Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

06

( 06 ) ஆவிகளின் சரணாலயம்..

ஸ்னேஹாவும் , நிஷாவும் பெங்களூர் சென்று கொண்டிருக்கின்றனர் .

திருப்பூர் ரைல்வே ஸ்டேஷனில் ட்ரைன் நின்று கொண்டிருந்தது .

" நிஷா . எதுக்கு டி போறோம் . சொல்லு டி . அப்புறம் , அது என்னமோ சொன்னியே . அது என்னது டி . "

" அது oneirologyனா , கனவ பத்தி படிக்குறது . நமக்கு ஏன் கனவு வருது , கனவுன்னா என்னன்னு , கனவ பத்தி ஆராய்ச்சி பண்ணுவாங்க . "

" ஓஓஓஓ . அதுக்கு எதுக்கு டி , வாய்ல நுழையாத பேர் வச்சாங்க . அது என்ன ஓனெரியோலஜியா . இல்ல , ஒனைரியோலஜி . போ , வாய்ல நுழையல . என்ன பேர் இது . " என்று நொந்து கொண்டாள் ஸ்னேஹா .

" போ டி . உனக்கு வாய்ல வரலன்னு சொல்லு . எரும . " என்று திட்டினாள் நிஷா .

" போ டி . "

தொடர் வண்டி கிளம்பியது . இருவரும் பேசிக் கொண்டே அமர்ந்து இருந்தனர் .

அடுத்த நாள் காலையில் பெங்களூர் ரைல் நிலையம் வந்து சேர்ந்தனர் .

" ஓய் பேபி . பசிக்குது டி . " ஸ்னேஹா .

" எனக்கும் தான் பசிக்குது .  வா ரூம்க்கு போய்ட்டு சாப்டுவோம் . "

இருவரும் ஒரு ஆட்டோ பிடித்தனர் . அவர்களின் ஆட்டோ , ஒரு சிக்னலில் நின்றது .


அவர்களுக்கு அருகில் தான் விக்கியும் , ஹேமாவும் வண்டியில் நின்றிருந்தனர் .

அருகில் இருக்கும் ஆட்டோவை விக்கி கவனித்து விட்டான் . அதில் , ஸ்னேஹா அமர்ந்திருப்பதையும் அவன் அறிந்தான் .

" குட்டி . " விக்கி .

" என்ன டா . " ஹேமா .

" பக்கத்துல ஒரு ஆட்டோ இருக்குல்ல . அதுல என்னோட ஆளு இருக்கா டி . " விக்கி .

" யாரு டா . லெஃப்டா ரைட்டா . " ஹேமா .

" லெஃப்ட் டி . " விக்கி .

" சூப்பரா இருக்காங்க டா . " ஹேமா .

அதற்குள் , சிக்னல் மாற , வண்டிகள் முன்னால் சென்றது .

" டேய் அண்ணா . அவங்கள ஃபாலோ பண்ணுடா . " ஹேமா .

" ம்ம்ம் . "

அந்த ஆட்டோவை இருவரும் ஃபாலோ செய்தனர் .

.................................................................

கிஷோர் தனக்கு வந்த கனவை பற்றி என்னிக் கொண்டிருந்தான் ‌.

👻👻👻👻👻

கிஷோர் மழையில் நனைந்து கொண்டே சிலையென  நின்றிருந்தான் . அசையக் கூட இல்லை . கண் இமைக்காமல் , நின்றிருந்தான் . கண்களில் இருந்து இரத்தம் வழிந்து கொண்டிருந்தது . அப்போது அவன் முன் ஒரு உருவம் . அவனின் தலை முடியை பிடித்து தூக்கியது . அப்போது கூட இவன் அசையாமல் இருந்தான் . அங்கு மீண்டும் ஒரு உருவம் . அவனை காப்பதற்கு , மற்றொரு உருவத்திடம் சண்டையிட்டது . அப்போது , நிஷாவை , அந்த உருவம் கொல்ல பார்க்க , அந்த உருவம் செயலிழந்து போணது . அந்த உருவத்தை , மற்றொரு உருவம் கொல்ல வர , இவன் " மகீஈஈஈஈஈஈஈஈஈ " என்று கத்தியவாரு எழுந்தமர்ந்தான் கிஷோர் .

( யார் அந்த மகி . )

👻👻👻👻👻👻👻👻👻👻👻👻👻👻

நிஷாவும் , ஸ்னேஹாவும் , oneirologyயை படித்தவரின் வீட்டில் அமர்ந்து இருந்தனர் .

" சொல்லுங்க . என்ன ப்ரச்சனை உங்குளுக்கு . " உமா .

" மேடம் , எனக்கு ஒரு கனவு . " நிஷா .

" என்ன கனவு . " உமா .

நிஷாவும் அனைத்தையும் கூறினாள் .

" இங்க பாருங்க நிஷா , கனவுன்றது நம்ம மனசு உருவாக்குற பிம்பம் . நம்ம கனவுல பாக்குறவங்க நேர்ல வாங்கன்னு நிரையா பேர் வந்துருக்காங்க . நம்ம கனவுனால , முழுமையான ஒரு உருவத்த உருவாக்க முடியாது . இது எல்லாமே ப்ரம்மை . " உமா .

" இல்ல மேடம் . என்னால அத மறக்க முடியல . " நிஷா .

" கனவ மறக்க முடியலையா , இல்ல கனவுல வந்தவங்கள மறக்க முடியலையா . " உமா சிரித்துக் கொண்டே கேட்டார் .

" கனவுல வந்தவங்கள தான் மறக்க முடியல மேடம் . அந்த உருவம் எதுக்கு என்ற காப்பாத்த வரனும் . " நிஷா .

" நிஷா , இன்னிக்கு இது போதும் . மத்தத நாளைக்கு பாத்துக்கலாம் . " உமா .

" ஓகே மேடம் , நாங்க கிளம்புரோம் . " என்று கூறி , இருவரும் அங்கிருந்து சென்றனர் .

" என்ன டி . கனவுல வந்தவங்கள உன்னால மறக்க முடியலையா . " ஸ்னேஹா .

" ஆமா டி . யார் அதுன்னு தான் தெரியல . ஆனா , அவங்க உண்மையா வந்தா லவ் பண்ணுவேன்னு நினைக்கிறேன் . " நிஷா சிரித்துக் கொண்டே கூறினாள் .

" பார்ரா , லவ் பண்ணுவிங்களா . " ஸ்னேஹா .

இருவரும் , ஒரு காஃபி ஷாப்பில் அமர்ந்து இருந்தனர் . அப்போது அவர்கள் அருகில் வந்தனர் , விக்கியும் , அபியும் .

( ஹேமாவ வீட்டுல விட்டுட்டு , அபிய கூட்டிட்டு வந்துட்டான் . )

" ஹாய் . " விக்கி .

" யாரு டி இது . " நிஷா .

" யாருக்கு தெரியும் . " என்று நிஷாவிடம் கேட்டவள் , அவனிடம் " என்ன வேணும் . யார் நீங்க . " என்று ஆங்கிலத்தில் கேட்டாள் .

" தமிழ்லையே பேசுங்க . எங்குளுக்கும் தமிழ் தெரியும் . " என்று அபியையும் சேர்த்துக் கொண்டான் .

" கேட்டதுக்கு பதில் சொல்லுங்க . யார் நீங்க . " நிஷா .

" ஏய் . நீ அமைதியா இரு . நான் இவள தான் லவ் பண்றேன் . " விக்கி .

" லவ்வா . இடியட் . வாட் ஆர் யூ ஸ்பீக்கிங் . " திட்டினாள் ஸ்னேஹா ‌.

" தேங்க் யூ ஸ்னேஹா . " விக்கி .

" என்னது . நான்சென்ஸ் . அறிவு இல்ல உங்குளுக்கு . லவ்வாம் . இடியட் . " என்று திட்டிவிட்டு , நிஷா விடம் , " வா டி போலாம் . " என்று அவளை இழுத்துக் கொண்டு செல்லும் போது , விக்கி ஸ்னேஹாவின் கையை பிடித்து தடுத்தான் .

" என்ன பண்றிங்க . இதே உங்க தங்கச்சி கைய ஒருத்தன் பிடிச்சா , கோவம் வரும் இல்ல . உங்குளுக்கு வந்தா ரத்தம் , எங்குளுக்கு வந்தா தக்காளி சட்னியா . " நிஷா .

அவன் அமைதியாகி விட , இருவரும் அந்த இடத்தை விட்டு அகன்றனர் .

_____________________________________

இனி என்ன நடக்கும் என்று அடுத்த பாகத்தில் பார்க்கலாம்....

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro