Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

💚 இணை 39

"எஞ்செல்ல மைமா!" என்று அவள் கன்னம் பற்றிக் கொஞ்சியவன்,

"இங்க வோணாம்! நம்ம லவ் பண்றத பார்த்து இந்தப் பொண்டு பொடுசகளெல்லாம் கெட்டுப் போயிடக் கூடாது. நீ மேல வா; இன்னிக்கு நம்ம ஜாகைக்கு லீவ் உட்டுக்குனு அந்த ரெண்டு தடியனுங்களையும் வூட்டுக்கு அனுப்பி வச்சுட்டேன். இனி செல்வா காட்டுல மழதான்!" என்று குதூகலித்தவனிடம்,

"ஹலோ மிஸ்டர் ஒலக்க..... உங்காட்டுல மழ பெய்றதெல்லாம் சரிதான்; நம்ம தங்குறதுக்கு வீடு எங்க?" என்று கேட்டாள் சாம்பவி.

"நம்ம தங்குறதுக்கு இன்னாத்துக்கு தனியா ஒரு வூடு.....? அதான் நீ ஒங்க அம்மாவாண்ட டெய்லி போயி கட்டிப்புடிச்சினு இருக்கணுன்ற; பகல்ல அத்தைய கட்டிப் புடிச்க்க! ராத்ரி ஒம்மாமன கட்டிப் புடிச்க்க; ஒங்க வூட்ல மாடியில நாம இருந்துக்கினு அதுக்கு மாசாமாசம் ரூல்ஸூக்கு துட்டு குடுத்துக்கினா போச்சு! இன்னான்ற?" என்று கேட்டவனின் பேச்சில் தன் தலையில் அடித்துக் கொண்டு,

"உங்கிட்ட போய் நான் வீடு கேட்டேன் பாரு! என்னை சொல்லணும்! பட் நீ சொல்ற ஐடியாவும் நல்லாத்தான் இருக்கு! பட் மாமனார் வீட்ல வந்து தங்குறதுக்கு ஒனக்கு ஒன்னும் ப்ராப்ளம் இல்லையே?" என்று கேட்டவளிடம்,

"நோ ப்ராப்ளம் மை டியர் ஜஸ்ட் பார்ன் பொண்டாட்டி!" என்று கண்சிமிட்டினான் செல்வா.

"டேய்.... யாருடா ஒனக்கு பொண்டாட்டி? லவ்வுக்கு ஓகே சொன்னா உடனே பொண்டாட்டிம்பியா?" என்று கேட்டவளிடம் குறுஞ்சிரிப்புடன்,

"மாமனார் வீட்ல வந்து தங்குறதுக்கு ஒனக்கு ஒன்னும் ப்ராப்ளம் இல்லையேன்னு கேட்ட கஸ்மாலத்த பொண்டாட்டின்னு கூப்டாம என்னன்னு கூப்ட முடியும் மிஸஸ் செல்வா?" என்று அவன் அவளிடம் கேட்க பவி லேசான சிரிப்புடன் தன்னவனை அணைத்துக் கொண்டு அவன் மார்பில் தன் மூக்கை தேய்த்துக் கொண்டாள்.

அது தனக்கான மறைமுக அழைப்போ என்னவோ என்று நினைத்தவன் மிக மிருதுவாக பவியின் கன்னம், மூக்கு, கண்கள், காது, கழுத்து அனைத்திலும் முத்தம் பதித்து கடைசியில் அவள் இதழ்களில் தன் இதழ்களை பொருத்தி அங்கே சொகுசாக ஓய்வெடுத்தான்.

இரண்டு நாட்களில் பவி செல்வாவுடன் தன் வீட்டிற்குச் சென்று தன்னுடைய தந்தை மற்றும் தாயிடம் செல்வாவை தனக்குப் பிடித்திருக்கிறது, அவனை திருமணம் செய்து கொள்ள உங்களுடைய ஆசிகளையும், சம்மதத்தையும் எனக்குக் கொடுங்கள் என்று கேட்டு நின்றாள்.

"அந்த வெட்டிங்ல இருந்து என்னை மட்டும் ஏன் கூட்டிட்டு வந்தீங்கன்னு எனக்கு இப்ப தெரியுது!" என்று சொல்லி தன் கணவரை முறைத்த ரேணுகாவிடம் ரகசிய சிரிப்புடன்,

"நீ எல்லாத்துலயுமே லேட் பிக்கப்டீ! நம்ம சன்இன்லாவை பாரு; போனான், தட்டுனான், தூக்குனான்னு வருஷக்கணக்குல பேஸ்மெண்ட ஸ்ட்ராங்க் பண்ணிட்டு, ஒரே நாள்ல பில்டிங்க கட்டி முடிச்சுட்டான். பவிம்மா..... டாடி இப்பவும் சொல்றேன், காதலிக்குறதும் பெரிசில்ல; கல்யாணம் பண்ணிக்குறதும் பெரிசில்ல! உங்க லைஃப்ல காதல கடைசி வரைக்கும் பத்திரமா புடிச்சு வச்சுருக்கணும்,  அதான் பெரிசு! சரி...... நீ ரொம்ப ப்ரில்லியண்ட்னு நான் இவங்கிட்ட சொல்றேன்! அதெல்லாம் இல்ல..... எங்கிட்ட  வடிகட்டுன லூசுமேரி ஒங்க மவ பேசுவா பாருங்க பேச்சு...... கொலையா கொன்னு எடுத்துருவாங்குறான்! அப்டி என்னடா பேசி இவன டயர்டாக்குன?" என்று கேட்டவரிடம் உதட்டை இழுத்துப் பிடித்து சிரித்தவள் செல்வாவிடம்,

"நீ ஒரு நிமிஷம் மேல வா!" என்று அழைக்க அவன் அவளிடம் மறுப்பாக தலையசைத்து விட்டு,

"நா ஏரூமுக்குப் போறேன்!" என்று ஹாலில் இருந்த அறைக்குள் சென்று பம்மி விட்டான் செல்வா.

"ரேணு.... நான் ரொம்ப ரொம்ப ஹாப்பி தெரியுமா? ஒன்னையும், டாடியையும் விட்டுட்டு எங்கயும் போகத் தேவையில்ல. செல்வா எனக்கு ப்ரசென்ட் பண்ணின கிட்டனுக்கு நாம என்ன ரேணு பெயர் வைக்கலாம்?" என்று கேட்ட தன் மகளின் நெற்றியில் முத்தமிட்ட ரேணுகா,

"பவிம்மா தான் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச பேரு! வேற பேரெல்லாம் எதுக்குடா யோசிச்சுட்டு?" என்று சொன்னார்.

"நீயும் இப்ப ஓடிப்போனானே ஒருத்தன் அவனும் ஒரே மாதிரியான லுசுங்க தான் ரேணு!" என்று தன் அன்னையிடம் சொல்லி விட்டு அவளது அறைக்குள் சென்றாள் சாம்பவி.

சற்று நேரத்தில் செல்வாவின் அறைக்குள் அவன் அனுமதியுடன் உள்ளே சென்றிருந்தார் ரேணுகா.

"வாங்க அத்த.... என்னாண்ட ஏதாச்சு பேசணுமா?" என்று கேட்டவனிடம் இதமான சிரிப்புடன்,

"இல்ல மிஸ்டர் செல்வா! பவியும், அவளோட அப்பாவும் உங்கள அடாப்ட் பண்ணிக்கிட்ட மாதிரி என்னால அவ்ளோ ஈஸியா உங்கள என் பொண்ணுக்கு மாப்பிள்ளயா நினைச்சுப் பாக்க முடியல.... பட் இது பவிம்மாவோட டெஸிஷன்! அத நாங்க ரெண்டு பேரும் மதிக்கிறோம். அவளைப் பத்தி சபா சொல்லி கேள்விப்பட்டு, அவள பாக்குறதுக்கு முன்னாடியே அவளுக்கு அம்மா ஆகிட்டவ நான்! ஸோ என் பொண்ணுக்காக நீங்க செஞ்ச விஷயங்கள், இத்தன வருஷமா நீங்க காட்டுன பொறுமை இதெல்லாம் எனக்குப் பிடிச்சிருக்கு; ஆனா ரொம்ப வருஷத்துக்கு முன்னால பீச்ல நாங்க கார்ல உட்கார்ந்துட்டு இருக்கும் போது எங்கள தாண்டி விறுவிறுன்னு நடந்து போனீங்களே..... அப்ப நான் உங்கள எம் பவிம்மாவோட லைஃப் பார்டனரா நினைச்சுக்கூட பார்க்கல!" என்று உள்ளதை உள்ளபடி சொன்ன தன்னுடைய வருங்கால மாமியாரை கையைக் கட்டிக் கொண்டு சிரிப்புடன் பார்த்துக் கொண்டு நின்றான் செல்வா.

"உங்களோட யோசனை தப்பேயில்ல அத்த! உங்கள பொறுத்தமட்டுல நான் ஹோமுல இருந்து வந்த ஒரு பையன்! என்னைய நீங்க ஒடனே மருமவனேன்னு கூப்ட்டு கட்டிப்பிடிச்சுருந்தா அதுதான் நடிப்பு மாதிரி இருந்துருக்கும்! இந்தமேரி மனசுல பட்டத ஓப்பனா பேசசொல நம்ம ரெண்டு பேருக்குமே அது ரொம்ப நல்லதுதான்! பாப்பாவ நான் என் மூச்சுமேரி பத்திரமா பாத்துப்பேன். சாகுற வரையில கிறுக்குத்தனமா அவள காதலிப்பேன். நீங்க நம்ப மாமனார செஞ்சீங்களே.... அந்தமேரியேதா! நீங்க நம்பள மாப்பிள்ளயின்னு ஒத்துக்கிட்டாலும் சரித்தான்; இல்ல இங்க வாடா செல்வான்னு கூப்டாலும் சரித்தான்; நம்ம பாப்பாவோட அம்மா நீங்க எனக்கு எப்பவும் ரொம்ப பிடிச்ச அத்ததான்! என்னைய ஏத்துக்குறதுக்கோசரம் எம்மா வருசம் வேணுமோ அம்மாவருசத்த நல்லா எடுத்துக்கங்க. நீங்க செஞ்ச தியாகத்துக்கு பரிசா நானும், பவியும் சேந்து சீக்கிரத்துலயே உங்களுக்கு ஒரு குட்டி தங்கத்த பெத்து எடுத்து தாறோம். அவளையும் சீராட்டி என் பாப்பாவ மாதிரியே சல்லிசான புள்ளயா வளத்து குடுங்க! என்ன சொல்றீங்க?" என்று கேட்டவனிடம் சின்ன முறுவலுடன்,

"தேங்க்ஸ் ஃபார் யுவர் அண்டர்ஸ்டான்டிங் மிஸ்டர் செல்வா! யூ ஆர் அ நைஸ் பெர்ஸன்!" என்று அவனிடம் சொல்லி விட்டு சென்றார் ரேணுகா.

ஒன்பது நாட்களுக்குப் பின்னர் செல்வா சாம்பவி இருவரின் நிச்சயதார்த்த விழாவுக்கு நாள் குறிக்கப்பட்டது.

"ம்ப்ச்! என்னடீ இப்ப நிச்சயங்குறாய்ங்க! இன்னும் ஒன்றரை மாசம் கழிச்சுதா கல்யாணங்குறாய்ங்க! உன்னைய ஒடனே சட்டுபுட்டுன்னு கல்யாணம் செஞ்சுக்க முடியாதா பாப்பா.....?" என்று அவளிடம் கேட்டவனிடம்,

"சட்டுப்புட்டுன்னு செய்றதுக்கு அதென்ன சாம்பாரா? கல்யாணம்டா கல்யாணம்! கொஞ்சம் பொறுமையா வெயிட் பண்ணு. நம்ம மேரேஜூக்கு உன் ப்ரெண்ட்ஸூக்கு, அவங்க பேமிலிக்கு, ஹோட்டல், கார் ஓர்க் ஷாப், பெட் ஷாப், க்ளினிக்ல வொர்க் பண்ற எம்ப்ளாயீஸ் எல்லாருக்கும் ட்ரெஸ் எடுத்துக் குடுக்கணும். அது எதுக்கு?  எல்லாருக்கும் ஒரு ஜாக்கெட் பிட் மட்டும் எடுத்து குடுத்துடுவோம்னு சொன்ன..... உன்னைய மொத்திருவேன் பார்த்துக்க!" என்று சொன்னவளின் தாடையைப் பற்றி அவன் புறம் திருப்பியவன்,

"சிக்கனம் வேற..... கஞ்சத்தனம் வேற பாப்பா! தண்ணி, பெட்ரோல், கரண்ட், ஏன் இனிமே காத்துல கூட சிக்கனம் பிடிக்க காலம் வருமோ? என்னவோ? இருக்குறத இருக்குற காலத்துலயே செலவு செஞ்சு கைய தட்டிட்டா, இல்லாத நாளுன்னு ஒண்ணு வந்தா அப்ப என்ன பண்றது? நீ கிண்டல் பண்றமேரி நான் கஞ்சூஸ் இல்லடீ! பணத்த எங்கெங்க கெட்டியா பிடிக்கணுமோ, அங்கங்க கெட்டியா பிடிச்சு செலவு பண்ற கெட்டிக்காரன் தெரியுமா?" என்று கேட்டு சிரித்தவனின் பல்வரிசையை சிலநொடிகள் பார்த்துக் கொண்டிருந்தவள்,

"உன் டூத் ஸ்ட்ரக்சர் ரொம்ப கரெக்டா, அழகா இருக்குடா ஒலக்க! ஆ காமி.....!" என்று சொல்லி அவன் வாயைத் திறக்கக் கேட்டவளிடம்,

"நா எம்மாம்பெரிய மேட்டர் பேசினு இருக்கேன்; அத்த கொஞ்சங்கூட காதுல வாங்கிக்காம என் பல்லையா சைட் அடிச்சுக்கிட்டு இருக்க நீ? ஆ தான காமிக்கணும்! உயிரெழுத்துல அ க்கு அப்புறம் வரும். இன்னும் டவுட்டா இருந்தா பால்வாடிக்குப் போயி ஒக்காரு! அங்க சொல்லித் தருவாய்ங்க! ஆளையும், மண்டையும் பாரு!" என்று அவளைத் திட்டி விட்டுச் சென்றான் செல்வா.

சபாபதி, ரேணுகா இருவரும் சென்று தனசேகர், கல்யாணியிடம் சாம்பவி, செல்வாவினுடைய நிச்சயதார்த்த விழாவுக்கு அழைப்பு விடுத்து விட்டு வந்தனர்.

"இவ பேரு ரேணுகா. இவ என்னோட மனைவி!" என்று அவர்களிடம் அறிமுகம் செய்து வைத்தவரிடம் அவர்கள் கொஞ்சங்கூட கோபத்தையோ, வருத்தத்தையோ காட்டிக்கொள்ளவில்லை. இரண்டு பேரிடம் அலட்டல், அகங்காரம் இவையெல்லாம் மறைந்து போய் அவர்கள் முகத்தில் ஒரு சாந்தம் வந்திருந்தது.

செல்வா இப்போது என்ன செய்கிறான் என்று சபாபதியிடம் கேட்டுத் தெரிந்து கொண்ட கல்யாணி, ரேணுகாவிடம் இரண்டு முழம் அளவுக்கு இருந்த பூவை அவருடைய கையில் கொடுத்தார்.

"பெத்த அப்பா, அம்மாவையே இந்த காலத்துல எந்த புள்ளையும் பாத்துக்க மாட்டேங்குதுங்க. இதுல எங்க மாப்ள மாதிரி ஒரு ஆள் எல்லாம் ரொம்ப அபூர்வம்மா! அவர நல்லாப் பாத்துக்க; என்ன நம்ம சுத்தி இருக்கிற நல்ல மனுசங்களோட அரும அவங்க கூட இருக்கறப்ப நமக்கு தெரியறதேயில்ல! பவி கேட்டபடி இந்த வீட்ட அவ பேருக்கு எழுதிக் குடுத்துடுறோம்; இது என்னோட நெக்லஸ்; இத கல்யாணப் பரிசா எம்பேத்திக்கு குடுத்துடுங்க! நாங்க ரெண்டு பேரும் அங்க வர்றத அவ விரும்ப மாட்டான்னு நினைக்கிறேன். எங்களோட ஆசிர்வாதம் எப்பவும் அந்த தங்கப்புள்ளைக்கு உண்டு!" என்று சொன்ன கல்யாணி பேச்சுடன் ரேணுகாவின் கையில் ஒரு நெக்லஸை தந்து விட ரேணு சபாபதியை பார்த்து இதை என்ன செய்ய என்கிற மாதிரியான ஒரு தர்மசங்கடத்துடன் அமர்ந்திருந்தார்.

சபாபதி ரேணுகாவிடம் ஒரு சம்மதப்பார்வை பார்க்க அந்த நெக்லஸை தன்னுடைய ஹேண்ட்பேகில் பத்திரப்படுத்தி வைத்த ரேணுகா கல்யாணியிடம்,

"அது சின்னப்புள்ள. கோபத்துல ஏதாவது பேசியிருக்கும்..... நீங்க அத மனசுல வச்சுக்காம அவசியம் அவ பங்ஷனுக்கு வாங்கம்மா!" என்று சொல்லி விட்டு தன் கணவருடன் நடந்தார்.

செல்வாவின் நண்பர்கள், பணியாட்கள், அவர்களுடைய குடும்பத்தினர், சாம்பவியின் நண்பர்கள், சபாபதியின் கூட வேலை செய்யும் நண்பர்கள் அனைவரும் விழாவிற்கு வருமாறு அழைப்பு விடுக்க செல்வா சாம்பவியின் நிச்சயதார்த்த நாளும் வந்தது.

இளமஞ்சள் நிற சிவப்பு பார்டர் இட்ட புடவையில் பவியை பார்த்து தடுமாறிய செல்வா அன்றும் அவளை அறைக்குள் கடத்திக் கொண்டு சென்றிருந்தான். என்னவோ பவியுடனான காதல்  எத்தனை ஆயுள் எடுத்து மீண்டும் மீண்டும் பிறந்தாலும் எப்போதும் சலிக்காத ஒரு பெருவரம் என்று தோன்றியது அவனுக்கு.

"இன்னா பாப்பா..... கல்யாணத்துக்கு முன்னால மாமாவ இப்டி போட்டுத் தாக்குனா நான் இன்னா பண்றது சொல்லு! முடியலடா செல்வா..... கண்ட்ரோலிங்ஸ கையில எடு!" என்று சொல்லிக் கொண்டிருந்தவன், அந்த கண்ட்ரோலிங்ஸை காற்றில் பறக்க விட்டு ஐந்து, பத்து நிமிடங்கள் ஆகியிருந்தது.

"கூறுகெட்ட கொரங்கே! கண்ட கண்ட இடத்துல கடிச்சு வச்சன்னா பல்ல ஒடைக்க போறேன் பாருடா!" என்று அவனை திட்டிக் கொண்டிருந்தவளிடம்,

"அப்பக்கூட நீங்கதா டாக்டர் என் பல்ல சரி பண்ணி உடணும்! வாய ஒடைச்சுக்கினாலும், கை சும்மாயிருக்காது பார்த்துக்குங்க.....!" என்று சொன்னவனிடம் உச்சுக்கொட்டிய பவி,

"எனக்கு ரொம்ப நாளா ஒரு டவுட்டு! எனக்கும், உனக்கும் ஒரே வயசு தான் ஆகுது. அதென்ன நீ என்னை எப்பப் பார்த்தாலும் பாப்பான்னு கூப்டுற.....?" என்று கேட்க,

"நிறைய விஷயத்துல நீ என்னை விட ரொம்ப சின்னப்பொண்ணு தான் பாப்பா; எங்கைய பாரு தண்டி தண்டியா எப்டி இருக்கு..... உங்கைய பாரு தாமர மொட்டுமேரி சின்னதா! அது என்னவோ தெர்ல.... உனக்கும், எனக்கும் அந்த வயசுல இருந்த மெச்சூரிட்டி லெவல வச்சு நானே நீ எனக்கு பாப்பா தான்னு ஒரு முடிவுக்கு வந்துட்டேன். அத இன்னிக்கு வரைக்கும் மாத்திக்க முடியல அவ்ளோதான்......" என்று சொன்னான் செல்வா.

"அப்ப நான் உனக்கு இளையவ தானடா?" என்று கேட்டவளிடம்,

"இளையவள் நீ என் இணையவளோ....
துணையவளோ!" என்று புருவம் உயர்த்திக் கேட்டான்.

"இணையும், துணையும் ஒண்ணுதான்டா கூமுட்ட...." என்று அவனை திட்டியவள் "நம்ம சகிக்கு ஃபீட் வச்சுட்டு சீக்கிரம் ட்ரெஸ் சேன்ஜ் பண்ணிட்டு கீழ வா! நான் கீழ போறேன்!" என்று சொல்லி விட்டு சென்றாள்.

நிறைய உறவுகளுடன், கலகலப்பான மனநிலையுடன், நிறைந்த காதல் கொண்ட செல்வா, சாம்பவி இருவருக்கும் நிச்சயதார்த்தம் நிகழ்ந்தேறியது.

அவனுக்கு வயதில் இளையவள் இல்லையென்றாலும் மனதால் அவளைத் தாங்கும் தாய் போன்ற இயல்பினனுக்கு அவள் எப்போதும் இளையவள் தான் அவன் இணை அவள் தான்!

இளையவள் இணை சேர்ந்தாள்!

சுபம்!

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro