Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

💚 இணை 12

நமக்கென பல போர்கள் இருக்கையில்…
வெளியிருந்தொரு
விண்கல் வருவதா…
அதை உடைத்திடு
கதவடைத்திடு…
பின் நாம் போரிடுவோம்…

மொழி மத இன பேதம் இருக்கையில்…
நம்மை அழித்திட வானம் விழுவதா…

அதை தடுத்திடு…
கதை முடித்திடு…
பின்னே நாம் அழிவோம்…
நுரை… சிறிது…
கரை… பெரிது…
தடம்… சிறிது…
இடம் பெரிது…

விழும்… மனது…
எழும்… பொழுது…
துயர்… சிறிது…
உயிர்.... பெரிது…

என்ற பாடலுக்கு ஒருநிமிட ரீல்ஸ் செய்திருந்த செல்வா அதைப் பார்த்து விட்டு "தூ....." என்று அவனே அவன் செய்திருந்த ரீல்ஸ்க்காக துப்பிக் கொண்டான்.

"இத்தயெல்லாம் ஒரு ரீல்ஸ்னு போட்டா எவம்பாப்பான்? நம்ம ஏதாச்சு சொல்லிக்கின்னா அத   இந்த வார்டனம்மா காதுல வாங்குதா? நல்லத செய்றதுனால உனக்கு வ்யூஸ் குறைஞ்சாலும் பரவாயில்ல; இதே மாதிரி செய்யிங்குறா! சரி உடு..... நமக்கு ஒரு யம்மா இருந்து அது இத்த மாதிரி சொல்ச்சுன்னா கேக்க மாட்டமா? அதமேரி நென்ச்சுக்க வேண்டியதுதான்!" என்று தனியாக பேசிக் கொண்டிருந்தவன் இப்போது தான் அவனுடைய சாயங்கால வேலையிலிருந்து திரும்பி வீட்டிற்கு வந்திருந்தான்.

அதிகாலை நாலு மணிக்கே எழுந்து மார்க்கெட்டில் லோடுகளை ஏற்றச் செல்பவன் ஆறு மணியளவில் வீட்டிற்கு வரும் போது சாம்பவி அவனுக்கென ஒரு சின்ன பிஸ்கட் பாக்கெட்டை எடுத்து வைத்து விட்டு சூடாக பால் ஆற்றிக் கொண்டிருப்பாள்.

பாலைக் குடித்து விட்டு, வட்ட பிஸ்கெட்டுகளையும் உள்ளே தள்ளிய பிறகு தான் செல்வாவிற்கு ஒழுங்காக கண்ணே தெரியும்.

"ஒன்ட்ட வேலைக்கு வந்துகினு செல்வா ஒன்னையவே வேல வாங்கி ரொம்ப கஷ்டப்படுத்துறனாமே.....? இப்பல்லாம் நீயா எந்திரிச்சுக்குற! காலையில வேலைய சூளுவா முடிச்சு வச்சுக்குறதுக்கு அல்லா எல்ப்பும் பண்ற!" என்று சிறு வருத்தத்துடன் அவளிடம் கேட்பவனிடம் சிரிப்புடன்,

"எல்ப்பா.... அது ஹெல்ப்டா டாம் பாய்; பைதவே நீ வேலை பார்க்குற மாதிரியெல்லாம் என்னை யாராவது வேலை பாருன்னு சொன்னா நான் செத்தே போயிடுவேன் செல்வா! எனக்கும், உனக்கும் ஒரே ஏஜ் தான் ஆகுது. பட் நீ பிஸிக்கலி எவ்ளோ ஸ்ட்ராங்கா இருக்க...... டயர்டா வர்ற
உனக்கு நான் ஜஸ்ட் ஒரு மார்னிங் ரெஃப்ரெஷ்மெண்ட் ட்ரிங்க் தர்றேன்; ப்ரேக்பாஸ்ட்டுக்காக என்னால முடிஞ்ச ஹெல்ப்ப உனக்கு செஞ்சு தர்றேன்.
இதுல என்ன கஷ்டம்?" என்று பதிலுக்கு கேட்பாள் சாம்பவி.

"நீயெல்லாம் மண்டைக்குள்ள இஸ்ட்ராங்கா இருக்குற ஆளுடா கண்ணு; பெரிய டாக்டராவப் போற ஆளு! உங்கள மாதிரி ஆளுங்க எல்லாம் நம்ப செஞ்சுனிருக்குற வேலைய எதுக்கு செய்யணும் சொல்லு! அதுக்குத்தா எங்கள மாதிரி ஆளுங்க இருக்கம்ல.....?" என்று அவளிடம் கேட்டு விட்டு புன்னகைப்பான் செல்வா.

"எதுக்குடா நீயே செல்வாக்கு இது வேணும், செல்வாக்கு அது வேணும்னு சொல்லிக்குற? உம்பேர நாங்க சொல்றதுக்கு தான பேரு வச்சுருக்க? அப்புறம் அத நீயே எதுக்காக சொல்லிக்குற?" என்று ஒரு நாள் அவனிடம் கேட்டவளிடம்,

"அஆங்.... நீங்கல்லா நம்ப பேர சொல்லிக்கினீங்க நல்லா! இது நமக்கு நாம்பளே வச்சுக்குனது! அதேன் நானே அப்பப்ப எம்பேர சொல்லிப் பார்த்துக்குனேன்!" என்று வாதிடுவான்.

"ஹாய்டா.... குட் ஈவ்னிங்! வொர்க் முடிஞ்சு வந்தாச்சா? கொஞ்ச நேரத்துல நீ ப்ரெஷ் ஆகிட்டு வந்ததும் நாம ஏதாவது ரீல்ஸ் போடுவமா?" என்று கேட்பவளின் சத்தத்தையே இன்று காணோம். வீட்டின் ஹாலில் ஸோஃபாவை அடைத்துக் கொண்டு டீவியைப் பார்க்கும், இல்லை அலைபேசியில் யாருடனவாது ஊர்வம்பு பேசிக் கொண்டிருக்கும் பெரிசுகளையும் காணும்.

"வயிறு வேற பசிக்குது! பாப்பா என்ன செய்யுதுன்னு தெரியலயே?" என்று நினைத்தவன், பெப்பரப்பே என்று ஹாலிலேயே ஸோஃபாவில் கிடந்த அவளது பள்ளிப்பையை பார்த்தான்.

"என்னாச்சு..... இஸ்கூல் பைய என்னாத்துக்கு இப்டிப் போட்டு வச்சுனுருக்குது? நம்ம கன்னுக்குட்டிக்கு என்ன கோவம்னு தெரியலயே?" என்று நினைத்தவன் அந்த இருக்கையில் கிடந்த பெரிய பையை தூக்கிக் கொண்டு மாடி ஏறினான்.

அவர்கள் இருவரது சாப்பாட்டு நேரம் எட்டரையிலிருந்து ஏழரை மணியாக முன் சென்றிருந்தது. மாலையும் வேலைக்கு செல்லும் செல்வாவிற்கு சீக்கிரத்தில் பசித்து விடுவதால், அவன் அவளுடன் வேலையில் இருந்து வந்து அவளுடன் பேச்சுக் கொடுத்தபடியே தோட்டத்தில் உலவிக் கொண்டிருப்பான்.

எலுமிச்சை செடியில் காய்த்திருந்தால் அன்று எலுமிச்சம் சாதம், வெண்டை காய்த்து நின்றால் வெண்டைப் பொரியல்;
சாம்பவி சாம்பார் சாதம் கேட்டால் என்றால் அந்த மெனு; இல்லையென்றால் ரசமும், முட்டைப் பொரியலும்; திடீரென அவனுக்கு கருவாடு சாப்பிட வேண்டுமென தோன்றினால் கருவாட்டுக்குழம்பு என அவர்கள் இருவருக்கும் அந்த மொமெண்ட்டில் என்ன சாப்பிட தோன்றுகிறதோ, இல்லை தோட்டத்தில் என்ன கிடைக்கிறதோ அதுதான் மெனு...... அரை மணிநேரத்தில் இருந்து ஒருமணிநேரம் வரை எதையாவது பேசிக் கொண்டே தோட்டத்து அடுப்பிலேயே சமைத்தும் விடுபவர்கள், சாப்பிட்டு முடித்த பிறகு பாத்திரம் கழுவும் பொறுப்பை செல்வா ஏற்றுக் கொள்வான். சாம்பவி அவனுக்கு  உதவி செய்ய வந்தாலும், அதை மட்டும் ஒத்துக் கொள்ளவே மமாட்டான்.

"போ.... மேல ஏறு! சீக்கிரத்துல
படிச்சுனு படுக்குற வேலயப் பாரு!" என்று தயவு தாட்சண்யமே பார்க்காமல் அவளை அவளது அறைக்கு விரட்டி விட்டு விடுவான்.

சபாபதியின் ஹைஃபையான அடுக்களையைக் காட்டிலும், சாம்பவி அவனுக்கென வாங்கித் தந்த அடுப்பு அவனது உபயோகத்திற்கு மிகவும் வசதியாக இருந்தது. கல்யாணி அவனிடம் சமையலறைக்காக தகராறு செய்ததில் இருந்து அவர்கள் இருவரும் பால், காஃபி குடிப்பதற்காக தவிர அங்கு செல்வதில்லை. சமையலும் தோட்டத்தில் இருந்த அடுப்பில் தான்; பாத்திரம் கழுவலும் தோட்டத்தில் இருந்த குழாயடியில் தான்! இவர்கள் இருவரும் இப்படி தோட்டத்தில் சமைத்து சாப்பிடுறார்கள் என்பதே கல்யாணிக்கு இன்னும் தெரியாமல் இருந்தது.

மாதத்தில் பாதிநாட்கள் ஷாப்பிங்குடன் டின்னர், மீதமுள்ள நாட்களுக்கு தன்னுடைய தோழிகளுடைய வட்டாரத்தில் பார்ட்டி என இருப்பவர்களுக்கு வீட்டின் மாறிய நடைமுறையைப் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை தானே?

ஏதோ பெரிய குடும்பஸ்தன் போல் தினமும் காலையில் லோடு ஏற்றி விட்டு கிளம்பும் போது முட்டை, ப்ரெட் பாக்கெட், காய்கறிகளை வாங்கிச் செல்லும் போது செல்வாவுக்கு மிகவும் குதூகலமாக இருக்கும். ஆனால் இந்த மாதிரியான உணர்வுகள் தவறென்று நினைத்து அவனே அவனது தலையில் ஒரு தட்டு தட்டிக் கொள்வான்.

மாடிப்படிகளை அவளது புத்தக மூட்டையுடன் சற்று சிரமப்பட்டு ஏறி வந்தவன் மூடியிருந்த கதவைப் பார்த்து திகைத்தான்.

"பாப்பா..... உள்ளயாடா இருக்குற? கதவத்தொற!" என்று அவளது அறைக்கதவைத் தட்டியவனிடத்தில் சற்றே செருமிக்கொண்டு,

"நீ கீழ போ செல்வா..... நான் அப்புறம் வர்றேன்!" என்று தளுதளுத்த குரலில் கூறினாள் சாம்பவி.

"ஏ......ம்மே! நீ அழுவுறியா என்ன? கதவத்தொற பாப்பா! இல்லன்னா செல்வா கதவ ஒடச்சிடுவேன்!" என்று கோபம் ஏறிய குரலில் கதவின் வெளிப்புறத்தில் இருந்து அவளிடம் கத்தினான் செல்வா.

"நிம்மதியா அழக்கூட விடமாட்டியாடா? தயவுசெஞ்சு என்னை டிஸ்டர்ப் பண்ணாத! ப்......ளீஸ்!" என்று சொன்னவளின் குரல் கேட்டதும் செல்வா அவளிடம்,

"பாப்பா! இப்ப நான் அஞ்சு எண்ணுவேன். அதுக்குள்ள நீ கதவத்தொறக்கல.......? லாண்ட் லைன் போனுல இருந்து ரூல்ஸ கூப்ட்டுட வேண்டியதுதான்!" என்று சொன்னவன் ஐந்து நொடிகளில் ஒண்ணு, ரெண்டு, மூணு, நாலு, அஞ்சு என்று சொல்லி விட்டு 
அவளது பையுடனே கீழிறங்கிக் கொண்டிருந்தான். அவளது பள்ளிக்கூட பை அவளது அறையில் தான் எப்போதும் இருக்கும் என்று மறந்து போய் விட்டது. ஏன் இப்போது பையை தோளில் மாட்டியிருந்த பிரக்ஞை கூட இல்லை அவனுக்கு.

அவன் பாதிப்படிகள் இறங்கி முடிப்பதற்குள் தன் அறைக்கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்த சாம்பவி, மேலிருந்து அவனைப் பார்த்து,

"டாடிக்கு கூப்டாத!" என்றாள் களைத்த குரலில்.

"எம்மா நேரமா அழுத? இன்னாத்துக்கு இப்டிப் போட்டு ஒன்னிய நீயே வருத்திக்குற? இப்ப இன்னா வோணும் ஒனக்கு?" என்று கேட்டவனிடம்,

"அம்மம்மா கூட சண்ட போட்டேன். அதான்!" என்றாள் மெல்லிய குரலில்.

"நீ.....யா பாப்பா ஒஆயா கூட சண்டை எல்லாம் போட்டுட்ட? என்னாச்சு? கதய மொதல்ல இருந்து சொல்லு கேப்போம்!" என்று சொன்னவன் அவளையும் கூட்டிக் கொண்டு கீழே ஹாலுக்கு வந்து மின்விசிறியை சற்று வேகமாக வைத்து விட்டு, பள்ளிப்பையை கழட்டி வைத்து விட்டு அவளருகில் அமர்ந்து கொண்டான்.

பள்ளிச் சீருடை, அவளுடைய கழுத்துக்கும் சற்று கீழிருந்த பாப் கூந்தலில் கட்டப்பட்டிருந்த ரிப்பன், சாக்ஸ் ஆகியவைகள் கூட கழற்றாமல் இருந்ததை கண்டவன் இவள் வீட்டிற்கு வந்தவுடனே சண்டை ஆரம்பித்து விட்டது போலும் என்று யூகித்துக் கொண்டான்.

"அம்மம்மா இன்னிக்கு ஈவ்னிங் நாலரை மணிக்கு எங்க பெரியப்பா பையன் வைத்தி அண்ணா என்கேஜ்மெண்ட்டுக்குப் போறாங்க! நான் இந்த பங்ஷன்ல கலந்துக்குறதுக்காக ஸ்கூல்ல ஸ்பெஷல் பெர்மிஷன் எல்லாம் வாங்கிட்டு வந்தேன்டா! ஆனாலும் வழக்கம்போல சொல்ற அதே வார்த்தைய சொல்லிட்டு என்னை இங்க விட்டுட்டுப் போயிட்டாங்க! அண்ணா என்கேஜ்மெண்ட்ல பூக்கோலம் போடலாம், எல்லாரோடயும் செமயா என்ஜாய் பண்ணலாம்னு எவ்ளோ ஆசையா இருந்தேன் தெரியுமா? எல்லாம் போச்சு. சரி டாடியோடயாவது போவோம்னு நினைச்சு அவரக் கூப்டா, அவர் ரொம்ப பிஸியாம்! ஏன் செல்வா....... எனக்கு லைஃப்ல எக்ஸைட்மெண்ட்ங்குற ஒரு விஷயம் கிடைக்கவே கிடைக்காதாடா? கஷ்டப்பட்டு படிச்சு கப்ஸ், மெடல்ஸ்னு வாங்கிட்டு வர்றேன். அதையும் இவங்க கையில வாங்கிப் பார்த்துட்டு தூக்கிப் போட்டுடுறாங்க! எனக்கு சம்பந்தமேயில்லாத போட்டில எல்லாம் சேர்ந்து சர்ட்டிபிகேட்ஸ் கூட வாங்குறேன்; ஆச ஆசையா அத வீட்டுக்கு கொண்டு வந்தா அத தொட்டுப் பாக்கக்கூட ஆளில்ல! அம்மா, அப்பா, அம்மம்மா, தாத்தா யாருக்குமே பிடிக்காத பொண்ணா பொறந்ததுக்கு நான் பொறக்காமலேயே இருந்துருக்கலாம்; அந்த லேடி அவங்க ஹஸ்பெண்ட் கிட்ட போறதுக்கு முன்னாடி அவங்களோட யூட்ரஸ்க்கு ஒரு பூட்டு போட்டுட்டு போயிருக்க வேண்டியதுதான...... நானும் அவங்களோட வயித்துல ஃபார்ம் ஆகியிருக்க மாட்டேன்; எல்லாரும் இன்னுங்கொஞ்சம் நிம்மதியாவது இருந்துருப்பாங்க!" என்று சொல்லி வாழ்க்கையில் முதன்முறையாக அவன் முன்பு விசும்பியவளை எழுப்பி நிறுத்தி அணைத்துக் கொண்டான் வாகை செல்வன்.

"என்னை விடு! யாரும் என்னை கண்டுக்க வேண்டாம்! கடைசி வரைக்கும் இப்டியே இருங்க எல்லாரும்! நீயும் என்னை விட்டுட்டு சீக்கிரத்துல போயி கார் ஓட்டு போ!" என்று சொல்லி அவனிடமிருந்து திமிறியவளை வலுக்கட்டாயமாக அவனது அணைப்பிலேயே வைத்திருந்தவன்,

"செல்வாவ கட்டினு இருக்குறதுக்கோசரம் பேஜாராவாத; கோயில்ல அல்லாம் கல்தூண்ல அக்கடான்னு சாஞ்சு ஒக்கார்றதுல்ல..... அந்தமேரி நென்ச்சுக்கடா கண்ணு! பொறக்காம இருந்துருக்கலாம்னு என்னடா பாப்பா பேச்சு இது? அதுங்க ரெண்டும் லூசுக்...... டா! ஒநைனாவுக்கு ஹோம உட்டா ஒரு எழவும் தெரியாது! இதுங்களுக்காக நீ எதுக்குடா அப்டி யோசிச்சுனு கெடக்குற....... எவனும் எக்கேடும் கெட்டுப் போறான்; வா செல்வா உன்ன அங்க இட்டுன்னு போறேன்! இன்னொரு தபா நீ இப்டியெல்லாம் பேசக்கூடாது.... எனக்கு கோபம் வந்தா ஒருநேரம் டப்புன்னு அடிச்சுடுவேன் பார்த்துக்க.... அஆங்!" என்று சொன்னவனின் அணைப்பில் இருந்து விடுபட்டு அவன் கண்களை நோக்கினாள் சாம்பவி.

"இல்ல செல்வா..... இது திவ்ஸ் பங்ஷன் மாதிரியில்ல! என்னோட டாடியோட ரிலேட்டிவ்ஸ் பங்ஷன். அங்க உன்ன கூட்டிட்டுப் போனா நான் என்னன்னு சொல்லி உன்ன இன்ட்ரடியூஸ்........!" என்று சொன்ன படி தயங்கியவளிடம்,

"வூட்ல இருக்குற வேலக்காரன்னு சொல்லு! எனக்கு ஒன்னியும் ப்ரச்சனல்ல! போவோமா?" என்றவன் தன்னுடைய தோளை அழுத்திக் கொண்டு முணங்கிக் கொண்டான்.

"ஒன்னோட இஸ்கூல் பேக்கு இன்னா வெயிட்மே...... பாடிகாட் முனீஸ்வரா நல்லவேளய்யா நம்பளயெல்லாம் நீ பொறக்கசொலவே அறிவுப்புள்ளயா பொறக்க வச்சுனு இருக்குற!" என்று சொல்லி கண்ணை மூடிக் கொண்டு ஒரு கும்பிடு போட்டவனிடம்,

"ஆமா! பாடிகாட் முனீஸ்வரர் தந்த அறிவு தான் இப்டி பிதுங்கி வெளிய வரைக்கும் வழியுது! ஒரு பாத்திரத்துல பத்திரமா புடிச்சுக்க! நம்ம அன்னிக்கு உனக்காக எடுத்துட்டு வந்த புது ட்ரெஸ்ஸ போட்டு ரெடியாகு. நான் இதோ வந்துடுறேன்!" என்று அவனிடம் சொல்லிக் கொண்டு லேசாய் புன்னகைத்த முகமாக மேலே போனாள் சாம்பவி.


இளையவள் இணை சேர்வாள்!

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro