Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

💞 10 💞

தன் முடிவை ஷாரூக் தன் பெற்றவர்களிடம் சொன்னதும் எந்தவொரு மறுப்பும் இல்லாமல் அதனை ஏற்றுக்கொள்ள, முதன்முறையாக ஷாஜிதாவிடம் பேசியே தீர வேண்டும் என மனம் அடித்துக்கொண்டது.

ஷாரூக் தன் அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டே யோசித்தான். அப்போது ஷாரூகிற்கு ஒரு யோசனை தோன்றியது. முதலில் அலைபேசியை எடுத்து அஜ்மலுக்கு தொடர்பு கொண்டான்.

தன் அலைபேசி அடித்ததும் அதை எடுத்து தன் காதில் வைத்து , " அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) சொல்லுங்க மச்சான் " என அஜ்மல் சொன்னதும்

ஷாரூக் , "வ அலைக்குமுஸ்ஸலாம் (வரஹ்) நீ எப்டி இருக்க? " என நலம் விசாரிக்க,

அஜ்மல் , " அல்ஹம்துலில்லாஹ். அத்த மாமா எல்லாரும் எப்டி இருக்காங்க? " என கேட்க,

ஷாரூக் , " அல்ஹம்துலில்லாஹ் எல்லாரும் நல்லா இருக்காங்க. அப்றம் நீயும் ஷாஜியும் என்ன பண்றீங்க? " என கேட்டவுடன் அஜ்மல் புரிந்து கொண்டு , ' ஓ துறைக்கு அவன் ஆளுகிட்ட பேசனும் அதுக்கு தான் இவ்ளோ சீனு? ம்ஹ்ம் ' என நினைத்து கொண்டு , " ரெண்டு பேரும் படிச்சிட்டு இருக்கோம் " என சொன்னதும்

ஷாரூக் , "அடேய் காலேஜ்க்கு வந்தும் படிக்கிறிங்களா? " என தலையில் அடித்து கொண்டான்.

இதை கேட்டதும் அஜ்மல் , " என்ன பண்றது இன்னும் ஒரு வாரத்துல உள்மதிப்பீடு பரீட்சை வருதுல " என சொன்னதும்

ஷாரூக், "சரி சரி படி இப்ப போனை ஷாஜி கிட்ட கொடுத்துட்டு.. நீ தூரமா போய் படி " என்றவுடன்

அஜ்மல் , "அடேய் கழட்டி விடுற பாத்தீயா" என சொல்ல

ஷாரூக் , "மூடிட்டு என் ஷாஜி கிட்ட போனை கொடு " என சொன்னதும்

அஜ்மல், " சரி சரி கொடுக்கிறேன் " என சலித்து கொண்டே ஷாஜிதாவிடம் அலைபேசியை நீட்டி , "இந்தா உன் ஷாரூக் பேசனுமா " என கையில் திணித்து விட்டு வெளியே சென்றுவிட்டான் அஜ்மல்.

ஷாஜிதா அலைபேசியை கையில் வைத்துக்கொண்டு அதையே பார்த்துக்கொண்டு பேசலாமா? வேண்டாமா? என நினைத்துக்கொண்டு இருந்தாள்.

ஷாரூக் அமைதியாக இருந்தான். ஷாஜிதா மெல்ல அலைபேசியை எடுத்து தன் காதில் வைத்து , "அ...அ...அஸ்ஸலாமு அலைக்கும்... " என ஸலாம் கூறினாள்.

ஷாரூக் , " வ அலைக்குமுஸ்ஸலாம் (வரஹ்) " என பதில் ஸலாம் வைத்தான்.

சிறிதுநேரம் இருவரிடமும் அமைதி நிலவியது. இருவரும் என்ன பேசுவதென்று தெரியாமல் அமைதியாக இருந்தனர்.

ஷாரூகே முதலில் அந்த அமைதியை கலைத்தான். ஷாரூக் , " ஷாஜி சாப்பிட்டியா? " என கேட்க

ஷாஜிதா , "ம்ம்ம் சாப்பிட்ட நீங்க சாப்பிட்டிங்களா? " என கேட்க

ஷாரூக் , "ம்ம்ம் சாப்பிட்ட ," என்றுவிட்டு "ஷாஜி நீ என் மனைவியா என் வாழ்க்கை பூரா வேணும் தோனுது? " என தன் காதலை ஷாஜிதாவிடம் சொன்னவுடன்,

ஷாஜிதா, " வீட்டுல பேசி உ...உங்க மனைவியா என்னை அழைச்சிட்டு போங்க " என தன் சம்மதத்தை கூறியவுடன் ஷாரூக் மனம் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை எனலாம்.

ஷாரூக் , " கவலைப்படாதே. நான் வந்து உன்ன அழைச்சிட்டு போறேன். சரியா "என ஷாஜிதாவிற்கு வாக்கு கொடுத்தான்.

ஷாஜிதா , "ம்ம்ம் " என கண் கலங்கினாள்.

ஷாஜிதா கண்கலங்குவதை உணர்ந்த ஷாரூக், " ஷாஜி அழ கூடாது. நான் இருக்கேன்ல " என சொன்னதும், ஷாஜிதா சரியென தலையசைத்தாள்.

இருவரும் நெடுநேரமாக தங்கள் மனதில் உள்ளதை பேசி கொண்டிருந்தனர்.

அஜ்மல் கன்னத்தில் கைவைத்தபடி ஷாஜிதாவை முறைத்து பார்த்து கொண்டிருந்தான். ஷாஜிதாவின் சிரிப்பை பார்த்த அஜ்மல் மனம் நிம்மதி அடைந்தது.

ஷாஜிதாவின் இந்த சிரிப்பு எப்போதும் நீடிக்க வேண்டும் என அல்லாஹ்விடம் மனமார்ந்து துஆ கேட்டான்.

பேசி கொண்டே தூங்கிவிட்டாள் ஷாஜிதா. ஷாஜிதா உறங்கிவிட்டதை பார்த்த, அஜ்மல் மெல்ல அலைபேசியை பிரித்து தன் காதில் வைத்து, " ஹலோ மச்சான் அவள் தூங்கிட்டாள். நாளைக்கு பேசலாம் போய் தூங்குங்க! " என சொன்னதும்,

ஷாரூக் , " நாளைக்கும் இந்த நேரத்துக்கு தான் அழைப்பேன் " என்க,

அஜ்மல் , " என்னை மாமா வேலை பாக்க சொல்ற அதானே! பாக்குற "என சலித்து கொண்டான்.

ஷாரூக் , " டேய் என்ன ரொம்ப சலிச்சுக்கிற? " என கேட்க,

அஜ்மல் , "அதெல்லாம் ஒன்னுமில்ல " என்றவுடன்

ஷாரூக் , " ம்ம்ம் சரி. பாட்டியோட பத்தாவது நாள் காரியத்தன்னிக்கி ஷாஜிதாவை பொண்ணு கேட்க போறோம். துஆ செய் " என சொல்ல

அஜ்மலின் முகம் மலர , " சீக்கிரம் இந்த வனவாசத்தில இருந்து அவளுக்கு ஒரு விடிவு கிடைச்சா போதும் எனக்கு . இதுவரைக்கும் அவ நிறைய கஷ்டத்தை பாத்துட்டா! உன்னால எவ்வளவு முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வந்து அவளை அழைச்சிட்டு போ " என சொல்ல

ஷாரூக் , "கண்டிப்பா அஜ்மல். சரி நீபோய் தூங்கு " என கூறிவிட்டு இருவரும் அலைபேசியை வைத்துவிட்டு உறங்க சென்றனர்.

ஷாஜிதாவிற்கு போர்வையை போர்த்திவிட்டு புத்தகங்களை எல்லாம் எடுத்து பையில் வைத்துவிட்டு அஜ்மலும் வெளியே ஹாலில் உறங்கினான்.

அஜ்மலின் மனதில் ஃபர்ஜானா தான் இருந்தாள். தனக்கு ஃபர்ஜானாவை நிக்காஹ் செய்து வைக்க ஒத்துக்கொள்வார்கள் என்று அஜ்மல் கனவிலும் நினைத்து பார்த்ததில்லை.

அஜ்மல் மானசீகமாக , 'ஜானுமா உன் அஜ்ஜு உனக்கே கிடைக்க போறடி. இன்னும் எங்க வீட்டுல மட்டும் தான் பேசனும். கண்டிப்பா அம்மாவும் அப்பாவும் நம்ம காதலை ஏத்துப்பாங்க. நம்ம படிப்பு முடியட்டும். ஷாஜிதாவோட வாழ்க்கை சரியாகாட்டும். நிரந்தரமா ஒரு வேலைக்கு போய்ட்டு எங்க வீட்டில சொல்லி உன்ன என் மனைவியா அழைச்சிட்டு வரேன். அதுவரைக்கும் நாம இப்டியே காதலிப்போம் ' என தன் மனதில் தன்னவளிடம் பேசிக்கொண்டே உறங்கி போனான்.

இவன்தான் இப்படி என்றால் இவனின் அவளோ மொத்தமும் அஜ்மலின் நினைவோடு தான் இருந்தாள்.

ஃபர்ஜானா தன் மனதில் அஜ்மலை நினைத்துக் கொண்டு , 'அஜ்ஜு! ஏன் இன்னிக்கு வரலை? உன்ன பாக்காம இருக்க முடியலை. இந்த ஒரு வருஷம் தான் அப்றம் உன்ன எப்டி பாப்பேன் தெரியலை. எப்டியாவது வந்து என்னை உன் மனைவியா அழைச்சுட்டு போ அஜ்ஜு. நான் காத்துட்டு இருப்பேன் எவ்ளோ வருஷம் ஆனாலும். ' மானசீகமாக தன்னவனிடம் பேசிவிட்டு உறங்கினாள்.

பாவம் ஃபர்ஜானாவுக்கு தான் தெரியவில்லை தன்னை மனைவியாக்க செய்ய வேண்டியதெல்லாம் அஜ்மல் செய்துவிட்டான் என்று. நிலா ஃபர்ஜானாவின் தவிப்பை ஜன்னல் வழியாக பார்த்து கொண்டிருந்தது.

அடுத்து வந்த நாட்கள், ஷாரூக் ஷாஜிதாவின் காதல் நாட்களாகவே நகர்ந்தது. இருவரும் ஒருவரையொருவர் நன்றாகவே புரிந்து கொண்டனர்.

அன்று பாட்டி மைமூனின் பத்தாவது நாள் காரியம் எல்லாரும் வந்திருந்தனர். ஷாஜிதாவிற்கு தான் மனம் பாரமாக இருந்தது.

ஹசினா உசைனிடம் , " ஏங்க இன்னிக்கி நம்ம ஜாரா ஷாரூக் நிக்காஹ் பத்தி பேசுங்க நம்ம சல்மாகிட்ட " என்றதும்

உசைன் , " பேசிடலாம் ஹசினா. நீபோய் இப்ப வேலையை பாரு! " என்றவுடன் ஹசினாவும் அமைதியாக வேலை செய்ய தொடங்கினார்.

பௌஸியா மனம் கொந்தளித்தது. ஷாரூக் இந்த நிக்காஹ்விற்கு சம்மதம் சொல்ல கூடதென்று துஆ கேட்டாள்.

சல்மா தன் குடும்பத்தோடு வந்தார். அவர்களை பார்த்தவுடன் அனைவரும் வந்து வரவேற்றனர். அனைவரும் உள்ளே சென்று விட்டனர் ஷாரூகை தவிர்த்து. ஜாரா ஷாரூக் முன் வந்து நின்றாள். ஆனால் ஷாரூக் கண்கள் ஷாஜிதாவை தேடியது. அப்போது ஷாஜிதா மேலிருந்து கீழே வந்தாள். ஷாஜிதாவை பார்த்ததும் ஷாரூக் முகம் மலர்ந்தது. ஷாரூகை பார்த்த ஷாஜிதா வெட்கத்தோடு திரும்ப தன் அறைக்கே சென்று விட்டாள்.

அஜ்மல் மெதுவாக ஷாரூக் அருகே வந்து , " மச்சான் வழியுது தொடச்சிக்கோங்க " என சொல்ல, ஷாரூக் சிரித்துக் கொண்டே ஷாஜிதாவை பார்க்க சென்றான்.

ஜாராவிற்கு ஷாரூகின் செயல் எரிச்சலடைய செய்ய உள்ளே சென்று தன் அம்மாவை அழைத்து , "அம்மா பாரு ம்மா ஷாரூக் அந்த ஷாஜிதாவை தான் பாக்கிறா என்ன பாக்கவே மாட்றா" என சொல்ல

ஹசினா , " பாப்பா நீ கவலப்படாதே ஷாரூக் உனக்கு தான். உனக்கும் ஷாரூகும் நிக்காஹ் கண்டிப்பா நடக்கும். அதனால இதை பெருசா எடுத்துக்காத! சரியா" என சொல்ல அமைதியாக அதை ஏற்றுக்கொண்டாள் ஜாரா.

ஷாஜிதா, அறையில் அமைதியாக அமர்ந்திருந்தாள். அப்போது, அம்ரீன் வந்து , "அக்கா உன்ன அந்த டைனோசர்(ஹசினா தான் டைனோசர்) அழைச்சுது. "என அழைத்து சென்றுவிட்டாள்.

பாவம் ஷாரூக் ஏமாந்து பாவமாக பார்க்க ஷாஜிதா சிரித்துவிட்டு கீழே சென்றாள்.

அங்கு நிறைய வேலைகள் ஷாஜிதாவிற்கு காத்திருந்தது. அனைத்து வேலைகளையும் செய்ய தொடங்கினாள்.

ஷாஜிதா இங்கு வேலை செய்து கொண்டிருக்கும் போது, ஹசினா மேலே சென்று ஷாஜிதாவின் சமையலறையில் சக்கரை டப்பாவில் இருந்த சக்கரையை எடுத்து வேறு டப்பாவில் மாற்றி விட்டு அதே டப்பாவில் சக்கரை போல் இருக்கும் விஷத்தை அதில் போட்டு வந்தாள். மாற்றிய சக்கரையை தன் கையோடு எடுத்துக்கொண்டு வந்தார்.

மைமூனின் பத்தாவது நாள் காரியம் நன்றாக முடிந்தது. மற்றவர்கள் எல்லாரும் சென்று விட்டனர்.

அப்போது, உசைன் மெல்ல பேச்செடுத்தார்.

உசைன் , " சல்மா, நான் சுத்தி வளைச்சு பேச விரும்பலை! என் பொண்ணு ஜாராவை உன் வீட்டு மருமகளாக்க சம்மதமா? " என கேட்க

சல்மா , " இல்ல ண்ணா எனக்கு ஷாஜிதாவை தான் என் வீட்டு மருமகளா ஏத்துக்க விருப்பம் " என கூறிவிட்டு

ஷாஜிதா அருகில் சென்று , "அம்மாடி ஷாஜிதா வா உன் வீட்டுக்கு போலாம் அங்க உன் கையால எனக்கு டீ போட்டு கொடு " என சொல்ல அனைவரும் அதிர்ந்தனர்.

உடனே ஹசன் , "சல்மா வேணா, இவள் ராசி இல்லாதவ! உன் வீட்டுக்கு மருமகளா வந்தா தப்பு ஏதாவது நடக்கும் " என சொல்ல

சல்மா , "போதும் ண்ணா ராசி பாக்கிறது நம்ம இஸ்லாத்துல இல்லன்னு தெரியாதா ண்ணா! எனக்கு அதப்பத்தின கவலை இல்ல, ஷாஜிதா நீ வாம்மா " என ஷாஜிதாவை அழைத்து கொண்டு சென்றாள்.

எல்லாரும் அதிர்ந்து நின்றனர். ஹசினா மட்டும் , " போடி போடி போ! உனக்கு அங்க பெரிய வேட்டு இருக்கு " என வன்மமாய் சிரித்தார்.

ஷாஜிதா தன் வீட்டிற்கு அழைத்து சென்று உற்சாகமாக தேநீரை போட்டாள். சக்கரை டப்பாவை எடுத்த ஷாஜிதாவிற்கு ஏதோ தோன்ற ஒன்னுமில்லை என நினைத்து கொண்டு சக்கரை போல் இருக்கும் விஷம் என்று தெரியாமல் அதனை கலந்து கொண்டு எடுத்து வந்தாள்.

முதலில் சல்மாவிற்கு கொடுத்தாள். சல்மா அதை வாயில் வைக்க முயன்றபோது, ஜாரா அதை தள்ளி விட்டாள்.

அந்த தேநீர் கோப்பை கீழே விழுந்தவுடன் , "அத்த அந்த டீயை கொடுக்காதீங்க அதுலை விஷம் கலந்து உங்களை கொல்ல பாக்கிறா இந்த ஷாஜிதா, நீங்க நம்பலனா இந்த வீடியோவை பாருங்க " என யாரையும் பேச விடாமல் வீடியோவை காண்பித்தாள், நாதிரா.

அதில், ஷாஜிதா மற்றும் அம்ரீன் இருவரும் மாடியின் சுவற்றில் அமர்ந்து பேசி கொண்டிருந்தாள்.

ஷாஜிதா, "இந்த விஷத்தை நம்ம அத்தக்கு கலந்து கொடுத்து இந்த பழியை ஜாரா மேல தூக்கி போடுவோம். அதுக்கப்புறம் எனக்கும் என் ஷாரூகும் நடுவுல யாரு வர மாட்டாங்க " என அம்ரீனிடம் சொல்வது போல் இருந்தது.

இந்த காணொளியை பார்த்ததும் அனைவரும் அதிர்ந்து நின்றனர். ஷாஜிதாவிற்கு தூக்கி வாறி போட்டது.

ஷாரூகின் முடிவு என்னவாக இருக்கும்? பார்ப்போம்...

♥️ தொடரும் ♥️

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro