மழைஅரசி
மழைஅரசி !
இவள் கொண்ட கோபம்
மானிடன் இவன் செய்த பாவம்
மன்னித்துவிடு!
மக்கள் நாங்கள்
மகிழ்ச்சி பெற வழிவிடு!
இருக்கும் இடத்தை விட்டு
இல்லாதவர்க்கு அருள்புரிவாய்!
எங்கள் குறைகேட்டு
மழைஅரசியே மன்னித்துவிடு!
உன்னை வேண்டாம்
என்று சொல்லவில்லை
வேறுஒருநாள் வா என்கிறோம்!
இன்று சென்றுவிடு!
உன் ஆதங்கம் போகட்டும்
ஆனந்தம் கொண்டு சென்றுவா!
ஆறுதல் நாங்கள் அடைய
அடைக்கலம் தா!
இந்த வளம் நீ தந்தது
இந்த செழுமை நீ தந்தது
நீயே இதை அழிக்கலாமா?
மூடர்கள் எங்களை வாழ்த்தி
முக்கடலில் சங்கமித்துவிடு
அன்னையே!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro