Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

11


அவளிடம் பணத்தை வாங்கியவன் அடுத்த நாளே சென்று அந்த அரசியல்வாதியின் அலுவலகத்தில் கொடுத்துவிட்டு வர அடுத்த இரண்டு நாட்களில் அவனது வீட்டிற்கு பணியேற்பு உத்தரவு கடிதம் வந்திருந்தது .அதை வீட்டில் உள்ளவர்களிடம் அவன் கூற சாந்தியோ அது வரை மௌனமாய் இருந்தவர் "இப்போ சம்பளம் எவ்ளோ டா வரும்?"என்க மாறனோ சற்று தெளிவுற்று முப்பதாயிரம் வரும் சம்பளத்தை இருபதாயிரம் என்று கூறினான் .

ராஜா அவனது அப்பொய்ன்ட்மென்ட் லெட்டரை அப்பொழுதே பார்த்திருந்தமையால் தன் அண்ணனா இப்படி கூறுகிறான் என்று விழிவிரித்து பார்க்க மாறனோ அவனை நோக்கி கண்ணடித்தவன் மேலே வா என்பதை போல் சைகை செய்துவிட்டு சென்றுவிட்டான் .

மேகலாவிடம் உண்மையான சம்பளத்தை கூறியவன் அவளிற்கு பிடித்த இனிப்பையும் தன் தந்தைக்கு பிடித்த இனிப்பையும் வாங்கி வந்து கொடுத்திருந்தான் .இருவரும் இரவு மாடிக்கு செல்ல ராஜாவோ இமைக்க மறந்து மாறனை பார்த்துக்கொண்டிருந்தான்.

.மாறன் "டேய்ய் தம்பி என்னடா அண்ணனை இப்டி சைட் அடிக்கிற ?"என்க

அவனோ "அட பாவி அண்ணா நீ உறுப்படவே மாட்டேன்னு நெனச்சேன்யா நீ இன்னிக்கு உன் சம்பளத்தை மறைச்சதும் எனக்கு அவ்ளோ சந்தோஷம் தெரியுமா இப்போவாச்சு உன் செலவை பார்த்துப்பன்னு"என்க

மாறனோ மறுப்பாய் தலை அசைத்தான் "என் செலவுக்காக ஒதுக்கலடா அடுத்தடுத்து வரப்போற செலவுகளுக்காக ஒதுக்குனேன் "என்க

ராஜா முகம் சுருங்கிவிட "அதான பாத்தேன் நீயாச்சு உனக்குன்னு ஏதாச்சும் செய்யறதாச்சு "என்க

மாறனோ சிரித்தவன் "அப்பாவுக்கு போன தடவ ஹாஸ்பிடல் போனப்போ பிளட் கிளாட் ஆயருக்கு மூலைல எப்போ வேணுனாலும் ஸ்ட்ரோக் வரும் ஒப்பரேஷன்க்கு ஒரு லட்சம் ஆகும்னு சொல்லிட்டாங்கடா. இப்போ இந்த வேலை கெடைக்குறதுக்காக வேற கடன் வாங்கியிருக்கேன் கந்து வட்டி தான்.

முதல் ரெண்டு மாச சம்பளத்தை வச்சு அதை அடைக்கணும்,இளவரசி வேற வளந்துட்டா விஷேஷம் ஆனா முறை செய்ய வேண்டி வரும் .நீயும் இன்னும் கொஞ்ச நாளுல படிப்பை முடுச்சுருவா பேங்க் எக்ஸாம் எழுதுனாலுமே வேலை உறுதி செய்யேல பணம் கண்டிப்பா கட்ட வேண்டி வரும்.அம்மா கிட்ட எல்லா பணத்தையும் குடுத்தேன்னு வையேன் அது ஏதோ அது அப்பா வீட்டு சொத்தை வாரி இறைக்குற மாறி பந்தாவுக்காக செலவு பண்ணியே சம்பளக்காசை கரைச்சுடும் .அதுக்காக தான் இந்த பத்தாயிரத்தை எடுத்து வைக்குறேன் "என்க

ராஜாவோ "ஏன் அந்த முட்ட போண்டாக்கு நீ மட்டும் தான் மாமனா மூத்தவர்னு ஒருத்தர் எதுக்கு இருக்காரு?"என்க

மாறனோ "தெரிஞ்ச விஷயத்தை திரும்ப திரும்ப நோண்டுறதால என்ன ஆகிற போகுது ?"என்க

ராஜாவோ "என்னவோ போ கொஞ்சம் உனக்குன்னும் சேர்த்து வச்சுக்கோ "என்றவன் அதன் பின் "அண்ணிகிட்ட சொன்னியா ?"என்க

மாறனோ மறுப்பாய் தலை அசைத்தவன் "இல்லடா இன்னும் இல்ல நாளைக்கு அவ காலேஜ் முடிஞ்சு வீட்டுக்கு வந்ததும் போய் சொல்லணும் நாளைக்கு தான் first டே ஒர்க் வேற "என்க

ராஜாவும் "ம்ம் சரிண்ணே" என்றவன் தன் அண்ணனுடன் கீழே சென்று உறங்கிவிட்டான் .

அடுத்த நாள் தனது முதல் நாள் பணிக்காக தன்னிடம் இருப்பதிலேயே மிகவும் நல்ல நிலையில் இருக்கும் pant ஷர்ட்டை போட்டு கிளம்பியவன் முதல் நாள் பணிக்கு சென்றான் .அங்கே அவனுக்கு வேலை செய்யும் சூழல் மிகவும் பிடித்து விட அங்கிருக்கும் அதிகாரிகள் அனைவருமே எந்தவித பாகுபாடும் இல்லாமல் ஒன்றாகவே பழகும் விதம் அவனை ஈர்த்தது.இவனின் இலகுவாய் அனைவரையும் சிரிக்க வைக்கும் பழக்கம் அவர்களை ஈர்த்தது .முதல் நாள் சிறப்பாக பனி செய்தவன் இலக்கியாவை காண அவர்களின் வீட்டிற்கு சென்றான் .

அங்கே அவளின் தந்தை அக்கா அன்னை அனைவரும் இருக்க தாமரையின் புதல்வி சுஜாதாவுடன் அமர்ந்து இலக்கியா அவளிற்கு கணக்கு பாடம் சொல்லிக் கொடுத்துக்கொண்டிருந்தாள்.

இலக்கியா "பாப்பா எத்தனை தடவ டா சொல்றது இதை? BODMAS methodla முதல்ல உள்ள இருக்குற ப்ராக்கெட் தான் solve பண்ணனும் அதுலயும் ஆர்டர் wise division ,அப்பறோம் multiplication அப்பறோம் addition அப்பறோம் தான் subtraction .என்று கூறிக்கொண்டிருக்க அவளோ புரிந்ததாய் மண்டையை ஆட்டியவள் இத்தோடு பத்தாவது முறையாய் அந்த கணக்கை செய்தாள்.

மாறன் வாசலில் இலக்கியா அவளிற்கு சொல்லிக்கொடுக்கும் அழகிலே உதட்டில் புன்னகையுடன் அவள் முகச்சுழிப்புகளில் லயித்து நிற்க அவன் எண்ணங்களை கலைத்தது பேப்பர் படித்துக்கொண்டிருந்த அவளின் அப்பாவின் "அடடே மாறா என்னப்பா அங்கேயே நின்னுட்டு உள்ள வா என்ற குரல் "அதில் தன் மோனநிலையில் இருந்து கலைந்தவன் உள்ளே வர மாறன் என்ற பெயரில் விழுக்கென்று இலக்கியாவும் சுஜாதாவும் நிமிர இலக்கியா அவனிடம் ஒரு புன்னகையை உதிர்த்து விட்டு சமயற்கட்டிற்கு ஓட சுஜாதாவோ அவனிடம் ஓடினாள் .

சுஜாதா "மாமா எப்படி இருக்கீங்க "என்க

அவனோ அவள் உயரத்திற்கு முட்டி போட்டவன் "சூப்பரா இருக்கேன் குட்டிமா இந்தாங்க உங்க lollipop "என்று அவளிடம் ஒரு lollipoppai அவன் கொடுக்க அவன் கன்னத்தில் முத்தமிட்டவள் அந்த lollipopai வாங்கிக்கொண்டு ஓடிவிட்டாள் தன் சித்தியிடம் .

அவளை சிரிப்புடன் பார்த்தவன் பின் இலக்கியாவின் தந்தையிடம் சென்று அவர் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினான். பின் இனிப்பு பெட்டியை கொடுத்தவன் "இன்னிக்கு முதல் நாள் வேலைக்கு போனேன் பா ஸ்வீட் எடுத்துக்கோங்க "என்க

அவரோ அவனை தலையில் கை வைத்து ஆசிர்வதித்தவர் "நல்லா இருப்பா "என்று இனிப்பை எடுத்துக்கொண்டார் .இந்த சந்தடி gappil இலக்கியா சமயற்கட்டிற்குள் சென்றவள் அவள் அக்காவை விலக்கிவிட்டு தானே மாறனிற்கு இஞ்சி டீ போட்டு எடுத்து வந்தாள்.

அவள் கொடுத்த டீயை கொடுத்தவன் அவளிடம் இனிப்பை நீட்ட அவளோ அவளிற்கு பிடித்த லட்டு இருக்கக்கண்டு கண்கள் விரிய மகிழ்ச்சியுடன் வாங்கிக்கொண்டாள் .

சற்று நேரம் இலக்கியாவின் தந்தையும் அவனும் பேசிக்கொண்டிருக்க அவரோ "மாறா சொல்ல மறந்துட்டேன் ராமனுக்கு பொண்ணு பாத்துருக்கோம்ப்பா.பொண்ணு நம்ம சொந்தம் தான் மீனாட்சியோட அண்ணன் பொண்ணு .பொண்ணு குடுத்து பொண்ணு எடுக்குற மாறி அவங்க பையனுக்கு சௌபாக்கியவதியையும் ராமனுக்கு அந்த பொண்ணையும் எடுக்கலாம்னு இருக்கோம்.அவனுக்கு இன்னும் 3 மாசத்துல சனி திசை ஆரம்பிக்க போகுது அதுக்குள்ள முடுச்சுரலாம்னு"என்க

மாறனோ மகிழ்வுடன் "ரொம்ப சந்தோஷம்ப்பா எப்படி ரெண்டு கல்யாணத்தையும் ஒண்ணா வைக்குற மாதிரியா இல்ல தனி தனியாவா ?"என்க

அவரோ "முதல் நாள் ராமனுக்கு கல்யாணம் பண்ணிட்டு அடுத்த நாள் சௌபாக்யாக்கு பண்ணலாம்னு இருகோம்பா.ஒரே மேடைல கல்யாணம் வச்சா ஒரு ஜோடி தான் நல்லா இருக்கும்னு சொல்றாங்க எதுக்கு வீணா "என்க

அவனும் "சரிப்பா எப்போன்னு சொல்லுங்க அசதிருவோம் தங்கச்சி கல்யாணத்தையும் அவன் கல்யாணத்தையும் "என்க அவரும் மகிழ்வுடன் தலை ஆட்டினார் .

பின் அவன் "சரி நேரமாச்சுப்பா நான் கிளம்புறேன் "என்றவன் வெளியே செல்ல இலக்கியாவோ அவன் பின்னோடே வந்தாள் .

அவன் பைக்கில் ஏற அவன் பின்னே வந்தவள் அவன் பையின் ஹாண்ட் பாரில் கை வைத்து நின்று "என்னப்பா வேலைலாம் எப்படி இருந்துச்சு ?"என்க

அவனோ சிரிப்புடன் "நல்லா இருந்துச்சு இலக்கியா "என்க

அவளோ "சூப்பர் "என்க அவர்கள் இருவரையும் அங்கே போகும்போது இரு பெண்கள் பார்த்துக்கொண்டே சென்றார்கள்.

அவர்ளை கண்டு சிரித்த இலக்கியா ஒரு பெண்ணை "என்ன பத்து மாமி எப்படி இருக்கேள் "என்று கேட்க அவரோ காதிலேயே விழாதது போல் வேக நடையுடன் சென்று விட்டார் .

அவளின் இந்த விசித்திர நடவடிக்கையை அவன் குழப்பமாய் பார்த்து "ஏன் உன்ன பார்த்து இப்டி தெறிச்சு ஓட்றாங்க ?"என்க

சிரித்த இலக்கியாவோ "ஒன்னும் இல்லப்பா அன்னைக்கு நா உன்னோட பைக்ல வந்து இறங்குனேன்ல அடுத்த நாள் இந்த மாமி என்கிட்டே வந்து

"பொம்மனாட்டியா லட்சணமா இல்லாம என்னடி இது யார் யாரோடயோ ஊர் சுத்திண்டிருக்க நோக்கு தான் அறிவில்லன்னா உன்ன பெத்தவாளுக்குமா இருக்காது ?உன்ன பாத்து மாதா அது பிள்ளைகள்லாம் கேற்ற போரதுடி"அப்டினு சொன்னாங்க என்க

மாறன் மேலே சொல் என்பதை போல் பார்க்க

அவளோ "நா என்ன பண்ணேன் அதெல்லாம் சரி தான் மாமி ஆனா ஒரு பொண்ணும் பையனும் பைக்ல போனா அவங்க தப்பான உறவுல தான் இருக்காங்க அப்டினு அவசியம் இல்ல .அவன் என்னோட நண்பனா இருக்கலாம் என்னோட உறவினனா இருக்கலாம் என்னோட ஆசானா இருக்கலாம்.எல்லாருக்கும் நா இது தான் அப்டினு ப்ரூவ் பண்ண வேண்டிய அவசியம் எனக்கில்லை உங்க பிள்ளைகள்ட்ட போய் அட்வைஸ் பண்ணுங்க " என்க

அவரோ "ரொம்ப திமிரா பேசாதடி உன் ஆம்படையாண்ட போய் நல்லா குத்து படுவ"என்க

அவளோ "என் மேல தப்பில்லாதப்போ நீங்க என்ன பழி சொன்னா அதை எதிர்த்து கேள்வி கேக்குறதுக்கு பேர் திமிருன்னா அப்டியே வச்சுக்கோங்க அப்பறோம் மாமி தேவை இல்லாம இப்டி ஏதாச்சும் புறணி பேசுறதா இருந்தா ஏன் முன்னாடி இனிமே பேசாதீங்க எனா எனக்கு புடிக்காத விஷயத்தை கிழிச்சு போடுற பழக்கம் இருக்கு ."அப்டினு அவங்க வாய பாத்து சொல்லிட்டு வந்துட்டேன் என்க

மாறனிற்கு தன்னிச்சையாய் வருங்காலத்தில் தனது அன்னையின் நிலை இவளிடம் என்னவாக இருக்கும் என்று யோசிக்க குபீரென்று சிரித்துவிட்டான் .

அவன் சிரிப்பதை அவள் குழப்பமாக பார்க்க அவனோ சிரிப்பை கட்டுப்படுத்தியவன் "இப்டி வெடுக்கு வெடுக்குனு பேசாத மா பெரியவங்க சொல்லேல சில விஷயம் நமக்கு புடிக்கலேனாலும் அவங்க வயசுக்கு மரியாதை கொடுத்தாவது கேட்டுக்கோ "என்க

அவளோ "அதெல்லாம் என்னால முடியாது இளா என் மேல தப்பு இல்லாதபோ குற்றம் சொல்றதையோ என்னோட உரிமைகள் பறிக்கப்படறதையோ ஒரு நாளும் நா பொறுத்துக்க மாட்டேன் .உள்ள ஒன்னு வச்சுக்கிட்டு வெளிய ஒன்னு பேச என்னால முடியாதுப்பா என்க அவளின் இந்த நேர்பட பேசும் குணம் அவனை மேலும் மேலும் அவளிடம் காதல் கொள்ளவே வைத்தது.

அதன் பின் அவனை அழைத்தவள் அவன் அசையாது அவளையே பார்க்க அவன் தோள் தொட்டு உசுப்பிட அவனோ தூக்கத்தில் விழிப்பதை போல் விழித்தவன் "என்னடா ?"என்க

அவளோ "இவ்ளோ நேரம் என்ன கண்ணை முழுச்சுகிட்டே தூங்குறியா அப்பறோம் உன் கிட்ட ஒன்னு சொல்லணும் ."என்று ஒரு கடிதத்தை எடுத்து நீட்டியவள் அவனிடம் கொடுக்க அதிலோ அவளின் சீட் confirmation கடிதம் இருந்தது .

அதை பார்த்து மகிழ்ந்தவன் "சூப்பர் லயாம்மா "என்று மனதில் அவளை அழைக்கும் செல்ல பெயரை அவசரத்தில் கூறிவிட்டு கலக்கத்துடன் அவளை பார்க்க அவளோ அதை கண்டுகொண்டது போல் தெரியவில்லை .

அவன் அதை கண்டு நிம்மதியற்று பெருமூச்சு விட அவளோ "தேங்க்ஸ் பா இன்னும் ஒரு வாரத்துல காலேஜ் போனும் மத்தியானம் தான் வந்துச்சு வீட்ல இன்னும் சொல்லல முதல் முதல்ல உன் கிட்ட தான் சொல்லணும்னு தோணுச்சு அதான் ."என்றவள் பின் கடிதத்தை வாங்கிவிட்டு உள்ளே செல்ல போக ஏதோ நினைவுவந்தவளாய் அவனை அழைத்தாள் "இளா"என்று

அவன் என்ன என்பதை போல் திரும்ப அவளோ "நீ இப்போ என்ன கூப்பிட்ட அந்த லயாமா கேக்க நல்லாருந்துச்சு முடுஞ்சா என்ன இனிமே அப்டியே கூப்டு இலக்கியான்னு நீட்டி முழக்காம "என்று சிரித்தபடி கூறி உள்ளே சென்று விட மனதினுள் அவனிற்கு மழை சாரல் வீச வானமும் அவனின் சந்தோஷத்தை பகிர்ந்துகொள்ள நினைத்து மழை சாரலை பண்ணீரென அவன் மேல் தெளித்தது .

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro