Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

உன் விழியசைவில் நான்-2

  "டேய் இன்னைக்கு ஆபீஸ் விட்டு சீக்கிரம் வந்துடு.. ஊருக்கு போகணும் " என்று சத்தமிட,

"ஹ்ம்ம் சரி மா.." என்று சலிப்புடன் கிளம்பி சென்றான்.

" என்னப்பா தம்பி ரொம்ப சலிச்சுக்குற..உனக்கு தான் பொண்ணு பார்க்கப்போறோம். அதுவும் நீ கேட்டபடி கிராமத்துல ..என்ன ஊரு அது ...பாலப்பம்பட்டி.. பக்கத்துல நெறைய இடம் இருக்காம் சுத்திப்பார்க்க , அதுனால நீ அந்த பொண்ண ஓகே பண்ணிடு. நான் உன்ன வச்சு ஊட்டி கொடைக்கானல் ,டாப்ஸ்லிப் , வால்பாறை ,மூணார் இப்படி எல்லா இடத்தையும் பார்த்துட்டு வந்துடுறேன் " என்று நந்தினி மண்கோட்டைகளை கட்டினாள்.

"நீ ஊரு சுத்திபாக்குறதுக்கு நான் ஓகே சொல்லனுமா..முடியாது போடி.."

நந்தினி ,"அப்போ அந்த பொண்ண உனக்கு பிடிக்கல .. நீ கேட்டமாறி அந்த பொண்ணு அத்தனையும் பொருந்தியிருக்கே "

கிரிஷ் ," நீ அந்த பொண்ணை பார்த்தியா?"

நந்தினி ," பார்த்தேன் .."

"பொண்ணு எப்படி நல்லாயிருந்தாச்சா?"

"ஓகே பரவலாமா இருக்கு .."

"எனக்கு காட்டுடி "

"தம்பி உனக்கு இது 87 வைத்து பொண்ணு .. போட்டோ பாத்து அது இதுனு குறை சொல்லிட்டே இருந்த உனக்கு இந்த ஜென்மத்துல கல்யாணம் நடக்காது.. அதுனால நல்ல பிள்ளையா, நான் சொல்லுற மாறி கேளு ."

"இதெல்லா போங்கு.. கட்டிக்கப்போற எனக்கு பொண்ண காட்டமாட்டேனு சொல்லுறீங்களே .."

"அதை நீ கட்டிக்கிட்டு பாரு .. உனக்கு இந்த பொண்ணு தான் .. எங்க எல்லாத்துக்கும் பிடிச்சுயிருக்கு .. நாம நாளைக்கு போறோம் .. பொண்ணு வீட்டுக்காரங்க உன்ன பாக்கணும்னு சொன்னாங்க.. அதுனால தான் தம்பி நீ எங்க கூட வர.. இல்லேன்னா உனக்கு பொண்ணு பார்க்குற வேலையே இல்லை.. "

" உங்களை எல்லாம் .." என்று திட்ட வந்தவன் , கையில் இருந்த பேக்கை வைத்து தன் தலையிலே அடித்துக்கொண்டு கிளம்பினான்.

வெளியே சென்றதும் தான் , நந்தினி தன்னை தம்பி தம்பி என்று அழைத்தது ஞாபகம் வர , " இருடி குள்ளச்சி .. நைட் வந்து அடிக்கறேன்" என்று திட்டிக்கொண்டே சென்றான்.

இத்தனை நாளா, எதாவது சொல்லி எல்லாபொண்ணுகளையும் ரிஜெக்ட் பண்ணிட்டோம். இவை எப்படி இருப்பாளோ.. ஒருவேளை அருக்காணி மாறி வந்துட்டா... வேண்டாம் .. எதையும் யோசிக்கவேணாம் ..நாளைக்கு போறோம் .. பார்க்குறோம் .. பிடிச்ச ஓகே .. இல்லேன்னா அங்க இருந்து திரும்பி வந்துடுறோம்.. என்று முடிவு எடுத்துவிட்டு சென்றான்..


"எல்லா எடுத்துவச்சுகிட்டியா ?"


"நந்தினி அத பண்ணு..."

"என்னங்க காஸ் எல்லாம் ஆப் ஆகியிருக்கானு பார்த்துட்டு வீட்டை பூட்டுங்க.."

"டேய் , வண்டி வந்துடுச்சா " என்ற அனைத்து விதமான பரபரப்பில் அனைவரும் கிளம்பி ரயில் நிலையம் சென்று அங்கே இருந்து பழனி செல்வதற்காக ட்ரெயின்- ல் சென்றனர்.

மறுநாள் காலை அனைவரும் ரயில் நிலையத்தில் இருந்து வெளியே வர, அங்கே ஒரு பெண் , ஒருவனை பிரட்டி எடுத்துக்கொண்டு இருந்தாள்.. அவளின் முகத்தை பார்க்காமலே ,

Part to be continued in the Blog.

https://mysarathas.blogspot.com/2018/12/2_18.html

----------Hi

How was this part.. small update thaan .. padichutu unga comments solunga 

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro