Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

💚 இணை 2

"இன்னுங்கொஞ்சம் நீ இன்னாத்த பேசப் போறன்னு எங்களுக்குத் தெரியாதா பாஸூ? நான் யாரு இன்னா எப்டின்னு ஒனக்கு நல்லாத் தெரியும்! அப்பாலிக்கா நீ வூட்ல இல்லாதசொல நா அத இத லவட்டிக்கினு போயிட்டேனு எம்மேல இல்லாத பொல்லாதத
சொல்லி என்னைய நீயி மறுபடியும் ஹோமுக்கு இட்டுக்கினு பூட மாட்டியே?" என்று அவரிடம் கேட்டபடி சந்தேகமாக அவரைப் பார்த்தான் வாகை செல்வன்.

"அதச் செய்றதா இருந்தா நான் உன்னை கேஸ்ல இருந்து ரீலீவ் பண்ணி வீட்டுக்கு கூட்டிட்டு வந்துருக்கவே தேவையில்லயேடா தம்பி? நான் இருக்குற வீட்டோட நிலைமை உனக்கு நல்லா தெரியணும்ங்குறதுக்காக தான் உன்னைய ஒருவாரம் எங்கூட  கூட்டிட்டு வந்தேன். பட் நீ எங்க வீட்ல இருக்கறதா இருந்தா, என் மாமனார், மாமியார் ரெண்டு பேருட்டயும் உன் அத்தாரடேட்டிவ் ஆட்டிடியூட காட்டணும்! பவிய பத்திரமா பார்த்துக்கணும். அவளோட தாத்தா, பாட்டியோட extortion ல இருந்து அவள காப்பாத்தணும். அவ Focused ஆ படிக்குறதுக்கு உன்னால ஆன ஹெல்ப நீ அவளுக்கு செஞ்சு குடுக்கணும்! சொல்லு செல்வா..... இந்த வீட்ல ஒன் இயர் இருக்குறதுக்கு உனக்கு சம்மதமா? இந்த ஒன் இயர் பீரியட நீ ஒழுங்கா கம்ப்ளீட் பண்ணினன்னா உனக்கு நான் ரெண்டு லட்சம் பணம் தருவேன்; அந்த பணம் போக உனக்கு ஒரு மாச சேலரி டென் தவுசண்ட்! இந்த பத்தாயிர ரூபாயில நீ உன்னோட சாப்பாடு, பவியோட சாப்பாடு, பவியோட சின்ன சின்ன தேவைங்க இது எல்லாத்தையும் கவனிச்சுக்கணும். ஒருவருஷம் முடிஞ்சு நீ எங்க வீட்ல இருந்து வெளிய போயி உன்னால முடிஞ்ச ஹோட்டலோ, ரோட்டுக்கடையோ எதையாவது ஒண்ண செட் பண்ணி அந்த ஷாப்புக்கு முதலாளி ஆகிட வேண்டியதுதான்!" என்று அவனிடம் சொன்னார் சபாபதி.

"நீ சொல்றதெல்லாம் கரீட்டு தான்பா! ஆனா இத்த ஏன் நான் செய்யணும்? அந்த பாப்பாவோட இஸ்கூல்ல அதுக்கு தெரிஞ்ச நல்ல பய எவனையாவது அத பத்திரமா பார்த்துக்கனு சொன்னா முடிஞ்சது!
அதா நீ துட்டு கூட தர்றேன்னு சொல்றியே? பின்ன எவன் வர மாட்டான் இந்த வேலைக்கு?" என்று தனக்கு இலவச ஆலோசனை சொன்னவனை ஏற இறங்க ஒரு பார்வை பார்த்தார் சபாபதி.

"பவிய பத்தி இன்னும் உனக்கு ஒண்ணுமே தெரியாதுல்ல? நீ இப்டிதான் பேசுவ!" என்று அவனிடம் சொன்னவர்,

"வேற எந்தப் பையனும் இத செய்வானா செய்ய மாட்டானான்னு உங்கிட்ட நான் ஐடியா கேக்கல;
உன்னால இந்த விஷயத்துல எனக்கு ஹெல்ப் பண்ண முடியுமா முடியாதான்னு மட்டும் தான் கேக்குறேன் செல்வா!" என்று அவனிடம் கேட்டார்.

"18 முடியுற வரைக்கும் என்னைய வேற எங்குட்டும் நவலவும் உட மாட்டேன்னு சொல்ற; ஓவூட்ல ஃப்ரீயா தங்கிக்கலாம்; துன்னக்கலாம்னும் சொல்ற! அதுபோவ துட்ட வேற நீட்றம்னு சொல்ற! அப்புறம் இன்னாத்துக்கு முடியுமா முடியுதான்னு ஒரு கேள்வி வேற கேக்குற தல? செய்றேன். இத்த நா அந்த பாப்பாக்கோசரம் இல்ல ஒனக்கோசரம் செய்றேன் வாத்யாரே!" என்று சொன்ன செல்வாவிடம் இன்னும் அரைமணி நேரத்திற்கு நிறைய விஷயங்களைப் பேசி விட்டு அவனுக்கென காலை உணவு சரவண பவனில் வாங்கிக் கொண்டு அவனை வீட்டிற்கு அழைத்து வந்தார் சபாபதி.

அன்று மாலை நேரத்தில் தன்னுடைய மாமனார், மாமியார் மற்றும் மகள் மூவரையும் ஹாலுக்கு வரச் சொல்லி அழைத்தவர் செல்வா நம் வீட்டில் தான் இனி வேலை செய்யப் போகிறான் என்று அவர்களிடம் சொன்னார்.

"நிறைய நேரம் நாங்க மூணு பேரு மட்டுந்தான் வீட்ல இருக்கோம்! அதுல நம்ம பேபி வேற ஸ்கூலுக்குப் போயிடுறா! இதுல இப்ப வீட்டுக்கு ஒரு வேலைக்காரன் வேற எதுக்கு மாப்ள?" என்று கேட்ட தனசேகரிடம்,

"இருந்துட்டுப் போகட்டும் மாமா! உங்களுக்கு வெளி வேலைக்கெல்லாம் செல்வா உதவியா இருப்பான்!" என்றார் சபாபதி தன் மகள் மற்றும் மாமியாரின் முகத்தைப் பார்த்த படி.

"ஆமாமா! நம்ம ஒத்தாசைக்குன்னு ஒரு மட்டப்பய வீட்ல இருக்குறது நமக்கு வசதி தானங்க? உங்க கிட்ட நான் ஒரு வேலையச் சொன்னா நீங்க அப்பப்ப அலுத்துக்குறீங்க! அதுனால இந்த பையன் நம்ம வீட்டு வேலைக்கு இருக்கட்டும்!" என்று தன் கணவரிடம் சொன்னார் கல்யாணி.

"லூக் ஹியர் மிஸ்டர் டாம் பாய்!" என்று அவனை அழைத்த சின்ன பெண்ணின் பக்கமாக திரும்பினான் வாகை செல்வன்.

வாழ்நாளில் முதன்முறையாக தன்னை ஒருத்தி, அதுவும் தன் வயதேயுடைய ஒருத்தி மிஸ்டர் போட்டு கூப்பிட்டதில் அவ்வளவு சந்தோஷம் செல்வாவுக்கு.

முகம் முழுவதும் பூரிப்புடன்
முன்வரிசை பற்கள் தெரிய சிரித்தவன் அவளைப் பார்த்து தனக்கு தெரிந்த வரையில் சற்றே மிகையான மரியாதையுடன்,

"சொல்லுங்க பாப்பா! என்னைய தான் கூப்டுக்குனீங்களா?" என்று கேட்டான்.

"வேற யாரும் இங்க பாய் இல்ல! நான் உன்னை தான் கூப்டேன். நீ என்ன ஹோம்ல இருந்து இங்க வந்தவனா? போறதுக்கு வேற இடம் இல்லாத கேஸா? வாட்எவர்! திடீர்னு வீட்டுக்குள்ள வந்துட்டு அஞ்சாறு நாளா நீ பாட்டுக்கு சுத்திட்டு இருந்த.... போகும் போது இவர் உன்னையும் கூட கூட்டிட்டுப் போயிருவார்னு பாத்தா, இங்க தங்கப் போறன்னு சொல்றாரு! ஏன் உன்னை அடாப்ட் பண்ணிக்க இந்த சொசைட்டில யாருமே ரெடியா இல்லையா?" என்று கேட்ட அவளது குரலில் தெரிந்த எகத்தாளமோ, அசூயையோ, கேலி கலந்த நக்கலோ ஏதோ ஒன்று செல்வாவை கோபப்படுத்தியது.

அவசரமாக அவளிடம் ஏதோ பேச வந்தவனை தடுத்த சபாபதி சாம்பவியிடம்,

"பவிம்மா.... செல்வா இங்க தான் இருக்கப் போறான்! இவன மாதிரி பசங்களுக்கு ஒரு ஃபேமிலி அட்மாஸ்பியர்ல இருக்குற வாய்ப்பு கிடைச்சாலே இவங்க கொஞ்சம் ஷேப்புக்கு வந்துடுவாங்க! ஸோ இஃப் யூ டோண்ட் மைண்ட், அவன் இங்க நம்ம வீட்ல இருக்கட்டும் பவிம்மா!" என்று சொன்னார்.

"ஆமா இது தான் உலகத்துல இருக்குற க்ரேட் பேமிலி நம்பர் 1; இங்க வந்ததால இந்த பையன் ரொம்ப அழகான ஷேப்புக்கு வந்துடப் போறான்! என்னமோ பண்ணுங்க!" என்று சடைத்த படி அங்கிருந்து சென்றாள் சாம்பவி.

"டேய்.... இது ஒரு பொம்பளப்புள்ள இருக்குற வீடு! என்ன தான் நீ அகராதித்தனம் பண்றவனா இருந்தாலும் அத எங்க பாப்பா கிட்ட எல்லாம் காமிச்சுடாத! அவ ஒரு மாதிரி பொண்ணு; உம்மூஞ்சி மொகரயெல்லாம் உடைச்சு விட்டுடுவா பார்த்து இருந்துக்க!" என்று சொன்ன தனசேகர் அவனை ஒருமாதிரியாக பார்த்து விட்டு எங்கோ கிளம்பினார்

"ஏய்.... இந்தாப்பா! உனக்கு வேணுங்குற சாப்பாட்ட வெளிய கடையில வாங்கிச் சாப்டு; இல்ல எங்க மாப்ள செய்ற மாதிரி மாசத்துல இத்தன நாள் எனக்கு சாப்பாடு வேணும்னு கேட்டு ஏதாவது வீட்டு மீல்ஸ் காரங்களுக்கு காசு குடுத்து வீட்டுக்கு சாப்பாட வர வச்சு சாப்டு! அத விட்டுட்டு எங்கிட்ட எல்லாம் சாப்பாட்டுக்கு வந்து நிக்காத!" என்று செல்வாவிடம் சொல்லி விட்டு தன்னுடைய பெரிய உடம்பை மெதுவாக அசைத்து மாடிப்படியில் ஏறினார் கல்யாணி.

"டேக் கேர் செல்வா..... இந்த வீட்ல நீ அடாப்ட் பண்ணிக்குறது கொஞ்சம் கஷ்டமான விஷயம் தான்! பட் யூ ஹாவ் ட்டூ! நான் கிளம்பட்டுமா?" என்று சொன்ன படி அவன் தோளில் தட்டி விட்டு வெளியேற நினைத்தவரிடம் கடும் சினத்துடன்,

"யோவ் ரூல்ஸூ! நில்லுய்யா அப்டியே!" என்றான் சிறியவன்.

"டேய்.... என்னடா? வாத்தியார்னு கூப்ட சரி! தல, பாஸூன்னு கூப்ட; அது கூட ஓகேன்னு அமைதியா இருந்தா இப்ப என்ன புதுசா ரூல்ஸூன்ற? உங்கள கொஞ்சம் லூஸ்ல விட்டா போதுமே? ஏறி உட்காந்துக்குவீங்களே?" என்று புன்னகைத்த படி கேட்ட சபாபதியிடம்,

"ஆமா! நாங்கலா மனுச கொரில்லா குரங்கு பாரு; நீங்க சொம்மா எங்கள லூசுல உட்டதும், அப்டிக்கா உங்க தலமேல ஏறி ஒக்காந்துக்கரோம்! போவியா...... செல்வாக்கு இங்க தங்கினு இருக்குறது புடிக்கல; ஒம்பொண்ணு நம்பள மிஸ்டர் போட்டு ரெஸ்பெக்டா கூப்டாலும் அவளோட எடக்குப் பேச்சால ரொம்ப சீண்டிகினு இருக்கா; அதெல்லாம் எனக்கு செட் ஆவல..... என்ன உட்டுடு; நான் போறேன்!" என்று சொன்னான் செல்வா.

"தாராளமா கிளம்பு! பட் உன்னோட கேஸ்க்காக நான் செலவு செஞ்ச அமௌண்ட், உன் பழைய ஓனருக்கு நான் குடுத்த காம்பன்ஷேஷன் அமௌண்ட் இதெல்லாம் சேத்து ஒரு ஐம்பதாயிரம் ரூபா கிட்ட ஆச்சு! அத மட்டும் குடுத்துட்டு இந்த நிமிஷமே இங்கருந்து கிளம்பு!" என்றார் சபாபதி சற்றே அழுத்தமான குரலில்.

"யோவ்....உன்னைய எவன்யா எனக்காக துட்டெல்லாம் குடுக்க சொன்னா? சொம்மா நமக்கு வாயால உதவி பண்ணிருக்கன்னு நென்ச்சு டேங்க்ஸ்னு சொன்னா நீயி அம்மாந்துட்ட வேற கட்டி என்னைய வேற எங்கயும் போக உடாம செஞ்சுருக்கல்ல?" என்று பரிதாபமாக கேட்டவனிடம்,

"இது எல்லாரோட நல்லதுக்காகவும் தான் செல்வா! பவி பாவம்டா..... அவள எம்பக்கத்துல கொண்டு வர வைக்க எனக்கு வேற வழியே தெரியல!" என்று அவனை விடவும் பரிதாபமாக அவனுக்குப் பதில் சொன்னார் சபாபதி.

"ரெண்டு மொயத்துல பெரிசா கயிறு ஒண்ண எடுத்துக்க! ஒரு மொனிய ஓஇடுப்புல கட்டிக்க! இன்னொரு மொனிய உம்பொண்ணு இடுப்புல கட்டிக்க! ரெண்டு பேரும் இப்டிதான் பக்கத்துல குந்தினு இருப்பீங்க நைனா! வேற வழியே இல்ல! பத்துரமா ஹோமுக்குப் போயி சேரு; வர்ட்டா?" என்று கேட்ட படி சபாபதிக்கு ஒரு சல்யூட் அடித்து விட்டு தன்னறைக்குள் செல்ல முயன்றவனிடம்,

"நான் போனதுக்கப்புறம் பவிட்ட ஏதாவது தகராறு பண்ணுனன்னு தெரிஞ்சது? எங்கிட்ட செம அடி வாங்குவடா!" என்று சொன்னவரை திரும்பிப் பார்த்து அலட்சியமாக உச்சுக் கொட்டி விட்டு சென்றான் வாகை செல்வன்.

இரவு ஏழு மணியளவில் அவனறையின் முன் நின்று கதவை தட்டினாள் சாம்பவி.

"இன்னாமே வோணும்?" என்று கதவை திறந்த ஒரு நிமிடத்திற்கு பின் கேள்வி கேட்டு கண்களில் ஒரு முறைப்புடன் அவள் முன் நின்றவனிடம் கத்தரிக்கோலை நீட்டினாள்.

"ஏய்.... இன்னா பண்ணப்போற?" என்று கேட்டவனிடம்,

"உன் கையில, கால்ல, கழுத்துல இருக்குற ரோப்ஸ எல்லாம் கட் பண்ணி விடறதுக்காக வந்தேன். ஹேர்கட் அண்ட் ஷேவ் பண்ணி இந்த மண்ட ஓடு, நாய் மூஞ்சி இலை டாலர் எல்லாத்தையும் கழட்டி எறிஞ்சுட்டு ஒழுங்கா மனுஷன் மாதிரி இருக்க! இந்த வீட்ல நீ இருக்குற வரைக்கும் நான் தான் உனக்கு வார்டன்..... நீ யாரு என் பிரைவஸிக்குள்ள வர்றதுக்கு? நீ யாரு என்னை கமாண்ட் பண்றதுக்குன்னு ஏதாவது ஒரு கேள்வி கேட்டன்னு வை! வீட்டுக்குள்ள இருக்குற ரூம்ல படுக்க முடியாது! கார் ஷெட்ல தான் படுக்கணும். புரியுதா?" என்று சொன்ன சாம்பவியிடம் முறைப்புடன்,

"நா ஒநைனாவாண்ட அல்லாத்தையும் பேசிக்குறேன்!" என்று சொன்னான் செல்வா.

"உங்கிட்ட இருக்குறதுலயே கொஞ்சம் க்யூட்டா இருக்குறது உன் லாங்குவேஜ் தான்; ரெக்கமண்டேஷன் கூட்டிட்டு வர்றதெல்லாம் அப்புறம்; கைய நீட்டு!" என்றவளிடம் எரிச்சலடைந்த செல்வா அடங்காத கோபத்துடன் உச்சுக்கொட்டினான்.

அவனது கோபத்தை ஒரு பொருட்டாக மதிக்காத சாம்பவி அவளே அவன் கையைப் பற்றி  வித விதமான வண்ணங்களில் இருந்த கயிறுகளையும், கழுத்தில் அவன் போட்டிருந்த மூன்று, நான்கு பென்டன்ட்களையும் அத்தெறிந்து அதை தன்னுடனே வைத்துக் கொண்டு கிளம்பினாள்.

"இந்தாமே..... அந்த டாலர் பூரா வெள்ளிமே..... ஏய்..... அத எங்கிட்டயே குடுத்துட்டுப் போடீ!" என்று கத்தியவனை திரும்பிப் பார்த்து ஒரு முறைப்பு முறைத்து விட்டு சென்றாள் சாம்பவி.

இளையவள் இணை சேர்வாள்!

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro