Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

ஈரம் - 3

மருத்துவமனை

பொருமையின்றி தரையில் காலை தட்டி கொண்டே அமர்ந்திருந்தான் அபிமன்யு.. வேக மூச்சுக்களை இழுத்தபடி அபிமன்யுவை இறுதியாய் வந்து சந்தித்தார் மருத்துவர்...

மருத்துவர் : ஓஹ் வாங்க அபிமன்யு. உங்களுக்காக தான் வெயிட் பண்ணீட்டு இருந்தேன் என்றபடி அவர் அபிமன்யுவின் தோளை தட்ட அபிமன்யு எழுந்து நின்று கொண்டான்...

அபிமன்யு : டாக்டர் கெஸ்ஸிங்ஸென்ன... அத சொல்லுங்க ப்லீஸ்...

மருத்துவர் : இந்த பொண்ணு தூக்கு போட்டு இறக்கல ஸர்.. அதுக்கு முன்னாடியே அவங்க இறந்துட்டாங்க..

அபிமன்யு : அப்டி பாத்தா வேற எதனால தான் இறந்தாங்க டாக்டர்... கத்தி குத்து மாரி எதுவும் இல்லையே... அடிச்சேவா இப்டி பண்ணாங்க... என தயக்கமாய் கேட்க மருத்துவர் மீண்டும் இடவலதாய் தலையாட்டினார்...

மருத்துவர் : இல்ல ஸர்... நீங்க சொன்ன மாரி அவங்கள அடிச்சிற்காங்க தான்... மே பி ஒரு ஒன் ஹவர் அடிச்சிற்களாம்.. ஆனா அந்த அடிகள் எதுவுமே அவங்கள ரொம்ப பாதிக்கல.. கிட்டத்தட்ட மயக்கமடைய மட்டும் தான் வச்சிருக்கு...

அபிமன்யு : அப்போ.. மே பி எதாவது டப்லெட்ஸ் இல்ல பாய்சன் அந்த மாரி குடுத்துருக்க வாய்ப்பிருக்கா டாக்டர்??

மருத்துவர் : அப்டி இருந்துருந்தா இந்நேரத்துக்கு தெரிஞ்சிருக்குமே,  ஸர். ஆனா அப்டி எதுவும் இல்ல. இறக்குரதுக்கு ஆறு மணி நேரம் முன்னாடிலேந்தே அவங்க எதுவும் சாப்டவும் இல்ல. சோ அவங்க சாப்பாடுலையுமே எதுவும் கலக்கப்படல.

அபிமன்யு : அப்ரம் எதனால தான் டாக்டர் அந்த பொண்ணு இறந்தா???

மருத்துவர் : அது தான் தெரியல ஸர். என அவர் கூறவும் அபிமன்யுவுக்கு குழப்பம் தான் இன்னும் மேலோங்கியது. இறந்த பின் தான் தூக்கிலிடப் பட்டிருக்கிறாள். ஒரு மணி நேரம் அடித்த அடிக்கும் அப்பெண்ணிற்கு பெரிதாய் பாதிப்பு ஏற்படவில்லை. உடலில் எங்குமே கத்தி குத்தோ அல்ல கீறலோ கூட ஏற்பட்டிருக்கவில்லை. அப்படியெனில் எதனால் தான் இப்பெண் இறந்தாள்??

அபிமன்யு : தூக்கு போட்டதுக்கும் அவங்க உடம்புல இருந்த காயத்துக்கும் ஒரு மணி நேரம் வித்யாசம் இருக்குன்னு சொன்னீங்களே... அதப் பத்தி எதாவது சொல்லுங்க...

மருத்துவர் : ஹான் ஆமா ஸர். சொல்லப் போனா அவங்க இறந்து அரை மணி நேரம் ஆனப் பிறகு தான் யாரோ கழுத்துல கயிற மாட்டீர்க்காங்க. குத்துமதிப்பா சொல்லனும்னா ஒரு மணி நேரம் அடிச்சு அவங்கள மயக்கமாக்கீட்டு, அரை மணி நேரத்துல அவங்க இறக்குர மாரி ஏதோ செஞ்சிட்டு இறந்து அரை மணி நேரத்துக்கு அப்ரம் தான் தூக்குல மாட்டப் பற்றுக்காங்க. அவ்ளோ தான் ஸர். அபிமன்யு ஒரு சில நிமிடங்களுக்கு அமைதியாய் யோசனையிலே அமர்ந்திருந்தான்.

அபிமன்யு : ஓக்கே டாக்டர். தன்க்ஸ் என்றுவிட்டு அவன் மருத்துவரிடமிருந்து விடைபெற்று தன் ஜீப்பில் ஏறி அமர்ந்த அபிமன்யு மீண்டும் ஒரு நிமிடம் யோசனையோடே அமர்ந்திருந்தான்...

நேரமும் ஓடியது பலர் அவனை தாண்டிச் சென்றனர்... ஆயினும் அபிமன்யு ஏதோ ஒரு அழுத்தமான உணர்வில் இறுகிய முகத்தோடு அமர்ந்திருந்தான்... தூரத்திலிருந்து கேட்ட ஏதோ ஒரு சத்தம் அபிமன்யுவின் செவியை மொய்க்க, மெதுவாய் கேட்டு கொண்டிருந்த அந்த சத்தம் மெதுமெதுவாய் அவனுக்கு அருகிலே கேட்கத் தொடங்கிய ஒரு கட்டத்தில் திடீரென தெளிவாய் கேட்ட அந்த சத்தத்தில் திடுக்கிட்டு கண்களை திறந்து தன்னை சுற்றி நோக்கினான் அபிமன்யு..

அந்த சத்தம் அவனின் செல்பேசியின் ரிங்டோனே தான்.. அழைப்பை ஏற்று காதில் வைத்த அபிமன்யு பதிலளிக்கும் முன்பாக மறுபுறத்திலிருந்து " ஸ்ஸ்ஸ்ஸ்ஸஸஸஸஅஅஅஅஅர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இருக்கீங்களாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ ஹஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅலோஓஓஓஓஓஓஓஓஓஓ " என பத்து ஊருக்கு கேட்பதை போல் ஓலம் விடத் தொடங்கினான் ஸ்டீஃபன்...

ஃபோனை தூக்கி தூர வைத்த அபிமன்யு ஸ்டீஃபனின் ஓலம் ஒரு கட்டத்தில் மூச்சு விடுவதற்காய் நிறுத்தபடும் போது " ஹலோ ஸ்டீஃபன் நான் இங்க தான் இருக்கேன் " என குரல் கொடுத்தான்...

ஸ்டீஃபன் : ஹா இருக்கீங்களா... இல்ல ஸர் நீங்க ஹாஸ்பிட்டல் போய் இரெண்டு மணி நேரமாச்சு அதான் காள் பண்ணேன்..

அபிமன்யு : வ-வந்துட்டு இருக்கேன் ஸ்டீஃபன்... நா வந்து பேசுறேன்.. என்று விட்டு அழைப்பை துண்டித்தான்... ஸ்டீஃபன் விட்ட ஓலத்திற்கு கூட அவனுக்கு திட்டத் தோன்றவில்லை...

ஸ்டேஷனில் தன் செல்பேசியை நோக்கிய ஸ்டீஃபனோ " இந்த சாருக்கு எப்டி தான் பொருமை இப்டி குவிஞ்சிருக்கோ தெரியல " என தனக்குத் தானே புலம்பிக் கொண்டான்...

ஒரு மடிக்கணினியோடு இவன் இருக்கையில் அமர்ந்து ஒரு பக்கம் " ஏ டி " என்ற ப்ரண்டை தேடி கொண்டே மறுபுறம் பழைய காணொளிகளை மீண்டும் பார்த்து கொண்டிருந்தான்.. முன்பு பார்த்தது தானே என்பதனால் ஸ்டீஃபன் அதை ஓட விட்டு ஓட விட்டு விளையாடி கொண்டிருக்க திடீரென அவன் பின்னிருந்த கதவு திறந்த சத்தத்தில் பதறியடித்து அவன் மடிக்கணினியில் கரம் பதிக்க தவறுதலாய் அந்த காணொளி ஓரிடத்தில் நிறுத்தப்பட்டது...

மிகவும் சாதாரணமாக உள்ளே வந்த அபிமன்யு ஸ்டீஃபனை நோக்கி திரும்பவும் தான் தவறுதலாய் நிறுத்தப்பட்ட அந்த காணொளியை கவனித்தான்... ஆனால் அதை பற்றி அபிமன்யு கேள்வி எழுப்பும் முன்பாக ஸ்டீஃபன் முந்தி கொண்டான்...

ஸ்டீஃபன் : வந்துட்டீங்களா ஸர்... டாக்டர் என்ன சொன்னாரு என அதையே நினைவு படுத்தவும் அபிமன்யு சற்று அலட்சியமாய் போய் தன் கதிரையில் அமர்ந்து அனைத்தையும் ஸ்டீஃபனுக்கு விளக்கினான்...

ஸ்டீஃபன் : ஏன் ஸர், எப்டி அந்த பொண்ணு இறந்துச்சுன்னே நமக்கு தெரியல சரி. இப்போ பாடிய என்ன பன்றது?? அவங்க ஃபமிலிய கண்டு புடிக்க வேண்டாமா?? இந்த பொண்ணு நேத்து நைட் தான் கிளம்புனதால அவங்க மிஸ்ஸிங் கேஸ்லாம் குடுக்க நம்ம கிட்ட வரதுக்கே ஒரு வாரமாய்டும் என இவ்வளவு நேரம் அமைதியாய் கேட்டவன் மறுகேள்விகளை எழுப்பினான்...

அபிமன்யு : கரெக்ட் தான் ஸ்டீஃபன். அந்த பொண்ணோட பைக்லையும் நம்பர் ப்லேட் இல்ல. மேபி கில்லர் அந்த நம்பர் ப்லேட்ட எடுத்துருக்களாம். சோ நாம வேற எதாவது பண்ணி அவங்க ஃபமிலிய கண்டுப்புடிச்சு தான் ஆகனும். கேக்கனும்னு நெனச்சேன் அந்த பொண்ணோட பொருட்கள்ல எதாவது க்லூ கிடைக்கிற மாரி எதாவது இருந்துதா??

ஸ்டீஃபன் : இல்ல ஸர். அவங்க ஃபோன் கூட அதுல இல்ல. ஒரு புக்கு, பேனா, இரெண்டு ஹர்ப்பின்னு, நாழு ஃபர்னெஸ் க்ரீம், ஒரு பௌடர்-

அபிமன்யு : ஒன்னுமே உருப்புடியா இல்லன்னு சொல்றீங்க அதான???

ஸ்டீஃபன் : அதே தான் அதே தான். கொஞ்சம் வித்யாசமா பாத்தா ஒரே ஒரு மாத்திரை டப்பா மட்டும் இருந்துச்சு அவ்ளோ தான் ஸர்.

அபிமன்யு : அது என்ன மாத்திரைன்னு பாத்தீங்களா??

ஸ்டீஃபன் : பாத்தேன் ஸர். ரிசெர்ச்க்கு தான் குடுத்துருக்கேன். அப்ரம் நம்ம ஊர்ல எந்த கடைலையும்  அந்த ப்ரண் இல்ல ஸர். வெளிய தான் தேடி பாக்கனும்.

அபிமன்யு : ஹ்ம்ம் இந்த கேஸ் ஒரு துருப்பே இல்லாத மாரி இருக்கு ஸ்டீஃபன். ஆனா ஏதோ ஒன்னு மறஞ்சிருக்கு. இந்த கொலை எதனால நடந்துருக்கும்னு நினைக்கிறீங்க ?? என அவனின் எண்ணத்தை கேட்டான்.

ஸ்டீஃபன் : என்னோட கெஸ்ஸிங் படி பாத்தீங்கன்னா இது இந்த காதல் கத்திரிக்கா பிரச்சனைக்கெல்லாம் நடந்த மாரியெல்லாம் தெரியல ஸர். நல்ல ஒரு ப்லன் போட்டுட்டு தூக்கியிருக்காங்க, அந்த பொண்ணு எப்டி இறந்துச்சுன்னே நமக்கு தெரியாத அளவுக்கு.

அபிமன்யு : உண்மை தான். இந்த பொண்ணோட எதாவது டீட்டெய்ல்ஸ் கிடைச்சா தான் நம்மளால மேற்கொண்டு எதாவது யோசிக்க முடியும்.

ஸ்டீஃபன் : ஏன் ஸர், உங்களுக்கு- என ஏதோ கேட்க வந்தவன் அபிமன்யு நிமிர்ந்து அவனை ஒரு பார்வை பார்த்த பின் என்ன நினைத்தானோ வாய் வரை வந்த ஏதோ ஒன்றை அப்படியே விழுங்கி விட்டு கப்சிப்பென வாயை இழுத்து மூடிக் கொண்டான்.

அபிமன்யு : ஸ்டீஃபன் அத இங்க கொஞ்சம் குடுங்க என ஸ்டீஃபனின் மடிக்கணினியை காட்டி கேட்க அதை உடனே எழுந்து அவனிடம் கொடுத்தான் ஸ்டீஃபன்...

ஸ்டீஃபன் : என்ன ஸர் பாக்குறீங்க?? இது பார்க்கோட என்ட்ரன்ஸ் ஃபூட்டேஜ் தான்.

அபிமன்யு : இல்ல இது நா பாக்கவே இல்ல... அதான் என்றபடியே ஏதோ ஒன்றில் கண்களை கூராக்கி பதித்திருந்தவன் அதை ஸ்டீஃபனிடம் காட்ட ஸ்டீஃபன் அபிமன்யு கூறும் முன்பாகவே அந்த காணொளியை முழுதாய் திருப்பினான்...

ஸ்டீஃபன் : உங்களுக்கு மூளைனா மூளை அப்படி ஒரு மூளை அபி ஸர் என பாராட்டி கொண்டே ஒரு ஏடை எடுத்து அந்த காணொளியில் சரியாக பார்க்கின் உள்ளே வந்த அப்பெண்ணின் வண்டியின் எண் அருகிலிருந்த போஸ்ட் கம்பத்தின் ஒளி வாயிலாக ஒரு கன்னாடியில் பிரதிபலித்ததை அப்படியே பார்த்து எழுதத் தொடங்கினான்...

அபிமன்யு : இத வச்சு அந்த பொண்ணு யாருன்னு கண்டுப்புடிங்க ஸ்டீஃபன் என்க ஸ்டீஃபன் புன்னகையுடன் தலையாட்டி கொண்டு அந்த அறையை விட்டு வெளியேறினான்...

குளித்து விட்டு தலையை நன்கு கொண்டையிட்டு கொண்டே " ஹே நன்னாரே ஹே நன்னாரே " என ஒரு புதிய ட்யூனில் பாடியபடி அறையின் உள் வந்த ப்ரின்சி அதே நேரம் யாருடனே கடலை வருத்தபடி வந்த லினா மீது இடித்து கொண்டு வீலென கத்தினாள்..

" எவ டி அது சத்தம் போடுறது வந்தேன்னா தோசக்கல்ல கழுவ விற்றுவேன் " என அடுப்பில் வைத்த தோசை கல்லை விடவும் சூடாய் கத்தினார் மிஸ்ஸஸ் சம் க்ரிஸ்டோஃபர் அதாவது நம் பெக்யூரா சகோதரிகளின் அன்பு தாய் இசபெல்லா.

லினா : எல்லாம் உன் சின்னவ பன்றது தான் என்ன சொல்லாதம்மா என நெற்றியை தேய்த்து கொண்டே வந்து கட்டிலில் அமர்ந்தவள் மறுபுறம் கேட்ட தோழியின் குரலில் " கேக்குது டி சொல்லு என்ன விஷயம்?? " என கத்தினாள் லினா.

அப்புறம் என்ன கூறப்பட்டதோ வேகமாய் நிமிர்ந்து அமர்ந்த லினா " என்ன டி சொல்ற?? நா கல்யாணிய நேத்து காலைல தானே பாத்தேன்?? இன்னும் அவ வீட்டுக்கு வரலையா?? " என அதிர்ச்சியாய் கேட்க அப்புறமாய் தன் தமக்கையை வருத்தெடுத்து கொண்டிருந்த ப்ரின்சி இப்பெயரை கேட்டதும் லினாவைவ நோக்கினாள்.

லினா ஒரு சில ம்ம்க்களின் பிறகு அழைப்பை துண்டித்து விட அவளின் முகம் இன்னும் சீரடையாததை கண்டு அவளருகில் அமர்ந்த ப்ரின்சி தயக்கத்தோடே " என்னாச்சுக்கா?? " என மெதுவாய் கேட்டாள்... என்ன தான் அடித்து கொண்டாலும் ப்ரின்சிக்கு அவளின் அக்கா மேல் பாசமில்லாமல் இல்லை... அதை வெளியே காட்டிக் கொள்ள மாட்டாள்... லினா தன்னை அக்காவென கூப்பிட கூறும் போதெல்லாம் வேண்டுமென்றே மறுத்துவிட்டு முகத்தை திருப்பி கொள்வாள்...

லினா : கல்யாணி... என் கொலிக் கல்யாணி நேத்துலலேந்து இன்னும் வீட்டுக்கு வரலையாம் என எங்கோ பார்த்தபடி கூற ஒரு பெருமூச்சு விட்ட ப்ரின்சி

ப்ரின்சி : அவங்க எதாவது ஃப்ரெண்டு வீட்டுக்கு போய்ர்ப்பாங்க.

லினா : போனாலும் அவ ஒரு ஃபோன் கூட பண்ணலையாம். அவ எங்க இருக்காளோ.?? என்ன பண்றாளோ?? என மெதுமெதுவாய் அவளின் கண்களில் கண்ணீர் துளிர் விட ப்ரின்சி சுதாரித்து கொண்டாள்.

ப்ரின்சி : யப்பாஆஆஆஆ,  உங்க பெரிய பொண்ணு அவ புராணத்த ஆரம்பிச்சிட்டா. அவ கூட வேலை பாக்குர யாரோ காணுமாம். என்ன இவ கிட்டேந்து காப்பாத்துங்க என கத்தியே ஊரை கூட்ட முயல அதில் ப்ரின்சியை கவலை மறந்து முறைத்தாள் லினா.

லினா : உனக்குலாம் என் கவலை எங்க டி புரிய போகுது??  உன் ஃப்ரெண்டு இந்த மாரி எங்கையாவது காணாமப் போய் ஒரு வாரம் களிச்சு கிடைக்காமையே போனா தான் உனக்குலாம் என் பயம் புரியும் என முதலில் கோவமாய் அவளை வம்பிழுப்பதற்காகத் தொடங்கிய லினா பின் கண்ணீர் பெருக்கெடுக்க அங்கிருந்து வெளியே சென்றாள்.

ப்ரின்சி : ம்க்கும் ஊரு உலகத்துல இவ ஃப்ரெண்டு மட்டும் தான் காணாம போனாங்களா?? என் ஃப்ரெண் எவளும் போகலையா?? ஓ போகலல்ல. சரி எவளையாவது யாராவது கடத்தீட்டு போவாங்கல்ல அப்போ நானும் அழுவேன் என்றபடி தனக்குத் தானே சபதம் விட்டு கொண்டாள் அவளின் அப்பாவி தோழிகளை பலியாடாக்கி...

ஆனால் விளையாட்டாய் இருந்த பேச்சு ஒரு கட்டத்தில் தீவிரத்தையும் அடைந்தது லினாவின் அலறல் அந்த வீட்டையே நிறப்பியபோது. ப்ரின்சி பதைபதைப்பாய் கீழே வந்து பார்த்ததென்னவோ தொலைகாட்சியின் முன் மண்டியிட்டிருந்த அவளது தமக்கையையும் தொலைகாட்சியில் தெரிந்த " நடு இரவில் மர்ம நபர் ஒருவரால் கொடூரமாய் கொலை செய்யப்பட்டிருக்கிறார் 24 வயது பெண் கல்யாணி " வரிகளோடு வந்த ஒரு பெண்ணின் முகத்தையும் தான்...

தொடரும்...

DhiraDhi ❤

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro