Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

15

15 ) ஆவிகளின் சரணாலயம் .

" என்ன ப்ரச்சனை . "

" அந்த ஆவி தப்பிச்சுருச்சுன்னு வெளிய தெரிஞ்சா , ஆவிகளின் சரணாலயமே close... " project maker

" அப்படி என்ன ஆச்சு இங்க . " Katherine .

" என்ன ஆச்சா?? Katherine... இங்க இருந்து ஒரு ஆவி தப்பிச்சு போயிருக்கு . "

" அதுக்கு . We can handle this . " Katherine .

" முடியாது... நம்மனால இத handle பண்ண முடியாது . "

" எப்டி சொல்றிங்க . முடியாதுன்னு . " Emma .

" அது அப்படி தான் . இத நம்ம தான் deal பண்ணனும் . "

Emma கோபத்தில் ப்ச்ச் கொட்டி விட்டு அங்கிருந்து சென்றாள் .

.

.

நிஷா விக்கியை ( மகி ) பார்த்து முறைத்துக் கொண்டு நின்று  இருந்தாள் .

" என்ன டி வேணும் உனக்கு . " விக்கி ( மகி )

" நீ யாரு . உன்ன பத்தி சொல்லு . எப்டி நீ செத்து போண . " நிஷா .

அவனுக்கும் வேறு வழி இல்லாததால் தன்னை பற்றி சொல்ல ஆரம்பித்தான் .

.

.

சுல்லென வெயில் சுட்டெரித்துக் கொண்டு இருந்தது .

" என்ன baby , இப்டி வெயில் சுட்டெரிக்குது . "

" நானும் உன் கூட தான இருக்கேன் . " விஷு என்னும் விஷாலினி .

" ஷாலு , அங்க பாரு டி . உன்னோட ரோமியோ... " என்று மகியை காண்பித்தாள் .

அங்கு மகி ஷாலுவை பார்த்த படி நின்று கொண்டு இருந்தான் .

அவனருகில் அவனது தோளில் கையை போட்டுக் கொண்டு நின்று இருந்தான் பரணி .

விஷாலியும் கார்திகாவும் பஸ் ஸ்டாபில் நின்று இருந்தனர் .

" டேய் . ஸைட் அடிச்சது போதும் . வா வீட்டுக்கு போகலாம் . "  என்று பரணி கூற , இருவரும் வண்டியில் ஏறி , வீட்டிற்கு கிளம்பினார்கள் .

விஷாலி - 21

மும்பையில் பிறந்து வளர்ந்தவள் , இப்போது மெட்ராஸில் ( சென்னை )
வேலை பார்த்துக் கொண்டு இருக்கிறாள் . வசதி அதிகம் தான் . இருந்தும் மற்றவர்களை மதிக்கும் நல்ல பெண் . அமைதியின் மறு உருவம் . கோபம் வந்தால் காளியின் மறு உருவமும் இவளே . தனக்கு நெருக்கமான நண்பர்களிடமும் உறவுகளிடமும் மட்டும் சரளமாக பேசுவாள் . தெரியாதவர்களை கண்டால் ஒதுங்கி விடுவாள் . புரம் பேசுபவர்களை கண்டால் கோபம் உச்சந்தலைக்கு ஏரும் . ஆனாலும் தன்னை சமன் படுத்திக் கொண்டு அமைதியாக கடந்து விடுவாள் .

மகேந்திரன் - 23

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் பிறந்து வளர்ந்தவன் . இப்போது மெட்ராஸில் ( சென்னை ) வேலை செய்கிறான் . தங்கை என்றால் உயிர் . தன் உறவுகளிடத்தில் இவன் ஒரு அமைதியானவன் . உர்ரென இருப்பவன் . தனது நண்பர்களிடத்தில் இவன் வாய் பேச ஆரம்பித்தால் நிருத்தவே மாட்டான் .
விஷாலிக்கு நேர் எதிர் குனம் . கோபம் வந்தாலும் , எதிரில் இருப்பவரை பொருத்து அவனின் கோபத்தின் அளவு இருக்கும் . நெருக்கமான நண்பர்களிடமும் உறவுகளிடமும் மட்டும் தான் தன் கோபத்தை அதிகமாக காட்டுவான் . கேட்டால் , " நமக்கு பிடிச்சவங்க கிட்ட கோபத்த காட்டாம வேற யார் கிட்ட காட்டுறது??? " என்று கேட்பான் .
கடந்த இரு மாதங்களாக விஷாலியை பின் தொடர்ந்து வருகிறான் . காதல் என்று கூற முடியாது . அவள் மீது ஒரு ஈர்ப்பு மட்டுமே . ஈர்ப்பு காதலாக மாறுமா என்பது சந்தேகம் தான் . பார்ப்போம் .

பரணி - 23

மாம்பழத்திற்கு பெயர்போன சேலத்தில் பிறந்தவன் . மதுரையில் காலேஜ் முடித்து விட்டு , மெட்ராஸில் ( சென்னை ) வேலை செய்கிறான் . மகியின் நண்பன் . குறும்பு அதிகம் . வாய் ஓயாமல் பேசுவான் . பெணகளிடம் பேசுவது மட்டும் அவனுக்கு பாகற்காய் சாப்பிடுவது போல் கசக்கும் . அவன் பேசும் ஒரே பெண் என்றால் , அது தேன்மொழி தான் . ( மகியின் தங்கை ) அவனுக்கு தேன்மொழி என்றால் அவ்வளவு பிடிக்கும் . அதற்கு பெயர் காதல் என்று அவனே ஒரு பெயரை வைத்துக் கொண்டான் . பார்ப்போம்
..

தேன்மொழி - 19

மகியின் பாசமிகு தங்கை . நல்ல பிள்ளைப்பா . அனைவரிடமும் அனுசரித்து செல்லும் குனம் . சிறிது அதட்டினாலும் கண்களில் இருந்து கண்ணீர் துளி அனையை கடந்து விடும் . அமைதியான அறிவான பெண் . ஆனால் , அதிகம் படித்ததில்லை . படிக்க வேண்டும் என்ற ஆசை அவளிடம் அதிகமாக இருந்தாலும் , வீட்டினர் அவளை படிக்க விடவில்லை . பெண்பிள்ளை அதிகம் படிக்க கூடாது என்பதில் தெளிவாக இருந்தனர் அவளது பெற்றோர் .

ராஜா - 21

விஷாலியின் கூட பிறக்காத சகோதரன் . இருவரும் நண்பர்கள் தான் என்றாலும் , ஷாலுவை சகோதரியாக தான் நினைத்துக் கொண்டு இருக்கிறான் . இவனது பூர்வீகம் திருப்பூர் . ஷாலுவை தவிர மற்ற அனைவருக்கும் அவன் கோபக்காரன் தான் .

.

.

மகி தனது வீட்டிற்குள் நுழையும் போது , தேன்மொழி பாத்திரம் கழுவி கொண்டு இருந்தாள் .

" என்ன டா பண்ற??? " மகி .

" பாத்திரம் கழுவுரேன் அண்ணா . " தேன்மொழி .

" சரி டா . " என்று கூறி விட்டு  உள்ளே நுழைந்தான் .

அங்கு அவர்களது தாய் அமர்ந்து சீரியல் பார்த்துக் கொண்டு இருந்தார் .

( பொண்ண பாத்திரம் கழுவ விட்டுட்டு அம்மா சீரியல் பாக்குறாங்க . என்ன கொடுமை டா சாமி😕 )

" அம்மா..,. " மகி .

" என்னப்பா??? " என்று சிரியலில் இருந்து கண்ணை எடுக்காமல் கேட்டார் பாக்கியா .

" ம்ம்மா , காஃபி வேணும் . " மகி .

" அடியேய் தேன்மொழி . உங்க அண்ணன் காஃபி கேக்குறான் பாரு . போட்டு குடு . " இப்போதும் அவர் சீரியலில் இருந்து கண்ணை எடுக்காமல் கூறினார் .

" இதோ வந்துட்டேன் அம்மா . " என்றவள் , பாத்திரம் கழுவுவதை நிறுத்தி விட்டு  காஃபி போட வந்தாள் .

காஃபியை எடுத்துக் கொண்டு வரும் போது , காஃபி அவளது காலில் விழுந்து விட , " அம்மாஆஆஆ . " என்று கத்தினாள் தேன்மொழி .

அவர் அதிர்ந்து போய் திரும்பி பார்த்தார் . மொத்த காஃபியும் கீழே கொட்டி இருந்தது .

" அடியேய் அறிவில்ல . பாத்து வர மாட்டியா . " என்று கேட்டவர் பளாரென்று கன்னத்தில் அறைந்தார் .

சூடான காஃபி காலில் கொட்டியது மட்டும் இல்லாமல் அவர் திட்டியதிலும் கண்களில் இருந்து கண்ணீர் திரண்டு கீழே விழுந்தது .

" ஆனா ஊனா அழ ஆரம்பிக்குற . போ , போய் இந்த காஃபியை தொட . " என்று விரட்டினார் அவர் .

இதை பார்த்துக் கொண்டு இருந்த மகி தன் தாயை நினைத்து வருத்தப் பட்டு விட்டு வீட்டை விட்டு வெளியேறி விட்டான் .

.

.


Bạn đang đọc truyện trên: Truyen247.Pro