
இணை பிரியாத நிலை பெறவே -4
சீதா நாளைக்கு திருமணம் என்ற எண்ணத்தில் உறக்கம் இன்றி அமர்ந்திருந்தாள் அவளை கவனித்த சேகர் அவள் அருகே வந்தார்.
சேகர் :என்ன மா தூங்கலியா நாளைக்கு கல்யாணம் இல்ல சீக்கிரம் எழுந்திருக்கணும் இல்ல
சீதா :ஏம்ப்பா பொண்ணுங்களுக்கு மட்டும் கல்யாணம் நாங்க மட்டும் ஏன் எங்க குடும்பத்தை விட்டுட்டு இன்னோரு குடும்பத்துக்கு போணும். எனக்கு பயமா இருக்கு பா அங்க எப்படி இருப்பேன் எல்லாத்தையும் எப்படி சமாளிப்பேன். எனக்கு எதுவுமே புரியல.
சேகர் :எனக்கு மட்டும் ஆசையா உன்ன அனுப்பணும்னு ஆனா இது பெத்தவனா என்னோட கடமை மா. கல்யாணம் ஆகி உன்னோட அம்மாவை வீட்டுக்கு கூட்டிட்டு வர்றப்போ அப்படி அழுதா எனக்கு அப்போ பெருசா தெரியல ஆனா எம்பொண்ணை இன்னொருத்தருக்கு தரணும் நினைக்கிறப்போ தான் முடியல (என்று கண் கலங்கினார் )
சீதாவை தேற்ற வந்தவரை இப்போ சீதா தேற்றி கொண்டிருந்தாள். அப்போது அங்கே சுப்ரதா வந்தார்.
சுப்ரதா :என்ன அப்பாவும் பொண்ணும் அழுற போட்டியில் கலந்துக்க போறிங்களா
சீதா :ஆமா நீங்க மட்டும் உங்க கல்யாணத்தபோ அழலியா
சுப்ரதா :நான் அழுதேன் தான் ஏன்னா உங்க அப்பா அப்போ அப்டி
சீதா :எங்க அப்பாக்கு என்ன அவர் எப்போவும் நல்ல அப்பா
சுப்ரதா :ஆமா உன்னோட அப்பா சுத்த தங்கம்தான் ஆனா கல்யாணம் ஆனப்போ எப்படி இருந்தாருன்னு கேளு
சீதா :அம்மா என்ன சொல்ராங்க
சேகர் :கல்யாணம் ஆன புதுசுல எனக்கு குடிக்கிற பழக்கம் இருந்திச்சு அப்புறம் சமபாதிக்கிற பணம் பாதிதான் அம்மாகிட்ட குடுப்பேன் சில சமயம் இதனால சண்டை கூட வரும்.
சேகர் சொல்ல சொல்ல சீதா கேட்டுக்கொண்டிருந்தாள்.
சீதா :ஆனா நீங்க குடிச்சு நான் பார்த்ததில்லையே
சேகர் :அதுக்கு காரணம் நீதான்
சீதா :நான் பாட்டுக்கு ஊதாரித்தனம்மா இருந்தேன் அப்போதான் நீ பொறந்த அப்பான்னு கூப்பிட்ட.நீ முதன் முதலில் நின்னது என்ன பிடிச்சுதான். அப்போ தோணிச்சு எம்பொண்ணு நான் ஒழுங்கா இல்லனா எப்படி மத்தவங்க முன்னாடி தல நிமிர்ந்து நிப்பான்னு . என்னோட தங்க பொண்ணு நீ வந்த பொறுப்பும் தானா வந்துச்சு. இப்போதான் என்னோட கைய புடிச்சு நடக்க ஆரம்பிச்ச மாதிரி இருக்கு அதுக்குள்ள உன்ன இன்னொருத்தர் கைல புடிச்சு குடுக்க போறேன்
இம்முறை சீதாவும் சேகரும் அழ நிரஞ்சனா வர அங்கே ஒரு பாச அலை அடித்து ஓய்ந்தது. பிறகு கல்யாண வேலை பார்க்க சேகர் செல்ல நிரஞ்சனா தன் தோழிகளை பார்க்க சென்று விட்டாள். சீதாவும் உறங்க சென்று விட்டாள்.
மறுநாள்
தான் உடுத்தியிருந்த புடவையில் இருந்து மாமியார் அளித்த புடவைக்கு மாறினாள். சீதாவிற்கு ஒப்பனை நடக்க ஒப்பனையாளர் சீதா கூறியது போல எழிமையாக ஒப்பனை செய்தார் ஆனாலும் அது சீதாவை அது மிக அழகாக காட்டியது
ராம் வீடு
ராம் :ஏன் பேண்ட் ஷர்ட் போட்டுட்டு இருக்க கூடாதா. இந்த மாதிரி
வேட்டி சட்டை தான் போடணுமா
ஜெய் :ஆமா டா இப்போ உன்னை கண்ணாடியில் பாரு எவ்ளோ கம்பீரமா இருக்கேன்னு
ராம் :என்னமோ போ சரி வா அம்மாவை போய் பாக்கலாம்
ஜெய் :சரி
ஜானகி :என் கண்ணே பட்டுடும் போல
பாலகிருஷ்ணன் :சரி நீயே கண்ணு வைக்காத. அட என்ன ஜெய் நீ ஏன் வேட்டி சட்டை போடல
ஜெய் :இல்லப்பா எனக்கு இதான் செட் ஆகும்
ஜானகி :ஜெய் நீ அவனுக்கு தம்பி மாதிரி நீயும் மாப்பிள்ளை வீட்டுக்காரங்க மாதிரி வரணும் இந்த டிரஸ் ரிசப்சனுக்கு போட்டுக்கோ இப்போ கல்யாணத்துக்கு எடுத்ததை போடு
ஜெய் :அம்மா பேச்சுக்கு மறு பேச்சு இல்ல
ஜெய்யும் வேட்டி சட்டையில் வந்தான்
ராம் :என்ன ஒரு கம்பீரம்
கோவில்
ராம் மணமேடையில் இருக்க அவனுக்கு புகையை சமாளிக்க கஷ்டமாக இருந்தது
ஐயர் :பொண்ண அழைச்சுட்டு வாங்கோ
சீதா நடந்து வர அவளையே பார்த்துக்கொண்டிருந்தான் ராம்
ஜெய் :டேய் எல்லாரும் பாக்குறாங்க டா
அவனுடைய அழைப்பில் நிஜ உலகிற்கு வந்தான் ராம்.
ஐயர் தாலியை கட்ட சொல்ல சீதாவின் கழுத்தில் தாலியை கட்டினான் ராம்.
சீதா (m.v): இனி இன்பமோ துன்பமோ வாழ்க்கை முழுக்க இவர் கூடத்தான்.
ராம் (m.v) :எனக்கே தெரியல
கல்யாணம் இரவு நிகழ்ச்சியும் சிறப்பாக முடிந்தது இடையில் புகைப்படம் எடுப்பவர் வேறு ரொமான்டிக்கா எடுக்குறேன்னு சீதாவையும் ராமையும் வச்சி செஞ்சிட்டார். ரெண்டு பேரும் அவர் சொல்றதை எல்லாம் செய்தனர் வேற வழி பெத்தவங்களுக்கு சந்தேகம் வர கூடாது இல்லையா. நிரஞ்சனா ஜெய்யின் கேலி கிண்டல் எல்லாம் முடிந்து இப்போது தன்னோட புகுந்த வீட்டிற்கு செல்லும் நேரம் வந்துது
சுப்ரதா :இங்க பாரும்மா நான் சொன்னதை நியாபகம் வச்சுக்கோ சின்ன சின்ன சண்டை வந்தாலும் பொறுத்து போமா. பொறுமை ரொம்ப முக்கியம். நான் ஏற்கனவே சொன்னதுதான் அப்பா ஒழுங்கா இல்லன்னு அம்மா கோச்சுட்டு போயிருந்தா இண்ணைக்கு நம்ம குடும்பம் இவ்ளோ தூரம் வந்துருக்காது. அதனால மாப்பிள்ளை வசதியா வளந்தவர் அவர்கிட்டயும் அவர் குடும்பத்துகிட்டயும் அனுசரிச்சு போமா.
ஜானகி :என்ன சம்மந்தி சொல்றா எங்க பொண்ணு
சுப்ரதா :ஒண்ணும் இல்ல சம்மந்தி
ஜானகி :நீ பயப்படாதம்மா என்ன உன்னோட பிரண்ட்டா நினைச்சிக்கோ கொஞ்சம் வயசாயிடுச்சி அட்ஜஸ்ட் பண்ணிக்கோ
அவர் சொல்வதை கேட்டு சீதா சிரித்தாள்.
சேகர் ராமை தனியாக அழைத்து சென்றார்.
ராம் :என்ன மாமா சொல்லுங்க
சேகர் :இங்க பாருங்க மாப்பிள்ளை சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க என் பொண்ண குழந்தை மாதிரி வளர்த்திருக்கேன் அவளை கஷ்ட படுத்திடாதீங்க தப்பு பண்ணா கூட சொல்லி புரிய வைங்க மாப்பிள்ளை திட்டிடாதீங்க.
அவ தாங்க மாட்டாள்.
ராம் :ஐயோ என்ன மாமா அவளை நான் நல்லா பாத்துப்பேன் என்னோட அம்மாவும் அப்பாவும் இப்போவே அவளுக்கு என்ன பிடிக்கும்னு யோசிச்சு பன்றாங்க அவ உங்க வீட்டுல இளவரசின்னா எங்க வீட்ல ராணி மாதிரி
சேகர் :நன்றி மாப்பிள்ளை இப்போதான் சந்தோசமா இருக்கு
ராம் :சரி வாங்க அங்க போலாம்
படித்ததில் பிடித்தது :
அப்பான்னா மகள்களுக்கு தனி இஷ்டம் தான் ஏன்னா கல்யாணம் ஆகுறப்போ அம்மா சொல்வாங்க மாப்பிளை வீட்டுல நம்ம குடும்ப கவுரவத்தை காப்பாத்துற மாதிரி நடந்துக்கோன்னு சொல்வாங்க அப்பா சொல்வாரு மாப்பிளை என் பொண்ண நல்லா பத்துக்கோங்கன்னு (என்னோட மனச தொட்ட வார்த்தை )
நிரஞ்சனா :தினமும் போன் பண்ணு டி மறந்துராத
சேகர் சுப்ரதா :சந்தோசமா இருமா
தாத்தா பாட்டி மற்ற உறவுகள் வாழ்த்த காரில் ஏறி தன் வாழ்வின் அடுத்த கட்டத்தை நோக்கி செல்ல ஆரம்பித்தாள் சீதா.
Enna makkale intha part ok vanu sollunga.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro