Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

36

ஆதிரா கத்தியதில் பதறி அடித்து எழுந்து அவளருகில் வந்தவன்.

என்னாச்சு ஆதிரா ஏன் கத்துன.....என்றான் பதறியபடி.

ஆதிரா எதுவும் கூறாமல் அப்படியே அமர்ந்திருக்கவும்..,

அவள் உடல் நிலை சரியில்லையோ என....அடுத்த நொடி அவளது முகத்தை தன் கைகளில் ஏந்தியபடி .,,

உடம்பு எதுவும் சரியில்லையா ..,எதாவதுனா சொல்லு நம்ம ஹாஸ்பிட்டல் போலாம்...

அவன் ஸ்பரிசத்தில் கனவுலகிலிருந்து மீண்டு வந்தவள் அவன் கண்களைப் பார்க்க அதில் பயம் பதட்டம் பரிதவிப்பு இன்னுமொரு சொல்லமுடியாத உணர்வு தெரிந்தது.

தன்னை சுதாரித்துக் கொண்டு
ஏதோ கெட்ட கனவு போல.,..எனக்கு ஒன்றுமில்லை..,

அவள் பதிலில் நிம்மதி கிடைக்கவே தண்ணீர் பாட்டிலை அவளிடம் நீட்டி...

இத குடிச்சிட்டு ரிலாக்ஸ் பன்னிட்டுத் தூங்கு எதையும் போட்டுக் குழப்பிக்காத...என்றவன் சோபாவில் போய் படுக்கவும் சற்று நேரத்தில் உறங்கியும் போனான்...

எவ்வித சலனமும் இல்லாமல் சிறிது நேரம் சக்தியின் முகத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தவள் அப்படியே உறங்கிப் போனால்....

.
.
.
.
.
.
.
.

இன்றோடு மதியழகி வீட்டை விட்டு வெளியேறி நான்கு மாதங்கள் ஆகிறது.

சிறு வயதிலேயே தாயை இழந்து தந்தையின் நிழலில் வாழ்ந்தவள்.ஒரு நொடிக் கூட தன் தந்தையைப் பிரிந்ததில்லை.இந்த நான்கு மாத காலப் பிரிவு அவளை வாட்டியெடுக்க தாங்க முடியாதவளாய் அலுவலகத்தில் மூன்று நாள் விடுப்புக் கேட்டிருந்தாள்.

திங்கள் கோகுலாஷ்டமி செவ்வாய் சுதந்திர தினம் என்பதால் சுலபமாக விடுப்பு கிடைத்த குஷியில் அலுவலகத்திற்கு அருகில் உள்ள பேருந்து நிறுதத்தில் நின்றுக் கொண்டிருக்க எப்பொழுதும் போல வருணின் கார் பத்தடி தள்ளி நின்றுக் கொண்டிருந்தது.

அந்தக் காரையே பார்த்தபடி,...ஏற்கனவே சொல்லாம வீட்ட விட்டு வந்ததுக்கு அப்பா என் மேல ரொம்ப கோபமா இருப்பாரு இதுல இவரு வேற கட்டிக்கப்போறவருனு சொல்லி அந்த கோவத்த அதிகமாக்கி விட்டுட்டாரு.நான் வீட்டுக்குப் போன என்ன அப்பா ஏத்துப்பாரா. ஏத்துக்கிட்டா என்னவிட சந்தோஷமா இருக்கறவங்க இந்த உலகத்துல யாருமே இருக்க மாட்டாங்க.ஆனா அதுக்கப்றம் திரும்பி என்னால இங்க வர முடியுமா. இவரு அன்னக்கி அப்படி பேசலனா எப்படியாவது அப்பா கைல கால்ல விழுந்து கெஞ்சி வந்துருவேன். அய்யோ.....ஒருவேளை அப்பா என்ன போகக் கூடாதுனு சொல்லிட்டா என்ன பன்றது. ம்ச்....பன்றதெல்லாம் பன்னிட்டு ஒன்னுமே தெரியாத மாதிரி உள்ள உக்காந்துருக்கறத பாரு.இந்த பாதுகாப்புக் குடுக்கறதுல ஒன்னும் குறைச்சல் இல்ல ...ம்ஹீம் என முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

அங்கு வருண் மதியை சூம் செய்து அவளது முகபாவனைகளை ரசித்துக் கொண்டிருந்தான்.

இன்று அலுவலகத்தில் தனக்கான வேலை அதிகம் என்பதால் வீட்டிற்கு வர தாமதம் ஆகும் என சக்தி ஆதிராவிடம் போனில்  
கூறி இருந்தான்.

சோபாவில் அமர்ந்து நகத்தை கடித்தபடி நேற்று இரவிலிருந்த அதே யோசனையிலிருந்தாள்.

சக்திக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைத்துத் தர வேண்டும் என கூறும் மனம் அது ரேஷ்மா உடன் தான் எனும் போது அதை மறுக்கிறது.

சக்தி மனதில் ரேஷ்மா இருக்க வாய்ப்பில்லை என்ற உறுதி அவளுக்கு எங்கிருந்து வந்ததது என்பதை அவள் அறியவில்லை.இதற்கு ஒரு முடிவு வேணும்.யாரிடம் இதைப் பற்றி கேட்கலாம் என சிந்தித்தவளின் புத்தியில் பாரதி வந்தாள்.

பாரதி அஸ்வினுடன் இலண்டன் சென்று இரண்டு மாதக் காலம் ஆகிறது.தன் குடும்பத்தினரையும் ஆதிராவையும் பிரிந்திருக்க முடியவில்லை எனினும் அஸ்வினுடன் கிடைத்தத் தனிமையை அவள் ரசிக்காமல் இல்லை.சிறு சிறு ஊடல் கூடல் கலந்த திருமண வாழ்கைகையை இருவரும் ரசித்துக் கொண்டிருந்தனர்.

அடிக்கடி ஆதிராவும் பாரதியும் வீடியோ காலில் பேச அதில் அஸ்வினும் இணைந்துக் கொள்வான்.

வீடியோ காலில் பாரதியை அழைத்தவள்.....

சொல்லுங்க மேடம் எப்படி இருக்கிங்க..,,.

ஃபைன் டி நீ எப்படி இருக்க. அஸ்வின் எப்படி இருக்காங்க...

ம்ம்ம் பைன் டி...

இருவரும் சிறிது நேரம் அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர்.

இதற்கிடையில் ஆதிரா தன்னிடம் ஏதோ சொல்லத் தயங்குகிறாள் என்பதை கவனித்தவள்.

ரொம்ப நேரமா எங்கிட்ட எதோ சொல்லனும்னு நினைக்கிற ஆனா சொல்லமாட்ற.நமக்குள்ள என்னடி எதுவா இருந்தாலும்
சொல்லு.,

நேற்று சக்தி தன்னை அன்னை இல்லம் அழைத்துச் சென்றது அதன் பின் ஹோட்டலில் நடந்தது என அனைத்தையும் அவளிடம் கூறினாள்.

கடைசியாக ஹோட்டலில் நடந்ததைக் கூறும் போது மட்டும் பொசசிவ்னஸ்ஸ பாரு என மனதிற்குள் நினைத்துக் கொண்டவள் வாய்விட்டு சிரித்துவிட ஆதிரா நடந்ததை கூறும் ஆர்வத்தில் இருந்தமையால் அதைக் கண்டு கொள்ளவில்லை.

இப்போ நான் எங்க வீட்டுக்குப் போய்ட்டா சக்திக்குனு யாரும் இருக்கமாட்டங்களே...

ஹோ.,மேடம் அப்படி யோசிக்கிறிங்களா உன்னோட வழில பேசிதான் உன்ன வழிக்கு கொண்டுவரனும்,..

சோ வாட்....

என்ன பாரதி இப்படி சொல்ற,..

வேற எப்படி சொல்றது...உன் பிராப்ளம் சால்வ் ஆனா பத்தாதா நீ எதுக்கு தேவையில்லாதத திங்க் பன்ற...

என்னால அப்படி செல்பிஷ்ஷா இருக்கமுடியாது. எனக்குனு எல்லாத்தையும் பார்த்துப் பார்த்து பன்றவன் சக்தி .

அதுக்கு இப்ப என்ன பன்னனும் னு சொல்ற,..ம்ம்ம் என யோசிப்பது போல் பாவனை செய்தவள்.
ம்ம்,.அந்தப் பொண்ணு பேரு ஹான் ரேஷ்மா அவ கூட சக்திய விரும்பறதா சொன்னல. சக்தியும் விரும்புனதா அவ சொன்னான்னுக் கூட சொன்னியே.,பேசாம இவங்க ரெண்டுப் பேருக்கும் மேரேஜ் பன்னி வச்சிடு சிம்பில் என தோளைக் குலுக்கியவள் ஆதிராவையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

ரேஷ்மாவா...அவள பாத்தாலே தெரியுது திமிரு பிடிச்சப் பொண்ணுனு ...சான்சே இல்ல கண்டிப்பா சக்தி ரேஷ்மாவ விரும்பிருக்கமாட்டான்.நீ வேற ஐடியா இருந்தா  சொல்லு...

இத சக்தி உன்கிட்ட சொன்னாங்களா நான் ரேஷ்மாவ விரும்பலனு.இல்ல நீ தான் கேட்டியா..என்றாள் புருவத்தை உயர்த்தியபடி,.

இல்ல நான் கேக்கல ... ஆனா அந்த மாதிரி எதுவும்னா கண்டிப்பா என்கிட்ட சொல்லிருப்பான்,.

உன்கிட்ட சொல்லிருப்பாங்களா. ஒருவேள அதுக்கு எந்த அவசியமும் இல்லனு சொல்லாம விட்ருக்ளாம்ல...

இல்ல இல்ல அப்படிலாம் இருக்காது,..நீ என்ன கொழப்பாத,,.

இதுல குழம்ப ஒன்னும் இல்ல ஆதி. இதையெல்லாம் உன்கிட்ட சொல்லனும்னு ஏன் எதிர்பார்க்குற. நீ யாரோ தான...

சுரு சுருவென வந்தக் கோவத்துடன்.,.நான் ஒன்னும் சக்திக்கு யாரோ இல்ல. நான் நான்.,என ஆதிரா திக்க,..

அப்பாடி பாயின்ட்டுக்கு வந்துட்டா அப்படியே போட்டு வாங்குவோம்.,வந்த சிரிப்பை சிரமப்பட்டு அடக்கியவள் விடாமல்...

சொல்லு நீ.,.நீ.,.

நான் சக்திக்கு பிரன்டு...என்றவுடன் பாரதி விழுந்து விழுந்து சிரிக்க,..

இப்ப எதுக்குடி சிரிக்கிற...

பிரன்டுனு சொன்னா சிரிக்காம...மேடம் அப்றம் எதுக்கு அந்தப் பொண்ணுங்க கிட்ட ஹீஸ் மை ஹஸ்பன்ட் சோ மைன்ட் யுவர் வேட்ஸ்னு  சொன்னிங்க .பிரன்டுனு சொல்ல வேண்டிதான...

அது...என ஆதிரா இழுக்க...

இப்பக் கூட உன்னால ஒத்துக்க முடியலல.,

என்னத்த...

நீ சக்திக்கு வைஃப் னு தான்.

வாட் வைஃபா.,..

இதுல ஷாக்காக  என்ன இருக்கு நீ சக்திக்கு வைஃப் தான,.

ஆதிரா பதில் கூறாமல் இருக்கவும் .

நான் உன்கிட்ட ஒன்னுக் கேக்றேன் .தயவு செஞ்சு உண்மைய சொல்லு நீ சக்திய விரும்புரியா...

இந்தக் கேள்வியை சற்றும் எதிர்பாராதவள் தடுமாறியபடி ...

இ..இல்ல...

பொய் சொல்லாத ஆதி இப்பக் கூட நான் ரேஷ்மானு சொன்னதும் உன் கண்ணுல காதல் கலந்த பொறாமைய பார்த்தேன்.ஏன் நேத்து நீ அந்தப் பொண்ணுங்கக் கிட்ட அப்படி கோவப்பட்டதுக்குக் கூட சக்தி மேல இருக்குற பொசசிவ்னஸ் னால தான்.

சில நிமிடம் அங்கு மௌனம் நிலவ மீண்டும் பாரதியே பேசத் தொடங்கினாள்..

சக்தியமட்டும் மிஸ் பன்னிராத ஆதி.அவர மாதிரி ஒரு பர்ஸன நான் பாத்ததில்ல.உன்னால சக்தி கூட ரேஷ்மாவ மட்டும் இல்ல வேற எந்தப் பொண்ணையும் வச்சிப் பார்க்க முடியாது .ஏனா நீ சக்திய விரும்ப ஆரம்பிச்சிட்ட அத முதல்ல புரிஞ்சிக்க .அத விட்டுட்டு லூசுத் தனமா எதையும் யோசிக்காத.நான் மறுபடியும்  சொல்றேன் எந்தக் காரணத்துக்காகவும் சக்திய மிஸ் பன்னிராத என்றவள் 
ஆதிராவிற்கு
யோசிக்கத் தனிமையை கொடுக்க எண்ணி இணைப்பைத் துண்டித்தாள்.

பாரதி நினைத்திருந்தாள் சக்தியின் முதல் காதல் ஆதிரா தான் ரேஷ்மா இல்லை என்பதைக் கூறியிருக்கலாம்.ஆனால் இது அவர்கள் இருவரும் மனம் திறந்து பேச வேண்டிய ஒன்று என்பதால் விட்டுவிட்டாள்.

ஆனால் இது
எதிர்காலத்தில் சக்திக்கும் ஆதிராவிற்கும் இடையே    வரப் போகும் பிரிவிற்கு முதல் விதையாக இருக்கப்போகிறது என்பது யாரும் அறியாத ஒன்று.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro