Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

25

சக்தி தன்னிலை மறந்து அவளை நெருங்கிக் கொண்டிருக்க ஆதிரா கையில் தோசையுடன் திரும்பினால்.

சக்தி கையில் தட்டுடன் தன்னருகில் நின்றிருப்பதை கவனித்தவள் தோசையை தட்டில் வைத்து விட்டு.

சாம்பாரா சட்னியா சக்தி,,...

அவன் எதுவும் பேசாமல் அசையாது நிற்கவும் சக்தி என உரக்க அழைத்தாள்.

காதல் மயக்கத்திலிருந்து வெளியே வந்தவன்

ஹான்..,என்ன?  என்றவனின் மனதில் பயம் குடி கொண்டது.தன் எண்ணவோட்டத்தை அவள் அறிந்திருப்பாளோ என

என்ன கனவுக்கான்றியா சாம்பார் வேணுமா சட்னி வேணுமானு கேக்றேன் அப்படியே நிக்கிற.

அவள் இயல்பாக பேசுவதில் நிம்மதி அடைந்தவன்.

சட்னி மட்டும் போதும் என தன்னை கடிந்தவாறே ஸ்லாப்பில் ஏறி அமர்ந்துக் கொண்டான்.

அமைதியாக இருந்தால் மீண்டும் இது போல் எதுவும் நடக்கக் கூடும் என பேச்சைத் தொடங்கினான்.

ஆதிரா இன்னக்கி குஷியா இருக்க என்ன ஸ்பெஷல் என பேச்சுக் கொடுத்தான்.

அவன் கேட்டதும் உண்மை தானே அவள் முகத்தில் ஒரு வித பொலிவு தெரியவே இந்த கேள்வியைக் கேட்டான்.

அதுவரை தோசை ஊற்றிக் கொண்டிருந்தவள் அதை மூடி வைத்து சக்தியின் புறம் திரும்பி நின்றபடி மெல்லிய சிரிப்புடன்.

ஆமாம் குஷியாகத் தான் இருக்கேன். இன்னக்கி நம்ம வீட்டுக்கு ஒரு கெஸ்ட் வந்தாங்க அதான். யாருனு கண்டுபிடிப் பார்ப்போம்.

பாரதி தான என சக்தி சிறிதும் யோசிக்காமல் கூற

ஹேய் செம்ம எப்படி கண்டுபிடிச்ச .

அதெல்லாம் அப்படி தான் என்றவனிடம் பாரதியை பெண்பார்க்க வந்தது அதன் பிறகு நடந்தது அனைத்தையும் கூறியவள்

இன்னும் டென் டேஸ்ல என்னோட பிரண்டுக்கு கல்யாணம் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. எப்படா அவள கல்யாண  கோலத்துல பார்க்கலாம்னு இருக்கு .சீக்கிரம் இந்த டென் டேஸ் போகனும் என்றாள் துள்ளளுடன்.

அவளது துள்ளளை ரசித்துக் கொண்டிருந்தவனிற்க்கு அப்போது தான் ஒன்று தோன்றியது.

அவ மட்டும் போகப் போறால நான் அவ கூட வரதப் பத்திக் கேக்கவே இல்ல என மனதில் புலம்பிக் கொண்டிருந்தான்.

அவள் இங்கு வந்த நாள் முதல் அவளைத் தன்னுடனே வைத்திருந்தவன் அவளை பிரியும் அந்த ஒரு நாளுக்காக வருந்திக் கொண்டிருந்தான். பாவம் சக்தி அறிந்திருக்கவில்லை ஆதிரா இன்னும் கொஞ்சக்காலமே அவனுடம் இருப்பாள்.பிரிந்துப் போகக் கூடும் அதுவும் தன்னால் தான் என்பதனை.

பிறகு ஆதிராவிற்கு தோசை ஊற்றி கொடுத்தவன் அதே யோசனையிலிருந்தான்.

தாமாக அவளிடம் கேட்கவும் முடியாது. அவளாகவே வந்து கேட்கட்டும் இன்னும் பத்து நாட்கள் இருக்கிறதே என விட்டுவிட்டான்.

நாட்கள் மெல்ல நகர மதியோ குற்ற  உணர்ச்சியில் சிக்கிக் கொண்டிருந்தாள்.

தான் இங்கு வந்தது சரிதானா.அவர்கள் தன்னை மீண்டும் ஏற்றுக் கொள்வார்களா என அவளது  ஒரு மனம் குழப்பத்தில் தத்தளிக்க இன்னொரு மனமோ நீ செய்தது சரி.ஆணோ பெண்ணோ லட்சியம் முக்கியம் என ஊக்குவித்துக் கொண்டிருந்தது.

இதற்கிடையில் வருணின் மீது அவளிற்கு ஏற்பட்ட ஈர்ப்பு.அவன் கண்களில் காதலை உணர்ந்தவள் தானும் அவன் மீது காதலில் விழுந்து விடுவோமோ என்ற பயத்தில் அவனிடமிருந்தும் காதல் நிறைந்தப் பார்வையிலிருந்தும் சற்று விலகியே இருந்தாள்.
சில சமயம் தன்னையே மறந்து அவனது குறும்புகளை ரசித்துக் கொண்டிருப்பாள்.மற்ற பெண்களிடம் அவன் சிரித்துப் பேசும் போது வரும் கோவத்தை வெளிக்காட்டாமல் அடக்கிக் கொள்ள அந்த இரு மனங்களையும் பட்டிமண்டத்திற்கு அழைத்து வந்து விடுவாள்.

வருணிற்கோ காதல் நிறைந்த அவளது   கண்களைப் பார்க்கும் போதெல்லாம் அவளை அந்த கணமே தன்னவளாக்கிக் கொள்ள நெஞ்சம் ஏங்கும் ஆனால் மறு கணமே அவளது பார்வையில் ஏற்படும் (வெறுப்பு)  அவனைப் பாடாய் படுத்தும்.

அவளிடமே சென்று கேட்டுவிடலாம் என்ற உணர்வை அடக்கிக் கொள்வான்.

இவ்வாறாக இவர்கள் இருவருக்கிடையில்  காதல் கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருந்தது.

பாரதிக்கும் அஸ்வினிற்கும் இடையே புரிதல் அதிகரித்திருந்தது.

இருவரும் தங்கள் வாழ்க்கையின் பயணத்தைப் பற்றிய கனவுலகில் மிதந்தனர்.

நிஷாவின் நிலையோ இதற்கு எதிர்மறையாக இருந்தது.விரும்பியவனை மறக்கமுடியாமல் துடித்துக் கொண்டிருந்தாள்.

மதன் தான்     ஆதிராவின்    மீதிருந்த வன்மத்தை வளர்த்துக் கொண்டிருந்தான்.

அவ்வப்போது நிஷாவை சந்தித்து    மதன் தன் காதலை உணர்த்தினாலும் அதை அவள் நம்பும் நிலையில் இல்லை.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro