நான் சொல்வது தான் சரி ?
ஒவ்வொருவர் வாழ்க்கைப் பாதையிலும் சில தடைகள்,குறுக்கீடுகள் இருக்கத்தான் செய்யும்.. நம் விருப்பப்படி மாறவோ, நமக்காக விலகி வழிவிடவோ செய்யாத சில தவிர்க்க முடியாதவைகளாக அவைகள் இருக்கலாம்..
மாற்ற முடியாத இது போன்ற குறுக்கீடுகள் வரும் போது நாம் தான் நம் பாதையை சற்று மாற்றிக் கொண்டு செல்ல வேண்டும்.
அதை விட்டு விட்டு நான் மாற மாட்டேன், அதை மாற்றியே தீருவேன்,நான் சொல்வது தான் சரி, என்று பிடிவாதம் பிடித்து எதிர்த்து நின்றால் அது வடிகட்டிய முட்டாள்தனமாகவே இருக்கும்.
இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் தங்களை மாற்றிக் கொள்ள நேரிடுவது சிலருக்கு கௌரவக் குறைவாக தோன்றுவது உண்டு.
ஒருவருடைய பிடிவாதத்தை அவர்கள் கோணத்தில் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
.
ஒரு சமயம் இரண்டு அமெரிக்க போர்ப்படைக் கப்பல்கள் கடலில் கடற்படையினருக்குப் பயிற்சி அளிக்கும் பணியில் பயணித்துக் கொண்டு இருந்தன.
பனி மூட்டத்தினால் சில நாட்கள் தொடர்ந்து அவர்களுடைய பயணம் தாமதப்பட்டு வந்தது.
ஒருநாள் இரவு கடும் பனி மூட்டத்தில் கடற்பகுதி மூடியிருந்ததால் முன்னால் சென்று கொண்டு இருந்த போர்ப்படைக் கப்பலின் மேற்தளத்தில் கப்பலின் கேப்டன் நின்று மேற்பார்வை இட்டுக் கொண்டு இருந்தார்.
அப்போது தொலைநோக்கி வழியாக கண்காணித்துக் கொண்டு இருந்த கடற்படை வீரர் கேப்டனிடம் சொன்னார்.
“ஐயா நாம் போகின்ற பாதையில் சற்றுத் தொலைவில் விளக்கு வெளிச்சம் தெரிகிறது. இன்னொரு கப்பலாக இருக்கக்கூடும் என்று சந்தேகப்படுகிறேன்” என்றார்.
“அது நின்று கொண்டு இருக்கிறதா? இல்லை, நகர்கிறதா?”என்று கேட்டார் கேப்டன்.
“நகராமல் தான் இருக்கிறது” என்றான்..
“உடனடியாக அவர்களுக்கு சிக்னல் அனுப்பு. நமது கப்பல் போகின்ற வழியில் அது நிற்கிறது என்று தெரிவி. 20 டிகிரி விலகிப் போகச் சொல்.”என்றார் கேப்டன்.
அப்படியே சிக்னல் அனுப்பப்பட்டது. அங்கிருந்து உடனடியாக மறுமொழி வந்தது.
“நீங்கள் 20 டிகிரி விலகிப் போவது நல்லது”.என்றது.
எரிச்சலடைந்த கேப்டன் சிக்னல் அனுப்பினார். “நான் கேப்டன் சொல்கிறேன். 20 டிகிரி விலகிப் போங்கள்”
மறுமொழி உடனடியாக வந்தது. “ஐயா நான் கப்பல் படையின் இரண்டாம் நிலை ஊழியன். தயவு செய்து 20 டிகிரி விலகிப் போங்கள்” என்றான்..
கேப்டனுக்கு ஒரு இரண்டாம் நிலை ஊழியன் இப்படிக் கீழ்படியாமல் நடந்து கொள்வது பெரும் கோபத்தை ஏற்படுத்தியது.
“இது போர்ப் படைக் கப்பல். உடனடியாக 20 டிகிரி விலகுங்கள்
பதில் உடனடியாக வந்தது.
“இது கலங்கரை விளக்கம்” அய்யா என்றான் அந்த ஊழியர்..
மறு பேச்சு இல்லாமல் போர்ப்படைக் கப்பல்கள் தங்கள் பாதையை 20 டிகிரி மாற்றிக் கொண்டன.
ஆம்.,நண்பர்களே..
கேப்டனுக்கு வந்த கோபம் போல,
“ஈகோ” பிரச்சினை நமக்கும் சில வேளைகளில் எழுவதுண்டு. ஆனால் சந்தர்ப்பங்களின் தன்மை அறிந்து தெளிவுடன் மாறுவதும், வளைந்து கொடுப்பதும் பக்குவமேயன்றி தோல்வியல்ல.
இந்த பிடிவாத குணம் தான் மற்றவர்களை அனுசரித்து செல்ல முடியாமல் தடுக்கிறது.
அதாவது நான் உன்னை விட பலம் வாய்ந்தவன் ஆகவே நீ தான் என்னை அனுசரித்து செல்ல வேண்டும் என்கிற குணம்.
இதை நம்மில் பலரும் தவிர்த்தால் உலகத்தில் பிர்ச்சினைகளே இருக்காது... ...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro