Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

33


நாட்களும் செல்ல இலக்கியாவிற்கும் மாறனிற்கும் திருமணம் முடிந்து பத்து மாதம் ஆகி இருந்தது.ஷிவா தனது பன்னிரண்டாம் வகுப்பின் இறுதியில் இருந்தான் .ராஜாவும் இளவரசியும் இந்த பத்து மாத காலத்தில் ஒருவர் மீது மற்றொருவர் அளவில்லா நேசத்தை வளர்த்திருந்தனர் எனில் அவளின் வயதும் அவளின் படிப்பும் இருவரும் சேர முட்டுக்கட்டையாய் இருக்க கணவன் மனைவி ஆன பின் காதலர்களாய் சுற்றிக்கொண்டிருந்தனர் இருவரும்.ஷாந்தி முதல் போல் அல்லாது வயதின் முதிர்ச்சி தந்த பக்குவமும் ,இளைய மருமகள் மற்றும் பேத்தியின் பாசத்தால் வந்த மாற்றமும்,சத்தியமூர்த்தியின் ஒதுக்கமும் அவரை சாந்தமாய் ஆக்கி இருக்க மகாவோ நாட்கள் செல்ல செல்ல மேலும் மேலும் அரக்கியாகிக் கொண்டிருந்தாள் .நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் தனிமையில் இலக்கியாவை மட்டம் தட்டுவதை வாடிக்கையாக்கியவள் அவளின் மௌனம்,கருத்தரிப்பு தள்ளி போதல் மேலும் வசதியாகிப் போக நினைக்கும் நேரமெல்லாம் அவளை வார்த்தைகளால் குத்திக் கிழித்தாள் .

அன்று ஞாயிறு ஆதலால் அனைவரும் வீட்டில் இருக்க காலையில் மச்சான்கள் மூவரும் பாடலை ஓட விட்டு ஆடிக் கொண்டிருந்தார்கள்.இப்பொழுதெல்லாம் விடுமுறை நாட்களில் இது ஒரு வாடிக்கை ஆகிப் போனது .சிடு சிடுவென்று இருக்கும் ஷாந்தி கூட இப்பொழுதெல்லாம் மகன்கள் இருவரின் சேட்டைகளை ரசிக்க துவங்கி இருந்தார்.

காலம் கொஞ்சம் கொஞ்சமாக மூத்த மகனின் சுயநலமான செய்கைகளையும் தான் தனது இளைய மகன்களுக்கு காட்டிய பாரபட்சத்தின் பாவத்தையும் அவரிற்கு உணர்த்தி இருந்தது ஆஸ்துமா மற்றும் இதர நோய்கள் வந்த பின்னும் தனக்காக முகம் சுழிக்காமல் செலவு செய்து மருத்துவமனைக்கு துடித்து போய் அழைத்து செல்லும் செய்கையினால் .

தொலைக்காட்சியில் டங்காமாரி ஊதாரி பாடல் ஓடிக்கொண்டிருக்க மூவரும் லுங்கியை மடித்துக் கட்டிக்கொண்டு ஆடிக் கொண்டிருந்தனர் .

இலக்கியாவும் இளவரசியும் காபி கலக்கிக் கொண்டும் காலை உணவும் செய்து கொண்டிருந்தவர்கள் இவர்கள் அழிச்சாட்டியதை பார்த்து சிரித்தனர் .

இளவரசி கோப்பைகளில் காபி ஊற்றியபடி"வர வர இதுங்க மூணு பேர் தொல்லை தங்களை அக்கா"என்று கூற

இலக்கியா வைத்துக் கொண்டிருந்த சாம்பாரில் உப்பு சரியாக இருக்கிறதா என்று பார்த்தபடி சிரித்தவள் "அம்மா குட்டிமா . குளிக்காம லுங்கிய கட்டிக்கிட்டு காலங்காத்தால ஆட்டம் வேற "என்று கூறியபடி அடுப்பை அணைத்தவள் இரண்டு திரையில் ஓர் திரையை எடுத்துக்கொண்டு வெளியேற இளவரசியும் பின்னோடே வந்தாள்.

இருவரும் காபி கோப்பைகளை அவரவரிடம் கொடுத்தவர்கள் கோப்பைகளை வாங்காமல் மூவரும் ஆடிக்கொண்டிருக்க இரன்டு முறை அழைத்து பார்த்து இலக்கிய பின் பட்டென்று சென்று தொலைக்காட்சியை அணைத்தாள் .

மாறன் "ப்ச் இப்போ எதுக்கு லயா ஆப் பண்ண?"என்று கேட்க

அவளோ கைகட்டி முறைத்தவள் "மணி ஒன்பதுக்கு மேல ஆச்சு குளிக்காம என்ன ஆட்டம் வேண்டி கெடக்கு? coffee குடுச்சுட்டு போய் குளிங்க "என்று கூற

மூவரும் முகத்தை தொங்கப்போட்டுக்கொண்டு சென்றனர் .இளவரசி அவர்கள் முகத்தை பார்த்து சிரிக்க ராஜாவோ சட்டென்று அவர்களின் அறையின் வாசலில் நின்றவளை அப்படியே இழுத்துக்கொண்டு குளியலறைக்குள் சென்று விட்டான் .

எதிர்பாரா இத்தாக்குதலில் அதிர்ந்த இளவரசி அவன் கைகளிலேயே அடிக்க அந்தோ பரிதாபம் அதற்குள் அவளை உள்ளே இழுத்து சென்று ஷவெரின் அடியில் நிறுத்திவிட்டான் ராஜா .நீரில் நனைந்தபடி கையை இடுப்பில் வைத்து முறைத்தவள் "எரும மாடு இப்போ எதுக்கு டா என்ன இழுத்துட்டு வந்த ?"என்று கேட்க

அவனோ அவளை பார்த்து சிரித்தபடி "அண்ணி தானடி குளிக்க சொன்னாங்க "என்று கூற

அவளோ தலையில் அடித்தவள் "அறிவுக்களஞ்சியமே உன்ன தான் குளிக்க சொன்னாங்க என்ன ரெண்டாவது தடவ குளிக்க சொல்லல "என்று கூற

அவனோ குறும்புடன் பார்த்தபடி அவளை நெருங்கியவன் "நீ தான டி சொன்ன எதுவா இருந்தாலும் சேர்ந்தே தான் பண்ணனும்னு அதான் சேர்ந்தே ...."என்று கூறியபடி அவள் இடையில் கைகோர்த்து தன்னுடன் அணைக்க

அவளோ அவனின் நெருக்கத்தில் வழக்கம் போல் உதடு தந்தி அடிக்க அவனது வாயை தன கரம் கொண்டு பொத்தியவள் "டேய்ய் உன்ன இந்த உலகம் ரொம்ப நல்லவன்னு நம்பிகிட்டு இருக்குடா ஆனா நீ பொருக்கி மாறி பண்ணுற "என்று கூற

அவனோ அவள் கையை விளக்கியவன்"பொண்டாட்டி கிட்ட பொறுக்கியா இருக்கலாம் தப்பில்ல "என்று கூறியபடி அவளை அணைத்துக்கொண்டவன் கழுத்தில் முகம் புதைத்தபடி இரண்டு நிமிடம் நின்றான் .

சிரித்தபடி அவனை அவள் தானும் அணைத்துக்கொள்ள அவனோ சிறு குரலில் "அரசி "என்றான்

அவன் தலைமுடிக்குள் கை விட்டு கோதிக்கொண்டிருந்தவள் "என்ன மாமா ?"என்க

அவனோ "இன்னும் ஒரு வருஷம் இருக்காடி படிப்பு முடிய ?"என்க

அவளோ "ம்ம் "என்று கூற

அவளை மேலும் தன்னோடு இறுக்கியவன் ஒன்றும் பேசாமல் ஒரு நிமிடம் கழித்து விளக்கி விட்டு திரும்பி நின்றுகொண்டான் ."இன்னும் ஒரு நிமிஷம் கூட நிக்காத அப்டியே திரும்பி பாக்காம ஓடிடு "என்று கூற அவளும் அவன் கன்னத்தில் முத்தமிட்டவள் சிட்டாய் பறந்து விட்டாள் அங்கிருந்து .அவள் முத்தமிட்ட கன்னத்தை சிரிப்புடன் வருடியவன் "கடவுளே இவளை ஏன் தான் என் அக்கா இவ்ளோ லேட்டாக பெத்துச்சோ படுத்துறாயா அழகா தெரிஞ்சு "

பின் மூன்று ப்ரகஸ்பதிகளும் குளித்து வெளியே வர அனைவரும் உணவு உண்டனர் .

அனைவரும் உண்டு கொண்டிருக்க வாசலில் யாரோ வரும் சத்தம் கேட்டு திரும்பினார் .அங்கே சாந்தியின் ஒன்று விட்ட சகோதரி தனது கணவருடன் வந்திருந்தார் .அவரை கண்டதும் மகிழ்ச்சியுற்ற சாந்தி "நாகவேணி அக்கா வாங்க வாங்க "என்று அழைக்க அவரோ ஒரு வித அலட்சியத்தோடே உள்ளே நுழைந்தார் .சத்யமூர்த்தியும் வந்து அவர்களை உபசரிக்க அந்த வரவேற்பறையில் போடப்பட்டிருந்த கதிரையில் இருவரும் ஒரு கதிரையில் அமர மற்ற குதிரைகளில் அந்த குடும்பத்தவர் அமர்ந்தனர் .

சத்யமூர்த்தி "என்ன அண்ணி திடீர்னு வந்துருக்கீங்க "எங்க

அவரோ "அது ஒண்ணுமில்ல கொளுந்தனாரே நம்ம ஐஷுக்கு வர்ற வெள்ளிக்கிழமை வளைகாப்பு வச்சிருக்கோம் அதான் கூப்பிடலாம்னு வந்தோம் "என்று கூற

இளவரசி குதூகலித்தவள் "அப்டியா நாலு நாள் முன்னாடி கூட பேசுனேனே வளைகாப்பு பத்தி ஐஷு அண்ணி ஏதும் சொல்லல "என்று கூற

அவரோ இலக்கியா மற்றும் இளவரசியிடம் திரும்பி" என்னம்மா உங்களுக்கும் கல்யாணம் ஆகி வருஷம் ஆச்சே ஏதாச்சு விஷேஷம் இருக்கா ?"என்று கேட்க

ராஜா மற்றவர்களின் சொந்த விஷயத்தில் மூக்கை நுழைக்கிறார்களே என்று எரிச்சலுற்றவன் "அவ படிப்பு முடியுற வரைக்கும் தள்ளி போட்டுருக்கோம்"என்று இதற்கு மேல் ஏதும் பேசாதே என்பதை போல் முடித்து விட

அவரோ "என்ன படிப்பு ஊர்ல இல்லாத படிப்பு இவ வயசுல எல்லாம் என் கைல ஐஷு இருந்தா "என்று கூறி அங்கலாய்க்க கோபத்தில் மீண்டும் பேச சென்றவனை இளவரசி தான் தோளில் அழுத்தம் கொடுத்து அமர வைத்தாள்.

பின் இலக்கியாவிடம் திரும்பியவர் "அவ தான் படிக்குறா உனக்கென்னம்மா ?"என்று கேட்க அவளோ இதற்கு என்ன சொல்வதென்று தெரியாமல் நின்றாள் .அவளின் அமைதியை சாதகமாக்கியவர் "ஹ்ம்ம் இதே நம்ம ஊர் பக்கம் ஏதாச்சு ஒரு புள்ளய பாத்து கட்டிருந்தா இந்நேரம் புள்ளய பெத்து கைல குடுத்துருப்பா சீமைல இல்லாத பொண்ணா பாத்து கட்டிக்கிட்டு வந்தா இப்டி தான் "என்று கூற மாறனோ கோபத்தில் சிவந்த கண்களோடு எப்பொழுது வேண்டுமென்றாலும் வெடித்து விடுவேன் என்று காத்திருக்க இலக்கியாவோ இயலாமையில் கண்களில் இப்பொழுதோ எப்பொழுதோ விழுந்து விடுவேன் என்று நின்ற கண்ணீர் துளிகளை சிரமப்பட்டு கட்டுப்படுத்திக் கொண்டிருந்தாள்.

சத்யமூர்த்தியாலும் சாந்தியாலும் வீட்டிற்கு வந்த விருந்தாளியை ஏதும் கூற முடியவில்லை .மகாவோ இலக்கியாவின் அந்த நிலையை குரூரமாக ரசித்துக் கொண்டிருந்தாள்.மேலும் அவர்"எதுக்கும் டாக்டர் கிட்ட கூட்டிட்டு போய் பாருங்க நம்ம பயலுக்கு வயசா இல்ல "என்று பேசிக்கொண்டே செல்ல

மாறன் பொறுமை இழந்தவன் "நிறுத்துங்க .இன்னும் ரெண்டு நிமிஷத்துக்கு மேல இங்க நீங்க ரெண்டு பெரும் இருந்தா என்ன நடக்கும்னு எனக்கே தெரியாது. "என்று கூற அவர்கள் ஏதோ கூற வர மாறனும் ராஜாவும் பார்த்த பார்வையில் இருவரும் அங்கிருந்து நகர்ந்து விட்டனர் .

அவர்கள் சென்றதும் ராஜா "என்னண்ணே நீங்க அண்ணியை அந்த பேச்சு பேசுறானுங்க அமைதியா போய்ட்டு வாங்கனு சொல்றீங்க நாலு சப்புன்னு வைக்க வேணாம் ?என் கையையும் புடுச்சு வச்சுக்கிட்டிங்க "

மகா "அவங்க என்ன இல்லாததையா சொல்லிட்டாங்க உண்மையா தான சொன்னாங்க "என்று கூற

மாறன் ஏதோ கூற வர ராஜாவோ "ஓஓஓஓஓ நீ எப்போ பெத்த இளவரசியை ?"என்று கேட்க

அவளோ சற்று தடுமாறினாலும் பின் "எனக்கு என்ன மாறனை மாறி நல்ல படிச்சா கெட்டபழக்கம் இல்லாதவனையா கட்டி வச்சீங்க ?ஒரு மொடா குடிகாரனை தான கட்டிவச்சீங்க?"என்று எதிர் கேள்வி கேட்க

மாறன் ஏதோ கூற வரும்முன் இலக்கியாவோ இறுகிய குரலில் "ப்ளீஸ் ஏதும் பேசாதீங்க போதும் இதுவரைக்கும் பேசுனதே போதும் "என்று கூறியவள் உள்ளே அறைக்குள் சென்று விட்டாள்.

மகாவை ஒரு வெற்றுப்பார்வை பார்த்த மாறன் இலக்கியாவை பின் தொடர்ந்து அறைக்குள் செல்ல மற்ற அனைவருமே அவளை ஒரு அர்பப் பார்வை பார்த்து விட்டு சென்று விட்டனர் .மாறன் தன் அறைக்குள் வந்தவன் பார்த்தது என்னவோ கட்டிலில் கலங்கிய விழிகளுடன் எதிரே சுவற்றில் ஒட்டப்பட்டிருந்த ஒரு அழகிய குழந்தையின் புகைப்படத்தை பார்த்தபடி தன் வயிற்றை இறுக்கி பிடித்திருந்த இலக்கியாவை தான் .

அந்த காட்சி அவன் மனதில் சுருக்கென வழியை கொடுத்தாலும் அவள் அருகில் சென்று அமர்ந்தவன் அவள் கையை பிடிக்க அவன் கண்ணை ஒருமுறை உற்று நோக்கியவள் அவன் மார்பில் சாய்ந்து அழத் துவங்கி விட்டாள்.அவளை தன்னோடு அனைத்துக்கொண்டவன் "இப்போ எதுக்கு டி அழுற?"என்று கேட்க

அவளோ விசும்பியபடி "எனக்கு பாப்பா வேணும் "என்று கூற

அவனோ "எந்த கடைல விக்குதுனு சொல்லு வாங்கிட்டு வரேன் "என்று சொல்ல

அவளோ நிமிர்ந்து அவனை முறைத்தாள் .

அவள் முறைப்பில் சிரித்தவன் "என்னடி முறைக்குற நீ தான கடைல விக்கிற பொருள் மாறி வேணும்னு சொன்ன "என்று கூற

அவளோ "உனக்கு கூட என் feelings புரியலையா ? கல்யாணமான ஒவ்வொரு மாசமும் அந்த மூணு நாளுக்கு முன்னாடி எத்தனை தடவ வேண்டுவேன் தெரியுமா வரக்கூடாது வரக்கூடாதுன்னு ?பத்து மாசம் ஆச்சுடா குட்டி குழந்தைங்களை எல்லாம் பாக்கேல ஏக்கமா இருக்கு "என்று கூற

அவனும் அறிவானே அந்த நாட்களில் அவள் முகம் வலியையும் மீறி ஒரு சோகத்தை பூசிக் கொள்வதை .

அவளது முகத்தை இருவிரல் கொண்டு நிமிர்த்தியவன் "பத்து மாசம் தானடி ஆகுது கல்யாணமாகி, அதுக்குள்ள என்னவோ வருஷக்கணக்கா குழந்தை இல்லாத மாறி feel பண்ற .குழந்தை எல்லாம் வரம் லயா .அதை எப்போ கடவுள் நமக்கு கொடுக்கணும்னு நெனைக்குறாரோ அப்போ தருவார் .நீ வேணா பாரு கூடிய சீக்கிரமே இதே முட்டை கண்ணோட இதே மூக்கோட இதே ரோஜா உதடோடு இதே பன்னு மாறி கன்னத்தோடு உன்ன மாறியே என்ன படுத்தி எடுக்க ஒரு குட்டி இளவரசி நமக்கு கெடைப்பா "என்று அவள் முகத்தை வருடியபடி கூற அவன் கூறிய தோரணையில் சிரித்தவள் தங்கள் குழந்தையை பற்றி கனவு காண துவங்கினாள்.

அன்று மாலை அடுப்படியை ஒதுங்க வைத்தவள் ஹார்லிக்ஸ் பட்டேலை கொட்டிவிட்டாள்.இளகிய "ஐயோ நேத்து தான் வாங்குனேன் வீனா போச்சே "என்று நினைத்தபடி அதை அள்ளி வெளியே போட்டவள் பின் கீழே கடைக்கு சென்று புதிய ஹார்லிக்ஸ் பாட்டில் வாங்கி அதே இடத்தில் வைத்து விட்டாள் .

அன்றைய நாள் அவளின் வாழ்வில் மட்டுமல்லாது மாறனின் வாழ்விலும் பெரும் மாற்றத்தை கொண்டு வர காத்திருந்தது பலரின் முகத்திரைகளை கிழிக்கவும் காத்திருந்தது .

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro