Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

💞 07 💞

பிரவீனிடம், யாசர் மற்றும் ரமேஷ் இருவரையும் தன்னுடன் சேர்ந்து நேர்காணலை நடத்த அழைக்கும் படி கூறிவிட்டு தற்குறிப்புகளை எடுத்து கவனித்து கொண்டு இருந்தான் ஷாரூக்.

பிரவீன், இருவருக்கும் செய்தி அனுப்ப அவர்கள் இருவரும் உடனே தங்கள் வேலைகளை அப்படியே விட்டுவிட்டு விரைந்தார்கள். தாமதத்தித்தால் அவனது கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்பதை நன்கு அறிந்தவர்கள். அதனால் அவர்கள் சீக்கிரமே சென்றார்கள்.

" உள்ளே வரலாமா?.."

" ம்ம்ம் வரலாம்.."

இருவரும் ஷாரூக் அருகே சென்றனர். இருவரிடமும் கைகுலுக்கி விட்டு , " நேர்காணலை தொடங்கலாம் " என்றவுடன் இருவரும் தலையசைத்தனர். பிறகு நேர்காணல் தொடர்ந்தது.

ஒரு மணி நேரம் நேர்காணல் நடந்தது. வந்த இருபது பேரில் ஐந்து பேரை மட்டுமே தேர்வு செய்தார்கள் மூவரும்.

" டேய் மச்சி அதான் நேர்காணல் முடித்து விட்டதே இன்னும் ஏன் முகத்தை இப்படியே வைத்திருக்கிறாய்?.." என்று பாவமாக ரமேஷ் கேட்க ஷாரூக் சிறிது புன்னகை செய்தான்.

"மச்சி பாட்டி எப்படி இறந்தாக?.." என்று கவலையுடன் கேட்டவர்களை பார்த்து "மாரடைப்பால் " என்றான் கண்கள் கலங்க.

" எப்படி டா?..."

"ஷாஜியால டா ...." என்றவுடன் இருவரும் அதிர்ந்தனர். இருவரின் முகத்தில் இருந்த அதிர்ச்சியை பார்த்தே புரிந்து கொண்டவன் அன்று நடந்ததை கூறினான். அவன் கூற கூற இருவரின் முகமும் கோபத்தால் இறுகியது.

" ஷாஜியோட வாழ்க்கை என்னாகும் என்று நினைத்து நினைத்தே அவளை தனிமரமாக தவிக்க விட்டுவிட்டு சென்றுவிட்டார்... பாவம் டா அவள் தினம் தினம் ஏதோ ஒரு வகையில் அவளை துன்புறுத்தி கொண்டே இருக்கிறார்கள்... அன்று அவள் எந்தவொரு உணர்வும் இல்லாமல் பாட்டியின் முகத்தையே வெறித்து பார்த்து கொண்டிருந்தாள் அந்த நிலையில் அவளை என்னால் பார்க்க முடியவில்லை அங்கேயே இறந்து விடலாம் போல் என்றிருந்தது எனக்கு ... " என்று கூறிவனை அணைத்து கொண்டனர் அவன் உயிர் நண்பர்கள்.

"நீ எதுக்கு டா கவலைப்பட்டு கொண்டு இருக்கிறாய்? நீயே ஷாஜிதாவை மணந்து கொள்ள வேண்டியது தானே??..."

" ம்ம்ம் நானும் அந்த யோசனையில் தான் இருக்கிறேன் யாசர்..."

"அப்போது நீ ஷாஜிதாவை விரும்புகிறாயா?..."

"ம்ம்ம் ஆமா டா..." என்றான் மெலிதாய் புன்னகைத்தப்படி.

" அடேய் எப்போதில் இருந்து? அதுவும் எங்களுக்கு தெரியாமல் ? " என்று இருவரும் முறைத்தனர் அவனை பார்த்து.

"சிறு வயதில் இருந்தே ஆனால் அது தான் காதல் என்று உணர்ந்தது முதலாம் ஆண்டில் தான் எனக்கும் ஷாஜிக்கும் ஐந்து வருடம் வித்தியாசம். அப்போது அவள் எட்டாம் வகுப்பு படித்து கொண்டு இருந்தாள். அவள் படிக்கட்டும் என்று விட்டுவிட்டேன்.." என்று அவன் கூறிய விதத்திலேயே அவன் காதலை உணர்ந்தனர் இருவரும்.

"டேய் கவலைப்படாதே உன் காதல் கைகூடும் டா " என்று ரமேஷ் சொல்ல அவன் மெலிதாய் புன்னகைத்தான்.

" பசிக்கிறது வாங்க நாம போய் சாப்பிட்டு விட்டு வரலாம்" என்று யாசர் சொல்ல , " பைத்தியம் எல்லாருக்கும் ஒரு பிரச்சனை என்றால் இவனுக்கு ஒரு பிரச்சினை " என்று ரமேஷ் தலையில் அடித்து கொள்ள யாசர் முகத்தை பாவமாக வைத்து கொண்டான்.

" நீ எப்போது தான் எங்கள் வீட்டுக்கு வந்து பிர்தவுஸை பெண் கேட்க போகிறாய்?.." என்று ஷாரூக் கேட்க , " வீட்டில் சொல்லிவிட்டேன் அம்மா அப்பா ஞாயிறு அன்று போலாம் என்று சொல்லியிருக்கிறார்கள் " என்றவுடன் "சரி வா போகலாம் " என்று மூவரும் உணவகத்தை நோக்கி நடை போட்டனர்.

அவர்கள் உணவகத்திற்கு செல்லும் வரை யாசர் ரமேஷை பற்றி பார்ப்போம்.

ரமேஷ் ஷாரூக் இருவரும் பள்ளி முதலே நெருங்கிய நண்பர்கள். இவர்களின் நட்பில் யாசர் கல்லூரியில் இணைந்து கொண்டான். மூவரும் நல்ல நண்பர்கள். ரமேஷ் திருமணம் முடிந்து ஆறு மாதம் ஆகிறது. மனைவி பெயர் லத்திக்கா தனியார் அலுவலகத்தில் வேலை செய்கிறாள். யாசர் நம் பிர்தவுஸை நேசிக்கிறான். இதை அறிந்த ஷாரூக் தன் நண்பனின் காதலுக்கு பச்சை கொடி காட்டினான். பிர்தவுஸை தவிர்த்து வீட்டில் உள்ளவர்களுக்கும் தெரியும். அவர்களும் சம்மதம் தெரிவித்து விட்டனர்.

"என்ன ஷாரூக் ஏதோ யோசனையில் இருப்பது போல் தெரிகிறது? ", என்று யாசர் கேட்க " ஷாஜியை பெண் கேட்க சொல்லலாம் என்று யோசித்து கொண்டு இருக்கிறேன் " என்று ஷாரூக் சொல்ல இருவரும் நல்ல விஷயம் என்று கூற அவனும் சிறு புன்னகை சிந்தினான். மூவரும் தேநீர் அருந்திவிட்டு தங்கள் வேலைகளை கவனிக்க சென்றனர்.

💖💖💖💖

" என்ன அம்ரீன் உனக்கு என்ன ஆயிற்று? ஏன் சோகமாக இருக்கிறாய்? " என்று அவள் தோழி நிஷா கேட்க , " ஒன்னுமில்லை நிஷா" என்று அவள் சமாளிக்க ," பொய் சொல்லாத அம்ரீன்.. என்னிடமிருந்து ஏதோ மறைப்பது போல் தெரிகிறது?.. என்னவென்று சொல் ?.." என்று நிஷா அதட்ட அவள் மடியில் படுத்து அழுதாள் அம்ரீன்.

நிஷா அதிர்ச்சியுடன், " ஏய் அம்ரீன் ஏன் அழுகிறாய் ?.. என்ன ஆயிற்று?.." என்று அவள் கேட்க அவள் எதுவும் சொல்லாமல் அழுதாள். அவள் அழட்டும் என்று அமைதியாக இருந்தாள்.

நிஷா அம்ரீனின் நெருங்கிய தோழி. இருவரும் மூன்றாம் வகுப்பில் இருந்து நல்ல தோழிகள்.

சிறிது நேரம் கழித்து அம்ரீனே அனைத்து விஷயங்களையும் சொல்ல அம்ரீனை அறைந்தாள் நிஷா. அவள் கன்னத்தில் கைவைத்தப்படி தலைகுனிந்தாள்.

" எதற்காக என்ன அறைந்தாய்?.." என்று அம்ரீன் கேட்க " பின்ன நீ செய்த காரியத்திற்கு கொஞ்சுவார்களா?.." என்று கூற ," மன்னித்து விடு.." என்று சொல்ல "சரி விடு அழாதே.. நீ எதுக்கும் கவலைப்படாதே நிச்சயமாக அக்கா உன்னிடம் பேசுவார்கள் அதுவரை நீ பொறுமையாக இரு புரிகிறதா?.." என்று நிஷா கூற அவள் சரியென்று தலை அசைத்தாள்.

❤️❤️❤️❤️

வெளியே சென்ற உசைன் ஹசன் இருவரும் வீட்டுக்கு வர இருவருக்கும் தேநீர் எடுத்து வந்து கொடுத்தார் பௌஸியா. அவர்கள் இருவரும் அதை எடுத்து குடித்து கொண்டிருந்த போது ஹசினா அங்கு வர பௌஸியா உள்ளே சென்று விட்டார்.

" ஏங்க நாம நாளைக்கு போய் சல்மாவை பார்த்து பேசிவிட்டு வருவோமா?.." என்று மெதுவாக பேச்சை ஆரம்பித்தார் ஹசினா.

இருவரும் யோசிக்க, " அண்ணா அண்ணி சொல்றது சரிதான். ஜாரா இப்போது இறுதி ஆண்டு படிக்கிறாள், இப்போது பேசி விட்டால், அவள் படிப்பை முடித்தவுடன் திருமணத்தையும் முடித்துவிடலாம் "என்று ஹசன் கூற உசைன் மேலும் யோசிக்க தொடங்கினார்.

" ஆமாம் நமக்கு இரண்டு பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள். அவர்களை பற்றி ஒரு நாளும் யோசித்தது இல்லை. எப்ப பார்த்தாலும் அண்ணா அண்ணி அவர்கள் குடும்பம் மட்டும் தான் கண்ணுக்கு தெரியும். அவர்கள் நல்லவர்கள் என்றால் கூட பரவாயில்லை அதுவும் இல்லை. அவர்களுடன் சேர்ந்து கெட்ட புத்தி தான் வந்திருக்கு இந்த மனிசனுக்கும் , அல்லாஹ் இந்த கல்யாணத்தை எப்படியாவது நிறுத்திவிடு அந்த நல்ல பையனை கேடுகெட்டவள் கிட்டயிருந்து காப்பாற்று "என்று மனதில் புலம்பியவாறே பாத்திரங்களை தேய்த்து கொண்டு இருந்தார் பௌஸியா.

"சரி ஹசன் நீ சொல்றதும் சரிதான் வருகிற வெள்ளிக்கிழமை சென்று பேசிவிட்டு வரலாம் " என்று உசைன் கூற ஹசினாவின் முகம் மலர்ந்தது கூடவே அன்று ஷாரூக் அஜ்மல் பேசியது நினைவுக்கு வர அவர் முக இறுக " ஏய் ஷாஜிதா உனக்கு நல்லது நடக்க விட்டுவிடுவேனா என்ன உன் அம்மாவை கொன்றது போல் உன்னையும் கொல்றேன் கொஞ்சம் பொறு " என்று தன் மனதில் வன்மத்தை கக்கினார் ஹசினா.

❤️❤️❤️❤️

"ஏய் ஜாரா என்ன இன்று ரொம்ப சந்தோஷமாக இருக்கிறாய்?.." என்று அவள் தோழி ராதிகா கேட்க ஜாரா " அது எனக்கும் என் அத்தை பையன் ஷாரூக்கும் திருமணம் செய்யலாம் என்று முடிவு செய்து இருக்காங்க " என்று சொல்ல அவர்கள் மகிழ்ந்தனர்.

" நீ அந்த பையனை விரும்புகிறாயா?.."

"இல்லை..."

"அப்புறம் எப்படி?.." என்று அவர்கள் குழம்ப.

அது என்று அன்று ஷாரூக் அஜ்மல் இருவரும் பேசியதை சொல்லிவிட்டு, " ஷாஜிதா அழுவதற்கு நான் எந்த எல்லைக்கும் செல்வேன்.." என்று தன் தோழிகளிடம் கூறி கொண்டு இருந்தாள்.

இடைவேளை நேரம் என்பதால் வகுப்பிற்கு வெளியே நின்று பேசிக்கொண்டு இருந்தார்கள்.

அங்கு வந்த மாணவி தன் தோழியோடு பேசிக்கொண்டு வந்து தெரியாமல் ஜாராவின் மோத அவளுக்கு கோபம் தலைக்கு மேல் ஏறியது.

அம்மாணவியை அறைந்த அடுத்த கணம் அவள் கன்னம் பழுத்தது. அவள் தோழிகளை தவிர்த்து மற்றவர்கள் அவளை பார்த்து சிரித்தனர். தன்னை அடித்தது யாரென்று பார்க்க சற்று திகைத்து நின்றாள். அடித்தது வேறு யாரும் இல்லை ஷாஜிதா தான்.

ஜாராவின் கல்லூரியில் conference நடக்கிறது அதற்கு ஷாஜிதா பயிலும் கல்லூரிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இறுதி ஆண்டு மாணவர்களை மட்டும் அனைத்து துறைகளில் இருந்தும்  அனுப்பினர். அதில் ஷாஜிதாவும் ஒருத்தி. இடைவேளை விட்டதால் கல்லூரியை சுற்றி பார்க்கலாம் என்று வந்தபோது நிகழ்ந்தது தான் இது.

" ஏய் ஷாஜிதா நீயாடி அடித்தாய்?..." என்று கை ஓங்கியவளின் கையை இறுக்கமாக பிடித்து கொண்டு " உன் திமிரை வேறு யாரிடமாவது காட்டு என்னிடம் வேண்டாம் " என்று அவள் கையை உதறிவிட்டு தன் தோழியை அழைத்து கொண்டு சென்றாள்.

ஷாஜிதா சென்று விட மற்ற மாணவர்களும் சென்றானர். " இவளுக்கு வேண்டும்" என்று ஒருசில மாணவர்கள் அவள் காதுப்பட பேசி கொண்டே தங்கள் அறைக்குள் நுழைந்தனர்.

ஷாஜிதா தன்னை அடித்தது அவள் கண்முன் வந்து சென்று கொண்டு இருந்தது. அவள் முகம் இறுக  " ஏய் ஷாஜிதா உன்னை நான் சும்மா  விடமாட்டேன் " என்று  சபதம் எடுத்தாள்.

❤️❤️❤️❤️

"அஜ்மல் அதான் நீ சொன்னது போல் பிரியாவுடன் தேஜீவையும் கங்காவையும் ஒரு மணிநேரம் கழித்து வரும்படி  பிரியாவிடம் சொல்லி  அனுப்பி வைத்துவிட்டோம் இன்னும் என்ன?.." என்று கார்த்தி கேட்க " இருடா சொல்றேன் " என்று சொல்ல, " அஜ்மல் இப்போது எதுக்கு எங்களை இப்படி ஒன்று கூட்டி இருக்கிறாய்?.." என்று யாழினி கேட்க , " அது என்னவென்றால் இப்போது நீங்கள் ஷாஜிதாவை பற்றி தெரிந்து கொள்வதற்கான நேரம் வந்து விட்டது  நான் பேசி முடிக்கும் வரை யாரும் பேசக்கூடாது "என்று அஜ்மல் அனைவரும் சரியென்று தலையசைத்தனர்.

"ஷாஜிதா யாரும் இல்லை என்னோட தங்கை தான் அதாவது என் பெரியப்பா மகள், எனக்கு இந்த விஷயம் நாம முதலாம் ஆண்டு படிக்கும் போது தான் சொன்னார் எங்க அப்பா. ஷாஜிதா சின்ன வயதில் இருந்தே துன்பத்தை மட்டுமே பார்த்து வளர்ந்தவள், அவள் அம்மா , அவள் பிறந்தவுடன் இறந்துவிட்டார் அதற்கு ஷாஜிதா தான் காரணம் அவர்கள் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதற்கு ஷாஜிதா தான் காரணம் என்று அனைவரும் அவளை துன்புறுத்தினர் வார்த்தைகளால் வதைப்பார்கள். அவள் சிறு தவறு செய்தாலும் அவள் அப்பா சாட்டையால் அடிப்பார். காரணமே இல்லாமல் எங்கள் பெரியம்மா சூடு வைப்பார். அவள் சகோதரிகள் அதாவது எங்கள் பெரியப்பாவின் மகள்கள் அவளை இன்னும் வதைப்பார்கள். அவளுடன் யார் நெருங்கி இருந்தாலும் பிரித்து விடுவார்கள். தேஜீவும் கங்காவும் சேர்ந்து ஷாஜிதா இங்கு என்ன செய்கிறாள்? யாருடன் பேசுகிறாள் என்று எல்லாமே ஜாராவிடம் போய் சொல்லிவிடுவார்கள். அதற்காக தான் அவர்கள் இருவரையும் வெளியே அனுப்பினேன். அவர்கள் யாருக்கும் ஷாஜிதா மகிழ்ச்சியாக இருப்பது பிடிக்காது. அவள் மகிழ்ச்சியை கெடுப்பதற்கு என்ன வேண்டுமானலும் செய்வார்கள். அதனால் தான் ஷாஜிதா யாரிடமும் பேசாமல் தனியாகவே இருந்து விட்டாள் தன்னால் யாருக்கும் எந்த பிரச்சினை வேண்டாம் என்று தனியாகவே இருந்தாள். எங்கள் இருவரையும் பிரிக்க எவ்வளவு முயற்சி செய்தார்கள் தெரியுமா முடியவில்லை அவர்களால் . அவளுக்கு ஆறுதலாக இருந்தே ஒரே ஜீவன் எங்கள் பாட்டி " என்று அஜ்மல் தன் கண்களை துடைத்து கொண்டு "அவர்களும் இரண்டு நாட்களுக்கு முன்பு இறந்து விட்டார்கள். அவள் மனம் உடைந்து விட்டாள்". அன்று நடந்ததையும் கூற மற்றவர்கள் முகம் கோபத்தில் இருந்தது.

" அவள் இப்போது தனியாக தான் இருக்கிறாள். அவளுக்கு துணையாக நான் இருக்கிறேன் இப்போது" என்று கூறி அவர்களை பார்க்க " ஹே என்னப்பா எல்லாரும் அமைதியாக இருக்கிங்க?.." என்று கேட்டவனை " இவ்வளவு கஷ்டத்தையும் தாங்கி கொண்டு எப்படி இருக்கிறாள் ?.."  என்று கார்த்திகா கேட்க  அஜ்மல் சிறு புன்னகை விட்டு ," மனிதனால் தாங்க கூடிய அளவிற்கு தான் இறைவன் துன்பத்தை தருகிறான் என்று கூறிவிடுவாள். அதற்கு மேல் என்னால் எதுவும் பேச முடியாமல் அமைதியாகிவிடுவேன்.  எங்கள் பாட்டிக்கு பிறகு அவளுக்கு ஆறுதலாக இருக்கும் உறவு எங்கள் அத்தை குடும்பம் தான். அவர்கள் இவளுக்கு  துணி நகை எல்லாம் வாங்கி வந்து கொடுத்தால் அதை எங்கள் பெரியப்பா மகள்கள் எடுத்து கிழித்து விடுவார்கள் நகையை அணிய முடியாதவாறு செய்து விடுவார்கள்" என்று அவன் கூறி கொண்டே ஃபர்ஜானாவை பார்க்க அவள் கலங்கிய கண்களுடன் தன்னை பார்த்து கொண்டு இருப்பதை கண்டவனுக்கு மனம் வலித்தது.

"இவ்வளவு தான் ஷாஜிதா பற்றி கூறுவதற்கு அவளிடம் காட்டி கொள்ள வேண்டாம் ..." என்று அஜ்மல் கூற அனைவரும் சரி என்று கூறவும் வகுப்பாசிரியர் உள்ளே நுழையவும் சரியாக இருந்தது. ஆசிரியரும் இதை கேட்டு விட்டார் அவரின் மனமும் தன் மாணவியின் நிலையை கண்டு மனம் வருந்தினார்.

💕தொடரும்💕

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro