Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

கவிதை. 78


மௌனம் உடைத்து ஏதேனும் ஓரிரு வார்த்தைகள் பேசு விழிகள் பேசியதற்கே கவிதை படைத்தவன் இதழ்கள் பேசினால் காவியம் படைக்க ஏதேனும் வாய்ப்பு கிடைக்குமே....!  

உன் ஞாபகங்களை ஒருவாறாய் மறந்து நான் கண்ணயர நினைக்கும் போது உன் மல்லிகை வாசனையை என் முகத்தில் அள்ளி வீசி காற்றும் எனக்கு சதி செய்கிறது....!  

அன்பே நீ இசையாகவும் இனிய குரலாகவும் மாறி என் காதல் கவிதை வரிகளுக்குள் புகுந்துக்கொள் மலரட்டும் அது இனிய பாடலாக...!  

நிஜத்தில் தொலைத்து கனவில் தேடுகிறேன் என் காதலை...!  

தான் அழகில்லை என்று நினைக்கும் ஒவ்வொரு ஆணையும் அழகாக்குகிறாள்...!!! அவனுக்கான " பெண் "  

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro

Tags: #parama