Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

KADHAL 31


காலிங் பெல் ஒலி கேட்க, அது ஊர்வியாக இருக்கும் என்ற எதிர்பார்ப்புடன் சென்று கதவை திறந்த சித்தார்த்துக்கு ஏமாற்றமே மிஞ்சியது. வாசலில் மிருணாளினி, கார்த்திக், உமையாள் மூவரும் நின்றிருந்தனர்.

"உள்ள வாங்க" என்று அழைத்துவிட்டு, முகத்தை தொங்க போடு கொண்டு உள்ளே சென்றான் சித்தார்த்.

"யாரு உமையாள் இது" என்று கார்த்திக்கை பார்த்து "யாரு இது?" என்று கேட்க, "என்னை எதுக்கு கேக்கறீங்க? உங்க மருமகளை கேளுங்க. இந்த தடிமாடை நான் ஏதோ இடுப்புல வச்சி தூக்கிட்டு வந்த மாதிரி என்னை கேக்கறீங்க?" என்று உமையாள் அவன் மீது இருந்த கோபத்தில் இங்கு பொறிய, "ஹேய். நிறுத்து நிறுத்து. தெரிஞ்சா சொல்லு. இல்லைன்னா தெரியலன்னு சொல்லு. அதை விட்டுட்டு. பேசிகிட்டே போற. கிழிந்த வாயி" என்று கார்த்திக் அவளை அடக்கி, அவன் யாரென அவனே கூறிக் கொண்டான். அவனை அன்புடன் வரவேற்றார் ஜானகி. "நீயும் உட்கார்ந்து சாப்பிடு பா" என்று ஜானகி கூற, உமையாளை பார்த்து சிரித்து கொண்டே சாப்பிட அமர்ந்தான் கார்த்திக்.

"பெரியம்மா. என்ன சாப்பிட கூப்பிடவே இல்ல. இவனை மட்டும் கூப்புடுறீங்க?" என்று உமையாள் கேட்க, "இப்போ நான் உன்னை சாப்பிட கூப்பிடலைனா, சாப்பிட மாட்டியா?" என்று ஜானகி காலை வார, குபீரென சிரித்தான் கார்த்திக். "பெரியம்மா. நீ என்னை கலாய்ச்சது பரவாயில்லை. ஆனா இந்த தடிமாடு முன்னாடி இப்படி கலாய்ச்சி தொலைச்சிட்டயே" என்று தலையில் அடித்து கொண்டாள் உமையாள். "என்னடி இது. வயசுல பெரியவங்கள இப்படி அவன், இவனு பேசுறது மட்டும் இல்லாம, இப்படி மரியாதை இல்லாம தடிமாடுனு சொல்ற" என்று அதட்ட, அதற்கும் கார்த்திக்கிடம் இருந்து சிரிப்பு வந்தது. அவன் விழுந்து விழுந்து சிரிக்க, அவனை பார்த்து உமையாள் முரைத்து கொண்டிருக்க, "ஹே நண்டு. என்ன பண்ற? ஏதோ செம காமெடி ஆகா ரியாக்ஷன் குடுக்கற?" என்று கார்த்திக் கேட்க, "அட சொரணை கெட்டவன். உன்னை பாத்து மொரைக்குறேன். நீ காமெடி ஆகா இருக்குனு சொல்ற?" என்று உமையாள் உர்ரென்று முகத்தை வைத்துக்கொண்டு கேட்டாள்.

"அட பாவமே. மொறச்சியா? இனிமே சொல்லிட்டு பண்ணு. எனக்கு சிரிப்பு சிரிப்பாக வருது" என்று அவன் கூற, "பெரியம்மா. நீ முதல எனக்கு சாப்பாடு எடுத்து வை. இவன் கிட்ட பேசி பேசியே எனக்கு பசி எடுத்து போகுது" என்று கூற, "அடிப்பாவி. அதுக்குள்ள நெஸ்ட் ரவுண்டு ஆ?" என்றான் கார்த்திக். "என்ன பாத்து கண்ணு போடாத. அப்புறம் எனக்கு வயிறு வலிக்கும். பெரியம்மா என்ன சாப்பாடு? என்று உமையாள் கேட்க, "இட்லி தான்" என்றார் ஜானகி. "என்னது இன்னைக்கு இட்லி ஆ? டெய்லி இட்லி, தோசை தானா? ஒரு நாள் சவுத் இந்தியன், ஒரு நாள் நோர்த் இந்தியன், ஒரு நாள் சைனீஸ், ஒரு நாள் இத்தாலியன் அப்டினு வித விதமாக செய்ய வேண்டாமா?" என்று உமையாள் கேட்க, "அம்மா தாயே. நீ கல்யாணம் பண்ணிட்டு போனதுக்கு அப்புறம் உன் புருஷனுக்கு இப்படி விதவிதமா செஞ்சி போடு. இப்போ என்னை போடு தாளிக்காத" என்று ஜானகி கூற, "ஒரு சின்ன திருத்தம் ஆண்ட்டி. இவ வித விதமாக செஞ்சி போடா மாட்ட. இவளுக்கு சாப்பிட மட்டும் தான் தெரியும். அவ புருஷனை தான் torture பண்ணுவா. வித விதமாக சாப்பாடு செய்ய சொல்லி. பாவம் எந்த அப்பாவி மாட்ட போறானோ" என்று கார்த்திக் சிரிக்க, அவன் சிரிப்பில், ஜானகி, மிரு இருவரும் இனைந்து கொண்டனர்.

"ஹான். இது நல்ல ஐடியா வா இருக்கே. பேசாம நம்ப ஒரு நல்ல செஃப் ஆகா பாத்து கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தான்" என்று உமையாள் கூற, மீண்டும் சிரிப்பொலி எழுந்தது. 


சித்து அபி இருவர் முகத்திலும் துளி சிரிப்பு கூட இல்லை. அதை உமையாள் கவனிக்காமல் இல்லை.

"எங்கப்பா தங்க போற " என்று ஜானகி கேட்க," ஹோட்டல் ல தான் தங்கனும் " என்றான் கார்த்திக். "நம்ப வீட்டுலயே தங்கிக்கோ பா.. நீ எதுக்கு வெளிய தங்கிகிட்டு" என்று ஜானகி வற்புறுத்த, சரி என தலை அசைத்தான் கார்த்திக். கார்த்திக்கை அபி ரூம் இல் அபி உடன் தங்கிக்கொள்ள சொன்னார். அவனும் அபி உடன் செல்ல, அவனை இழுத்து அவன் காதோரம் சொன்னால் மிருணாளினி, "சித்தார்த் அண்ணா யாரு தெரியுமா? நம்ப சசிரேகா சித்தி உடைய பையன்". "என்ன?" என்று வியந்தான் கார்த்திக். "உண்மையா தான்" என்று மிருணாளினி உறுதியுடன் கூற, சித்து அறை நோக்கி விரைந்தான் கார்த்திக். சுவற்றை வெறித்து பார்த்துக்கொண்டு எதையோ யோசித்து கொண்டிருந்த சித்தார்த்தின் யோசனையை கலைக்கும் வண்ணம் அவனை அழைத்தான் கார்த்திக். "வாங்க ப்ரோ." என்று சித்து உள்ளே அழைக்க, அவன் அருகில் சென்று அமர்ந்தவன். "என்ன இது? ப்ரோ ன்னு கூப்புட்ற. ஒன்னு கார்த்திக் னு பெயரை சொல்லி கூப்டு. இல்லை அண்ணா னு கூப்டு. ப்ரோ னு கூப்பிட்டா ஏதோ தூரமா இருக்க மாதிரி இருக்கு" என்று கார்த்திக் கூற அமைதியாகவே இருந்தான் சித்து. "ஒரு வேலை தூரமாவே இருகாலம்னு முடிவு பண்ணிட்டியோ" என்று கார்த்திகை மீண்டும் கேட்க, அவனை கட்டி கொண்டான் சித்து. கண்களில் கண்ணீருடன் "அண்ணா" என்று அழைக்க, கார்த்திக்கின் கண்களிலும் ஓர் இரண்டு கண்ணீர் துளிகள் எழும்பியது. "தெரிஞ்சோ தெரியாமலோ உங்க அம்மா செத்ததுக்கு, என் அம்மா காரணம் ஆகிட்டாங்க. அந்த கோவம் என் மேல இருக்குமோனு தான் அப்டி கூப்பிட்டேன்" என்று சித்து கூற, "எங்க அம்மா கு உன் அம்மா மேல எவளோ பாசம் தெரியுமா? அதுல பாதி கூடவா உன்மேல எனக்கு இல்லாம போயிடும்" என்று கார்த்திக் கூறி, சித்துவின் கண்களை துடைத்து விடும் நேரம் உள்ளே நுழைந்தாள் உமையாள்.

"ச்சை ச்சை. என்ன நடக்குது இங்க. ஒரே அழுகாச்சி சீன் ஆ இருக்கு. டேய் கருப்பட்டி பணியாரம். என்ன டா பண்ண என் மச்சானை?" என்று கேட்க, "அப்டியே உங்க மச்சான் வயசு பொண்ணு. நாங்க ஏதாவது பண்ணிட்டோம் னு அழுவுறாரு. போ டி பஜாரி. வந்துட்டா பெருசா. எனக்கும் என் தம்பிக்கும் நடுவுலே ஆயிரம் இருக்கும். உனக்கு என்ன?" என்றான் கார்த்திக்.

"அதேதான் நானும் சொல்றேன். எனக்கும் என் மச்சானுக்கு இடைல, பேசுறதுக்கு ஆயிரம் இருக்கும். அதெல்லாம் உன் கிட்ட சொல்ல முடியாது. நீ இடத்தை காலி பண்ணு" என்று வாசலை நோக்கி கை காட்டினாள் உமையாள்.

"சரி நண்டு. எனக்கும் தூக்கம் வருது. நான் போய் என் மச்சானை பாக்கறேன். நீ உன் மச்சானை பாத்துக்கோ" என்று உமையாளிடம் கூறி விட்டு, "தம்பி. பாத்து சுதானமா இருந்துக்கோ. இந்த நண்டு ஏதாவது பண்ணிட போகுது" என்று சித்துவிடம் கூறிவிட்டு சென்றான். "ஆமா. இவங்க தம்பி அப்டியே வயசு பொண்ணு. நாங்க ஏதாவது பண்ணிடுவோம் பாரு" என்று அவன் டயலாக் ஐ அவனுக்கே கூறினாள் உமையாள்.

"என்ன ஆச்சு சித்து. நானும் வந்ததில் இருந்து பாத்துட்டு தான் இருக்கேன். முகமே சரி இல்ல" என்று உமையாள் கேட்க, அவளிடம் எதையும் மறைக்காமல் ஊர்வி தொலைந்து போன விஷயத்தை கூறினான் சித்து.

ஊர்விக்கு மயக்கம் தெளிய, சுற்றி முற்றி தெரிந்தவர்கள் யாரேனும் இருப்பார்களா என்று பார்க்க, அதில் பயன் எதுவும் இல்லை. சுற்றி நிற்பவர்களின் ஒரு தெரிந்த முகம் கூட இல்லை. நன்குபெருத்த உடல்வாகு, சவரம் செய்யாத கரடி போன்ற முடியுடைய முகம் என்று கரடுமுரடாக நான்கு பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் பார்க்கும் போதே உடல் நடுங்கியது ஊர்விக்கு.

"டேய் அம்மா எழுந்துட்டாங்க. ஐயா கு போன் பண்ணி சொல்லுடா" என்று ஒருவன் பரபரக்க, போன் ஐ எடுத்துக்கொண்டு வெளியே சென்றான் வேறொருவன். தான் எங்கே இருக்கிறோம் என்றும் தெரியவில்லை அவளுக்கு. ஏதோ கட்டி முடியாத கட்டிடம் என்று மட்டும் தெரிந்தது. பெயிண்ட் அடிக்காமல், பினிஷிங் செய்யாமல் இருந்த அறையில் அவளை உட்கார வைத்திருந்தனர். இப்போது என்ன செய்வது என்று யோசித்தவள், போன் இருக்குமா என்று அவள் பாக்கெட் ஐ தடவி பார்க்க, அவள் பாக்கெட்டில் அவள் போன் இல்லாதது தெரிய வந்தது. என்ன செய்யலாம் என்று யோசித்தவளுக்கு அவள் அருகில் நிற்பவனின் பாக்கெட் இல் இருக்கும் போன் கண்ணில் பட்டது. அவனையே பாத்துக்கொண்டிருந்தவளை பார்த்து "என்ன" என்றான் அவன். "வாஷ்ரூம் போகணும்" என்று அவள் கூற, அவள் அருகில் வந்து கட்டை அவிழ்த்து விட்டான் அவன். அந்த நேரத்தில் அவன் பாக்கெட் இல் இருந்து போன் ஐ எடுத்து அவள் பாக்கெட் குள் சொருகிக்கொண்டாள்.

அவன் கட்டை அவீழ்த்து விட்டு வாஷ்ரூம் இருக்கும் இடத்தை நோக்கி கை காட்ட, விட்டால் போதும் என்பது போல சென்றால். "ஹே நில்லு" என்று அவன் அழிக்க உடம்பெல்லாம் வேர்த்து விட்டது ஊர்விக்கு. "போன் எடுத்து செல்வதை கவனித்திவிட்டானோ என்ற பதட்டத்துடன் திரும்பி பார்த்தாள். "ஒழுங்கா போய்ட்டு வா. தப்பிக்க ஏதாவது ட்ரை பண்ணே...அப்புறம் உன் உயிருக்கு உத்திரவாதம் இல்ல" என்று அந்த அடியாள் கூற, சரி என்பது போல தலை அசைத்து விட்டு உள்ளே சென்றாள். 

இங்கு உமையாள் சித்துவுக்கு தைரியம் சொல்லி தேத்திக்கொண்டிருக்க சித்துவின் போன் சிணுங்கியது. ஏதோ தெரியாத எண்ணில் இருந்து போன் வர, அதை அட்டென்ட் செய்தான். "ஹலோ" என்று ஊர்வி குரல் கேட்க, "ஊர்வி எங்க இருக்க? எப்படி இருக்க? சேப் ஆ?" என்று சித்து பதட்டமாக கேள்விகளை அடுக்கி கொண்டே போக, "சித்தார்த். நான் எங்கே இருக்கேனு தெரியல. இங்க நாலு பேரு தாடி மாடு மாதிரி இருக்காங்க. இப்போ இப்போ நான் வாஷ்ரூம் ல இருந்து திருட்டுத்தனமா பேசுறேன். அதுவும் இங்க இருக்க ஒருத்தவன் போன் ஐயே திருடி பேசுறேன். எனக்கு ரொம்ப பயமா இருக்கு சித்தார்த்" என்று ஊர்விவெளியில் இருப்பவர்கள் செவியில் விழாத வண்ணம் பொறுமையாக  கூற, "ஊர்வி, பொறுமையா இரு மா. நீ எங்க இருக்கேனு ஏதாவது ஒரு அடையாளம் சொல்லு ஊர்வி" என்று கேட்க, "எனக்கு தெரியல சித்தார்த். மயக்க மருந்து குடுத்து தான் கூட்டிட்டு வந்தாங்க. அந்த ரூம்லயும் ஜன்னல் எல்லாம் மூடி தான் இருந்துச்சு" என்று சொல்லி கொண்டு இருக்கும்போதே ஊர்வி கண்களுக்கு தெரிந்தது வாஷ்ரூம் இல் இருக்கும் வெண்டிலேட்டர். அதை சித்துவிடம் கூற, அந்த வெண்டிலேட்டர் வழியாக வெளியே எட்டி பார்க்க சொன்னான். அது வழியாக ஏதாவது தெரியுதா என்று பார்க்க சொன்னான். அது உயரத்தில் இருந்ததால் ஊர்விக்கு எட்ட வில்லை. அங்கு இருந்த பக்கெட் ஐ கவிழ்த்து போட்டு அதன் மீது ஏறி வெளியில் பார்த்து அவள் கண்ணில் பட்டதை கூறினால். அவளுக்கு தான் முதல் மாடியில் இருப்பது அப்போது தான் தெரிந்தது. "ஊர்வி. ஏதாவது நமே போர்டு ஏதாவது இருக்கா? இல்ல வேற ஏதாவது அடையாளங்கள் சொல்லு" என்று கேட்க, "இங்க உமா மஹேஸ்வரி ப்ளூ மெட்டல்ஸ் னு ஒரு போர்டு இருக்கு. வேற எதுவும் இல்ல" என்று கூற, வெளியில் இருந்த அடிஆட்களில் ஒருவன் வேகமாக கதவை தட்டி, "இன்னும் என்ன பண்ற?" என்று கத, அது சித்துவின் செவிகளுக்கு எட்டியது. "இது போதும் ஊர்வி. நான் வந்துட்டே இருக்கேன். நீ தைரியமாக இரு" என்று கூறி போன் ஐ வைத்தான். 

ஊர்வி முகத்தை கழுவி கொண்டு வெளியே சென்று, அந்த போன் ஐ அங்கு இருந்த ஒரு மேஜை மீது வைத்து விட்டு, அவள் இடத்தில் அமர்ந்து கொள்ள, அவர்கள் அவளை மீண்டும் நாற்காலியோடு கட்டினார்கள்.

சிறிது நேரத்தில் மயூரன் ஊர்வி இருக்கும் இடத்திற்கு வந்து விட, அங்கு சித்துவோ யாருக்கோ அவசரமாக போன் செய்து கொண்டிருந்தான்.


late uds dhaan.. irundhaalum adjust panikonga paa...

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro