Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

💚 இணை 9

ஞாயிறு மாலை தன் மகளுடன் நன்றாக நேரம் செலவழித்து,  அவளுடைய தோழிக்கு நல்லதாக ஒரு பிறந்தநாள் பரிசும் வாங்கிக் கொடுத்த சபாபதி தன்னுடைய வேலைக்கு கிளம்பிச் செல்லும் முன் சாம்பவியிடம் நிறைய கட்டளைகளை இட்டுச் சென்றார்.

அவளும் தந்தையின் பேச்சுக்கு மறுப்பேதும் சொல்லாமல் அவர் தன்னிடம் சொன்ன விஷயங்களுக்கு எல்லாம் பெரிதாக தலையை ஆட்டி வைத்திருந்தாள்.

புதன்கிழமை காலையில் பரபரப்பாக குளியலுக்கு தயாராகி  சரும ஈரப்பதத்திற்கான அவளது பாடி ஜெல், உப்பு, மற்றும் சர்க்கரை கலந்த ஸ்க்ரப்பிங்கை அவள் செய்து கொண்டிருந்த போது அவளது அறைக்கதவின் வெளியே
வந்து நின்றவன் அறைக்கதவை மெதுவாக தட்டினான்.

"என்ன செல்வா.....?" என்று கேட்டவளிடம்,

"ஏம்மே.... வந்துனுருக்குது நாந்தான்னு ஒனக்கு எப்டித்தெரியும்?" என்று ஆச்சரியமாக கேட்டான்.

"அதெல்லாம் எங்களுக்கு தெரியும்! என்னைய நீ இப்ப டிஸ்டர்ப் பண்ணாத; எனக்கு டைமாச்சு; சீக்கிரமா போய் பால இப்பவே கலந்து வை. அப்பத்தான் நான் குளிச்சுட்டு வர்றதுக்குள்ள அது வார்ம் ஆகியிருக்கும்!" என்று சொன்னவளிடம்,

"சரி.... சரி! காலுல வெந்நிய கொட்டுனாப்ல எப்போ பாரு உனக்கு அவசரம்..... கதவுக்கு வெளிய டேபிள்ல புத்சா யூனிஃபார்ம் வச்ருக்கேன்! நீ கதவ தொறக்கசொல இத்த எடுத்துப் போட்டுக்கடா கண்ணு! நான் கீழ போறேன்!" என்று சொல்லி விட்டு படிகளில் இறங்கிக் கொண்டிருந்தான் செல்வா.

கன்னத்தைத் தேய்த்துக் கொண்டிருந்த சாம்பவியின் கைகள் அவனது பேச்சில் இரண்டு நொடிகள் அப்படியே நின்றது.

"யாருடா நீ? எதுக்காகடா இந்த வீட்டுக்கு வந்த? ஐ லைக் யூ ஸோ மச் குட் நேச்சர்டு இடியட்!" என்று அவளுக்குள்ளாக சொல்லிக் கொண்டு விரைந்து குளியலை முடித்து புது சீருடை அணிந்து, தலை வாரி புறப்பட்டு கீழே வந்தாள்.

"ஒன்னிய எத்தினி மணிக்கு ஸ்கூலுக்கு கூப்ட வரட்டுங்கண்ணு? இன்னிக்கு நாம ஒன் ப்ரெண்டு ஊட்டாண்ட பார்டிக்கு வேற போகணுங்காட்டியும் கொஞ்சம் சுருக்கா இஸ்கூல்ல இருந்து வந்துக்கலாம்ல நீ?!" என்று சொன்னவனை முறைத்தவள்,

"ஆமா.... நீ தான் எங்க ஸ்கூலோட கரெஸ்பான்டண்ட்! நீ சீக்கிரத்துல வான்னு சொன்னவுடனே என்னைய ஸ்கூல்ல இருந்து சீக்கிரமா அனுப்பிடுவாங்க. போடா!  சரி, நேத்தே கேக்கணும்னு நினைச்சேன். பங்ஷனுக்கு போட்டுப் போற மாதிரி நல்ல ட்ரெஸ் எதுவும் வச்சிருக்கியா செல்வா?" என்று கேட்டவளிடம் புன்னகைத்தவன்,

"வெள்ள சொக்கா ஒன்னுகீது! மஞ்ச சொக்கா ஒன்னுகீது.... எத்த போடன்னு சொல்லு; போட்டுனு வரேன்!" என்றான்.

"நான் ரெட் கலர் போடப்போறேன். அதுனால நீ எல்லோ ஷர்ட் போடு என்ன? ஈவ்னிங் பார்க்கலாம். இப்ப கிளம்புவோமா?" என்று கேட்டவளை சைக்கிளில் டபுள்ஸ் அடித்துக் கொண்டு பள்ளிக்குக் கிளம்பினான் வாகை.

மாலை வீட்டிற்கு வந்து அவசர அவசரமாக சாம்பவி கிளம்பிக் கொண்டிருக்க காலை விந்தியபடியே வந்து ஹால் சோஃபாவில் அமர்ந்தார் தனசேகர்.

"பவிம்மா..... இந்த தடியன் வீட்ல தின்னுட்டு தின்னுட்டு சும்மா தான்டா சுத்திட்டு இருக்கான்; ஆனா மார்க்கெட்டுக்குப் போயி சாமான் வாங்கிட்டு வாடான்னு சொன்னா அதெல்லாம் போக முடியாதுன்னு எங்கிட்ட சொல்லிட்டான். மதியம் தாத்தாவே ஒத்தையாளா போயி காய்கறிய வாங்குனேன். பெரிய பைய தூக்கிட்டு ரொம்ப தூரம் நடந்து வந்ததுல தாத்தாவுக்கு கால்  பெசகிடுச்சு.... நீ கொஞ்சம் கால பிடிச்சு உடுறா தங்கம்!" என்று கேட்டவரிடம் என்ன சொல்வதென தெரியாமல் திருதிருவென விழித்தபடி தனது சிவப்பு கவுனை சற்று தூக்கிக் கொண்டு தரையில் அமரப் போனாள் சாம்பவி.

"பவி..... அப்டியே நில்லு! இம்மா அழகான கவுனப் போட்டுக்கின்னு செவப்பு ரோசாப்பூ மேரி இருக்குற நீ எப்டிமே தர்ல ஒக்காருவ?" என்று அவளிடம் கேட்டு அவளின் கைப்பற்றி தன்னருகே நிறுத்திக் கொண்ட செல்வா தனசேகரிடம்,

"நைனா.... பவிக்கண்ணு ஒரு பொறந்தநாளுக்கு கிளம்பினு இருக்கு! ஒன்னாண்ட காலையிலயே சொல்ச்சுல்ல? நீ இன்னா பண்ற? இப்டி விந்திக்கினே ஒரூமுக்கு போற! போயி பொம்பள கும்பகர்ணி மேரி கட்டிலுல படுத்தமேனிக்கு கெடக்குற ஆயாவ எழுப்புற..... எழுப்பிக்கினியா அப்பால என்ன செய்ணும் தெர்தா?  எங்காலு நோவுதுமே; என்கு கொஞ்சம் நல்லெண்ணெய்ய லேசா சூடு பண்ணி தான்னு அது கைய்ல சொல்லுற! சொல்லுக்கினியா...... இப்டி நீ சொன்னதுக்கோசரம் எம்மா நெஞ்சழுத்தம் இருந்தா
ஒங்காலு நோவுதுன்னு நீயி
என்னிய எழுப்பினுருப்படா கஸ்மாலம்னு ஒன்னாண்ட கேட்டு
ஆயா பொக்குன்னு ஓமூக்கச் சேத்து ஒரு குத்து உடும்! அதுக்கும், ஒங்காலுல புடிச்னுக்கிற பெரட்டலுக்கும் சேத்தாப்ல அந்த எண்ணெய தடவிக்க........! நாங்க வரட்டுமா? பவி வாம்மே போவம்!" என்று தன்னிடம் சொல்லி கையசைத்து விட்டு போன செல்வாவை சூடான பார்வையால் பார்த்துக் கொண்டிருந்தவர் அவனைப் பார்த்து கத்தினார்.

"டேய் நில்லுடா! உடம்பு பூரா கொழுப்பேறி போய் கெடக்கு உனக்கு! நீ என்ன செஞ்சாலும் மாப்ள உனக்குத் தான் ஸப்போர்ட் பண்ணுவாருங்குற தைரியத்துல தான இப்டியெல்லாம் ஆடிட்டு இருக்க! பவிம்மாட்ட நான் பேசிட்டு இருக்கும் போதே நீ பாட்டுக்கு அவள கூட்டிட்டு கெளம்பிப் போய்ட்டே இருக்க? யாருடா கும்பகர்ணி....? கல்யாணி மட்டும் இந்த எடத்துல நின்னுருந்தான்னா என்ன நடந்துருக்கும்!" என்று செல்வாவிடம் புசுபுசுவென மூச்சு விட்டுக் கொண்டு பேசியவரிடம் கொஞ்சங்கூட அசராமல்

"என்ன நடந்துருக்கும்..... ஆயாவும்
தான் அங்க இங்கன்னு நடந்துருக்கும்! நம்ம ராவடியெல்லாம் வந்து வச்சுக்கலாம்! வரட்டா?" என்று அவரிடம் கேட்டு விட்டு அவரது அடுத்த கத்தல்களை எல்லாம் பொருட்படுத்தாமல் அங்கிருந்து நகர்ந்து விட்டான் செல்வா.

இந்த மாதிரியாக சாம்பவி எங்கேயாவது வெளியே கிளம்புகிறாள் என்றால் அவளிடம் ஏதாவது வேலை சொல்லி அவளை சற்று கெஞ்ச வைத்து, நான்கு முறை எங்கு போகிறேன் என்று சொல்ல வைத்து அதற்குப் பின் அவளை அனுப்பி வைப்பது தான் தனசேகரின் வழக்கம்! தன் மனைவியிடம் ஏவல் ஆளாக நிற்கும் அவர், தன் பேத்தியை தன் சொல்லுக்கு ஆட்டிப் படைக்க நினைக்கும் அவரது மன நோயின் குரூரத்தனத்தமான வெளிப்பாடு.....

இதுவரை இந்த மாதிரியான விஷயங்களுக்கு எல்லாம் பல்லைக் கடித்துக் கொண்டு சகித்து சென்று விடுவாள் சாம்பவி. ஆனால் வாகையின் உதவியால் இன்று இந்த மாதிரியான சின்ன உபத்திரவங்களுக்கும் ஒரு முடிவு வந்ததே என்று நினைத்து மகிழ்ச்சியாக நின்று கொண்டிருந்தாள். அதிலும் அவன் தன் அம்மம்மா தாத்தாவை மூக்கிலேயே ஒரு குத்து வைப்பார், அதற்கும் சேர்த்து வைத்தியம் பார்த்துக் கொள் என்று சொன்னது மிகப்பெரிய வேடிக்கையாக இருந்தது அவளுக்கு.

வெளியில் சென்றவுடன் வாயார சிரிக்க வேண்டும் என்று நினைத்தவள் பொங்கி வந்த தன் சிரிப்பைக் கட்டுப்படுத்திக் கொண்டு மறுபடியும் வீட்டின் உள்ளே சென்று கத்திக் கொண்டிருந்த தன் தாத்தாவை சற்று சமாதானம் செய்து விட்டு அவரிடம் கிளம்புவதாகக் கூறி தலையாட்டிக் கொண்டு செல்வாவிடம் வந்தாள்.

"செல்வா..... தாத்தா அம்மம்மாவை ரொம்ப வாராதடா! நீ அவங்கள நோஸ்கட் பண்றத அவங்களால தாங்கிக்க முடியல; எனக்கும் அவங்க இப்டி டென்ஷனாகுறது ஒருபக்கம் சிரிப்பா இருந்தாலும், இன்னொரு பக்கம் கஷ்டமா இருக்கு. இந்தாடா ஃபைவ் ஹண்ட்ரெட்! திவ்யா வீட்டுக்குப் போக வர கேப்க்கு நானூறு ஆகும்! மிச்ச ஹண்ட்ரெட் ருப்பீஸ் நீ என்னைய பங்ஷன் கூட்டிட்டுப் போயிட்டு வர்றதுக்கு உனக்கு டாடி குடுக்க சொன்ன சர்வீஸ் சார்ஜ்! புடி!" என்று சொன்னவளை கேவலமான ஒரு பார்வை பார்த்த செல்வா அவள் எதிர்பாராத நேரத்தில் அவளுடைய கையில் இறுக்கிப் பிடித்திருந்த ஐநூறு ரூபாய் நோட்டை ஒரு முனையில் பிடித்து இழுத்தான். அவன் இழுத்த இழுப்பில் அந்த ரூபாய் நோட்டு கால்வாசி பாகம் நடுவில் இரண்டாக கிழிந்திருந்தது.

"அச்சச்சோ.... இன்னாடா பாப்பா அம்மம்மா தாத்தாவ பத்தி பேசினே
துட்ட கிழிச்சுக்குன? இன்னதா செல்வாவுக்கு கிளாஸூ எடுத்துக்கினு இருந்தாலும் நீ
காச பத்திரமா புடிச்ருக்க வோணாவா?" என்று கேட்டவனை கொலைவெறியுடன் முறைத்தவள் அடுத்த இரண்டு நிமிடத்தில் அவனை விரட்டி விரட்டி அடித்துக் கொண்டிருந்தாள். அவளது பெரிய கவுனும், ஓட்டமும், ஒவ்லியான கைகளும் அவனை அடிக்கப் பொருத்தமான முகபாவமாக இல்லை. ஏதோ தோட்டத்தில் ஓடி ஓடி பட்டாம்பூச்சி பிடிக்கும் தேவதை போல் அவனது கண்களுக்கு காட்சியளித்தாள். இரண்டு நிமிடங்களில் மூச்சு வாங்கிக் கொண்டு நின்றவள் அவனைப் பார்த்து,

"கையில வச்சுருக்குறத குரங்கு மாதிரி பறிக்காதன்னு உன்கிட்ட நான் சொல்லியிருக்கேனா இல்லையாடா? டாடி குடுத்த ஃபைவ் ஹண்ட்ரட இப்டி கிழிச்சு வச்சுட்டியே? நான் இப்போ திவ்யாவோட பங்ஷனுக்கு எப்டிப் போறது?" என்று உதடுபிதுக்கிக் கொண்டு அழப்போனாள்.

"ஏ.....ஏய்! ஒங்கண்ணுல இருந்து ஒரு சொட்டு கண்ணீர் வந்ச்சு..... செல்வா கோவிச்சுக்கினு உள்ளார கெளம்பிருவான் பாத்துக்க. ஒனக்கின்ன இப்போ..... அந்த பாப்பா வூட்டுக்கு போவணும் அதான? ஒங்க நைனா வண்டியில ஏறிக்குந்து! நாம அத்த எடுத்துக்குனு போவலாம்!" என்று சொன்னவனிடம் பயத்துடன் மறுப்பாக தலையசைத்தவள்,

"ஐயோ டாடி பைக்லயா.... ம்ஹூம்!டாடிக்கு தெரிஞ்சது..... கொன்னுடுவாரு செல்வா! என்ன விளையாண்டுட்டு இருக்கியா நீ? நாம எல்லாம் 17 இயர்ஸ் கிட்ஸ்; ஸோ வண்டி எடுக்கக்கூடாது; அதுலயும் கியர் வண்டிய தொடவே கூடாது! நான் உங்கூட பைக்ல எல்லாம் வரமாட்டேன்பா!" என்று சொன்னாள்.

"சரித்தான் ரூல்ஸோட பொண்ணு தான நீயி? பின்ன இப்டிதான் பேசுவ! சரி இவ்ளோ பேசுறவ உள்ள ஒக்காந்து கால அமுக்கினு
ஸீன் போட்டுனுருக்குற ஒங்க தாத்தன் அந்த டமாரத்துட்டப் போயி ஒரு ஐநூறு ரூபா துட்டு வாங்கிட்டு வாயேன் பாப்பம்!" என்றவனிடம் கோபம் கொண்டு,

"ஏய்..... நான் தாத்தாட்ட போய் எப்டிடா பணம் கேப்பேன்? அப்டியே கேட்டாலும் நீ பங்ஷனுக்கே போக
வேண்டாம்; வீட்லயே உட்காருன்னு தான் பதில் வரும்! எல்லாம் உன்னால தான் இடியட்! நீ ஏன்டா ரூபா நோட்ட கிழிச்ச?" என்று கோபம் காட்டினாள் சாம்பவி.

"சரி வுடும்மே...... ஏதோ தெரியாம நடந்டுச்சு! அதுக்குப் போயி இப்டி கோச்சுக்குவியா?" என்று கேட்டவன் அந்தப் பகுதியில் அவனுக்கு தெரிந்த நண்பன் ஒருவனிடம் வாடகைக்கு கார் பேசி, இந்தப் பயணத்துக்குப் பணம் இரண்டு நாட்களில் தருவதாக சொல்லி விட்டான்.

"தேங்க்ஸ் செல்வா! பட் ரெண்டு நாள்ல எப்டிடா பணம் தருவ? இந்த ருப்பிய வேணும்னா பேங்க்ல குடுத்து மாத்திக் கேட்டுப் பார்ப்போமா?" என்று சாம்பவி கேட்க,

"அதெல்லாம் என் தலவலி! துட்டக் கிழிச்சவன் நாந்தான..... அதுனால
துட்டுக்கு நா என்னமும் பண்ணிக்கினு போறேன்..... நீ கம்முன்னு காருல ஏறிக் குந்தினு வா போதும்!" என்று சொன்னவனிடம் தோள்குலுக்கி விட்டு காரில் ஏறிக் கொண்டு ஜுனியரின் பார்ட்டிக்குப் புறப்பட்டாள் சாம்பவி.

பர்த்டே பார்ட்டியை வீட்டிலேயே வைத்திருந்ததால் திவ்யாவின் வீடு நிறைய நண்பர்கள், உறவினர்கள் கூட்டத்தால் கலகலவென்று இருந்தது.

"இங்க பாரு பாப்பா.... போனமா, கிப்ட்ட புடிச்கனு அந்த பாப்பாவுக்கு குடுத்தமா, கையில ஒரு கேக்கு துண்ட எடுத்தமா, அத்த வாயில அமுக்கினு வீட்டுக்கு கெளம்புனமான்னு இருக்கணும்! நம்ம க்ளாஸ்ல படிக்காத பாப்பா பொறந்தநாளுக்கு எல்லாம் நாம இங்க வந்துகினு வெழாவ செறப்பிச்சதே பெர்சு தெர்தா?" என்று கேட்டவனை பக்கவாட்டில் பார்த்து முறைத்தவள்,

"எது....? நம்ம க்ளாஸ்ல படிக்காத பாப்பா பொறந்தநாளா? நீ எப்ப எங்க க்ளாஸ்ல படிக்க ஆரம்பிச்ச? அதிருக்கட்டும். நல்லா லிஸன் பண்ணு! உள்ள வந்து நீ சத்தமா சிரிக்கக்கூடாது! என் கண் பார்வையிலயே தான் இருக்கணும். வேற எங்கயும் தனியா போகக்கூடாது. யாராவது உன்னை பார்த்து நீ யார் கூட வந்துருக்கன்னு கேட்டாங்கன்னா சாமோட ரிலேட்டிவ்னு சொல்லணும். ஷர்ட் பட்டன பெரிசா தெறந்து பனியன் தெரியற மாதிரி நிக்கக்கூடாது! ஏதாவது சாப்டுறதுன்னா ஜென்டிலா, நீட்டா சாப்டணும். சாப்பிடும் போது வாயில இருந்து சத்தம் குடுக்கக்கூடாது!" என்று அடுக்கிக் கொண்டே போனவளிடம்,

"சரி தான்..... ஆரம்பிச்சுக்கினியா நீயி? சொம்மா ஓவார்டனம்மா வேலைய காட்டாதன்னு சொன்னா கேட்டுக்குட மாட்டியே நீயி? ஆத்தி....
எம்மாங்கண்டிசனு.......? அல்லாத்தையும் பேப்பர்ல எழுதி கொண்டு வந்துகினியாமே? சரி அதென்ன சாமோட ரிலேட்டிவு?" என்று கேட்டவனிடம் உச்சுக்கொட்டிய சாம்பவி,

"உனக்குத் தெரியாதுல்ல.... எங்க ஸ்கூல்ல எல்லாரும் என்னை சாம்னு தான் கூப்டுவாங்க! சாம் ஆர்மி, தீபக் ஆர்மி, வதனி ஆர்மின்னு எங்க மூணு பேருக்குள்ள ஒவ்வொருத்தருக்கும் தனித்தனி பேன்ஸ் க்ரூப்பே இருக்கு தெரியுமா? அதுல இந்த பேர்த்டே கேர்ள் திவ்யாவோட அண்ணா தான் தீபக்! ஆனாலும் அவளுக்கு அவளோட சொந்த அண்ணனையே ரொம்ப பிடிக்காது.
நான் கெமிஸ்ட்ரி சொல்லிக் குடுக்குறது அவளுக்கு ரொம்ப பிடிக்கும். அதுனால என்னோட பெட் மாதிரி இவ!" என்று தகவல் அளித்தாள்.

"இத்த சொல்லிக்கினியா மொதல்ல..... இஸ்கூலாண்ட ஆளாளுக்கு குரூப் சேர்த்துக்கினு பவுரு காட்றீங்களா? இஸ்கூலாண்ட ஆரம்பிக்குற இந்தக் கருமந்தேன் அப்டியே வட்டம், மாவட்டம்னு வளருறதுக்கு? இத்தயெல்லாம் ஒங்க வாத்தியாருங்களும் ஒன்னியும் கேக்க மாட்டானுவளா? என்னா படிப்போ பொல்லாத படிப்பு!" என்று செல்வா சொல்லிக் கொண்டிருக்கும் போதே திடீரென அந்த வீட்டின் ஹாலில் பெரிய அழுகுரல் கேட்டது.

"இன்னா கண்ணு..... பொறந்த நாளைக்கு வந்த பெர்சு ஏதாவது புட்டுக்கிச்சா? ஒப்பாரியெல்லாம் காதுல வுழுது!" என்று கேட்டவனை வாயில் விரல் வைத்துக் காட்டி அமைதியாக இருக்கும் படி சைகை செய்தவள் மகிழ்ச்சியான தருணத்தில் எதற்காக இப்படி ஒரு அழுகை, யார் அழுவது என்று தெரிந்து கொள்ள தன்னுடைய இருக்கையில் இருந்து எழுந்தாள்.

இளையவள் இணை சேர்வாள்!

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro