அதனால உன்னோட எல்லா பொருட்களையும் அங்கேயே கொண்டு போய் வைச்சிட்டேன்.."  - முஸ்கான்

"ஓ இப்ப எனக்கு அது வேணும் கிடைக்குமா? " - ஷாஜிதா

"ம் இரு எடுத்துட்டு வந்து தரேன் " என முஸ்கான் சமீரின் அறைக்கு சென்று எடுத்து வந்து கொடுத்தாள்.

"ம் , தேங்க்ஸ் " - ஷாஜிதா

"பரவாயில்லை ஷாஜிதா " - முஸ்கான்

"ம் ஃபிர்தவுஸை வர சொல்றீங்களா! " - ஷாஜிதா

"ம் வர சொல்றேன் " என ஃபிர்தவுஸை அழைக்க சென்றாள் , முஸ்கான்.

ஃபிர்தவுஸ் , சமையலறையில் அஸ்மாவிற்கு உதவியாக இருந்தாள். அங்கே இருப்பதை உணர்ந்த முஸ்கான் , " ஃபிர்தவுஸ் , ஷாஜிதா உன்னே அழைச்சா என்ன போய் கேளு இதை நான் பார்த்துக்கிறேன் " என்றவுடன் ஃபிர்தவுஸ் ஷாஜிதாவின் அறைக்குச் சென்றாள்.

"ஷாஜிதா கூப்பிட்டியா? " - ஃபிர்தவுஸ்

"ம் ஆமா ஃபிர்தவுஸ் கூப்பிட்டேன்.. ஒரு ரெண்டு நிமிஷம் பொறு..." என ஷாஜிதா கூற

"ஷாஜிதா! என்ன எழுதுற? " - ஃபிர்தவுஸ்

"ம் சொல்றேன் " - ஷாஜிதா

"என்னதுன்னு சொல்லு வேலை நிறைய இருக்கு! " - ஃபிர்தவுஸ்

"அதை விட இது முக்கியம் ஃபிர்தவுஸ் , இந்தக் கடித்ததை எடுத்துட்டு போய் உன் அண்ணன் கிட்ட கொடுத்துட்டு வா ஃபிர்தவுஸ்... இதுல ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம் எழுதி இருக்கேன் ப்ளீஸ் " - ஷாஜிதா

"சமீர் அண்ணா கிட்ட தானே கொடுத்திட்டா போகுது " - ஃபிர்தவுஸ்

"அல்லாஹ்! அவருக்கு நானே கொடுத்திடுவேன்... இது ஒன்னும் அவருக்கு இல்ல... உன் கூட பொறந்த அண்ணனுக்கு " என்றவுடன் ஃபிர்தவுஸ் சற்றும் தாமதிக்காமல் அந்தக் கடிதத்தை கிழித்துவிட்டு , ஷாஜிதா பளார் என அறைந்து , " இங்க பாரு ஷாஜிதா! இப்ப தான் உன் வாழ்க்கை நல்லா இருக்கு... அதை நீயே கெடுத்துக்காத... உன் வாழ்க்கையை அழிச்சவங்களை பத்தி யோசிச்ச... அவ்ளோ தான் " என எச்சரித்து விட்டு ஷாஜிதா கூற வருவதை எதுவும் கேட்காமல் வேகமாக அந்த அறையை விட்டு வெளியேறினாள் , ஃபிர்தவுஸ்.

ஃபிர்தவுஸ் , வெளியேறியதும் ஷாஜிதா , ' அல்லாஹ் நான் என்ன செய்வேன்... ஜாரா உன்னே நினைச்சா பயமா இருக்கு டி. உன்னே நோக்கி ஏதோ ஒரு ஆபத்து வர போதுன்னு உள் மனசு செல்லிட்டு இருக்கு... அதில இருந்து உன்னே எப்படி காப்பாத்த போறேன் தெரியலை... ஜாராஆஆ.... ' என மனதிலே குமுறி அழுதாள்.

ஷாஜிதா மட்டும் அறையில் தனியாக இருக்கிறாள் என்பதை உணர்ந்த முஷினா, தன் மகள் இஷானாவையும் ஜன்னதையும் அழைத்து வந்தாள்.

இவர்கள் வருவதை உணர்ந்த ஷாஜிதா தன் கண்களைத் துடைத்துக் கொண்டு , மென்மையான புன்னகையில் வரவேற்றாள்.

முஷினாவும் அருகிலே இருந்தாள். சிறிது நேரத்தில் ஷாஜிதாவை கழிவறைக்கு அழைத்துச் சென்று அதிகம் தண்ணீர் படாமல் வெறும் தலை மட்டும் நனையும் அளவிற்கு மஞ்ச தண்ணீரை ஊற்றி மஞ்சள் நிற புடவையை அழகாய் அணிந்து விட்டாள்.
ஷாஜிதாவின் , முகமும் வெட்கத்தில் சிவக்கத் தொடங்கியது.

அதேநேரம் , ஹல்திக்கு சமீரும் கிளம்பிக் கொண்டிருந்தான். சமீரை வாட்டி வதக்கி எடுத்துக் கொண்டிருந்தார்கள் நண்பர்கள் அனைவரும்.

மணி பன்னிரெண்டு மணிக்கு , சமீருக்கு நலங்கை வைக்கத் தொடங்கினார்கள். அஸ்மா, நலங்கை வைத்து தன் மகனின் கன்னத்தில் முத்தமொன்றை வைத்து "சந்தோஷமா வாழு டா " என ஆரத்தழுவி கொண்டார்.

சமீருக்கு நலங்கு முடிந்ததும் , அனைவரும் சாப்பிட அமர்ந்தார்கள். மணமகனும் மணகளும் அவரவர் அறையில் அமைதியாக மதிய உணவை எடுத்துக் கொண்டனர்.

ஷாஜிதாவிடம் , அழகாக ஒட்டிக் கொண்டாள் இஷானா. மதியம் உணவிற்கு பிறகு மூன்று மணி போல்  , ஷாஜிதாவிற்கு வீட்டிற்குள்ளே நலங்கை வைத்தனர்.

ஷாஜிதா, வெட்கத்தில் நெளிந்து நெளிந்து அமர்ந்திருக்க , அனைவரும் தங்களுக்குள் சிரித்துக் கொண்டனர்.

முதலில் , மெஹ்ராஜ் தான் ஷாஜிதாவிற்கு நலங்கை வைத்து தொடங்கி வைத்தார்.  ஷாஜிதாவின் கண்களில் கண்ணீர் வர அதை தன் கையில் இருந்த கைக்குட்டையால் துடைத்துக் கொண்டாள்.

நலங்கு முடித்ததும் , ஷாஜிதாவை அறையில் விட்டனர். கூடவே இளசுகள் பட்டாளமும் இருந்தது.

ஆறு மணிப்போல், மருதாணி இலையை அரைத்து எடுத்து வந்தாள் , முஷினா. அதிலே ஷாஜிதாவின் இருகரங்களிலும் வரைந்தாள். ஷாஜிதாவிற்கு முடித்ததும் மற்றவர்களுக்கும் வைத்து விட்டாள்.

இரவு உணவிற்கு மெஹ்ராஜ் மற்றும் அஸ்மா இருவரும் அனைவருக்கும ஊட்டி விட்டார்கள்.

விடியற்காலை நான்கு மணிக்கு நிக்காஹ் என்பதால் , இரவு எட்டு மணிக்கே அனைவரையும் உறங்க சொல்ல, யாருக்கும் உறக்கம் என்பது துளியும் வரவில்லை.

இரண்டு மணிக்கு, பள்ளிவாசலுக்கு கிளம்பினார்கள் அனைவரும். ஷாஜிதாவிற்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சியை அறியவில்லை.

சமீர் ஒரு மகிழுந்திலும் ஷாஜிதா வேறொரு மகிழ்ந்திலும் அழைத்துச் சென்றார்கள்.

இருபது நிமிடங்களில் பள்ளிவாசலுக்கு வந்து சேர்ந்தனர். அங்கே முன்பே அப்பாஸ் மற்றும் யூசுப் தங்களோட குடும்பத்தோடு வந்து சேர்ந்தனர்.

பள்ளிவாசலின் மேல் பகுதியில் பெண்களுக்கும் கீழ் பகுதியில் ஆண்களுக்கும் பிரித்து வைத்தனர்.

ஷாஜிதா , முஷினா மற்றும் முஸ்கான் உதவியோடு மேல ஏறினாள். அனைவரும் ஒரு இடத்தில் அமர்ந்திருந்தனர்.

பைசூர் ரஹ்மான் தான் இன்னும் இன்னும் மகிழ்வில் இருந்தான். தன் தங்கையின் வாழ்க்கையில் இனி இன்பம் மட்டுமே என எண்ணி மகிழ்ந்தான்.

சரியாக நான்கு மணிக்கு நிக்காஹ் ஓதத் தொடங்கினார் , ஹஜ்ரத் ஹலீல். நிக்காஹ் உரை முடித்ததும் , முதலில்  சமீரிடம் , "இந்த நிக்காஹ்வில் சம்மதமா" என மூன்று முறை ஹஜ்ரத் கேட்டதும் மூன்று முறையும் "சம்மதம்" என கூறி நிக்காஹ் பதிவேட்டில் கையெழுத்து வாங்கினார்கள்.

'ஷாஜிமா பட்டுக்குட்டி... உன்னோட எல்லாமுமா நானிருப்பேன் டி.. லவ் யூ சோ மச் டி...' என மனதில் உறுதி எடுத்துக் கொண்டு தன் காதல் கைகூடிய இன்பத்தில் ஆனந்தமாய் கலங்கிய கண்களைத் துடைத்துக் கொண்டு கையெழுத்திட்டான் , சமீர்.

இதெல்லாம் முடிந்ததும் , பைசூர் ரஹ்மான், சமீரின் சுண்டு விரலில் வெள்ளி மொதிரம் ஒன்றை அணிவித்தான். இஸ்லாத்தில் தங்க நகைகள் ஆண்கள் அணிய தடை செய்யப்பட்டுள்ளது. வெள்ளி நகையிலும் மோதிரம் மட்டும் தான் அதுவும் சுண்டு விரலில் மட்டும் தான் அணிய வேண்டும்.

சமீரிடம் கையெழுத்து வாங்கிய பின்பு , ஷாஜிதாவிடம் எடுத்துச் செல்லப்பட்டது. ஷாஜிதாவிடம் நிக்காஹ் பதிவேட்டை காட்டி , "நிக்காஹ்விற்கு சம்மதமா " என கேட்டதும் , "எ...எ..எனக்கு இந்த நிக்காஹ்ல முழு சம்மதம் அல்ஹம்துலில்லாஹ்❤️ " என தன் சம்மதத்தை கூறி , ' பப்பு இனி உங்களுக்கு எல்லாமுமா நானிருப்பேன்... உங்களை எந்தளவுக்கு காயப்படுத்தினனோ அதைவிட அதிகமா பார்த்துக்கிறேன்... லவ் யூ சோ மச் ' என மனதில் உறுதி எடுத்துக் கொண்டு தன் கண்களைத் துடைத்துக் கொண்டே கையெழுத்திட்டு முடித்தாள், ஷாஜிதா.

🖤தொடரும்🖤

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro