Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

💚 இணை 22

"இப்ப என்ன செய்யணும்ங்குற ரேணு? எல்லா தப்பையும் செஞ்சது அவங்க தான்! ஒரு வருஷத்துக்கு ஒரு லச்சம்ங்குற அளவுல கை வச்சுருக்காங்க. அது போக வீட்ல இருந்த வித்யாவோட பாதி நகைய எடுத்து சத்தமில்லாம வித்துருக்காங்க. இது எதையுமே பாக்காம நான் அந்த சின்னப்பய திட்டுற மாதிரி கண் இருந்தும்  குருட்டுக்கபோதியா தான் இருந்துருக்கேன்! இதுக்கு மேல நான் அவங்களுக்கு என்ன ஃபேவர் பண்ணனும்ங்குற? போதும். ரொம்ப நெருங்குன உறவுக்காரங்கன்னு நினைச்சு, வீட்டுக்குள்ள விட்டதுக்கு மொத்தமா என் நம்பிக்கையையும், பவியோட பாசத்தையும் கால்ல மிதிச்சு நசுக்கிட்டுப் போய்ட்டாங்க! கிளம்புறப்ப நீ நல்லாயிருமான்னு பேத்திய ஒரு வார்த்த கூட சொல்லலையாம். பாவம் பவி.... அந்த குழந்த தான் கெளம்புற வரைக்கும் அவங்க ரெண்டு பேரோட முகத்தப் பாத்துக்கிட்டே
நின்னுட்டு இருந்துருக்கா! என்ன ஆனாலும் சரி ரேணு; நீ வா, நாம வீட்டுக்கு கிளம்பலாம்!" என்று உறுதியான குரலில் சொன்னவரிடம் பதில் எதுவும் பேசாமல் தயங்கிய படி அமர்ந்திருந்தார் ரேணுகா.

"ரேணு.... கிளம்பலாம்னு உங்கிட்ட தான் சொல்லிட்டு இருக்கேன்! கேக்குறியா இல்லையா?" என்று கேட்டவரிடம்,

"இல்ல சபா! நான் கிளம்பறது இப்போ இல்ல......! உங்கட்ட நான் தான் சீக்கிரத்துல என்னை நம்ம வீட்டுக்கு கூட்டிட்டுப் போயிடுங்கன்னு கேட்டேன். பட் நேத்து தான் பவியோட தாத்தா, பாட்டி கிளம்பிப் போயிருக்காங்கன்னு சொல்றீங்க! இந்த நேரத்துல என்னைக் கூட்டிட்டுப் போய் பவி முன்னால நிறுத்துனீங்கன்னா அவ என்ன யோசிப்பா? நீங்க எனக்காக அவளோட தாத்தா பாட்டிய வீட்ல இருந்து வெரட்டி விட்டுட்டீங்கன்னு தான யோசிப்பா? கொஞ்ச நாள் ஆகட்டும்..... பவி நார்மலாகி ஒரு நல்ல மூடுக்கு வரட்டும்! அப்புறமா நாம நம்ம வீட்டுக்குப் போய்க்கலாம்! என்ன சபா?" என்று சொன்ன ரேணுகாவிடம்,

"பேசாம அவ சின்னப் பொண்ணா இருந்தப்பவே அவள தூக்கி உங்கையில குடுத்துருக்காம போச்சு ரேணு! இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு, இன்னும் கொஞ்ச நாள் கழிச்சுன்னு சொல்லி சொல்லியே பத்து வருஷத்த நாம தனித்தனியா வாழ்ந்து முடிச்சிட்டோம். இனிமே நாம எப்ப நம்ம வீட்டுக்குப் போனாலும் பவி நம்மள தப்பா தாம்மா நினைக்கப்போறா; அது ஏன் இன்னிக்கா இருக்கக்கூடாது?" என்று கேட்டார் சபாபதி.

"அதில்ல சபா! இப்ப புல் அண்ட் புல்லா பவிக்கு நீங்க தேவ. உங்களோட அபெக்ஷன் தேவ. இதுல நானும் உங்களோட ஒட்டிட்டு வந்தன்னா, அவ ஒங்க பக்கத்துலயும் வரமாட்டா! வேணும்னா ஒண்ணு பண்ணுங்க!
நம்ம வீடு இருக்குற ஏரியாவுலயே என்னையும் ஒரு வீடு பார்த்து குடி வச்சிடுங்க! முதல்ல நம்ம நெய்பர்ஸா இன்ட்ரடியூஸ் ஆகிக்கலாம். அப்புறமா பவியோட மூடு பார்த்து நம்ம விஷயத்த அவ கிட்ட மெதுவா சொல்லிக்கலாம்!" என்று சொன்ன தன்னுடைய மனைவியை வலி மிகுந்த பார்வையால் முறைத்தவர்,

"நீ என்னோட லீகல் வொய்ப் தான்! ஸ்டெப்னி இல்ல; அது நல்லா நியாபகம் இருக்குதுல்ல உனக்கு? உன்னை எதுத்த வீட்ல வச்சிக்கிட்டு ஏக்கமா பார்த்துட்டு இருக்குற வேலையெல்லாம் எனக்கு சரிப்பட்டு வராது. ஒனக்கு நான் மேக்ஸிமம் ஒன் மன்த் டைம் குடுக்குறேன்....... அதுக்குள்ள நம்ம வீட்டுக்கு நீயே வந்து சேர்ற! இல்லன்னா நானே வந்து உன்னை தூக்கிட்டுப் போவேன் ரேணு!" என்று சொன்ன சபாபதி திடீரென தன்னுடைய மனைவியை கட்டி அணைத்து அவரது இதழை தன் இதழால் அடைத்திருத்தார்.

ரேணுகா தனது பேச்சை மறுக்கும் வேளைகளில் நான் உன்னுடைய கணவன் தான் என்ற உரிமை நிலைநாட்டலுக்காக இந்த மாதிரியான தாக்குதல் முத்தங்களை தன் மனைவிக்குப் பரிசளிப்பார் சபாபதி. வன்மை கொஞ்சம் கூடிப் போய் விடும் நேரத்தில் அதை சரிக்கட்ட தன் மென்மையான காதலை கையில் எடுத்து ரேணுவின் உடல் முழுதும் நூறு முத்தமிட்டு அவரை சரிக்கட்டுவார். ஆனால் இன்று அவரது வேகம் கட்டுக்கடங்கா வேகமாக இன்னும் இன்னும் என்று அதிகப்படியான வேகமாக தான் சென்று கொண்டிருந்தது.

அவரால் கட்டிலில் தூக்கி எறியப்பட்ட ரேணு தன் கணவரிடம்,
"சபா...... ப்ளீஸ் கண்ட்ரோல் யுவர்செல்ஃப்! ஏன் இப்டி eccentric ஆ பிஹேவ் பண்றீங்க?" என்று சற்றே மிரண்டு போய் அவரிடம் கேட்க அவர் ஒரு ஏளனச் சிரிப்புடன்,

"என்னைய வேற யார் வேணும்னாலும் டென்ஷன் ஆக்கலாம்; என்னால அத மேனேஜ் பண்ணிக்க முடியும். பட் என் லேடிலவ் நீ என்னை இன்னிக்கு ரொம்ப டென்ஷன் ஆக்கிட்ட! யாரோ மாதிரி நம்ம ஏரியாவுலயே, நம்ம வீட்டுப் பக்கத்துலயே நெய்பரா வரட்டான்னு ஏன் கேட்ட? உன்னை இப்டி உங்க அப்பா வீட்ல விட்டு வச்சுருக்குறது பத்தாதுன்னு இன்னும் நம்ம ஏரியாவுல வேற கொண்டு வந்து வச்சுட்டு அவஸ்தப்
படணுமா நானு? எனக்குத் தெரியாது. இப்ப அதுவா என் மண்டைக்குள்ள ஏறி உட்கார்ந்த ஸ்ட்ரெஸ் கம்ப்ளீட்டா வெளிய வந்தே ஆகணும். ஸோ ரைட் நௌ ரேணு எனக்கு வேணும்! ரேணுக்கும் இப்போ நான் வேணும் தான?" என்று சபாபதி தன் மனைவியிடம் கேட்க லேசான புன்னகையுடன் ரேணுகா கைநீட்டி
அந்த அறையின் விளக்கை ஆஃப் செய்து விட்டு சபாபதியை கட்டிக் கொண்டு அவர் நெஞ்சில் முகம் பதித்துக் கொண்டார்.

அந்த ஞாயிற்றுகிழமை காலையில் சபாபதி தன்னுடைய வீட்டுத் தோட்டத்தில் நின்று கொண்டு தன்னுடைய செடிகள் அனைத்தையும் காதலுடன் தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தார். பனியனும், கைலியும் அணிந்து கொண்டு ஒரு வீட்டுக்காரனாக அவர் செய்யும் ஒரே பணி இந்தத் தோட்டப்பணி மட்டுந்தான்! அதுவும் கல்யாணி, தனசேகரின் இடையூறு இல்லாமல், அவர்கள் இருவரின் இருப்பு இல்லாமல் அந்த வீடே சற்று அளவில் பெரியதாகி விட்டது போன்ற ஒரு உணர்வு அவருக்கு.

"யோவ் ரூல்ஸூ! எம்மா நேரமா நான் ஒன்னிய காணும்னு கூவி கூவி உள்ள தேடினு இருக்கேன். நீ இன்னாடான்னா இங்க வந்து நின்னுகினு செடியாண்ட பேசினு இருக்குற.... போவசொல அந்த புள்ளய கூப்ட்டு நாலு வார்த்த பேசி சமாதானம் பண்ணிட்டுப் போயா! பாவம்...... மொகத்த தூக்கி வச்சுனு ஒக்காந்துனுருக்குது! வூட்ல பவியப் பாத்துக்கினு, அவ கூட தங்கினுருக்குறதுக்கு ஒரு ஆள கண்டுக்குனியா இல்லியா?" என்று கேட்டவனிடம்,

"எதுக்குடா ஆளு? அவள பாத்துக்க தான் நீ இருக்கியே?" என்று பதிலுக்கு கேள்வி கேட்டார் சபாபதி.

அவரை மேலும் கீழுமாக பார்த்தவன் அவரிடம்,

"மெய்யாலுமே பாப்பாவுக்கு நீதா அப்பனா?" என்று கேட்டான்.

"டேய்.... ஓவரா வாய் பேசாதன்னு உங்கிட்ட சொல்லிட்டே இருக்கணுமா?" என்று அவனை அதட்டியவரிடம்,

"பின்ன என்னாங்குற? நான்லா ஆம்பள தடியன்யா! ஒரு பொம்பளப்புள்ளக்கு வூட்ல எம்மாந்தேவ இருக்கும்? அல்லாத்தையும் அது எங்கிட்ட சொல்லினு இருக்க முடியுமா?
நீ வூட்ல இருக்கசொல சர்தான்!
ஆனா நீ டூட்டிக்கு போயிக்கினா எங்க ரெண்டு பேரால எப்டி இம்மாம்பெரிய வூட்ட தனியா பாத்துக்க முடியும்? வூட்டு வேலைக்கினு இல்லாங்காட்டியும்..... ஐய எப்டி இத்த நா ஒனக்கு பிரிய வைக்றது? நம்ம பாப்பாக்கு ஒரு சேப்டிக்கு ஆளு தேவல்ல?" என்று கேட்டவனின் கையைப் பற்றிக் கொண்ட சபாபதி,

"நான் இத யோசிக்கல; நீ நிறைய விஷயத்துல எனக்கு ரொம்ப ஹெல்ப்புல்லா இருக்க; ரொம்ப
தேங்க்ஸ்டா செல்வா!" என்று ஆழ்ந்த குரலில் அவனிடம் சொன்னார்.

"உன்னாண்ட நமக்கு டேங்க்ஸ்லா ஒன்னியும் வோணா! நம்ம வூட்டுக்கு பூவூ குடுக்க வர்ற அஞ்சல பாட்டிய பத்துநா ராவுல நம்ம வூட்டாண்ட வந்து படுத்துக்க சொல்லினு போ! அதுக்குள்ள ஒரு ஆள தேடி இட்டுக்கினு வா! தெர்தா?" என்று சொன்னவனிடம் சிறு சிரிப்புடன்,

"எங்கிட்ட நீ வேல செய்றியா? உங்கிட்ட நான் வேல செய்றனான்னே தெரியல..... ஒரு வருஷம் முடிஞ்சதுக்கப்புறம் இங்கருந்து கிளம்பிடுவியா? இல்ல அப்டியே எங்க கூடவே டேரா போட்டுடுவியாடா?" என்று வேடிக்கையாக கேட்டவரிடம் கெத்தாக,

"அது செல்வாவோட மூடப் பொறுத்தது வாத்யாரே!" என்று சிரித்தபடி சொன்னான் செல்வா.

"ஏன்டா பவி மேல உனக்கு கோபமே வராதா? நீதான் ஏதோ அவளோட தாத்தா, பாட்டிய இங்கருந்து வெரட்டி விட்டுட்டங்குற ரேன்ஜ்ல அவ தப்பு பண்ணுன என்னை விட்டுட்டு உங்கிட்ட பேசாம இருக்குறா! அப்பவும் நீ அவ பின்னாடியே பல்லைக் காட்டிட்டுப் போயி ஒன்க்கு சிக்கன் வோணுமா இல்ல மட்டன் வோணுமாமேங்குற? உனக்கு கொஞ்சங்கூட வெக்கமாவேயில்லயா?" என்று கேட்டவரிடம் கோபத்துடன்,

"யோவ் ரூல்ஸூ! நான் இன்னாத்துக்குயா வெக்கப்படணும்? அத்த இம்மா வருசமா சரியா பாத்துக்காம உட்டுக்குனு இன்னாவோ பேசவே
தெரியாதமேரி அத்த கண்டுக்குனாலே ஓடி ஓடி ஒளிஞ்சுக்கீற நீ வெக்கப்படணும்! பேத்தி அழுவயக் கூட காதுல வாங்காம அப்டியே எனக்கின்னானு போச்சுக பாரு;
டமாரமும், கெய்வியும்.....! அதுங்க ரெண்டும் வெக்கப்படணும்; இதுல செல்வா என்ன செஞ்சுக்குனேன்..... வெக்கப்படறதுக்கு? அத்து ரொம்ப சின்னப்புள்ளய்யா! இத்தன வருசமா கூடவே இருந்ததுக விட்டுட்டுப் போயிடுச்சுகளேன்னு தவிச்னு கெடக்கு! மனசுல அடஞ்ச கோபத்தயெல்லா யாராண்ட காட்றதுன்னு தெரியாத நம்ம பவி பேச்ச நா பெரிசா எடுத்துக்கினு எங்கயும் ஓடிடுவேன்னுகாண்டி நெனக்காத நைனா! அத்தெல்லாம் நம்மளாண்ட நடக்காது!" என்று சொல்லி விட்டு உள்ளே சென்றான் செல்வா.

காலை உணவை பத்து மணியளவில் முடித்து விட்டு மதிய உணவிற்காக அவன் சிக்கனை சுத்தம் செய்து ஊற வைத்துக் கொண்டிருக்க சமையலறையில் சபாபதியும், சாம்பவியும் பாத்திரங்களை கழுவி கவிழ்த்து வைத்துக் கொண்டிருந்தனர்.

தீபக் அவளை அலைபேசியில் அழைக்க, அதை எடுத்து அவனிடம் பேசிய சாம்பவி இரண்டு நிமிடங்களில் அவனிடம் சுருக்கமாக தன்னுடைய பகுதியில் தனது வீட்டிற்கு அடையாளம் சொல்லி தனது லோக்கஷனையும் தீபக்கிற்கு ஷேர் செய்து விட்டு,
தன் தந்தையிடம் மெதுவான குரலில்,

"அப்பா என்னோட க்ளாஸ்மேட் தீபக்கும் அவரோட சிஸ்டர் திவ்யாவும் இன்னும் கொஞ்ச நேரத்துல நம்ம வீட்டுக்கு வர்றேன்னு சொல்லியிருக்காங்கப்பா! சண்டே வீட்டுக்கு வர்றேன்னு ஏற்கனவே சொல்லியிருந்தாங்க. பட்  டென்ஷன்ல எனக்கு அவங்க வர்றேன்னு சொன்னது சுத்தமா மறந்துடுச்சு! வீட்ல வெறும் பிஸ்கெட்ஸ் தான்ப்பா இருக்கு!" என்று சொன்னவள் பாவமாக செல்வாவையும் ஒரு பார்வை பார்த்தாள்.

"ஓகேடா பவி..... பர்ஸ்ட் டைம் உன் ப்ரெண்ட்ஸ் வீட்டுக்கு வர்றாங்கன்னு சொல்ற! அப்பா போயி கொஞ்சம் ஸ்நாக்ஸ், ப்ரூட்ஸ் இதெல்லாம் வாங்கிட்டு வந்துடுறேன். லன்ஞ்ச் வேலைய செல்வா பாத்துப்பான் சரியா?" என்று சபாபதி தன் மகளிடம் கேட்க அவள் தயக்கத்துடன்,

"இல்லப்பா..... லன்ஞ்ச் ஒரு மணிக்கு சாப்டுறது தானே? அதுக்கென்ன அவசரம்? அன்னிக்கு திவ்ஸ் வீட்டுக்கு நாங்க போனப்ப அவங்க அம்மா அந்த ஆன்ட்டி எங்கள எப்டி கேரிங்கா பாத்துக்குட்டாங்க தெரியுமாப்பா? அதே மாதிரி அவங்கள நம்ம கூட நல்லா கவனிச்சுக்கணும் இல்லையா டாடி? அதுனால..... இ.... இவன கொஞ்சம் ஸ்நாக்ஸ் ரெடி பண்ணி தரச் சொல்லுங்க டாடி! இவன் பாயாஸமும், உருளைக்கிழங்கு போண்டாவும் சூப்பரா செய்வான் இல்லடா செல்வா?" என்று சாம்பவி தன்னுடைய தந்தையிடம் பேசிய படி செல்வாவிடம் சிறுதீனிக்கு மெதுவாக நூல் விட்டுப் பார்க்க அவளுடைய பேச்சை காதிலேயே வாங்காதவன் போல்

"பச்சமொளகா காரம்.... பன்னண்டு மணிநேரம்!" என்று ராகம் போட்டு பாடிய படி தக்காளியை துண்டுகளாக நறுக்கிக் கொண்டிருந்தான் செல்வா.

இளையவள் இணை சேர்வாள்!

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro