Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

04👻

( 04° ) ஆவிகளின் சரணாலயம்....

நிஷா கண் விழித்து பார்த்தாள் . அவள் , அவளுடைய அறையில் இருந்தாள் . அது கணவா இல்லை உண்மையா என்று அறிய முடியாமல் தவித்துக் கொண்டிருந்தாள் . அப்போது அவளுடைய தாய் , அறைக்குள் நுழைந்தார் .

" என்ன நிஷா . இன்னிக்கு ஏன் இவ்ளோ லேட் . பாரு மணி பத்து ஆச்சு . என்னடா , உடம்பு சரியில்லலயா . "

" அப்டிலாம் இல்லம்மா . நான் நல்லா தான் இருக்கேன் . கொஞ்ச நேரத்துல வரேன் . நீங்க போங்க . " என்று அவரை அனுப்பி வைத்தவள் , தலையில் கையை வைத்துக் கொண்டு அமர்ந்து விட்டாள் .

மனதினுள் , கனவில் வந்ததை எல்லாம் ஓட்டி பார்த்தாள் . அது உண்மையிலேயே நடந்ததை போல் தான் இருந்தது . அப்போது அவள் ஃபோன் அடிக்கவும் , பயந்து போணாள் நிஷா .

அது அவளுடைய ஃபோன் தான் என்று அறிந்ததும் தான் அமைதி அடைந்தாள் .

ஃபோன் அடித்துக் கொண்டே இருக்கவும் தான் , தன் நினைவில் இருந்து வெளியே வந்தவள் , ஃபோனை எடுத்து பார்த்தாள் . அதில் கிஷோர் என்று வந்தது . நிஷாவும் ஃபோனை காதுக்கு கொடுத்தாள் .

" ஹலோ நிஷா . "

" சொல்லு கிஷோர் . இப்போவே ஃபோன் பண்ணிருக்க . என்ன ஆச்சு . "

" ஏய் , நான் இன்னிக்கு யூ.எஸ் போரேன் . "

" ஓஓஓஓ . ஆமால்ல . ஆல் தி பெஸ்ட் கிஷோர் . "

" தேங்க் யூ டி . நீ என்ன பண்ற . "

அவளும் அவளுக்கு வந்த கனவை பற்றி கூறினாள் .

" ஹே லூசு . அது கனவு தான . விடு டி . "

" விட முடியல கிஷோர் . அது எதுக்கு என்னக்கு வரனும் . காலைல எந்திரிச்ச ஒடனே , அது கனவுன்னே என்னால நம்ப முடியல . உண்மை மாதிரியே இருந்துச்சு டா . எப்டி ஈசியா விட சொல்ற . "

" விட்டு தான் ஆகனும் நிஷா . நம்ம ஆவி கூடவே சுத்திட்டு இருக்கோம் . அத பாத்து நம்ம பயபடனும்ன்ற அவசியம் இல்லை . உனக்கே தெரியும் . ஆவிகளின் சரணாலயத்துல இருந்து எந்த ஆவியும் வெளிய வர முடியாது . கவலை படாத நிஷா . "

" இல்ல கிஷோர் . இங்க தான் அப்படி . ஹெட் ஆஃபிஸ்ல இருக்க ஆவி எல்லாமே , அத ஹேன்டில் பண்றவங்க கூடவே தான் இருக்கும் . "

" நிஷா . அதுக்கும் ஒரு எல்லை இருக்கு , தெரியும்ல . "

" தெரியும் டா . ஆனா பயமா இருக்கு . "

" பயப்படாத டி . "

" ம்ம்ம் . "

" சரி டி . நான் வைக்குரேன் . "

" ம்ம்ம் பை . " என்றவள் ஃபோனை வைத்து விட்டாள் .

இருந்தாலும் மனதில் அதையே போட்டு குழப்பிக் கொண்டிருந்தாள் .

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

இங்கு அமர்ந்திருந்தவனுக்கு முகம் வியர்த்துக் கொட்டியது . காரணம் , அதே போல் கனவு அவனுக்கும் வந்திருந்தது . இதே கனவு எப்படி அவளுக்கும் வந்திருக்கும் என்ற ஆராய்ச்சியில் அவன்.....

..................................................................

" டேய் , ஹேமா எங்க டா . " என்று காலையில் ஆஃபிஸ் கிளம்பும் அவசரத்தில் கேட்டான் அபி .

" அவ தூங்குரா . " என்று பதிலளித்தான் விக்கி .

" இன்னுமா தூங்குரா . " என்று கேட்டுக் கொண்டே சென்று அவள் ரூம் கதவை தட்ட , அது திறக்கப் படவே இல்லை .

" டேய் . ஹேமா கதவ திறக்க மாட்டிங்குரா . "

" என்ன . " என்று கேட்டுக் கொண்டே அவன் அருகில் வந்தான் விக்கி ‌.

" ஹேமா . " என்று விக்கி கத்தினான் . ஆனால் பதிலில்லை ‌
.

" கதவ உடைச்சரலாமா . " என்று அபி கேட்டுக் கொண்டிருக்கும் போதே ஹேமா கதவை திறந்தாள் .

" என்ன ஆச்சு டி . " விக்கி .

" இல்ல டா . தூங்கிட்டேன் . " ஹேமா .

" காலேஜ் போர ஐடியா இல்லையா . " அபி .

" நான் இன்னிக்கு லீவ் . நேத்து நைட்டே இவன்ட்ட சொல்லிட்டேன் . " ஹேமா .

" சரி டி . போய் தூங்கு . வீட்டுல இன்னிக்கு யாரும் இல்ல . தாத்தா பாட்டிய பாக்க போயிருக்காங்க . பத்திரமா இரு . " என்று கூறி விட்டு சென்றனர் அவர்கள் இருவரும் .

இவளும் , சென்று கதவை பூட்டி விட்டு , டீவி பார்க்க சோஃபாவில் அமர்ந்தாள் .

நேரம் நகர்ந்தது . இரவு மணி எட்டு .
கரன்ட் திடீரென்று கட் ஆனது . ஹேமா அதிர்ந்தாள் . அவளது ஃபோன் இப்போது தான் தனது உயிரை விட்டிருந்தது . வேகமாக அறைக்கு சென்று விடலாம் , என்று நினைத்து செல்ல முயன்றாள் . அப்போது , அவள் முன் ஒரு உருவம் . அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தது . ஹேமா பயத்தில் பின்னால் செல்ல , அதுவோ அவளை நோக்கி வந்தது . ஹேமா கண்களில் பயத்துடன் அந்த உருவத்தையே பார்த்தாள் . அவளுக்கு கத்த கூட தோன்றவில்லை . பயத்தில் உடல் நடுங்கியது . அந்த உருவம் அவள் அருகில் வந்து விட்டது . இவளுக்கும் அந்த உருவத்துக்கும் , இரண்டு சென்டீமீட்டர் தான் இடைவேளை . ஹேமா பயத்தில் , " மகீஈஈஈஈஈஈஈ " என்று கத்தியவாரே எழுந்தாள் .

👻👻👻👻👻👻👻👻👻👻👻👻👻👻

யார் அந்த மகி . அவனுக்கும் இவளுக்கும் என்ன சம்பத்தம் . நிஷாவும் , கிஷோரும் ஆவிகளின் சரணாலயத்தில் வேலை செய்கிறார்கள் . அதனால் , அவர்களுக்கு அந்த கனவு வந்தது . ஆனால் ஹேமாவிற்கு எப்படி இந்த கனவு வந்தது . பார்க்கலாம் வரும் அத்யாயங்களில்.....

👻👻👻👻👻👻👻👻👻👻👻👻👻👻





Bạn đang đọc truyện trên: Truyen247.Pro