Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

கதை - 13

கதை - 12 வாசித்து விட்டு வரவும்.. இது இன்றைய இரண்டாவது அத்யாயம்...
....................
(கதை தொடரும்)

சமீனா : ஏன் டி இந்த ப்லன் சரியா வருமா... எனக்கு ரொம்ப பயமா இருக்கு...

மல்லி : நாம என்ன அவர அஃப்ரிகா கண்டத்துலையா டி விக்கப் போறோம்... விழுப்புரம் வர போவாரு... அவரு திரும்ப வரதுக்குள்ள இங்க நேரம் முடிஞ்சிடும்...

பர்வீன் : ஆதிரா கல்யாணம் நின்னுடும்...

ஹசீனா : நம்ம ப்லன் போட்டா அது ப்லன் படியே நடந்ததில்லையே டி... சரி நடக்குறது நடக்கட்டும்.. வாங்க கெளம்பளாம்... ஆதி நாம இல்லன்னு கடுப்புடிச்சாளும் கண்டுப்புடிச்சுடுவா என அங்கிருந்து இவர்கள் கிளம்ப அவர்களின் திட்டத்தை முழுதாய் கேட்டப் பின்  தலையிலடித்தபடி நீல மனிதன் அவனை தேடி ஓடினான்..

தன்னை சுற்றியும் ஏன் இருட்டாக உள்ளதென்று புரியாமல் தடவி தடவி எழுந்தமர்ந்த நாயகன் தன் செல்பேசியை தேடி எடுத்து டார்ச் லைட்டை உயிர்பிக்க அவன் முதலில் பார்த்ததே அவனுக்கு க்லோசப்பில் தெரிந்த நீல மனிதனின் முகத்தை தான்..

இருவரும் அலரியடித்து ஒவ்வொரு மூலைக்குச் சென்ற பின் மீண்டும் தன் செல்பேசியை எடுத்த அவன் பின்பே சீராக மூச்சு விட்டான்...

நீல மனிதன் : டேய் இங்க உக்காந்து என்னடா பண்ணிக்கிட்டு இருக்க... என மூச்சு வாங்கி கொண்டே கேட்க

அவன் : நீ ஏன் டா இப்டி மூச்சு வாங்குர " ஓடி வந்தேன் டா மடையா... உன்னால இன்னும் நா என்ன என்னலாம் பண்ணனுமோ.. எந்திரி டா ஒழுங்கா " என மூச்சை சீர் படுத்து கொண்டு அவன் எழுந்த நேரம் அவர்களிருந்த இடம் ஒரு ஆட்டம் ஆடியதில் மீண்டும் தடுமாறி கீழே விழுந்தான்...

அவன் : நாம எங்க டா இருக்கோம்... ஏன் இந்த இடம் ஏதோ ஆடீட்டே இருக்கு... ஹே இது எதாவது வண்டியா என்ன...

நீல மனிதன் : வண்டி தான்... ஏதோ டன்க்கர் லாரில உன்ன ஏத்தி விற்றுச்சுங்க அந்த புள்ளைங்க... என தட்டுத் தடுமாறி எழுந்தவன் அவனின் கரத்தை இறுகப் பற்றி கொண்டான்...

அவன் : நீ எதுக்கு இங்க வந்த

நீல மனிதன் : வராம என்ன வேற என்ன செய்ய சொல்ற... அந்த புள்ளைங்க கூப்ட்டா உடனே வந்துடுவியா நீ... மணி இப்போவே ஒன்னாகப்போகுது டா...

அவன் : ஒன்னாகப்போகுதா... அல்லாஹ்லா எனக்கு 2 மணிக்கு பெல்ஜியம்க்கு ஃப்லைட்டு...

நீல மனிதன் : பெல்ஜியம்க்கா... டேய் என்னடா சொல்ற...

அவன் : அந்த பொண்ணுங்க இப்டி பண்ணியும் நா கோவப்படலன்னு நீ யோசிச்சிற்க வேண்டாமா... நானே ஆல்ரெடி ஊர விட்டு போற ஐடியால தான் இருந்தேன்... நா நேட்டிலி கூட பெல்ஜியம் போய் கம்ப்பெனி நடத்தப் போறேன்... என்னைக்காவது அவள எனக்கு புடிச்சா அவளையே கல்யாணம் பண்ணிக்கிறேன்...

நீல மனிதன் : நெத்திலியா... அல்லாஹ் நேட்டிலி... அவ தான் அம்மா உனக்கு பாத்த பொண்ணுல்ல... இத எப்டி மறந்தேன் என தலையிலடித்து கொண்டு அங்குமிங்கும் அப்போதும் நடையிட்டான்...

அவன் : நீ எதுவும் செய்ய வேண்டாம்.. என்ன அப்டியே விற்று.... நா பெல்ஜியம்க்கு போய்டுறேன்... ஆதிராக்கு அவ ஆச பட்ட வாழ்கை கிடைக்கலன்னாலும் என் கூட கல்யாணம் ஆகலங்குர நிம்மதி அவளுக்கு இருக்கும்...

நீல மனிதன் : தியாக வல்லல்னு நிரூபிக்கிறானே... இறைவா என்ன ஏன் தான் இப்டி கொடுமை பன்றியோ... காலத்த மாத்துனது என் தப்பு தான்... அதுக்குன்னு இப்டியா... டேய் புரிஞ்சிக்கோ டா... நேரம் போகுதுடா... இன்னும் இரெண்டு மணி நேரத்துல நீ வீட்ல இருக்கனும்டா...

அவன் : ப்லீஸ் ப்லூ மன்... என்ன கம்ப்பல் பண்ணாத... நீ என்ன சொன்னாலும் நா வர மாட்டேன்... அப்டியே நீ என்ன அங்க இழுத்துட்டு போய்ட்டாலும் நேட்டிலி விட மாட்டா... அவ கொஞ்சம் அப்டி... அவளையும் மீறி ஒருவேளை நீ என்ன சம்மதிக்க வச்சாலும் நா பதினோறு மணிக்கு அப்ரம் தான் வருவேன்...

நீல மனிதன் : ஏன் நல்ல நேரம் அப்போ தான் ஆரம்பிக்குதா...

அவன் : இல்ல அப்போ நிக்காஹ் நேரம் தாண்டிடும்... எல்லாரும் சாப்ட போய்டுவாங்க...

நீல மனிதன் : அறிவு கொழுந்தே... அப்ரம் எதுக்கு டா வர... அப்டியே நீ வந்தாலும் வீட்ல என்ன சொல்லுவ...

அவன் : என்ன கடத்தீட்டு போய்ட்டாங்கன்னு சொல்லுவேன்... நீ ன்ன சொன்ன இன்னைக்கே எங்களுக்கு கல்யாணம் ஆகனும்னு சொன்ன... ஒருவேளை நா லேட்டா போனா அவங்க அடுத்து ஒரு நாள் குறிக்க வாய்ப்பிருக்கு... அப்டி குறிச்சாலும் முதல் முறையே தடங்கலாய்டுச்சு... அதனால இந்த கல்யாணம் வேணாம்னு நா நாசூக்கா சொல்லீடுவேன்... அப்போ என்ன பண்ணுவ நீ... என அவன் கேட்ட நொடி நீல மனிதன் வாயற்று போயிருந்தான்...

நீல மனிதன் : உன் வயசு பசங்க ஏன் தான் இப்டி இருக்கீங்களோ தெரியலடா... என்ன தான் சொல்லனும்... சரி இப்போ முடிவா என்ன சொல்ற...

அவன் : என்ன கொண்டு போய் ஏர்போர்ட்ல விடு...

நீல மனிதன் : ராசா... பாஸ்போர்ட்க்கு எங்க போவ...

அவன் : ஓஹ் அத மறந்துட்டனே... பேசாம நீ போய் எடுத்துட்டு வந்துடேன்...

நீல மனிதன் : சொல்லுவ டா சொல்லுவ... என முனுமுனுத்தபடியே அவனை விட்டு விலகி ஒரு புறமாய் அமர்ந்தான்...

அவனின் நினைவு முழுவதும் எதிர்கால ஆதிராவை பற்றியே சுழன்று வர செய்வதறியாது இவன் பதைபதைக்கத் தொடங்கிய நேரம் எதிர்கால அவனின் நிலை மிக மோசமாய் இருந்தது...

எதிர் காலம்

நடு ராத்திரியில் அவன் உறங்காமல் அந்த புகைபடத்தையே பார்த்து கொண்டிருக்க அதிலிருந்து ஆதிராவின் முகம் தற்போது முழுதாய் மறைந்து நேரம் கடந்திருந்தது... அதை காண காண அவனின் காதல் மனம் கதறி கொண்டிருக்க அவனின் நினைவில் இருக்கும் ஆதிராவின் காதல் நினைவுகள் மெதுமெதுவாய் அழியத் தொடங்கியதை அவனும் தன் கணவனையே யாரென தெரியாமல் ஆதிராவும் உறக்கத்தின் பால் வீழ்ந்தனர்...

நிகழ் காலம்

படாரென கண்களை திறந்த நீழ மனிதன் நிச்சயம் இதை நடக்க விட மாட்டேனடா என்ற சபதத்துடன் எழ அந்த நேரம் சரியாக அவர்களிருந்த லாரி திடீரென்று தடுப்பிட்டு நிறுத்தப்பட்டது...

அவனும் நீல மனிதனும் சுதாரிக்கும் முன்பாக அவர்களிருந்த கன்ட்டைனர் திறக்கப்பட இருவரையும் துண்டுக்கட்டாய் யாரோ கீழே தூக்கி கொண்டு வந்தனர்...

நீல மனிதன் குழப்பமாய் நடப்பதை கவனிக்க அங்கு நின்றிருந்த ஜிம் பாய்ஸ்களுக்கு மத்தியில் நவீன உடையில் நிமிர்ந்து நின்றிருந்தாள் ஒரு யுவதி... நேட்டிலி...

அவளின் கண்களை மறைத்திருந்த கருங்கன்னாடியை எடுத்தபடியே இருவரையும் நோக்கினாள்...

நேட்டிலி : சொன்ன நேரத்துக்கு வருவன்னு திரும்ப பொய் சொல்லீட்டல்ல... நீ அதிசயமா என் பக்கம் சாயும் போதே நா சுதாரிச்சிருக்கனும்... தப்பு பண்ணீட்டேன்...

அவன் : நேட்டிலி சொன்னா கேளு...

நேட்டிலி : இனிமே என் கிட்ட பேசுறதுக்கு உனக்கு பர்மிஷனே கிடையாது... நா தான் பேசுவேன்... நா மட்டும் தான் பேசுவேன்... நீ அத கேக்கனும்... என திமிராய் கூறி அவர்களை சுற்றி நடையிட்டாள்...

நேட்டிலி " நீ வர வேண்டிய நேரம் முடிஞ்சு பதினஞ்சு நிமிஷமாச்சு... உனக்கு பாத்த பொண்ணு பேரு ஆதிராவாமே... அவள கல்யாணம் பண்ணிக்கிறதா இருந்தா... எதுக்கு டா எனக்கு ஃபோன் பண்ணி கல்யாணம் பண்ணிக்களாம்னு சொன்ன... " என அவனை கொடூரமாய் முறைத்து கொண்டு வினவியவளை குற்றம் சாடும் பார்வை பார்த்தான் அவன்...

அவன் : நா உன்ன கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லவே இல்ல நேட்டிலி... உன் கூட பெல்ஜியம் வரேன்னு தான் சொன்னேன்....

நேட்டிலி : என்ன பொருத்த வர அதுக்கு அது தான் அர்த்தம்...

நீல மனிதன் : நா வேணா புது டிக்ஷ்னரி வாங்கித் தரவா... மீனிங் கரெக்ட்டா இருக்கும் என இவன் கடுகடுப்புடன் வினவவும் அவனை எகத்தாளமான பார்வை பார்த்தாள் நேட்டிலி...

நேட்டிலி : யாரு டா நீ... என் முன்னாடியே தலை நிமிர்ந்து என் கிட்ட பேசுர...

நீல மனிதன் : எதாவது சொல்லீடுவேன் மரியாதையா இங்க இருந்து கிளம்பு என அவன் பல்லிடுக்கில் கூறுவதற்கிடையிலெல்லாம் அவனின் நினைவுகளுக்கு மத்தியில் ஆதிராவின் முகத்திற்கு பதிலாய் இந்த நேட்டிலியின் முகம் மாறி கொண்டிருந்தது...

நேட்டிலி : நா ஏன் போகனும்... இவன் தான என்ன வர வச்சான்...

அவன் : நேட்டிலி ப்லீஸ்... நா சொல்றத கேளு...

நேட்டிலி : என்ன கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லு நா நீ எது சொன்னாலும் கேக்குறேன்... என அவள் கூறியதும் அங்கு மயான அமைதி நிலவியது...

ஒரு பெருமூச்சுடன் அவன் நேட்டிலியை நோக்கி நிமிர்ந்த அதே நேரம் அவனின் முகத்தில் தெரிந்த ஏதோ ஒன்றினாலோ அல்ல நேட்டிலியின் முகத்தில் தெரிந்த ஏளனத்தினாலோ தெரியவில்லை நீல மனிதனின் மனம் முழுக்க வீற்றிருக்கும் ஆதிராவின் மொத்த நினைவுகளும் துளியுமின்றி அவன் கண் முன்னே அழியத் தொடங்கியது..

எதிர்காலம்

ஆதிராவின் இடத்தில் அவனின் வாழ்கையில் நேட்டிலி பொறுப்பேற்று அவனுடன் வாழும் நினைவுகள் தனிச்சையாகவே அவனுக்குள் நிறம்பத் தொடங்கியது...

நிகழ் காலம்

" இது தான் இப்போ நடக்கப் போகுதுன்னா... ஒரு சின்ன விஷயத்த மாத்தி என்னோட வாழ்கையையே விழும்புக்கு கொண்டு போன நா அவளுக்காக, அவ ஒருத்திக்காக, இந்த நிகழ்வையும் காலத்துல மாத்த தயங்க மாட்டேன்... அதுல என் உயிரே போனாலும் பரவாயில்ல " என தனக்குள்ளே எண்ணி கொண்ட நீல மனிதன் நேட்டிலியை நோக்கினான்...

நீல மனிதன் : நீ நினைக்கிறது நடக்காது நேட்டிலி... அவன் ஆதிராவுக்கு மட்டும் தான்... உன் வாழ்கை இங்க இல்ல... பெல்ஜியம்க்கே உன் வாழ்கைய தேடி போ... ஆனா இவன் கிட்ட வராத... இவன் உடலும் உயிரும் மனசும் அப்பவும் இப்பவும் எப்பவும் ஆதிராக்கு மட்டும் தான் என தெளிவாய் கூறி நக்கலாய் ஒரு பார்வை பார்க்க நம் நாயகனே அதிர்ச்சியில் அவனை நம்பாது நோக்கிய நேரம் நேட்டிலி தன் கோவத்தின் விழும்பை அடைந்திருந்தாள்...

நேட்டிலி : ஹோ அப்டியா... இருக்கட்டும்... இவன் இங்கேந்து உயிரோட போனா தான அவளுக்கு சொந்தமாவான்... எனக்கு சொந்தமில்லாதவன் அவளுக்கு கணவணாகத் தேவையில்ல... கார்ட்ஸ் இந்த இடத்த விட்டு அவன் ஒருத்தன் மட்டும் தான் உயிரோட போகனும்... இன்னோறுத்தன் பொணமா தான் போகனும்... நா சொன்னதுல எதாவது ஒன்னு மாறுனாலும் நீங்க யாரும் உயிரோட இருக்க மாட்டீங்க...

அவளின் ஜிம்பாய்ஸ்களுக்கு கட்டளை கொடுத்து விட்டு கொலை மிரட்டள் விடுத்தவள் நாயகனை ஒரு பார்வையே பார்க்காமல் நேர் நடையிட்டு அவளின் மகிழுந்தில் அமர்ந்து அங்கிருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் மறைந்திருந்தாள்...

அவன் : ஆதிரா வாழ்கைய இப்போ நீ தான் டா நாசமாக்குனது

நீல மனிதன் : ஹா... அவளுக்கு எப்பவுமே நல்லது மட்டுமே நினைக்கிறவன் டா நான்... என்னால அவளுக்கு ஒரு போதும் கெட்டது நினைக்க முடியாது... நீ இங்கேந்து உயிரோட போகத் தான் போற... ஆதிராவ ஏத்துக்க தான் போற என இவன் கூறி கொண்டிருக்கும் போதே நம் நாயகனின் முன் வந்து நின்ற ஒருவன் துப்பாக்கியை அவனின் இதயத்திற்கு குறி வைத்தான்...

அவன் : எது நல்லது... அவளுக்கு கெட்டதே நினைக்க மாட்டேன்னு சொல்லி என்ன ஆபத்துல சிக்க விட்ட-.. என அவன் முழுதாய் முடிப்பதற்குள் அவ்விருவரின் செவி மன்றமும் அதிர ஒலிர்ந்தது அந்த முதல் தோட்டாவின் ஓசை.... ஒன்றை தொடர்ந்து இரண்டு மூன்று நான்கு என நான்கு தோட்டாக்கள் சராமரியாய் அவனின் முதுகில் இறங்கியது....

கதை தொடரும்...

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro